Total Pageviews

Wednesday, 13 April 2011

போர்க்குற்றம் பேச அமெரிக்காவுக்கு தகுதி இல்லை: இலங்கை எம்.பி.

கொழும்பு, ஏப்.13-
இலங்கையின் போர்க்குற்றம் குறித்து பேச அமெரிக்காவுக்கு தகுதி இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. தயாஸ்ரீ ஜயசேகர கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
"நீண்ட     காலமாக அமெரிக்காவின் மீது போர்க் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. ஈரான், இராக், ஆப்கன் ஆகிய நாடுகளில் அமெரிக்கா மனித உரி்மை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது. எனவே, இலங்கை மீது குற்றம் சுமத்த அமெரி்க்காவுக்கு தகுதி கிடையாது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்." என்று தயாஸ்ரீ ஜயசேகர கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.