Total Pageviews

Blog Archive

Monday, 2 May 2011

பின்லேடன் இடத்தில் ஜவாஹரி?

அல் காய்தா தலைவர் ஒஸாமா பின்லேடன் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அவரது இடத்திற்கு எகிப்தில் பிறந்த மருத்துவரான அய்மன் அல்-ஜவாஹரி என்பவர் பொறுப்பேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்லேடன் மற்றும் அவரது அல் காய்தா வலையமைப்பின் மூளையாகச் செயல்பட்டவர் ஜவாஹரி. அல் காய்தாவின் விடியோ செய்திகளில்அமெரிக்காவையும், அதன் கூட்டாளிகளையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்தவர் ஜவாஹரி.

கடந்த மாதம் லிபியாவில் நேட்டோ படைகளையும், அமெரிக்கப் படைகளையும் எதிர்த்து போரிடுமாறு இஸ்லாமியர்களை அவர் வலியுறுத்தியிருந்தார்.

அமெரிக்காவில் செப்டம்பர் 11-ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின் 2001 இறுதியில் ஆப்கனில் தாலிபான் அரசை அமெரிக்கப் படைகள் வீழ்த்தியபோது பின்லேடனும், ஜவாஹரியும் அங்கிருந்து தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க