மெல்போர்ன் : "இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய விதித்திருந்த தடையை, நடப்பாண்டின் இறுதியில் ஆஸ்திரேலியா விலக்கிக் கொள்ளும்' என, அந்நாட்டு பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது. ஆனால், சமீப காலமாக, பெரிய அளவில் அணுசக்தியை உற்பத்தி செய்யும் நாடுகள், இந்தியாவுடன், வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதையடுத்து, ஆஸ்திரேலிய இயற்கை வளத்துறை அமைச்சர் மார்டின் பெர்குசன் மற்றும் அதிகாரிகளுடன், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, நட்பாண்டு துவக்கத்தில், பேச்சுவார்த்தை நடத்தினார். இதனடிப்படையில், இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய விதித்திருந்த தடையை நடப்பாண்டு இறுதியில் ஆஸ்திரேலியா விலக்கிக் கொள்ள முடிவு செய்திருப்பதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. வர்த்தக ரீதியாக சீனா பெரிய வளர்ச்சி அடைந்து வருவதால், அமெரிக்கா, இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளின் நட்பு ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டுக்கு தேவை என்பதால், இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது. ஆனால், சமீப காலமாக, பெரிய அளவில் அணுசக்தியை உற்பத்தி செய்யும் நாடுகள், இந்தியாவுடன், வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதையடுத்து, ஆஸ்திரேலிய இயற்கை வளத்துறை அமைச்சர் மார்டின் பெர்குசன் மற்றும் அதிகாரிகளுடன், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, நட்பாண்டு துவக்கத்தில், பேச்சுவார்த்தை நடத்தினார். இதனடிப்படையில், இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய விதித்திருந்த தடையை நடப்பாண்டு இறுதியில் ஆஸ்திரேலியா விலக்கிக் கொள்ள முடிவு செய்திருப்பதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. வர்த்தக ரீதியாக சீனா பெரிய வளர்ச்சி அடைந்து வருவதால், அமெரிக்கா, இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளின் நட்பு ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டுக்கு தேவை என்பதால், இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது.






