உயிர் வாழ்வதற்கு நீர் எப்படி அவசியமானதோ, அதே அளவுக்கு நமது அன்றாடத் தேவைக்கு மின்சாரமும் அவசியமானது. மின்சாரம் இல்லாமல் ஓரணுவும் அசையாத நிலை உருவாகிவிட்டது. ஆனால், மின்பற்றாக்குறையால் பல்வேறு மாநிலங்கள் திண்டாடி வருகின்றன.
குறிப்பாக, தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மின் உற்பத்தியைப் பெருக்குவது ஒன்றே இதற்குத் தீர்வாக இருக்க முடியும்.
இந்தியாவில் நீர் மின் நிலையம், அனல் மின் நிலையம், அணு மின் நிலையம், காற்றாலை ஆகியவற்றின் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மின் உற்பத்திக்கு இத்தனை வழிகள் இருந்தும், நமது நாட்டில் 65 சதவிகிதத்துக்கும் அதிகமான மின்சாரம், அனல் மின் நிலையங்களில் இருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது.
இதனால், நிரந்தர மின் உற்பத்தியைக் கருத்தில் கொண்டு, அனல் மற்றும் அணு மின் நிலையங்களை நாடியே ஆக வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
இதன் காரணமாக, ரூ.16 ஆயிரம் கோடி செலவில் கடந்த 10 ஆண்டு உழைப்பின் விளைவாக, நாட்டின் தென்கோடியில் உருவானது கூடங்குளம் அணுமின் நிலையம். இதற்குத்தான் போராட்டக்காரர்களால் சோதனை வந்துள்ளது.
அணுமின் நிலையத்தில் ஏதேனும் ஆபத்து நிகழ்ந்தால், பல கிலோ மீட்டர் தூரம் வரை வசிக்கும் மக்கள் மாண்டு போவார்களென, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பயம்தான் போராட்டமாக வெடித்திருக்கிறது. இதற்கு காரணம், ஜப்பான் புகுஷிமா அணு உலையை சுனாமி தாக்கியதால் ஏற்பட்ட விளைவு. கூடங்குளம் அணுமின் நிலையம் மிகக் குறைந்த அளவிலான நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள அணு உலையும் முற்றிலும் அதிநவீனமானது. கடல்மட்டத்தில் இருந்து 8.7 மீட்டர் உயரத்தில் அணு உலை அமைக்கப்பட்டுள்ளதால் பூகம்பம், சுனாமி, குண்டுவெடிப்பு, விமான மோதல் போன்ற எந்தவித இயற்கை, செயற்கைத் தாக்குதல்களையும் அணு உலை தாங்கும்.
ஏதேனும் விபத்து நடந்தால், அணு எரிபொருள்கள் புவிஈர்ப்பு சக்தி மூலம் பூமிக்கு அடியில் சென்று தானாக மூடிக்கொள்ளும். அணுக்கசிவு ஏற்படாமல் தடுக்கவும் அதிநவீன கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஜப்பான் புகுஷிமா அணு உலையில் சுனாமி தாக்குதலால் தண்ணீர் சூடாகி, ஹைட்ரஜன் வாயு உருவாகி புகை மண்டலம் ஏற்பட்டது.
அதுபோன்ற பிரச்னை ஏற்படாமல் தடுக்க, அணு உலையில் உருவாகும் ஹைட்ரஜனைக் குளிர்வித்து நீராக மாற்றும் "ஹைட்ரஜன் மறு இணைப்பான்கள்' பொருத்தப்பட்டுள்ளதாக அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உலக நாடுகளில் பொருளாதார வல்லரசு நாடான அமெரிக்காவின் மக்கள் தொகை, உலக மக்கள்தொகையில் 4.48% மட்டுமே. ஆனால், அவர்கள் வைத்துள்ள அணு உலைகள் எண்ணிக்கை 120. அதன்மூலம் அவர்கள் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி அளவு 1,01,229 மெகாவாட். பிரான்ஸ் மக்கள்தொகை உலக மக்கள்தொகையில் 0.94% மட்டுமே. அணு உலைகள் எண்ணிக்கை 69; அதன்மூலம் அவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரம் 63,236 மெகாவாட்.
