அல்-காய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒஸாமா பின் லேடனை அவரது பாதுகாவலரே சுட்டுக் கொன்றிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் "த டான்" ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில், வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாத் நகரில் தங்கியிருந்த பின்லேடன், அமெரிக்கப் படையினர் தம்மை நெருங்கிவிட்டதை அறிந்து, அவர்களிடம் பிடிபடாமல் இருக்க, தமது பாதுகாவலர் ஒருவரையே சுட்டுக் கொல்லுமாறு கேட்டிருக்கலாம் என்றும், அவரது விருப்பப்படி பாதுகாவலர்களில் ஒருவரே சுட்டுக் கொன்றிருக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் இத்தகவலை தெரிவித்ததாக அந்த ஏடு கூறியுள்ளது.
ஒன்று அல்லது இரண்டு குண்டுகளில் பின்லேடன் உயிரிழந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், "தப்பிச் செல்வதற்காக பதிலடி தாக்குதல் இருக்கும்போது இவ்வளவு அருகில் இருந்து பின்லேடனை சுட்டிருக்க முடியுமா?" என்றும் அந்த அதிகாரி கேள்வி எழுப்பியதாக அந்த பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் "த டான்" ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில், வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாத் நகரில் தங்கியிருந்த பின்லேடன், அமெரிக்கப் படையினர் தம்மை நெருங்கிவிட்டதை அறிந்து, அவர்களிடம் பிடிபடாமல் இருக்க, தமது பாதுகாவலர் ஒருவரையே சுட்டுக் கொல்லுமாறு கேட்டிருக்கலாம் என்றும், அவரது விருப்பப்படி பாதுகாவலர்களில் ஒருவரே சுட்டுக் கொன்றிருக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் இத்தகவலை தெரிவித்ததாக அந்த ஏடு கூறியுள்ளது.
ஒன்று அல்லது இரண்டு குண்டுகளில் பின்லேடன் உயிரிழந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், "தப்பிச் செல்வதற்காக பதிலடி தாக்குதல் இருக்கும்போது இவ்வளவு அருகில் இருந்து பின்லேடனை சுட்டிருக்க முடியுமா?" என்றும் அந்த அதிகாரி கேள்வி எழுப்பியதாக அந்த பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
