Total Pageviews

Blog Archive

Tuesday, 28 June 2011

சேனல் 4 க்கு எதிராக புலம்பெயர் சிங்களவர் அமைப்புகள் வழக்கு

100 மில்லியன் டாலர்கள் நஷ்டஈடு கோரி சேனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக புலம்பெயர் சிங்களவர் அமைப்புகள் வழக்கு தொடர உள்ளன.

நேரில் பார்த்த சாட்சிகள் யாருமின்றி, சேனல்4 தொலைக்காட்சியானது போர்க்குற்றங்கள் தொடர்பான போலிக் காணொளிகளை வெளியிட்டு, இலங்கைக்கு அவமானத்தை ஏற்படுத்தியதாக கூறி இந்த வழக்குத் தொடரப்படவுள்ளது.

ஆஸ்ட்ரேலியா, கனடா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இயங்கும் புலம்பெயர் சிங்களவர் அமைப்புகள் ஒன்றிணைந்து பிரிட்டன் நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தாக்கல் செய்யவுள்ளன.

அதன் பிரதிவாதிகளாக சேனல்4 தொலைக்காட்சி சேவையின் ஜோன் ஸ்னோ மற்றும் காணொளியின் தயாரிப்பாளர் கெல்லம் மக்ரே ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சேனல்4 தொலைக்காட்சி சேவையானது போலியான காணொளியொன்றை ஒளிபரப்பியதாகவும், அவர்களுடைய நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நேரடி சாட்சிகள் யாரும் இல்லையென்றும்,விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போர்க்குற்றங்களை மறைக்கத் துணை புரிந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

புலம்பெயர் சிங்களவர் அமைப்புகள் தரப்பில் ஐந்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர்.

பிரிட்டிஷ் துருப்புகள் பிடித்த 1000 தலிபான்கள் விடுதலை: ஆப்கானிஸ்தானில் கொடூரம்

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். போராட்டக்காரர்களின் தாக்குதலால் ஆப்கானிஸ்தானில் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது.
அங்கு எப்போதும் பதட்ட நிலையின் பிடியிலேயே மக்கள் உள்ளனர். அவர்களது வாழ்க்கை மிகவும் பரிதாபமாக உள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மிக மோசமாக உள்ளது.
உலக நாடுகளில் மோசமாக பெண்கள் நடத்தப்படும் நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது. ஆப்கானிஸ்தானில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மிகவும் வேதனைத்தரக்கூடிய வகையில் சட்ட நிர்வாகம் உள்ளது.
இந்த நீதித்துறை அவலத்தை பயன்படுத்தி கொலை குற்றம் செய்யும் தலிபான் தீவிரவாதிகள் மிக சந்தோஷமாக விடுதலை ஆகி வருகிறார்கள். கடந்த ஆண்டில் மட்டும் பிரிட்டிஷ் துருப்புகள் பிடித்த ஆயிரக்கணக்கான தலிபான் தீவிரவாதிகளை மோசமான நீதி நிர்வாகம் காரணமாக ஆப்கானிஸ்தான் நீதிமன்றங்கள் விடுவித்துள்ளன.
கொலை குற்ற நடவடிக்கைளில் ஈடுபட்ட தலிபான் தீவிரவாதிகளில் 20ல் ஒருவருக்கு மட்டுமே உரிய தண்டனை அளிக்கப்படுகிறது. இதர நபர்கள் நடைபயிற்சி மேற்கொள்வதை போல நீதிமன்றத்தில் பொழுதை போக்கி விட்டு விடுதலை ஆகி வருகிறார்கள்.
இந்த நடவடிக்கை ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நேட்டோ படைகளுக்கு கவலையை அளிப்பதாக உள்ளது. கடந்த ஆண்டு 1175 தலிபான் தீவிரவாதிகளை பிரிட்டன் துருப்புகள் பிடித்து ஆப்கானிஸ்தான் நிர்வாகத்திடம் ஒப்படைத்தது.
இதில் 82 பேர் மட்டுமே குற்றவாளி என ஆப்கானிஸ்தான் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டு இதர தீவிரவாதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

