Total Pageviews

Blog Archive

Saturday, 25 June 2011

என்னை மின்சார நாற்காலியில் இருக்க வைக்க முயற்சி: ராஜபட்ச

கொழும்பு, ஜூன்.24: தம்மை மின்சார நாற்காலியில் உட்கார வைத்து தண்டனை வாங்கிக் கொடுக்க சிலர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக இலங்கை அதிபர் ராஜபட்ச தெரிவித்தார்.

உர மானியம் தொடர்பாக விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கும் நோக்கத்தில் அதிபர் மாளிகையில் நடைபெற்ற நிகச்சியில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு அறிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்புக்களின் மூலம் இலங்கை அரசுக்கு எதிராக குற்றம் சுமத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அரசுக்கு எதிராக தூக்கப்படும் கரங்கள் இறுதியில் பொதுமக்களின் தலைகளின் மேல் விழுகின்றன. இன்று இலங்கை மக்கள் அனுபவித்து வரும் சுதந்திரத்தை பறிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.