Total Pageviews

Blog Archive

Tuesday, 3 May 2011

சைபீரிய பனிப் பகுதியில் வேற்று கிரகவாசியின் உடல்?

ரஷியாவின் பனி படர்ந்த சைபீரியா பிரதேசத்தில் இர்குட்ஸ்க் நகரம் அருகே உறை பனிக்குள் ஒரு வேற்று கிரகவாசியின் இறந்த உடல் கிடந்ததாகவும், அதை 2 பேர் பார்த்ததாகவும் பரவிய செய்தி உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ இண்டர்நெட்டில் சக்கை போடு போட்டு வருகிறது.

2 அடி உயரமே உள்ள அந்த உடல் பாதி எரிந்து, அழுகிய நிலையில் காணப்படுவதாகவும், அதன் வாய் திறந்தபடி உள்ளதாகவும், அதன் வலது காலை காணவில்லை. கண்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஆழமான குழிகள் தான் உள்ளதாகவும் இருவரும் கூறியதாக அந்த வீடியோ தெரிவிக்கிறது.
இந்த அயல் கிரகவாசி விபத்தில் இறந்து போய் இருக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இது உடல் அல்ல. ஏதோ ஒரு ரப்பர் பொம்மை. அதை கொஞ்சம் சிதைத்து பனிக்குள் புதைத்து வைத்து, அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டு பீதியைக் கிளப்புகின்றனர் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இதே இர்குட்ஸ்க் பகுதியில் தான் கடந்த மாதம் வேற்று கிரக விண்கலம் ஒன்று தரையிறங்கியதாகவும் பரபரப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

இறந்தது பின்லேடன் தான்-உறுதி செய்ய உதவிய இறந்து போன சகோதரியின் டிஎன்ஏ!

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட ஒசாமா பின் லேடனின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட திசுவிலிருந்த டிஎன்ஏவை, இறந்து போன அவரது சகோதரியின் மூளை திசுவிலிருந்து எடுத்த டிஎன்ஏவுடன் ஒப்பிட்டுப் பார்த்து, அது பின் லேடன் தான் என்ற முடிவுக்கு வந்துள்ளது சிஐஏ.

 

நியூயார்க்கில் விமானத் தாக்குதல் நடந்தவுடன் அமெரிக்காவின் சிஐஏ உளவுப் பிரிவு உலகம் முழுதும் வசித்து வரும் பின்லேடனின் குடும்ப உறுப்பினர்களை பட்டியல் எடுத்து, அவர்களில் பெரும்பாலானவர்களின் ரத்த மாதிரியையும் திசுக்களையும் எடுத்து டிஎன்ஏ ‘சிக்னேச்சரையும்’ பதிவு செய்து வைத்துவிட்டது.
வழக்கமாக ஒரு நபரின் டிஎன்ஏ அவரது பெற்றோர் அல்லது குழந்தையின் டிஎன்ஏவோடு 50 சதவீதம் தான் ஒத்து இருக்கும். இன்னொரு 50 சதவீத டிஎன்ஏ அவருக்கே உரிய தனித்துவத்துடன் இருக்கும்.
இதனால் டிஎன்ஏ மேட்சிங் செய்யும்போது ஏற்படும் குறையைக் கலைய, பெற்றோர், குழந்தைகள் மற்றும் நெருங்கிய உறவுகளின் டிஎன்ஏக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். இதன்மூலம் குறையை (error) கலைய முடியும்.
இதற்காக கடந்த 10 ஆண்டுகளாகவே பின்லேடனின் பல உறவினர்களிடமும் சிஐஏ டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து வந்தது.
ஆனால், பின்லேடனுக்கு உடன் பிறந்த சகோதர சகோதரிகள் இல்லை. அவரது சகோதரர்கள், சகோதரிகள் அனைவருமே ஒன்றுவிட்ட சகோதரிகள் அல்லது சகோதரர்கள் தான் (siblings). இவர்களில் பெரும்பாலானவர்கள், பின்லேடன் தீவிரவாதப் பாதைக்குத் திரும்பியவுடனேயே அவருடனான தொடர்பை துண்டித்துக் கொண்டவர்கள்.
இதில் ஒரு சகோதரி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வசித்து வந்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர் மசாசூசெட்ஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலியானவுடன், அமெரிக்க அதிகாரிகள் நீதிமன்ற உதவியோடு, அந்தப் பெண்ணின் மூளையில் இருந்து திசுக்களில் இருந்து டிஎன்ஏ மாதிரியை எடுத்து வைத்திருந்தனர்.
பின்லேடன் கொல்லப்பட்டவுடன், அவரது உடலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவை அவரது இந்த உறவினர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவோடு ஒப்பிட்டபோது 99.9 சதவீதம் இது பின்லேடன் என்று உறுதிப்படுத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது தவிர பாகிஸ்தானில் பிடிபட்ட பின்லேடனின் இரு மனைவிகளிடமும் அவரது உடலை அமெரிக்கப் படையினர் காட்டி, அது பின்லேடன் தான் என்று உறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது.
வழக்கமாக டிஎன்ஏ மேட்சிங் செய்ய 14 நாட்கள் வரை ஆகும். ஆனால், கடந்த ஆண்டு அரிசோனா பல்கலைக்கழகத்தின் நுண்ணியிரியல் பிரிவு ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்தது. 2 மணி நேரத்தில் டிஎன்ஏ மேட்சிங் செய்யும் அந்த அதிநவீன கருவியை சிஐஏ, ஆப்கானில்தானில் தயார் நிலையில் வைத்திருந்தது.
பின்லேடனின் உடலை அங்கு கொண்டு சென்று டிஎன்ஏ சோதனையை முடித்துவிட்டு, இது 99.9 சதவீதம் பின்லேடன் தான் என்று தகவல் தரப்பட்ட பின்னரே தொலைக்காட்சிகள் முன் தோன்றி அவர் கொல்லப்பட்டதை அறிவித்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா.
ஆனாலும் மிச்சமுள்ள 0.1 சதவீத சந்தேகத்தை வைத்து இது பின்லேடன் இல்லை என்று வாதிடுவோர் நிச்சயம் இருக்கத் தான் செய்வார்கள் என்கிறார், டிஎன்ஏ ஆராய்ச்சியாளரான கி்ட் ஏடன்.

