Total Pageviews

Blog Archive

Saturday, 7 January 2012

இந்திய ராணுவ அதிகாரிக்கு சீனா விசா மறுப்பு

புதுதில்லி, ஜன.6: இந்திய-சீன பாதுகாப்பு பரிவர்த்தனை திட்டத்தின்படி சீனாவுக்கு செல்லவிருந்த இந்திய ராணுவ அதிகாரிக்கு விசா அளிக்க அந்நாடு மறுத்துவிட்டது. இதையடுத்து இந்திய ராணுவ அதிகாரிகள் சீனாவுக்கு மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இந்திய ராணுவ அதிகாரிகள் 30 பேர் கொண்ட குழு, பாதுகாப்பு பரிவர்த்தனை தொடர்பாக ஜனவரி 10-ம் தேதி முதல் 4 நாள்களுக்கு சீனாவில் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. குழுவில் அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பாங்கிங் என்ற ராணுவ அதிகாரியும் இடம்பெற்றிருந்தார். அவருக்கு சீனா வருவதற்கான விசா தருவதற்கு அந்நாடு அனுமதி மறுத்துவிட்டது.
 அருணாசலப்பிரதேசம் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று நீண்ட நாள்களாக சீனா உரிமை கொண்டாடி வருவதே இதற்குக் காரணமாகும். சீனாவின் முடிவையடுத்து, இந்திய ராணுவ அதிகாரிகளின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2010-ம் வருடத்திலும் இதே போன்று ஜம்மு-காஷ்மீரில் வடக்கு மண்டலத் தளபதியாக பணிபுரிந்த லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ஜஸ்வாலுக்கு விசா தர சீனா அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய மாணவரைக் கொன்றவனுக்கு கடுமையான தண்டனை : டேவிட் கேமரூன்

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் வெள்ளியன்று அனுஜ் பித்வேயின் பெற்றோர்களை சந்தித்து பேசும் போது இந்த கொடுஞ்செயல் செய்தவனுக்கு கடும் தண்டனை அளிக்க‌ப்பட வேண்டும் என கூறினார். இதுகுறித்து மேலும் கேமரூன் பேசுகையில், அனுஜ் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மான்செஸ்டர் காவல்துறையினர் வழங்குவார்கள் என உறுதியளித்தார்.




மேலும், பித்வேயின் பெற்றோர் நேற்று மான்செஸ்டரின் சால்போர்டு பகுதியில் பித்வே கொல்லப்பட்ட இடத்திற்குச் சென்றனர். பின் அவர்கள் அளித்த பேட்டியில், பித்வேயின் கொலைக்கு இப்பகுதி மக்களை குற்றம் சொல்ல முடியாது. கொலை செய்த நபரைத் தான் குற்றம் சாட்ட வேண்டும் என்றனர். பித்வேயின் உடல் இரண்டாவது பிரேத பரிசோதனை முடிந்து இறுதிச் சடங்குகள் செய்யும் ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்திடம் இருந்து உடலைப் பெற்று அவர்கள் இன்று நாடு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பித்வே படித்து வந்த லங்காஷர் பல்கலைக்கழகம் அவரது பெற்றோருக்கு தேவையான நிதியுதவி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்தில் ராட்சத பலூன் வெடித்து விபத்து : 11 பேர் பலி!

வெலிங்டன்: நியூசிலந்தில் ராட்சத பலூன் வெடித்த விபத்தில் அதில் பயணம் செய்த 11 பேரும் உயிரிழந்தனர். நியூசிலாந்து தலைநகர் வெலிங்டன் அருகே உள்ள கார்டர்டான் நகரம் அருகே இன்று காலை ஏழரை மணி அளவில் இந்த விபத்து நடந்தது. பலூன், பயணத்தை துவக்கிய அடுத்த 10வது நிமிடத்தில் அதிலிருந்து 10 மீட்டர் உயரத்திற்கு தீ ஜூவாலைகள் எழுந்தது. 




