கின்சாசா: ஐ.நா.வுக்கு சொந்தமான விமானமொன்று கொங்கோ ஜனநாயகக் குடியரசில் விபத்துக்குள்ளானதில் 32 பேர் பலியாகியுள்ளனர். ஐ.நா.வுக்கு சொந்தமான சீ.ஆர்.ஜே100 என்ற ஜெற் ரகத்தைச் சேர்ந்த பயணிகள் விமானமே கொங்கோ தலைநகர் கின்சாசாவிலுள்ள விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் இவ் விமானம் கோமா பகுதியிலிருந்து வடகிழக்குப் பகுதியிலுள்ள கிசாங்கனி ஊடாக கின்சாசாவுக்கு வந்தபோது அங்கு கடும் மழை பெய்து கொண்டிருந்த வேளையில் தரையிறங்க முயற்சித்த போதே ஏற்பட்ட தீயினால் அது இரண்டாகப் பிளவுற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இவ் விமானத்தில் 33 பேர் பயணித்துள்ளதுடன் அவர்களில் உயிர்பிழைத்தவர் தொடர்பான விபரங்கள் இதுவரை தெரியவில்லை.அத்துடன் இதில் பயணித்த ஐ.நா.பணியாளர்கள் 20 பேரின் பெயர் விபரங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
பி.பி.சி.
மேலும் இவ் விமானம் கோமா பகுதியிலிருந்து வடகிழக்குப் பகுதியிலுள்ள கிசாங்கனி ஊடாக கின்சாசாவுக்கு வந்தபோது அங்கு கடும் மழை பெய்து கொண்டிருந்த வேளையில் தரையிறங்க முயற்சித்த போதே ஏற்பட்ட தீயினால் அது இரண்டாகப் பிளவுற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இவ் விமானத்தில் 33 பேர் பயணித்துள்ளதுடன் அவர்களில் உயிர்பிழைத்தவர் தொடர்பான விபரங்கள் இதுவரை தெரியவில்லை.அத்துடன் இதில் பயணித்த ஐ.நா.பணியாளர்கள் 20 பேரின் பெயர் விபரங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
பி.பி.சி.
