இஸ்லாமாபாத், செப். 23:÷பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ராணுவத் தலைமை தளபதி மைக் முல்லன், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., பயங்கரவாத அமைப்பான ஹக்கானியுடன் தொடர்பு வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், இதுபோன்ற விமர்சனங்களை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
ஆப்கனில் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கும் போரை, பாகிஸ்தான் உதவியின்றி வெற்றிகரமாக மேற்கொள்ள முடியாது என்று பிரதமர் யூசுப் ரஸô கிலானி வெள்ளிக்கிழமை கராச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ÷
ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கர் கூறுகையில், அமெரிக்கா தொடர்ந்து இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்து வந்தால், பாகிஸ்தானைப் போன்ற மதிப்புமிக்க நண்பனை அது இழக்க நேரிடும் என எச்சரித்தார். அமெரிக்காவின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் செüத்ரி அகமது முக்தாரும் நிராகரித்துள்ளார்.
அமெரிக்க ராணுவத் தலைமை தளபதி மைக் முல்லன், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., பயங்கரவாத அமைப்பான ஹக்கானியுடன் தொடர்பு வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், இதுபோன்ற விமர்சனங்களை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
ஆப்கனில் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கும் போரை, பாகிஸ்தான் உதவியின்றி வெற்றிகரமாக மேற்கொள்ள முடியாது என்று பிரதமர் யூசுப் ரஸô கிலானி வெள்ளிக்கிழமை கராச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ÷
ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கர் கூறுகையில், அமெரிக்கா தொடர்ந்து இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்து வந்தால், பாகிஸ்தானைப் போன்ற மதிப்புமிக்க நண்பனை அது இழக்க நேரிடும் என எச்சரித்தார். அமெரிக்காவின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் செüத்ரி அகமது முக்தாரும் நிராகரித்துள்ளார்.