பாகிஸ்தான் ராடார்களை ஏமாற்றிய அமெரிக்கா

நேற்று (02) அதிகாலை பாக்கிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள அபோடாபாத் பகுதியில் வைத்து அல்கைடா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட சிறப்பு படை நடவடிக்கையில் அமெரிக்க கடற்படையின் சீல் (SEAL) கடற்படை கொமோண்டோக்கள் பங்கெடுத்ததாக அமெரிக்க படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கான் தளம் ஒன்றில் இருந்து இரண்டு உலங்குவானூர்திகளில் புறப்பட்ட 40 சீல் சிறப்புப்படை கொமோண்டோக்களே இந்த சிறப்பு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த நடவடிக்கையின் தகவல்கள் வெளியில் தெரியாது இருப்பதற்காக ஆப்கானில் இருந்து புறப்பட்ட உலங்குவானூர்திகள் பாகிஸ்தான் இராணுவத்தினரின் ரடார் திரைகளில் சிக்காது மிகவும் தாழ்வாகப் பறந்து சென்றுள்ளன.
நள்ளிரவு 12.55 மணியளவில் பின்லாடன் தங்கியிருந்த மூன்று மாடி கட்டிடத்தின் கூரையில் கொமோண்டோக்களை உலங்குவானூர்திகள் தரையிறக்கியபோது, கூரையில் காவல் கடமையில் இருந்த அல்கைடா உறுப்பினர்கள் மேற்கொண்ட தாக்குதலில் உலங்குவானூர்தி ஒன்று சேதமடைந்துள்ளது.
சேதமடைந்த உலங்குவானூர்தியை தரையில் கைவிட்ட கொமோண்டோக்கள் மிக வேகமாக தமது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். வீழ்ந்த உலங்குவானூர்தி 14 அடி உயர மதிலில் தொங்கி கிடப்பதை காணக்கூடியதாக உள்ளது.
கூரையில் இருந்த அல்கைடா உறுப்பினர்கள் கொல்லப்பட்டதுடன், கொமோண்டோக்கள் மிக விரைவாக கட்டிடத்தின் அறைகளுக்குள் புகுந்து கொண்டனர்.
பல அறைகளைக்கொண்ட அந்த கட்டிடத்தொகுதியின் ஒரு அறைக்குள் புகுந்த கொமோண்டோ வீரர் ஒருவர் ஒசாமாவை அடையாளம் கண்டுகொண்டார். அது ஒசாமாவின் படுக்கை அறை.
முதலில் சரணடையுமாறு உத்தரவுகளை பிறப்பித்த கொமோண்டோ படை வீரர், ஒசாமா சரணடைய மறுத்து ஆயுதத்தை தேடியபோது, அவரின் தலையில் இரு தடவைகைள் சுட்டுள்ளார்.
எனினும் ஒசாமாவை கட்டாயம் கைது செய்யவேண்டும் என்ற திட்டம் அமெரிக்காவிடம் இருக்கவில்லை. ஏனெனில் 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் இரு தடவைகள் ஒசாமாவை அமெரிக்கா தப்பிக்க விட்டிருந்தது.
அவரை உயிருடன் பிடிப்பதற்கு முயன்றபோதே அவர் தப்பிச் சென்றிருந்தார். எனவே இந்த தடவை அவரை பிடிப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் என அமெரிக்க கொமோண்டோக்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்காவுக்கு சவாலாக விளங்கிய பின்லாடன், 1989 களுக்கு முன்னர் ஆப்கானை ஆக்கிரமித்திருந்த சோவியத்திற்கு பெரும் தலையிடியாக விளங்கியிருந்தார்.
