Total Pageviews

Blog Archive

Wednesday, 11 May 2011

ஒரு தாய் சிறப்பாக வாழ ஏற்ற உலகின் முதல் நாடு நோர்வே !


உலகில் மகிழ்ச்சியாக இருக்கும் மக்கள் யார் என்று ஆய்வு நடாத்தப்படுவதைப் போல உலகிலேயே தாய் என்பவள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உரிய நாடு எது என்ற ஆய்வை றெட்பானா அமைப்பு நடாத்தியது.
இந்த ஆய்வில் உலகில் தாய் ஒருத்தி சந்தோஷமாக வாழ்வதற்கு ஏற்ற நாடு எது என்ற கேள்வியில் முதலிடத்தை நோர்வே பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தை அவுஸ்திரேலியாவும், மூன்றாவது இடத்தை ஐஸ்லாந்தும், நாலாவது இடத்தை சுவீடனும் ஐந்தாவது இடத்தை டென்மார்க்கும் ஆறாவது நியூசிலாந்து, ஏழாவது பின்லாந்தும் பெற்றுள்ளன. கடைசி இடத்தை ஆப்கானிஸ்தான் பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் மகிழ்ச்சியாக வாழ்வதைவிட தாய்கள் உயிரோடு வாழ்வதே பெரும் சிரமமாக உள்ளது. பெரும்பாலான தாய்மார் சிறு வயதிலேயே இறந்துவிடுகிறார்கள் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆபிரிக்காவின் நைகர் கடைசிக்கு முதலிடம், தென்னாபிரிக்க நாடுகள் கூடுதலாக பின்தங்கியுள்ளன. இதுபோல சிறீலங்காவில் பிள்ளைகளை பறிகொடுத்து, கடத்தப்பட்டு, காணாமல்போய், விதவைகளாக்கப்பட்டு தமிழ் தாய்கள் படும் துன்பமும் தலபான்கள் நாட்டு துயரமே என்பது கவனிக்கத்தக்கது. மகிந்த சிந்தனை தாய், பிள்ளை, குடும்பம், சிறுபான்மை மக்கள் அமைதியாக வாழ ஏற்ற நாடு சிறீலங்காவா என்ற கேள்விக்கு பதில் கூற முடியுமா என்பது சந்தேகமே.