ஐ.நா செயலாளர் நாயக்கத்திடம் நிபுணர் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கையின் பிரதி இதுவரை இலங்கைக்கு கையளிக்கப்படவில்லை என வெகுசன ஊடக மற்றும் தகவல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இன்று பல சர்வதேச ஊடகங்களிலும் இலங்கைக்கு நிபுணர் குழுவின் அறிக்கை பிரதி கையளிக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து நாம் அவரிடம் கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை நேற்றைய தினம் குறித்த அறிக்கையின் பிரதி இலங்கைக்கு கையளிக்கப்படும் என ஐ.நா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் ஃபர்ஹான் ஹக் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று பல சர்வதேச ஊடகங்களிலும் இலங்கைக்கு நிபுணர் குழுவின் அறிக்கை பிரதி கையளிக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து நாம் அவரிடம் கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை நேற்றைய தினம் குறித்த அறிக்கையின் பிரதி இலங்கைக்கு கையளிக்கப்படும் என ஐ.நா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் ஃபர்ஹான் ஹக் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