சீன மக்கள்தொகை, உலக மக்கள்தொகையில் 19.2%. அணு உலைகள் எண்ணிக்கை 15; அதன்மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரம் 11,078 மெகாவாட்.
பாகிஸ்தான் மக்கள்தொகை, உலக மக்கள்தொகையில் 2.55%. அவர்கள் வைத்துள்ள அணு உலைகள் எண்ணிக்கை 2; அதன்மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரம் 725 மெகாவாட்.
இந்திய மக்கள்தொகை, உலக மக்கள்தொகையில் 17.35%. அணு உலைகள் எண்ணிக்கை 20; இதன்மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவு வெறும் 4,780 மெகாவாட் என்ற நிலையில், உலக அளவில் 15-வது இடத்திலேயே உள்ளது.
மக்கள்தொகையில் இரட்டை இலக்க சதவிகிதத்தில் கூட வராத நாடுகள், அணுமின் உற்பத்தியில் லட்சம் மெகாவாட் உற்பத்தி செய்து, மின் மிகை நாடுகளாக உள்ளன. ஆனால், உலக மக்கள்தொகையில் பெரும்பங்கு வகிக்கும் இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளில் அணுமின் உற்பத்தி மிகவும் குறைவாகவே இருக்கிறது.
உலக மக்கள்தொகையில் 4.48% மட்டுமே உள்ள அமெரிக்காவுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான மெகாவாட் மின்சாரம் தேவைப்படும்போது, உலக மக்கள்தொகையில் 17%க்கும் அதிகமாக உள்ள இந்தியாவுக்கு எவ்வளவு மின்சாரம் தேவைப்படும்?
இந்தியாவில் அணு உலைகள் எண்ணிக்கை குறைவு; ஆனால், மக்கள்தொகையும் மின்சாரத் தேவையும் அதிகம். இதன் காரணமாகவே அணுமின் நிலையம் இந்தியாவுக்கு மிகவும் அவசியமாகிறது. எந்தத் துறையிலும் ஆபத்து இல்லாமல் இல்லை.
அணுமின் நிலையம் அமைக்க, கூடங்குளத்தை தேர்ந்தெடுத்ததை அனைவரும் பெருமையாகக் கருத வேண்டும். இந்தியாவின் மிகப்பெரிய அணு மின் நிலையமாக கூடங்குளம் உருவெடுக்கும்; இதை இந்தப் பிரபஞ்சம் காணும்.
குறிப்பாக, தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மின் உற்பத்தியைப் பெருக்குவது ஒன்றே இதற்குத் தீர்வாக இருக்க முடியும்.
இந்தியாவில் நீர் மின் நிலையம், அனல் மின் நிலையம், அணு மின் நிலையம், காற்றாலை ஆகியவற்றின் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மின் உற்பத்திக்கு இத்தனை வழிகள் இருந்தும், நமது நாட்டில் 65 சதவிகிதத்துக்கும் அதிகமான மின்சாரம், அனல் மின் நிலையங்களில் இருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது.
இதனால், நிரந்தர மின் உற்பத்தியைக் கருத்தில் கொண்டு, அனல் மற்றும் அணு மின் நிலையங்களை நாடியே ஆக வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
இதன் காரணமாக, ரூ.16 ஆயிரம் கோடி செலவில் கடந்த 10 ஆண்டு உழைப்பின் விளைவாக, நாட்டின் தென்கோடியில் உருவானது கூடங்குளம் அணுமின் நிலையம். இதற்குத்தான் போராட்டக்காரர்களால் சோதனை வந்துள்ளது.