பிரான்சில் இ.கோலி பக்டீரியா பரவியதில் பிரிட்டன் விதை நிறுவனத்திற்கு தொடர்பு

இ.கோலி என்ற பயங்கர பக்டீரியா தற்போது ஐரோப்பிய நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது. இந்த நுண் உயிரி மனித உடலுக்கு அபாயத்தை விளைவிப்பதாகவும் உள்ளது.
இந்த இ.கோலி பக்டீரியா முதலில் ஜேர்மனியில் பரவி அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட வெள்ளரிக்காய் மூலம் இ.கோலி பக்டீரியா பரவியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி ஆகியவற்றை சில நாட்களுக்கு தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்த இ.கோலி பக்டீரியா பிரான்சிலும் பரவியது. இந்த பக்டீரியா பரவியதற்கு பிரிட்டனில் உள்ள ஒரு விதை தான் காரணம் என பிரான்ஸ் அதிகாரிகள் கருதுகிறார்கள். இது குறித்து அவர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.
பிரான்சில் போர்டக்ஸ் பகுதியில் 10 பேர் இ.கோலி பக்டீரியா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரிட்டன் ஸ்விச் பகுதியை சார்ந்த தாம்சன் மற்றும் மார்கன் நிறுவனம் விற்ற விதையில் உருவான காய்கறிகளால் இந்த இ.கோலி பக்டீரியா பரவி இருப்பதாக பிரான்ஸ் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
பிரிட்டனின் உணவு தர முகமையான எப்.எஸ்.ஏ இ.கோலி பாதிப்பு பிரிட்டனில் இல்லை என தெரிவித்துள்ளது. அதே போன்று சம்பந்தப்பட்ட விதை நிறுவனமும் இ.கோலி பரவலுக்கு நாங்கள் காரணம் இல்லை என தெரிவித்து உள்ளது.
ஆண்டுதோறும் தாம்சன் நிறுவனம் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பல ஆயிரம் விதை பாக்கெட்டுகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறினார்.
தங்களது தயாரிப்புகள் தரம் உயர்ந்த நிலையிலேயே உள்ளன என தாம்சன் நிறுவன இயக்குனர் பால் ஹான்ஸ்சார்ட் தெரிவித்தார்.

உலகின் மிகப் பெரிய பணக்காரர்

அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் தொழிலதிபர் கினா ரினே ஹார்ட்(57) கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் கடன் சுமையுடன் தந்தையின் சுரங்கத்தை பெற்றார்.
தற்போது இந்த பெண் தொழிலதிபர் உலகின் மிகப்பெரும் பணக்காரராக உருவெடுப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு அவரது சொத்து மதிப்பு இரு மடங்கு அதிகரித்து ஆயிரத்து 30 கோடி டொலராக ஆனது.
அதாவது பிரிட்டன் பவுண்ட் மதிப்பில் அவரது சொத்து 630 கோடி பவுண்ட் ஆக அதிகரித்தது. மூலப்பொருள் விலை அதிகரிப்பால் அவரது சொத்து மதிப்பு கடுமையான உச்ச நிலையை எட்டியது.
இந்த பெண் தொழிலதிபர் மெக்சிகன் தொழிலதிபர் கரோலஸ் சிலிம் சொத்து மதிப்பை காட்டிலும் கூடுதல் சொத்து பெற்றவராக ஆகிறார். கரோலஸ் சொத்து 460 கோடி பவுண்ட் ஆக இருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தலைவர் பில் கேட்ஸ் சொத்து 350 கோடி பவுண்ட் ஆக இருக்கிறது.
அவுஸ்திரேலிய பெண் தொழிலதிபரின் மூன்று கரி மற்றும் இரும்பு சுரங்க உற்பத்தி மூலம் அவரது சொத்து மதிப்பு உலகில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கிறது. அவரது நிறுவனங்கள் அனைத்தும் அவரது முதலீட்டிலேயே உள்ளன.
அந்த நிறுவனங்களில் வெளி முதலீடுகள் இல்லை. இதனால் அவரது நிறுவன வருமானத்தின் 100 சதவீதமும் இந்த தொழிலதிபரின் சொத்து கணக்கிலேயே இடம் பெறுகிறது என நிதி குழுக்கள் மதிப்பிட்டு உள்ளன.
உலகின் மிகப்பெரும் பணக்காரராக ஆகும் கினா ரினே ஹார்ட் இரண்டு முறை திருமணம் செய்தவர் ஆவார். அவரது 2வது அமெரிக்க கணவர் பிராங்க் ரினே ஹார்ட் ஆவார். அவர் கடந்த 1990ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.