சவுதி அரேபியாவில் மிகவும் செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்த அவர் மிகவும் மென்மையான சுபாவம் கொண்டவர் என அப்துல் பரிஸ்ஹான் என்ற ஆய்வாளர் தெரிவித்துள்ளார். “அல்கைடாவின் இரகசிய வரலாறு” என்ற புத்தகத்தை பரிஸ்ஹான் எழுதியிருந்தார்.
ஆப்கான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் இரு பெரும் போர்களை ஏற்படுத்திய பின்லாடன், 4,000 அமெரிக்கப் படையினரினதும், 300 பிரித்தானியா படையினரினதும் மரணத்திற்கும், பல பில்லியன் டொலர் செலவுக்கும் காரணமானவர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் அமெரிக்காவுக்கு எதிராக பின்லாடன் மேற்கொண்ட நேரடியான தாக்குதல்கள் மூன்று.
• நைரோபில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீதான குண்டுத்தாக்குதல் (1998) – 244 பேர் பலி.
• யேமன் கடற்பகுதியில் தரித்து நின்ற யூ எஸ் எஸ் கோல் என்ற அமெரிக்க கடற்படைக் கப்பல் மீதான தாக்குதல் (2000) – 17 ஈரூடக்ப்படையினர் பலி.
• அமெரிக்காவின் வர்த்தக மையம் மற்றும் பென்ரகன் மீதான தாக்குதல் (2001) – 3,000 இற்கு மேற்பட்டவர்கள் பலி.
இதனிடையே, பாகிஸ்தான் அரசுக்கு தெரியாது பின்லாடன் பாகிஸ்தான் தலைநகரத்தில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள நகரத்தில் தங்கியிருக்க முடியாது எனவும், பின்லாடன் தங்கியிருந்த வீட்டுக்கு அண்மையில் பாகிஸ்தான் இராணுவ பயிற்றிக் கல்லூரி இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவல்களை இந்திய ஊடகங்கள் முதன்மைப்படுத்தியபோதும், அதனை பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரொனி பிளேயரும், அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் கிலாரி கிளிங்டனும் மறுத்துள்ளனர்.
அல்கைடாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் 30,000 மக்களையும், 5,000 படையினரையும் இழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருந்தபோதும், தனது தொழில்நுட்டபத்தின் உதவியுடன், பின்லாடனின் இருப்பிடத்தை அறிந்து அவர் மீதான நடவடிக்கைகயை மிகவும் சிறப்பாக நடத்தி முடித்துள்ள அமெரிக்க, உலகின் இராணுவ வலிமைமிக்க நாடாக தன்னை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.
உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மரபுவழிப் படையணியுடன் மோதுவது இலகுவானது. ஆனால் ஒரு சில தனிப்பட்ட நபர்களை தேடுவது என்பது ஒரு வைக்கோல் கும்பலுக்குள் ஒரு வைக்கோலை தேடுவது போன்றது.
ஆனாலும் அமெரிக்கா அதில் வெற்றிகண்டுள்ளது, மேற்குலகத்தின் செல்iவாக்கையும், எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப்போகும அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் செல்வாக்கையும் இந்த நடவடிக்கை உயர்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.

