Total Pageviews

Wednesday, 13 April 2011

ஐ.நா செயலாளர் நாயக்கத்திடம் நிபுணர் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கையின் பிரதி இதுவரை இலங்கைக்கு கையளிக்கப்படவில்லை

ஐ.நா செயலாளர் நாயக்கத்திடம் நிபுணர் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கையின் பிரதி இதுவரை இலங்கைக்கு கையளிக்கப்படவில்லை என வெகுசன ஊடக மற்றும் தகவல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இன்று பல சர்வதேச ஊடகங்களிலும் இலங்கைக்கு நிபுணர் குழுவின் அறிக்கை பிரதி கையளிக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து நாம் அவரிடம் கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை நேற்றைய தினம் குறித்த அறிக்கையின் பிரதி இலங்கைக்கு கையளிக்கப்படும் என ஐ.நா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் ஃபர்ஹான் ஹக் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போர்க்குற்றம் பேச அமெரிக்காவுக்கு தகுதி இல்லை: இலங்கை எம்.பி.

கொழும்பு, ஏப்.13-
இலங்கையின் போர்க்குற்றம் குறித்து பேச அமெரிக்காவுக்கு தகுதி இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. தயாஸ்ரீ ஜயசேகர கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
"நீண்ட     காலமாக அமெரிக்காவின் மீது போர்க் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. ஈரான், இராக், ஆப்கன் ஆகிய நாடுகளில் அமெரிக்கா மனித உரி்மை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது. எனவே, இலங்கை மீது குற்றம் சுமத்த அமெரி்க்காவுக்கு தகுதி கிடையாது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்." என்று தயாஸ்ரீ ஜயசேகர கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.