வாஷிங்டன், ஜன. 5-
பாரசீக வளைகுடா பகுதியில் தங்கள் கடற்படை போர் ஒத்திகையில் ஈடுபட்டு இருப்பதால், அந்த பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் நுழைய அனுமதிக்கமாட்டோம் என்று ஈரான் விடுத்த எச்சரிக்கையை, அமெரிக்கா நிராகரித்து உள்ளது.
இதுபற்றி அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் பத்திரிகை தொடர்பு செயலாளர் ஜார்ஜ் லிட்டில் கூறுகையில்; வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைத்தன்மையை கருதி பாரசீக வளைகுடா பகுதியில் பல ஆண்டுகளாக அமெரிக்க போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன என்றும், இந்த நிலை தொடரும் என்றும் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் ஈரான் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் இருந்தும் உள்நாட்டு பிரச்சினைகளில் இருந்தும் மக்களின் கவனத்தை திசை திருப்ப அந்த நாடு இவ்வாறு பேசி வருவதாகவும் வெள்ளை மாளிகையின் பத்திரிகை பிரிவு செயலாளர் ஜே கார்னி கூறினார்.