Total Pageviews

Blog Archive

Thursday, 5 January 2012

அணுசக்தி ஏவுகணை ஈரான் பரிசோதனையில் அபார வெற்றி


டென்மார்க் 02.01.2012 திங்கள்
ஈரானிய அரசு உலக நாடுகளின் அனைத்து எச்சரிக்கைகளையும் அடியோடு புறந்தள்ளி அணுசக்தி உருவாக்கப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஓர் அணு குண்டைத் தயாரிக்கும் பணிகளில் முக்கிய அம்சமாக யுரோனிய பிரிப்பின் கடுமையான பணிகளை ஈரானிய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்கள். யுரேனிய பிரிப்பினால் உண்டாகும் அணுசக்தி வெளியேற்றத்தின் தாக்கங்களை தாம் அறிந்து கொள்வதற்காகவே இதை செய்வதாக ஈரானிய அணுசக்தி மையத்தின் இணையப்பக்கம் தெரிவிக்கிறது. யுரேனியத்தை வெப்பமாக செயற்பட வைப்பதன் மூலம் வைத்தியத் துறைக்கான சக்தி வளத்தில் தாம் சிறப்படைய முடியும் என்று வெளிநாட்டவருக்கு கோடி காட்டியபடியே ஈரான் புதிய ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியது. யுரோனிய பிரிப்பிற்குள்ளான சக்திமிக்க கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை கடலில் இருந்து ஈரான் ஏவியது. பாரசீக வளைகுடாவை தாண்டி இது இலக்கை தொட்டுள்ளது. ஈரானின் இந்த முன்னேற்றம் இஸ்ரேலுக்கு சில செய்திகளை சொல்லியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேலிய தாக்குதல் நடைபெறும் என்ற எச்சரிக்கைகளை அது முற்றாக புறந்தள்ளியுள்ளது. இதே யுரேனியம் பிரிப்பு முயற்சி வெற்றிகளை தாங்கிய அணுசக்தியானது ஈரானிய நவுர் ராக்கட்டுக்களிலும் பொருத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
ஈரான் அணு குண்டை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மேலை நாடுகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. ஆனால் ஈரான் அதை தொடர்ந்து மறுத்து வருகிறது. அதேவேளை அமெரிக்க ஆளில்லா விமானத்திற்கே ஆப்பு வைக்கக் கூடிய கூரிய அறிவுள்ள விஞ்ஞானிகள் ஈரானில் இருப்பது மேலை நாடுகளுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஸ்யாவும் தனது பற்றியாற்றிக் தரத்திற்கு இணையான ஏவுகணை சுடும் கலங்களை ஈரானுக்கு வழங்கியுள்ளது. மத்திய கிழக்கு பிரச்சனை முடிவடைய பத்து வருடங்கள் ஆகுமென இஸ்ரேல் கூறியிருப்பது ஈரானின் பலத்தின் மீதான மதிப்பீடாகும்.
உப கதை :
ஈரான் என்பது பழைய காந்தார நாடாகும். இந்த நாட்டில் இருந்து வந்தவளே திருதராஷ்டிரனின் மனைவியாகிய காந்தாரி. இவளுடைய தம்பியாகிய சகுனியும் காந்தார நாட்டை சேர்ந்தவனே. இவர்கள் இந்தியாவிற்குள் நுழைந்து திராவிடர்களுடன் மோதி அவர்களை தெற்கே விரட்டிய கூட்டத்தினர் என்றும் சில நூல்கள் கூறுகின்றன. இதே காந்தாரர்களே ஈழத்தில் தமிழருக்கு ஓர் அரசு ஏற்படாமல் தடுத்தார்களா.. சகுனியின் செயற்பாடுகளை இவர்கள் பெற பழைய காந்தார தொடர்புகளா காரணம் என்பது சுவை மிக்க வரலாற்று கற்பனையாகும்.

225 பேரை சுட்டுக் கொன்ற அமெரிக்க கப்பற்படை வீரர்

வாஷிங்டன், ஜன. 4-
அமெரிக்காவை சேர்ந்தவர் கிறிஸ்கெயில். இவர் அமெரிக்க கப்பற்படையான 'நேவி சீல்' பிரிவில் வீரராக பணிபுரிந்தார். இவர் குறி தவறாமல் சுடுபவர். இவர் வைத்த குறி தப்பாது. அவ்வாறு அவர் சுட்டதில் இதுவரை 225 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
முதன் முதலாக அவர் ஒரு பெண்ணை சுட்டுக்கொல்ல தயங்கிய சம்பவம் ஈராக்கில் நடந்தது. சதாம் உசேனை பிடிப்பதற்கு முன்பு அமெரிக்க கப்பலை வெடிகுண்டு வீசி தகர்க்க அந்த பெண் வந்தாள். பெண் என்பதால் அவளை சுட கெயில் தயங்கினார். ஆனால் உடனே சுட்டு வீழ்த்தும்படி ராணுவ பிரிவு தலைவர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவளை சுட்டு வீழ்த்தினார். இருந்தும் அந்த குண்டு வெடித்துவிட்டது.
அதில் இருந்துதான் துப்பாக்கியால் சுடும்போது ஏற்படும் தயக்கத்தை முற்றிலும் கைவிட்டார். எதிரிகளை குறி பார்த்து சுட்டு வீழ்த்தி வந்தார். இவருக்கு முன்பு அமெரிக்க வரலாற்றில் ராணுவ வீரர் அடல்பெர்ட் சுப் வால்ட் டிரன் என்பவர் 109 பேரை சுட்டுக்கொன்ற வரலாறு இருந்தது. இவர் வியட்நாம் போரில் இந்த சாதனையை நிகழ்த்தினார். அவரது இச்சாதனையை கிறிஸ் கெயில் முறியடித்து உள்ளார்.
இவர் சுட்டுக்கொன்றவர்களில் மிகவும் முக்கிய மானவர்களின் பட்டியலில் அல்- ஷபிதான் ரமாத் என்பவன் முக்கியமானவன். அவன் தலைக்கு அமெரிக்கா ரூ.10 லட்சம் அறிவித்து இருந்தது. கெயில் 225 பேரை சுட்டுக்கொன்று இருந்தாலும் அவர் 160 பேரை கொன்றுள்ளதாக ராணுவ தலைமையகமான பென்டகன் அதிகாரபூர்வ மாக அறிவித்துள்ளது. இந்த அற்புதமான தகவல்களை அவர்தான் புதிதாக எழுதியுள்ள குறி தவறாது சுட்டு வீழ்த்துபவர் என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். அமெரிக்கா கடற்படையில் 10 ஆண்டுகளாக பணி புரிந்த அவர் கடந்த 2009-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

