Total Pageviews

Blog Archive

Tuesday, 21 June 2011

இன்று காலை ஈராக் ஆளுநர் மாளிகை அருகே குண்டுவெடிப்பு: 22 பேர் பலி

பாக்தாத்: தெற்கு பாக்தாத்தில் ஆளுநர் மாளிகைக்கு அருகே நடந்த குண்டுவெடிப்பி்ல 22 பேர் பலியாகியுள்ளதாக ஈராக் அதிகாரிக்ள் தெரிவித்தனர்.

இது குறித்து ஒரு போலீஸ் அதிகாரி கூறியதாவது,

திவானியா நகரில் கவர்னர் அலுவகம் உள்ளிட்ட கட்டிடடயங்களுக்கு அருகே வெடிகுண்டுகள் நிறைந்த 2 வாகனங்களில் தற்கொலைப் படையினர் வந்தனர். அவர்கள் அந்த வண்டிகளை வெடிக்கச் செய்தனர். இன்று காலை நடந்த இந்த தாக்குதலில் 22 பேர் பலியாகியுள்ளனர் என்றார்.

தெற்கு பாக்தாத்தில் இருந்து 80 மைல் தொலைவில் உள்ளது திவானியா நகரம்.