உயிரிழந்தவர்கள் க்ரேட்டர்  வெலிங்டன் பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. ராட்சத பலூனில் பறப்பதற்கு ஏற்ற தெளிவான வானிலை இருந்தபோதும், பலூனில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பலூன் தீப் பிடித்து கீழே விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

நைஜீரியாவில் துப்பாக்கிச் சூடு : 20 பேர் பலி!

அபுஜா: கிறிஸ்துவ மக்கள் கூட்டத்தில் மர்ம நபர் திடீரென்று நடத்திய துப்பாக்கிச் சூட்டினால் 20 பேர் பலியானார்கள். இந்நிகழ்ச்சி அப்பகுதியில் பொரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின்  வடகிழக்கு பகுதியில் டவுன் ஹாலில் கிறிஸ்துவ மக்களின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது அங்கு வந்த மர்ம மனிதன் ஒருவன் 'காட் இஸ் கிரேட்' என்று கூறிய படியே, கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினான். இதில் சம்பவ இடத்திலேயே 20 பேர் பலியாயினர், 50க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர், கிறிஸ்துவ மக்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்று  தெரிவித்ததாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் ஈரான் போர் பயிற்சி : மேற்கத்திய நாடுகள் பீதி!

டெஹ்ரான்: ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் ஈரான் கடற்படை பயிற்சியில் ஈடுபடப் போவதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் மேற்கத்திய நாடுகள் அச்சமுற்றிருப்பதாக தெரிகிறது.

பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவுக்கு இடையில் உள்ள ஹோர்முஸ் நீரிணையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கி 10 நாட்கள் ஈரான் கடற்படை போர் பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது மூன்று ஏவுகணைகளை வெற்றிகரமாக பரிசோதித்தது. இந்தப் பயிற்சியும், ஏவுகணை சோதனையும் மேற்கத்திய நாடுகளில் பதட்டத்தை ஏற்படுத்தின. 

இந்நிலையில், ஈரான் செய்தி நிறுவனம் ஒன்று நேற்று முன்தினம் வெளியிட்ட செய்தியில், பிப்ரவரி மாதம் மீண்டும் ஈரான் கடற்படை பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் போர் பயிற்சியில் ஈடுபடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், மேற்கத்திய நாடுகள் மீண்டும் பதட்டத்தில் இருப்பதாக தெரிகிறது.

ஈரான் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது : மேற்கு ஈரான் மீது போர் அச்சுறுத்தல்


ஈரான் கடற்படைஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் போர்ப் பயிற்சியில் ஈடுபடப்போவதாக, அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற்கு சார்ந்த நேட்டோ அணி லிபியாவை ஆக்கிரமித்து அந்த நாட்டின் வழங்களை சூறையாட தனது சர்வாதிகார பொம்மை அரசை நியமித்த பின்னர் ஈரான் நாட்டின் மீது போர் அச்சுறுத்தல்களை விடுத்து வருகிறது.
இந்த சூழலில் இடம்பெறும் இப் பயிற்சி நடவடிக்கை குறிப்பிடத்தக்கது.
பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவுக்கு இடையில் உள்ள ஹோர்முஸ் நீரி ணையில், கடந்த மாத இறுதி தொடக்கம் ,10 நாட்கள் ஈரான் கடற்படை போர்ப் பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது, மூன்று ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
இந்தப் பயிற்சியும், ஏவுகணைச் சோதனையும், மேற்குலகில் பதற்றத்தைக் கிளப்பின. இந்நிலையில், ஈரான் செய்தி நிறுவனம் ஒன்று, நேற்று முன்தினம் வெளியிட்ட செய்தியில், பெப்ரவரி மாதம், மீண்டும் ஈரான் கடற்படை, பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையில், போர்ப் பயிற்சியில் ஈடுபடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் அமரிக்காவும் ஐரோப்பிய நாடுகளுமே அமைதியின்மையையும் போரையும் ஏற்படுத்துவதாக அப்பிராந்திய மக்கள் கருதுவதாக அமரிக்கநிறுவன மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்த்துள்ளது.