ஒசாமாவை கொன்றது யார் ?

 அல்-காய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒஸாமா பின் லேடனை அவரது பாதுகாவலரே சுட்டுக் கொன்றிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் "த டான்" ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில், வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாத் நகரில் தங்கியிருந்த பின்லேடன், அமெரிக்கப் படையினர் தம்மை நெருங்கிவிட்டதை அறிந்து, அவர்களிடம் பிடிபடாமல் இருக்க, தமது பாதுகாவலர் ஒருவரையே சுட்டுக் கொல்லுமாறு கேட்டிருக்கலாம் என்றும், அவரது விருப்பப்படி பாதுகாவலர்களில் ஒருவரே சுட்டுக் கொன்றிருக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் இத்தகவலை தெரிவித்ததாக அந்த ஏடு கூறியுள்ளது.

ஒன்று அல்லது இரண்டு குண்டுகளில் பின்லேடன் உயிரிழந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், "தப்பிச் செல்வதற்காக பதிலடி தாக்குதல் இருக்கும்போது இவ்வளவு அருகில் இருந்து பின்லேடனை சுட்டிருக்க முடியுமா?" என்றும் அந்த அதிகாரி கேள்வி எழுப்பியதாக அந்த பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதை வீடியோ மூலம் நேரடியாகப் பார்த்த ஒபாமா!

வாஷிங்டன்: அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்படுவதை வீடியோ மூலம் நேரடியாக பார்த்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அவர் மட்டுமல்லாமல் ஹில்லாரி கிளிண்டன் உள்ளிட்ட உயர் மட்டத் தலைவர்கள் இந்தக் காட்சியை நேரில் பார்த்துள்ளனர்.


ஒபாமா, ஹில்லாரி தவிர துணை அதிபர் ஜோ பிடனும் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தார்.

வெள்ளை மாளிகையின் நெருக்கடி கால அறையில் அமர்ந்தபடி இந்த வீடியோக் காட்சிகளை அவர்கள் பார்த்துள்ளனர். பின்லேடனை சுட்டு வீழ்த்திய வீரர்களில் ஒருவரது ஹெல்மட்டில் பதித்து வைக்கப்பட்டிருந்த வீடியோ காமரா மூலம் இந்தக் காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பாகி அதைத்தான் ஒபாமா குழுவினர் பார்த்துள்ளனர்.

பின்லேடனை இடது கண்ணில் அமெரிக்க வீரர் சுட்டுத் தள்ளியதை நேரில் பார்த்துள்ளார் ஒபாமா. அவ்வாறு சுட்டதும் பின்லேடன் கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அந்த வீரர் மீண்டும் பின்லேடனின் இடதுபுற நெஞ்சில் சுட்டு மரணத்தை உறுதி செய்துள்ளார்.

இந்த வீடியோவில், பின்லேடனை அவரது மனைவி காப்பாற்ற முயற்சித்து பின்லேடனுக்கு முன்னால் வந்து நிற்பது போன்ற காட்சியும் இருப்பதாக தெரிகிறது.

ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய பின்லேடன் பாதுகாவலர்கள்:

ஆப்கானிஸ்தானில் இருந்து 4 ஹெலிகாப்டர்களில் சென்ற அமெரிக்கக் கடற்படை சீல்கள் பிரிவைச் (Navy Seal Team-6) சேர்ந்த கமாண்டோக்கள் தான் இந்த ஆபரேசனை நடத்தியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆனால், இந்த 4 ஹெலிகாப்டர்கள் தவிர மேலும் ஏராளமான போர் விமானங்களும், கனரக ஆயுதம் ஏந்திச் செல்லும் சரக்கு விமானங்களும், மேலும் ஏராளமான வீரர்களைக் கொண்ட சி-15 ரக விமானங்களும், ஆளில்லா உளவு விமானங்களும், ராக்கெட்களை வீசக் கூடிய AC-13 ரக ஹெலிகாப்டர்களும், CH-47, UH-60 ரக ஹெலிகாப்டகள் பலவும் இந்தத் தாக்குதலில் பங்கேற்றிருக்க வேண்டும் என்றே கருதப்படுகிறது.

