இந்தோனேசியா அருகே (11.04.2012) கடலில் 8.7 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இந்த பூமி அதிர்ச்சி உணரப்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை செயற்கைகோள் இயக்குனர் டபிள்யூ.பி.கோபால் பூகம்பம் பற்றி நிருபர்களிடம் கூறியதாவது:
சுமத்ரா தீவில் வடக்கு பகுதியில் பகல் 2 மணி 8 நிமிடத்திற்கு ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பகல் 2 மணி 31 நிமிடத்திற்கு இந்திய பெருங்கடலின் வடக்கு பகுதியிலும் நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது.
சுமத்ரா தீவில் அதிகபட்சமாக 8.7 ரிக்டர் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. அந்த நிலநடுக்கத்தை தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள மக்கள் உணர்ந்துள்ளனர்.
சென்னையில் நடந்த பூமி அதிர்ச்சி சுமத்ரா தீவில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியின் எதிரொலிதான். அதைத்தான் சென்னை நகர மக்களும் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் உள்ள மக்களும் உணர்ந்துள்ளனர்.
இவ்வாறு இயக்குனர் கோபால் தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை செயற்கைகோள் இயக்குனர் டபிள்யூ.பி.கோபால் பூகம்பம் பற்றி நிருபர்களிடம் கூறியதாவது:
சுமத்ரா தீவில் வடக்கு பகுதியில் பகல் 2 மணி 8 நிமிடத்திற்கு ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பகல் 2 மணி 31 நிமிடத்திற்கு இந்திய பெருங்கடலின் வடக்கு பகுதியிலும் நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது.
சுமத்ரா தீவில் அதிகபட்சமாக 8.7 ரிக்டர் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. அந்த நிலநடுக்கத்தை தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள மக்கள் உணர்ந்துள்ளனர்.
சென்னையில் நடந்த பூமி அதிர்ச்சி சுமத்ரா தீவில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியின் எதிரொலிதான். அதைத்தான் சென்னை நகர மக்களும் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் உள்ள மக்களும் உணர்ந்துள்ளனர்.
இவ்வாறு இயக்குனர் கோபால் தெரிவித்தார்.