Total Pageviews

Monday, 21 March 2011

லிபியா மீது தொடர்ந்து இராணுவத் தாக்குதல்








பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் ஆகியற்றின் தலைமையிலான மேலை நாடுகள் 19ம் நாளன்று லிபியா மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டன. லிபியாவின் பல இடங்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ளதை, அந்நாடு உறுதிப்படுத்தியது.லிபியாவிலான முதல் சுற்று ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் முதலிய மேலை நாடுகள் வெற்றிகரமாக மேற்கொண்டதாக அமெரிக்காவும் பிரிட்டனும் 20ம் நாள் தெரிவித்தன.
லிபியாவில் வாண் பறத்தல் தடுப்புப் பிரதேசத்தை உருவாக்கும் ராணுவ நடவடிக்கை, வெற்றி பெற்றுள்ளது. அரசு எதிர்ப்புப் படையின் கட்டுப்பாட்டிலுள்ள Benghaziஐ மீது லிபிய அரசு தாக்குதல் நடத்துவதை மேலை கூட்டணி படைகள் தடை செய்துள்ளன என்று அமெரிக்க முப்படைத் தலைவர் குழுவின் தலைவர் Michael Mullen கூறினார்.
தேவைப்பட்டால், அடுத்த சில நாட்கள் வான் தாக்குதல் நடவடிக்கைகள் தொடரும் என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் Liam Fox கூறினார்.
இதுவரை, வான் தாக்குதலில் சுமார் 64 பேர் உயிரிழந்தனர், 150 பேர் காயமடைந்தனர் என்று லிபிய அரசு 20ம் நாள் அறிவித்தது.




பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் லிபியா மீது இராணுவ தாக்குதலை 19ம் நாள் துவக்கிய பின், 20ம் நாளும் மூன்று நாடுகள் தொடர்ந்து போர் விமானங்களை அனுப்பி இராணுவத் தாக்குதலை தொடர்ந்தன.
லிபிய வான்பரப்பில் விமானம் பறக்காத பிரதேசத்தை அமைக்கும் இராணுவ நடவடிக்கை வெற்றி பெற்றது. அரசு எதிர்ப்பு சக்தியின் கட்டுப்பாட்டிலுள்ள Benghazi நகரத்தைத் தாக்கிய லிபிய அரசுப் படையின் செயலை, பன்னாட்டு படைகள் தடுத்துள்ளது என்று அமெரிக்க முப்படைத் தலைவர் குழுவின் தலைவர் Michael Mullen தெரிவித்தார்.

தேவைப்பட்டால், அடுத்த சில நாட்களும் வான் தாக்குதல் தொடர்ந்து நடைபெறும் என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் Liam Fox தெரிவித்தார்.
தவிரவும், பிரான்ஸ், நார்வே, கத்தார் முதலிய நாடுகளும் போர் விமானங்களை அனுப்பி லிபிய மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் கலந்து கொண்டன.







பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் லிபியா மீது இராணுவ தாக்குதலை 19ம் நாள் துவக்கிய பின், 20ம் நாளும் மூன்று நாடுகள் தொடர்ந்து போர் விமானங்களை அனுப்பி இராணுவத் தாக்குதலை தொடர்ந்தன.
லிபிய வான்பரப்பில் விமானம் பறக்காத பிரதேசத்தை அமைக்கும் இராணுவ நடவடிக்கை வெற்றி பெற்றது. அரசு எதிர்ப்பு சக்தியின் கட்டுப்பாட்டிலுள்ள Benghazi நகரத்தைத் தாக்கிய லிபிய அரசுப் படையின் செயலை, பன்னாட்டு படைகள் தடுத்துள்ளது என்று அமெரிக்க முப்படைத் தலைவர் குழுவின் தலைவர் Michael Mullen தெரிவித்தார்.

ஜப்பான் "சுனாமி' எதிரொலி: அணுமின் திட்டங்களுக்கு ஆதரவு குறைகிறது


புனே : ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம், சுனாமியால் அங்குள்ள அணு உலைகள் வெடித்து, கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஜப்பான் மட்டுமில்லாமல், அந்நாட்டை ஒட்டியுள்ள இதர நாடுகளும், கதிர்வீச்சு பயத்தில் சிக்குண்டுள்ளன. அணுமின் உற்பத்தியால் ஏற்பட்டுள்ள இடர்பாட்டை கருத்தில் கொண்டு, பல நாடுகள் தற்போது, மரபுசாரா எரிசக்தி திட்டங்கள் வாயிலாக, மின் உற்பத்தி மேற்கொள்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன.