அமெரிக்க போர்க்கப்பல் நுழைய அனுமதிக்க மாட்டோம்: ஈரான் தளபதி எச்சரிக்கை

டெக்ரான், ஜன. 4-
வளைகுடா பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று ஈரான் ராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் நாடு அணுகுண்டுகளை தயாரிப்பதாக குற்றம்சாட்டி அந்த நாடு மீது அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுக்கும் ஈரான் அணுசக்தியை நாங்கள் மின்சார தயாரிப்பு போன்ற ஆக்கபூர்வ திட்டங்களுக்கே பயன்படுத்துகிறோம் என கூறுகிறது.
இந்நிலையில் ஈரான் நாட்டு ராணுவம் வளைகுடாவில் உள்ள ஓமன் கடல் பகுதியில் போர் பயிற்சி ஒத்திகையை நடத்தி வருகிறது. இதில் கடற்படை நடத்திய 10 நாள் ஒத்திகை நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.
இந்த போர் ஒத்திகையின் போது ஈரான் போர்க்கப்பலில் இருந்து குறைந்த தூரம் மற்றும் நீண்ட தூரம் சென்று தாக்கும் பல ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவி சோதனை நடத்தியது. இதன் மூலம் ஈரான் தனது ராணுவ வலிமையை பெருக்கி கொண்டுள்ளது என்றும் அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டு ராணுவத்திற்கு சவால் விடும் அளவிற்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வளைகுடா பகுதியில் ஈரான் போர் ஒத்திகை நடத்துவதால் அமெரிக்க போர்க்கப்பல்கள் அவ்வழியாக செல்லவில்லை. இதற்கிடையில் அமெரிக்க போர்க்கப்பல் திரும்பவும் நுழையக்கூடாது. மீறினால் எதிர் நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ஈரான் ராணுவ தலைமை தளபதி அதோல்லா சாலேகி கூறியதாவது:-
ஓமன் கடல் பகுதியில் எங்கள் பயிற்சி நடைபெறுகிறது. எனவே எதிரிகளின் (அமெரிக்க) போர்க்கப்பல் செல்லக்கூடாது. இந்த எச்சரிக்கை ஏற்கனவே ஒருமுறை விடுக்கப்பட்டு விட்டது. மீண்டும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால் அமெரிக்கா போர்க்கப்பல் எது என்பதையோ, ஈரான் எந்த விதமான எதிர் நடவடிக்கை எடுக்க போகிறது என்பதையோ அவர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில் பக்ரைனில் முகாமிட்டுள்ள அமெரிக்காவின் 15-வது கடற்படை கருத்து தெரிவிக்கையில், வளைகுடா பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கப்பல் செல்ல அனுமதிக்க மாட்டோம் என விளக்கம் அளித்தது.

வளைகுடா பகுதியில் போர்க்கப்பல்கள்: ஈரான் எச்சரிக்கையை அமெரிக்கா நிராகரித்தது

வாஷிங்டன், ஜன. 5-
பாரசீக வளைகுடா பகுதியில் தங்கள் கடற்படை போர் ஒத்திகையில் ஈடுபட்டு இருப்பதால், அந்த பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் நுழைய அனுமதிக்கமாட்டோம் என்று ஈரான் விடுத்த எச்சரிக்கையை, அமெரிக்கா நிராகரித்து உள்ளது.
இதுபற்றி அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் பத்திரிகை தொடர்பு செயலாளர் ஜார்ஜ் லிட்டில் கூறுகையில்; வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைத்தன்மையை கருதி பாரசீக வளைகுடா பகுதியில் பல ஆண்டுகளாக அமெரிக்க போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன என்றும், இந்த நிலை தொடரும் என்றும் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் ஈரான் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் இருந்தும் உள்நாட்டு பிரச்சினைகளில் இருந்தும் மக்களின் கவனத்தை திசை திருப்ப அந்த நாடு இவ்வாறு பேசி வருவதாகவும் வெள்ளை மாளிகையின் பத்திரிகை பிரிவு செயலாளர் ஜே கார்னி கூறினார்.