Total Pageviews

Blog Archive

Friday, 24 June 2011

பின்லேடனுடன் உளவுத் துறை அதிகாரிகள் தொடர்பு: அமெரிக்கா அதிர்ச்சி

அல்கொய்தா தீவிரவாதத் தலைவர் பின்லேடனுக்கும், பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுக்கும் செல்போன் மூலம் தொடர்பு இருந்தது தற்போது தெரியவந்துள்ளது. இந்த தகவல் அமெரிக்காவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
பின்லேடன் பயன்படுத்திய செல்போனை கைப்பற்றிய அமெரிக்க அதிகாரிகள் அதனை ஆய்வு செய்து வருகிறார்கள். அப்போது பாகிஸ்தான் உளவுத்துறையினருடன் தொடர்புடைய ஹராகட் உல் முஜ்கிதீன் தீவிரவாத அமைப்பின் அழைப்பு விவரங்கள் பதிவாகி இருப்பது தெரியவந்தது.
பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.க்கும் பின்லேடனுக்கும் தொடர்பு இருப்பது சாதாரண விடயமல்ல. இதனை தீவிரமாக கருதுகிறோம். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.
கடந்த மே மாதம் 2ம் திகதி பாகிஸ்தான் அபோதாபாத் நகரில் அல்கொய்தா தலைவர் பின்லேடனை அமெரிக்க சிறப்பு கமண்டோக்கள் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலின் போது அங்கு இருந்து செல்போன் போன்ற இதர முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்கள்.
பின்லேடனுக்கு உதவி செய்த ஹராகட் தீவிரவாத அமைப்பை அமெரிக்கா தடைசெய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து உள்ளது. இந்த தீவிரவாத அமைப்பு ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த தீவிரவாத அமைப்புக்கு பல ஆண்டுகளாக ஐ.எஸ்.ஐ அமைப்புடன் தொடர்பு இருந்து வருகிறது.

இந்தியாவில் ஹெராயின் விற்பனை அதிகம்: ஐ.நா.தகவல்

ஐ.நா.:தென்‌கிழக்கு ஆசியாவின் இந்தியாவில் தான் ஹெராயின் விற்பனை அதிகரித்து வருகிறது என ஐ.நா. வருடாந்திர ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.வுக்கான போதை மருந்து கடத்தல் மற்றும் குற்றம் - 2011 -யின் (யு.என்.ஓ.டி.சி.) அமைப்பு வருடாந்திர அறிக்கை வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: தென்கிழக்கு ஆசியாவில் தான் தோராயமாக 1.9 பில்லியன் டாலர் அளவுக்கு ஹெராயின் ‌எனும் போதை மருந்து விற்பனை நடக்கிறது. இதில் இந்தியாவின் அதிகபட்சமாக 1.4 பில்லியன் டாலர் அளவுக்கு விற்பனை நடக்கிறது. மேலும் சீனாவிலும்,பாகிஸ்தானிலும் தான் ஹெராயினை நுகர்வர்கள் அதிகம் உள்ளனர். இதற்கு அடுத்ததாக ஈரானில் உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு வரையில் ஆப்கானிஸ்தானில் அதிகளவு ‌‌நுகரப்பட்டது. இங்கு உள்நாட்டிலேயே போதை மருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. உலகளவில் கடந்த 2007-ம் ஆண்டுகளில் மியான்மர் நாட்டில் 5 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டது. இது 2010-ம் ஆண்டில் 12 சதவீதமாக அதிகரித்தள்ளது. மேலும் யு.என்.ஓ.டி.சி அமைப்பு நடத்திய ஆய்வில் கடந்த கடந்த 2009-ம் ஆண்டில் உலகளவில்149 முதல் 203 மில்லியன் மக்கள் போதை மருந்தினை உப‌யோகப்படுத்தியுள்ளனர். இதே போன்று மெராக்‌கோ, லெபனான், நேபாள் ஆகிய நாடுகளில் ஹாஸிஸ் எனும் போதை மருந்து விற்பனை அதிகரித்து வருகிறது.தவிர கோகைன் போன்றவைகளும் ஆசிய சந்தையில் பெருகிவிட்டன.

கறுப்பு பண ஒழிப்புக்கு இ.மெயிலில் குவியும் ஐடியாக்கள்!!

டெல்லி: கறுப்புப் பணத்தை ஒழிக்க யோசனை தெரிவிக்குமாறு மத்திய அரசு பொதுமக்களிடம் கேட்டவுடன், ஐடியாக்களை மின்னஞ்சல்கள் மூலம் மக்கள் போட்டி போட்டு அனுப்பி வருகின்றனர்.

கறுப்பு பணத்தை கட்டுப்படுத்தவும், அதை மீட்கவும் சிபாரிசு செய்வதற்காக, உயர் அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழுவை மத்திய நிதி அமைச்சகம் அமைத்துள்ளது. இக்குழு கடந்த 9-ந் தேதி முதல்முறையாக கூடியது.

அப்போது, கறுப்பு பணத்தை ஒழிப்பது குறித்து பொதுமக்களிடம் யோசனை கேட்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக இ.மெயில் முகவரியும் தொடங்கப்பட்டது.

அதை ஆரம்பித்த ஒரு வாரத்துக்குள் பொதுமக்கள் போட்டி போட்டு யோசனைகளை வாரி வழங்கி வருகிறார்கள்.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் யோசனை தெரிவித்துள்ளனர். அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடக்கும் நிபுணர் குழுவின் கூட்டத்தில், பொதுமக்களின் யோசனைகள் ஆய்வு செய்யப்பட உள்ளன.

அலாஸ்காவில் நிலநடுக்கம்:சுனாமி எச்சரிக்கை

வாஷிங்டன்: அமெரிக்காவின் வட மேற்கு மாகாணமான அலாஸ்காவின் அட்கா தீவு அருகே இன்று பசிபிக் கடலில் மிக பயங்கர பூகம்பங்கள் ஏற்பட்டன. அடுத்ததடுத்து ஏற்பட்ட இந்த இரு பூகம்பங்களும் ரிக்டர் அளவுகோளில் 7.4, 7.2 புள்ளிகளாகப் பதிவானயின. இதையடுத்து அலாஸ்கா கரையோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அட்காவுக்கு கிழக்கே 172 கிலோ மீட்டர் தொலைவில் பசிபிக் பெருங் கடலில் 40 கி.மீ. ஆழத்தில் இந் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.4 புள்ளிகளாகப் பதிவானது. அடுத்த 30 வினாடிகளில் இதே பகுதியை இரண்டாவது நிலநடுக்கம் தாக்கியது. அது ரிக்டர் அளவுகோளில் 7.2 புள்ளிகளாகப் பதிவானது.

இதையடுத்து அலாஸ்கா மற்றும் கனடாவின் மேற்குக் கரையோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. யுனிமாக் பாஸ், அலாஸ்காவில் இருந்து அம்சிட்கா பாஸ் வரையிலான கடற்கரையோரப் பகுதிகளுக்கும், டச்சு நாட்டு துறைமுகமான சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

கடலோரப் பகுகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறும், துறைமுகப் பகுதிகளில் உள்ளவர்கள் வெளியேறுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால், சுனாமி அலைகள் ஏதும் உருவாகவில்லை.

இதையடுத்து அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது