Total Pageviews

Thursday, 19 April 2012

சீனாவின் பிரம்மாண்ட அணைக்கு தொடரும் ஆபத்து: மேலும் ஒரு லட்சம் பேரை வெளியேற்ற திட்டம்



பெய்ஜிங்: சீனாவில் கட்டப்பட்ட மிகப்பெரிய அணைப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவினால் அப்பகுதியில் இருந்து மேலும் 1 லட்சம் பேரை அடுத்த 5 ஆண்டுகளில் நிரந்தரமாக வெளியேற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

உலகிலேயே பெரிய அணை சீனாவில் உள்ள யாங்சி ஆற்றில் 2006-ம் ஆண்டு கட்டப்பட்டது. அணை கட்டுமான பணி 1994-ம் ஆண்டு தொடங்கி 2006-ல் முடிவடைந்தது. இந்த அணையை கட்டி முடிக்க ரூ.2லட்சம் கோடி செலவிடப்பட்டது. அப்போது அணை பகுதியில் இருந்த 14 பெரிய நகரங்கள், 133 சிறு நகரங்கள், 1350 கிராமங்கள் காலி செய்யப்பட்டு 14 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
தற்போது முன்பைவிட அதிக நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் மேலும் ஒரு லட்சம் பேரை அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் நிரந்தரமாக வெளியேற்றிவிடுவது என்று அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ள 5386 இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.







China Dam








சீனாவும் இந்தியாவும் எதிரிகள் அல்ல : சீன வெளியுறவுத்துறை அக்னி குறித்து



சீனாவும் இந்தியாவும் எதிரிகள் அல்ல இரண்டு நாடுகளும் ஒத்துழைக்கும் பங்காளிகள் என சீனாவின் வெளியுறவுத்துறை பேச்சாளர் லுயூ வெய்மின் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிகையில், டில்லியில், சமீபத்தில் நடந்த “பிரிக்ஸ்’ மாநாட்டின் மூலம், இந்த உறவு மேலும் வலுவடைந்துள்ளது. அமைதியான சூழல் தொடர்ந்து நீடிப்பதற்கு, ஆசிய நாடுகள் அனைத்தும், முக்கிய பங்காற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றார்.
இந்தியா அக்னி 5 ஏவுகணைச் சோதனையை நடத்தியிருப்பது குறித்து சீன நளிதழ் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அணு சக்தி ஆழிவுகளை ஏற்படுத்தவல்ல இவ்வாறான ஏவுகணைகளை சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரித்தானியா, அமரிக்கா ஆகிய நாடுகளில் ஏற்கனவே காணப்பட்கின்றன. உலகத்தின் மிகவும் வறிய நாடுகளில் ஒன்றான் இந்தியா தெற்காசியாவில் ஏவுகணையைக் கொண்டிருக்கும் முதலாவது நாடு