லண்டனில் சுற்றித் திரியும் வேற்றுகிரக வாசிகள்

வேற்றுகிரகத்தில் இருந்து பறந்து வரும் வினோத பொருட்கள் அடிக்கடி ஆச்சரியத்தை அளிப்பதுடன் பெரும் விவாதத்திற்கும் ஆளாகி வருகின்றன.
வேற்றுகிரக வாசிகளுக்கு கமெரா கூச்சம் இல்லை என மக்கள் பரவலாக பேசத் துவங்கி உள்ளனர். ஏனெனில் லண்டன் பி.பி.சி கட்டத்திற்கு மேல் யுஎப்ஓ எனப்படும் அடையாளம் காணப்படாத வினோத பொருள் பறந்தன.
தெளிவான நீல வானத்தில் பறந்த அந்த வினோதப் பொருட்களை பார்த்ததும் வீதியில் நடந்து சென்ற இளைஞர்கள் தங்கள் கையில் இருந்த கைத்தொலைபேசி கமெராக்களில் அதை பதிவு செய்தனர்.
வானில் தோன்றிய அந்த வினோதப் பொருட்கள் சிறு புள்ளிகளாக கடுமையான வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தன. அந்த 3 வினோதப் புள்ளிகளும் முக்கோண வடிவில் விண்ணில் சீறி சென்றன.
இதில் ஒரு புள்ளி மிக நீளமானதாக இருந்தது. அதே நேரத்தில மிகுந்த ஒளிரும் தன்மையுடன் காணப்பட்டது. அந்த நீள நிற புள்ளி வட்ட வடிவில் மற்ற பொருளை விட மெதுவான வேகத்தில் சென்றது.
இந்த வினோத பொருள் மேற்கு லண்டன் வான் பகுதியில் பறந்தது குறித்து ஆச்சரிமான கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றன. இந்த யுஎப்ஓ என்ன என்பதை விவரம் தெரிந்தவர்கள் விளக்க வேண்டும் என இளைஞர்கள் தங்கள் எதிரே வந்தவர்களிடம் கேள்விகளை கேட்ட வண்ணம் இருந்தனர். இந்த யுஎப்ஓ குறித்து இணையதள கருத்து பரிமாற்றத்திலும் கடுமையான விவாதம் காணப்பட்டது.

இங்கிலாந்து ராணுவம் உடனே வெளியேற வேண்டும்: பாகிஸ்தான் திடீர் உத்தரவு

பாகிஸ்தான் துணை ராணுவப் படையினருக்கு போர் பயிற்சி அளிப்பதற்காக இங்கிலாந்து ராணுவ ஆலோசகர்கள் 18 பேர் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் தங்கியிருந்தனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இவர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். 2013ம் ஆண்டு வரை பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டிருந்தது. பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பின் பாகிஸ்தான் அரசின் நடவடிக்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு எதிர்ப்பை தெரிவித்து வந்த பாகிஸ்தான் அரசு தற்போது இங்கிலாந்து படையினரிடமும் தனது எதிர்ப்பை தெரிவிக்கிறது.
எங்கள் படையினருக்கு நாங்களே பயிற்சி அளித்துக் கொள்கிறோம். அதனால் பாகிஸ்தானை விட்டு இங்கிலாந்து ராணுவ பயிற்சியாளர்கள் வெளியேற வேண்டும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

காசாவுக்கு வரும் சர்வதேச கப்பல்களை தடுத்த நிறுத்த இஸ்ரேல் முடிவு

பாலஸ்தீனம் காசா திட்டுப் பகுதியில் மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு அடிப்படை உதவி பொருட்களை வழங்குவதற்காக 10 கப்பல்களில் உணவு பொருட்கள் சென்றுள்ளன.
இந்த சர்வதேச கப்பல்களை நிறுத்துவதற்கு இஸ்ரேல் உத்தரவிட்டு உள்ளது. இருப்பினும் நிவாரண கப்பல்களுடன் கடுமையாக மோத வேண்டாம் என கடற்படைக்கு இஸ்ரேல் உத்தரவிட்டு உள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் அலுவலகம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காசாவை நெருங்கும் கப்பல்களை தடுப்பதில் இஸ்ரேல் அரசு உறுதியாக உள்ளது.
இருப்பினும் கப்பல்படை நிவாரணக் கப்பல்களுடன் கடுமையாக மோதாது என குறிப்பிடப்பட்டு இருந்தது. சர்வதேச நிவாரணக் கப்பல்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையின் போது இஸ்ரேல் கடற்படையினருடன் பத்திரிக்கையாளர்களும் அனுப்பப்படுவார்கள்.
ஏனெனில் அங்கு நடக்கும் நிகழ்வுகளை வெளி உலகிற்கு வெளிப்படையாக தெரிய வேண்டும் என பிரதமர் தெரிவித்து உள்ளார். இதன் படி 30 – 50 பத்திரிக்கையாளர்கள் சர்வதேச கப்பல்கள் நிறுத்தப்படும் இடத்திற்கு செல்கின்றனர்.
இஸ்ரேலிய ராணுவ பெண் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,"சர்வதேச நிவாரணக் கப்பல்களில் தீவிரவாத சக்திகள் இருப்பதாக எங்கள் ராணுவ உளவுத் துறைக்கு தகவல் கிடைத்து உள்ளது. அந்த தீவிரவாத சக்திகள் இஸ்ரேலிய வீரர்களை கொல்லத் துடிக்கின்றனர்" என்றார்.
சர்வதேச கப்பல் ஒன்றில் இஸ்ரேலிய வீரர்களை தாக்குவதற்கு பயங்கர வெடி ரசாயன பொருட்கள் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது என்றார்.

