லண்டன்: எகிப்தை நோக்கிப் பயணித்த பிரிட்டிஷ் பயணிகள் விமானமானது குண்டுத்தாக்குதல் அச்சுறுத்தலைத் தொடர்ந்து அவசரமாக ஏதென்ஸ் நகரில் தரையிறக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனுக்கு சொந்தமான தொம்ஸன் எயர்வேய்ஸ் டோயிங் 757200 என்ற பயணிகள் விமானமானது பிரிஸ்ரல் நகரிலிருந்து எகிப்தின் ஷாம்எல்ஷெய்க் நகரை நோக்கி 213 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த போது குண்டுத்தாக்குதல் அச்சுறுத்தல் விடப்பட்டதைத் தொடர்ந்து ஏதென்ஸ் நகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குண்டுத்தாக்குதல் தொடர்பாக குறித்த விமானத்தில் பணியாற்றும் பணியாளர் மற்றும் எகிப்திய செய்திச்சேவை ஆகியன வழங்கிய செய்தியைத் தொடர்ந்தே அது தரையிறக்கப்பட்டதாக ஏதென்ஸிலுள்ள பி.பி.சி. செய்தியாளர் தெரிவித்துள்ளார். தரையிறக்கப்பட்ட விமானத்தில் குண்டுகளை தேடும் பணியை நிபுணர்கள் மேற்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிரிட்டனுக்கு சொந்தமான தொம்ஸன் எயர்வேய்ஸ் டோயிங் 757200 என்ற பயணிகள் விமானமானது பிரிஸ்ரல் நகரிலிருந்து எகிப்தின் ஷாம்எல்ஷெய்க் நகரை நோக்கி 213 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த போது குண்டுத்தாக்குதல் அச்சுறுத்தல் விடப்பட்டதைத் தொடர்ந்து ஏதென்ஸ் நகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குண்டுத்தாக்குதல் தொடர்பாக குறித்த விமானத்தில் பணியாற்றும் பணியாளர் மற்றும் எகிப்திய செய்திச்சேவை ஆகியன வழங்கிய செய்தியைத் தொடர்ந்தே அது தரையிறக்கப்பட்டதாக ஏதென்ஸிலுள்ள பி.பி.சி. செய்தியாளர் தெரிவித்துள்ளார். தரையிறக்கப்பட்ட விமானத்தில் குண்டுகளை தேடும் பணியை நிபுணர்கள் மேற்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
