
லிபியாவில் அந்நாட்டு இராணுவ நிலைகள் மீது குண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்க போர் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.
லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக அந்நாட்டு இராணுவ நிலைகள் மீதும், கடாபியின் மாளிகை மீதும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ எனப்படும் கூட்டு படைகள் ஏவுகணைகள் மற்றும் குண்டு வீச்சு தாக்குதலை நடத்தி வருகின்றன.
மேலும் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து இராணுவம் மீட்ட மிஸ்ரதா, அஜ்தாபியா நகரங்களின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் போராட்டக்காரர்கள் பிடியில் இருக்கும் லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காசியில் அமெரிக்காவின் எப்-15ஜி ரக போர் விமானம் பறந்து கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராவிதமாக திடீரென அங்குள்ள வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. அதில், விமானி உள்பட 2 பேர் இருந்தனர்.அவர்கள் சாதுரியமாக வெளியே குதித்து உயிர் தப்பினர்.
pls click this path for related video
http://www.youtube.com/watch?v=nzKjaT4uQ8g&feature=player_embedded
http://www.youtube.com/watch?v=gm5agXD_2w0&feature=player_embedded