சீல்கள் வந்த நான்கு CH-47 ஹெலிகாப்டர்களில் ஒன்றை பின்லேடனின் பாதுகாவலர்கள் சுட்டு வீழ்த்தியதும் உறுதியாகியுள்ளது. ஆனால், அது எந்திரக் கோளாரால் செயலிழந்ததால் தாங்களே அதை குண்டுவீசி அழித்துவிட்டதாகவும், அமெரிக்கத் தரப்பில் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை என்றும் அதிபர் ஒபாமா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒரு ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதில் சில அமெரிக்க வீரர்கள் காயமோ அல்லது உயிரிழந்திருக்கவோ வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.

இந்தத் தாக்குதலை 7,000 கி.மீ. தொலைவில் இருந்தபடி ஒபாமாவும் அவரது டீமும் நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்துள்ளனர்.

பின்லேடன் மரணத்தில் புதிய சர்ச்சை

மே.3,
: பாகிஸ்தானில் அல் காய்தா தலைவர் பின்லேடன் கொல்லப்பட்டதால் பலர் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் அவர் கொல்லப்பட்டதற்கு ஆதாரம் எங்கே என சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.பின்லேடன் கொல்லப்பட்ட செய்தி இணையதளங்களில் வெளியான உடன் டிவிட்டர், பேஸ்புக் இணையதளங்களில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் பின்லேடனின் உடல் இருந்த புகைப்படம் வெளியானது. அந்த புகைப்படத்தில் பின்லேடனின் முகத்தில் ரத்தக்கறைகள் இருந்தன.எனினும் அந்த புகைப்படம் போலியானது என்பதை பின்லேடனின் பழைய புகைப்படம் ஒன்று நிரூபித்துள்ளதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்தது.எனவே பின்லேடன் கொல்லப்பட்டதற்கு ஆதாரம் என்ன என்று தற்போது சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கா வரை பின்லேடனின் மரணத்தில் சந்தேகம் உள்ளவர்கள் அவர் இறந்துவிட்டார் என்பதை நம்பவில்லை.என்னுடைய கண்களால் நான் பார்க்கும்வரை அதை நம்பமுடியாது. சதாம் உசேனைப் போன்று அவரது உடலைப் பார்க்கும்வரை அதை நம்பமுடியாது என மேரிகிளேஜரவுட் என்பவர் தெரிவித்தார்.நியுயார்க் நகரில் நடைபெற்ற தாக்குதலுக்குப் பின்னர் இடிபாடுகளை அகற்ற உதவிய தீயணைப்பு வீரர்களில் ஒருவரின் மகனான எரிக் சோலோசிர் என்பவர் கூறுகையில், பின்லேடனின் மரணம் அவருக்கு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதால் அவர் அதை விரும்புவார் எனக் கருதினேன். ஆனால் அவர் சமாதானம் அடையவில்லை என்றார்.அவர்கள் விடியோவை அளித்திருக்க வேண்டும். அது கொடூரமாக இருந்தாலும் நாம் பார்த்து நம்ப முடியும் என அவர் கூறினார்.பெயரை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் சீனியர் ஒருவர், பின்லேடனின் மரணம் அல் காய்தாவுக்கு பின்னடைவாக இருந்தாலும், அதை நம்புவதற்கு கடினமாக உள்ளது என்றார்.எனினும் பாகிஸ்தானில் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டது 99.9 சதவீதம் நிச்சயமானது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.பின்லேடனின் டிஎன்ஏ டெஸ்ட் அவரது உறவினர்கள் பலரது டிஎன்ஏவுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது என அமெரிக்க உளவுப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மிகவும் கொடூரமாக இருப்பதால்தான் பின்லேடன் மரணம் தொடர்பான காட்சிகள் வெளியிடப்படவில்லை என சில தகவல்கள் கூறுகின்றன. சதாம் உசேன் மகன்கள் இறந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சில மாற்றங்கள் செய்து அமெரிக்க அரசு வெளியிட்டது. அதுபோல் இப்போதும் மாற்றப்பட்ட வடிவத்தில் புகைப்படங்களை வெளியிட்டிருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்தனர்.பின்லேடன் மரணம் தொடர்பான காட்சிகள் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும் அதைப் பார்த்தால் மட்டுமே அவரது மரணம் தொடர்பான சர்ச்சைகள் விலகும் என்பதில் சந்தேகம் இல்லை.

