Total Pageviews

Blog Archive

Saturday, 7 January 2012

நைஜீரியாவில் துப்பாக்கிச் சூடு : 20 பேர் பலி!

அபுஜா: கிறிஸ்துவ மக்கள் கூட்டத்தில் மர்ம நபர் திடீரென்று நடத்திய துப்பாக்கிச் சூட்டினால் 20 பேர் பலியானார்கள். இந்நிகழ்ச்சி அப்பகுதியில் பொரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின்  வடகிழக்கு பகுதியில் டவுன் ஹாலில் கிறிஸ்துவ மக்களின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது அங்கு வந்த மர்ம மனிதன் ஒருவன் 'காட் இஸ் கிரேட்' என்று கூறிய படியே, கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினான். இதில் சம்பவ இடத்திலேயே 20 பேர் பலியாயினர், 50க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர், கிறிஸ்துவ மக்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்று  தெரிவித்ததாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.