Total Pageviews

Tuesday, 15 March 2011

சமையல் உப்பை பயன் படுத்தினால் புற்றுநோய் ??


அணுக்கதிர் வீச்சு இக்கு உட்பட்ட பசுவின் பாலை அருந்தும் போது அதிக பாதிப்பு வரும். கதிர்வீச்சில் உள்ள அயோடின் மூலகத்தை அதிகம் ஏற்றுக்கொள்ளும் பசு அல்லது எருமை அதன் பாலில் அப்படியே அதை திருப்பி தரும். இது முன் ரஷ்யாவில் உள்ள செர்னோபிளில் நடந்திருக்கிறது. மேற்கண்ட செய்தி தினமலர் செய்தி (16.03.2011).

மேற்கட செய்தி படி பார்த்தால் ஜப்பான் அணு கரு உலை வெடிப்பு நிகழ்ந்த பகுதில் இருந்து மீன் கூட்டங்கள் எந்த எந்த நாடு எல்லைக்கு சென்றாலு அந்த நாடு மக்களுக்கு உணவாகி அந்த நாடு மக்களுக்கும் புற்று நோயை உண்டு செய்யும் வாய்புகள் அதிகம் அல்லவோ . அது மட்டு இன்றி அணு கதிவீசுக்கு உட்பட்ட கடல் நீரும் அணு கழிவுக்கு உட்பட்ட கடல் நீரும் கடல் நீரோட்டத்தின் காரணமாக அண்டை நாடுகளின் கடலில் கலக்கும். இதில் உள்நாட்டு மக்களுக்கும் பதிப்பு ஏற்படும். எப்படி எனில் மக்கள் பயன் படுத்தும் சோடியம் க்ளோரிடு என்ற சமையல் உப்பு கடல் நீரில் இருந்து தயார் ஆகிறது. அதன் மூலமாக மக்களை நோக்கி கடல் நீரில் உள்ள கதிர் வீச்சுக்கு உட்பட்ட அயோடின் மூலக்கூருகள் சமையல் உப்பு மூலமும் பரவ வாய்புகள் உள்ளன. சமையல் உப்பை பயன் படுத்தினால் புற்றுநோய் என்றால் என்ன ஆவது ? இதனை பற்றி இப்போதே இந்திய விஞ்ஞாயனிகள் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் .

ஜப்பானைச் சுற்றி கதிர்வீச்சின் அளவு அதிகாரிக்கும்

உலக நாடுகள் உஷார்:

ஜப்பானைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் கதிர்வீச்சின் அளவு அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், "ஏர் சீனா' விமான நிறுவனம் டோக்கியோவுக்கான விமான சேவையை ரத்து செய்துவிட்டது. ஜப்பானில் உள்ள தங்களது தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள், பாதிக்கப்பட்ட இடத்தை விட்டு வெளியேறும் படி உலக நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.

குழந்தைகள் எதிர்காலம் என்னவாகும்? பிரதமர் செயலுக்கு எதிர்ப்பு ஜப்பான் தற்போது சந்தித்து வரும் அவலங்கள் எளிதில் தீர்க்க முடியாதது என, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
* அணு உலைகள் வெடிப்பு குறித்த போதுமான தகவல்களை பிரதமரும், டாய் இச்சியை இயக்கி வரும் டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனியும் தெரிவிக்கவில்லை என, ஜப்பானிய பத்திரிகைகள் குற்றம் சாட்டி வருகின்றன.
* மோசமான இந்த அணு உலை வெடிவிபத்தால், தைராய்டு, எலும்புகளுக்கிடையில் உள்ள மஜ்ஜை ஆகியவற்றில் புற்றுநோய், ரத்தப் புற்றுநோய் ஆகியவை ஏற்படும் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
* அணுக்கதிர் வீச்சு மனித உடலில் மரபணு மாற்றத்தை ஏற்படுத்தி புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும். பாதிப்பில் இருந்து தப்பும் அளவுக்கு இயல்பாகவே உடலில் செல் சிதைவு ஏற்படாமல் இருந்தால் தப்பலாம்.
ஆனால், குழந்தைகள், கருவில் உள்ள சிசுக்கள் பாதிக்கப்படும். குறிப்பாக பசுவின் பாலை அருந்தும் போது அதிக பாதிப்பு வரும். கதிர்வீச்சில் உள்ள அயோடின் மூலகத்தை அதிகம் ஏற்றுக்கொள்ளும் பசு அல்லது எருமை அதன் பாலில் அப்படியே அதை திருப்பி தரும். இது முன் ரஷ்யாவில் உள்ள செர்னோபிளில் நடந்திருக்கிறது.
* இந்த பூகம்பத்தால் கட்டடங்கள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு சேதம் 1 லட்சத்து 22 ஆயிரம் கோடி டாலர். இன்னமும் சேதாரங்கள் முழுவதும் மதிப்பீடு செய்யப்படவில்லை. பொருளாதார பின்னடைவை சந்திக்கிறது ஜப்பான்.
* உலகளவிலான கார் மற்றும் கப்பல் தயாரிப்பு நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், ஜப்பானில் இருந்து தங்கள் உதிரிபாகங்களுக்கான வினியோகம் கிடைக்காமல் தவித்து வருகின்றன. ஜப்பானில் இயங்கி வரும் பல உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.
* ஜெர்மனியில் ஏழு அணு உலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.