இதுகுறித்து சர்வதேச நிலையான எரிசக்தி பயிலகத்தின் தலைமை இயக்குனர் ஜி.எம்.பிள்ளை கூறியதாவது:அணுமின் உற்பத்தி குறித்து பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த போதிலும், இந்த மின் உற்பத்திக்கு பல நாடுகள், அதிக முக்கியத்துவம் அளித்து வந்தன. தற்போது, ஜப்பானில் ஏற்பட்டுள்ள அணு உலை வெடிப்பு சம்பவங்களால், உலக நாடுகள் மாற்று வழிகளில் மின் உற்பத்தி செய்வது குறித்து சிந்திக்க தொடங்கியுள்ளன. அனல் மின் உற்பத்தி திட்டங்களும், நிலக்கரி பற்றாக்குறையால், மின் உற்பத்தி இலக்கை எட்ட முடியாமல் உள்ளன. மேலும், நிலக்கரியின் விலை, தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் இருப்பு நிலை எத்தனை காலத்திற்கு வரும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. அண்மைக்காலத்தில் இதன் விலை, 20 மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவிலுள்ள அணு மின் திட்டங்கள், மிகவும் பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது. ஆனால், சர்வதேச அளவில் மிகவும் பாதுகாப்பான முறையில் அணுமின் திட்டங்களை செயல்படுத்தி வந்த ஜப்பானின் நிலையே,மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஜப்பான் நாடே, அணுமின் திட்டங்களால் அதிக இடர்பாட்டை கண்டுவரும் நிலையில், இத்திட்டம் இந்தியாவில் எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்பது புலப்படவில்லை.மேற்கண்டவற்றை எல்லாம் வைத்து பார்க்கையில், அனைத்து விதத்திலும் மரபுசாரா வகையில் மேற்கொள்ளப்படும் மின் திட்டங்களே மிகவும் பாதுகாப்பானது என்பதுடன், சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக உள்ளது.கடந்த 10 ஆண்டுகளில், அணுமின் திட்டங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட மின் உற்பத்தி, 5,000 மெகாவாட் என்றளவில் தான் உள்ளது. அதேசமயம், காற்றாலைகள் வாயிலான மின் உற்பத்தியின் பங்களிப்பு 10 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது.இவ்வாறு பிள்ளை கூறினார்.


அணுமின் திட்டங்களுக்கான திட்ட செலவு குறித்து, இதுவரை எந்தவிதமான புள்ளி விவரங்களும் வெளியிடப்பட்டதில்லை. இதற்கான செலவினங்கள் குறித்தும் தெரியாமலேயே உள்ளது.மரபுசாராத வகையில், பல்வேறு வகைகளில் நம்மால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். குறிப்பாக, காற்றாலை திட்டங்கள் வாயிலாக, வரும் 2020ம் ஆண்டிற்குள், 50 ஜிகாவாட் அளவிற்கு மின் உற்பத்தி செய்ய முடியும்.


இதுகுறித்து, "காற்றாலை மின் திட்டங்கள் 2011' என்ற அமைப்பின் ஆலோசகரும், சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான துள்சி டாண்டி கூறியதாவது :குறைந்த செலவில், அதிகளவில் மின் உற்பத்தி செய்யும் வகையிலான மரபுசாராத மின் திட்டங்களே நம் நாட்டிற்கு மிகவும்அவசியமாக உள்ளன.இதனால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், மக்களுக்கும் எவ்வித தீங்கும் ஏற்படுவதில்லை. இதுபோன்ற மின் திட்டங்களால், உலக வெப்பமயமாதலும் தடுக்கப்படுகிறது.சுற்றுச்சூழல் பாதிப்புகளால் இந்தியாவும், சீனாவும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றன. இச்சூழ்நிலையில், மரபுசாரா எரிசக்தி திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு துள்சி டாண்டி கூறினார்.