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் 450 ராக்கெட் வீசித் தாக்குதல்: கர்சாய் குற்றச்சாட்டு

கடந்த மூன்று வாரத்தில் மட்டும் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் 450 ராக்கெட் தாக்குதலை நடத்தி உள்ளது என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் குற்றம் சாட்டினார்.
அருகாமை பகுதியில் உள்ள பாகிஸ்தானின் பயங்கர தாக்குதலால் 12 சிறுவர்கள் உள்பட 36 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள குனார் மற்றும் நான்கரார் மாகாணங்களில் இருந்து நேட்டோ படைகள் வாபஸ் ஆகி உள்ளன. அந்த இடங்களை நோக்கி பாகிஸ்தான் ராக்கெட் தாக்குதலை நடத்துவதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
ஆப்கானிஸ்தான் எல்லை அதிகாரிகள் கூறுகையில்,"பாகிஸ்தானிய தலிபான்கள் மேற்குறிப்பிட்ட மாகாணங்களில் ஊடுருவி உள்ளனர்" என்றும் தெரிவித்தனர்.
சனிக்கிழமை ஈரான் தலைநகர் டெகரானில் பிராந்திய தீவிரவாத எதிர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் ராக்கெட் தாக்குதல் குறித்து அந்த நாட்டின் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரியிடம் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி கர்சாய் கேள்வி எழுப்பினார்.
ஆப்கானிஸ்தான் மீது நடத்தும் தாக்குதலை உடனடியாக பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்றும் கர்சாய் வலியுறுத்தினார். பாகிஸ்தான் தாக்குதல் குறித்து ஆப்கன் நேட்டோ கமாண்டரிடம் கர்சாய் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
பாகிஸ்தான் தாக்குதலால் ஆப்கன் எல்லை பகுதியில் வசித்த 2 ஆயிரம் குடும்பங்கள் தங்கள் குடியிருப்பை விட்டு தப்பி ஓடி உள்ளனர் என ஆப்கன் அதிகாரிகள் கூறினர்.

ராணுவ ரீதியாக இந்தியா பலமான நாடு: பாக். அமைச்சர்

இஸ்லாமாபாத், ஜூன் 28- ராணுவ ரீதியாக எங்களை விட இந்தியா பலம் வாய்ந்த நாடு என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் செளத்ரி அகமத் முக்தார் கூறியுள்ளார்.பிபிசி உருது பிரிவு சேவைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது:இந்தியாவின் பொருளாதாரம் பாகிஸ்தானை விட 6 முதல் 7 மடங்கு பெரியது. மேலும், வர்த்தக பரிமாற்ற அளவும் எங்களை விட 5 முதல் 6 மடங்கு பெரியதாகும்.ராணுவ ரீதியாக பாகிஸ்தான், இந்தியாவுக்கு சமமான நாடு இல்லை. இந்தியா தற்போது பல அதிநவீன போர் கருவிகளை கொண்டுள்ளது. இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் தொடர்ச்சியாக 20 அல்லது 22 நாட்களுக்கு தான் பாகிஸ்தானால் தாக்கு பிடிக்க முடியும். ஆனால், இந்தியாவால் 45 நாட்களுக்கு தொடர்ச்சியாக போரை நடத்த இயலும். பாகிஸ்தானால் அவ்வளவு நாட்கள் தொடர்ந்து போர் புரிய முடியாது.  இவ்வாறு பாக். அமைச்சர் செளத்ரி தெரிவித்தார்.

பாகிஸ்தானில் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்: 20 பயங்கரவாதிகள் பலி

இஸ்லாமாபாத், ஜூன்.28: வடமேற்கு பாகிஸ்தானில் தெற்கு வாஜிரிஸ்தான் பழங்குடியினர் பகுதியில் அமெரிக்க நடத்திய 2 ஏவுகணைத் தாக்குதலில் 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.தெற்கு வாஜிரிஸ்தானின் ஷாவல் பகுதியில் ஒரு வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பல மணி நேரம் கழித்து மன்டோய் பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு ஏவுகணைத் தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் தலைவர் ஹகிமுல்லா மெஹ்சூதுடன் தொடர்புடைய பயங்கரவாத கமாண்டர் ஆதம் கானின் மறைவிடத்தில் 4 ஏவுகணைகள் வீசப்பட்டன. தாக்குதல் நடந்தபோது அங்கு மெஹ்சூத் இருந்தாரா என்பது உடனடியாக தெரியவில்லை.