அமெரிக்க போர் விமான ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததால் சர்ச்சை



இரண்டு அமெரிக்க நிறுவனங்களுக்கான போர் விமான ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது.
இதனால் இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவு பாதிக்கப்படாது என்று அமெரிக்க வெளியுறவு இணையமைச்சர் ராபர்ட் பிளேக் தெரிவித்தார்.
அமெரிக்காவின் இரண்டு விமான நிறுவனங்களான போயிங் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் ஆகியவற்றுக்கு போர் விமானங்களுக்கான ஆர்டர் வழங்கப்படவில்லை. ரூ.45 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் இவ்விரு நிறுவனங்களுக்கு வழங்கப்படாதது மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டிமோத்தி ரோமரும் இதனால் தான் தனது தூதர் பதவியை ராஜினாமா செய்ததாக செய்திகள் வெளியான நிலையில் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான வெளியுறவுத்துறை பொறுப்பை வகிக்கும் இணையமைச்சர் ராபர்ட் பிளேக் இத்தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளிடையிலான பேச்சு வார்த்தை திட்டமிட்டபடி ஜூலை மாதம் நடைபெறும் என்றும் இந்த பேச்சுவார்த்தைக்கு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தலைமை வகிப்பார் என்றும் அவர் தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளிடையே ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து விரிவாக பேசப்படும்.
அமெரிக்க நிறுவனம் இப்போது தான் முதல் முறையாக இந்தியாவுக்கு ராணுவ விமானங்களை சப்ளை செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை அளித்தன. ஆனால் அது எந்த காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டது என்ற விவரம் தங்களுக்குத் தெரியவில்லை. இது தொடர்பான விரிவான அறிக்கை கிடைத்த பிறகே இது குறித்து கருத்து தெரிவிக்க முடியும் என்று பிளேக் தெரிவித்தார்.
குறுகிய கால நோக்கில் எடுக்கப்பட்ட முடிவால் ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டதாக பிளேக் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் இந்த முடிவால் இரு நாடுகளிடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்படும் என்று ஹெரிடேஜ் அறக்கட்டளையைச் சேர்ந்த லிஸ் கர்டிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
விமானம் மட்டும் தான் இந்தியாவுக்குத் தேவை என்றால் அமெரிக்காவுடனான உறவு எதற்கு? என்று அவர் கேள்வியெழுப்பினார். இந்தியாவுக்காக எந்த அளவுக்கு அமெரிக்கா பணிந்து போக வேண்டும் என்ற கேள்வி எழுவதாக சர்வதேச சமாதானத்துக்கான கார்னேஜ் அறக்கட்டளையின் ஆஷ்லி டெல்லிஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஆனால் இந்த கேள்விக்கணைகளை முற்றிலுமாக ஏற்க மறுத்த பிளேக், இந்தியாவின் இந்த முடிவு ஏமாற்றமளிப்பதாக இருந்தாலும் இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்தம் தொடரும் என்று அவர் கூறினார். ராணுவ ஒத்துழைப்பில் இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ள வேண்டிய பல பணிகள் உள்ளன. இரு நாடுகளுமே சர்வதேச அளவில் அமைதியை நிலைநாட்ட பாடுபடுவதால் இந்தியாவுடன் இணைந்து செயலாற்றுவதற்கு அமெரிக்க அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஒத்துழைப்பு அளிப்பது, மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான டேவிட் கோல்மென் ஹெட்லீயிடம் விசாரணை நடத்தி தகவல்களை அளிப்பது உள்ளிட்ட பணிகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசுவதற்கு ஜூலை மாதத்தில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தை வழிவகுக்கும் என்றார். இரு நாடுகளிடையிலான வர்த்தகம் 2010ம் ஆண்டு 17 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து சி 130ஜே மற்றும் சி17 ரக விமானங்களையும் லாக்ஹீட் விமான நிறுவனத்திடமிருந்து பி 8 கண்காணிப்பு விமானங்களையும் வாங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் சமீபத்தில் நிராகரிக்கப்பட்டன.