அணுமின் நிலையத்தில் ஏதேனும் ஆபத்து நிகழ்ந்தால், பல கிலோ மீட்டர் தூரம் வரை வசிக்கும் மக்கள் மாண்டு போவார்களென, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பயம்தான் போராட்டமாக வெடித்திருக்கிறது. இதற்கு காரணம், ஜப்பான் புகுஷிமா அணு உலையை சுனாமி தாக்கியதால் ஏற்பட்ட விளைவு. கூடங்குளம் அணுமின் நிலையம் மிகக் குறைந்த அளவிலான நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள அணு உலையும் முற்றிலும் அதிநவீனமானது. கடல்மட்டத்தில் இருந்து 8.7 மீட்டர் உயரத்தில் அணு உலை அமைக்கப்பட்டுள்ளதால் பூகம்பம், சுனாமி, குண்டுவெடிப்பு, விமான மோதல் போன்ற எந்தவித இயற்கை, செயற்கைத் தாக்குதல்களையும் அணு உலை தாங்கும்.
ஏதேனும் விபத்து நடந்தால், அணு எரிபொருள்கள் புவிஈர்ப்பு சக்தி மூலம் பூமிக்கு அடியில் சென்று தானாக மூடிக்கொள்ளும். அணுக்கசிவு ஏற்படாமல் தடுக்கவும் அதிநவீன கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஜப்பான் புகுஷிமா அணு உலையில் சுனாமி தாக்குதலால் தண்ணீர் சூடாகி, ஹைட்ரஜன் வாயு உருவாகி புகை மண்டலம் ஏற்பட்டது.
அதுபோன்ற பிரச்னை ஏற்படாமல் தடுக்க, அணு உலையில் உருவாகும் ஹைட்ரஜனைக் குளிர்வித்து நீராக மாற்றும் "ஹைட்ரஜன் மறு இணைப்பான்கள்' பொருத்தப்பட்டுள்ளதாக அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உலக நாடுகளில் பொருளாதார வல்லரசு நாடான அமெரிக்காவின் மக்கள் தொகை, உலக மக்கள்தொகையில் 4.48% மட்டுமே. ஆனால், அவர்கள் வைத்துள்ள அணு உலைகள் எண்ணிக்கை 120. அதன்மூலம் அவர்கள் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி அளவு 1,01,229 மெகாவாட். பிரான்ஸ் மக்கள்தொகை உலக மக்கள்தொகையில் 0.94% மட்டுமே. அணு உலைகள் எண்ணிக்கை 69; அதன்மூலம் அவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரம் 63,236 மெகாவாட்.
சீன மக்கள்தொகை, உலக மக்கள்தொகையில் 19.2%. அணு உலைகள் எண்ணிக்கை 15; அதன்மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரம் 11,078 மெகாவாட்.
பாகிஸ்தான் மக்கள்தொகை, உலக மக்கள்தொகையில் 2.55%. அவர்கள் வைத்துள்ள அணு உலைகள் எண்ணிக்கை 2; அதன்மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரம் 725 மெகாவாட்.
இந்திய மக்கள்தொகை, உலக மக்கள்தொகையில் 17.35%. அணு உலைகள் எண்ணிக்கை 20; இதன்மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவு வெறும் 4,780 மெகாவாட் என்ற நிலையில், உலக அளவில் 15-வது இடத்திலேயே உள்ளது.
மக்கள்தொகையில் இரட்டை இலக்க சதவிகிதத்தில் கூட வராத நாடுகள், அணுமின் உற்பத்தியில் லட்சம் மெகாவாட் உற்பத்தி செய்து, மின் மிகை நாடுகளாக உள்ளன. ஆனால், உலக மக்கள்தொகையில் பெரும்பங்கு வகிக்கும் இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளில் அணுமின் உற்பத்தி மிகவும் குறைவாகவே இருக்கிறது.
உலக மக்கள்தொகையில் 4.48% மட்டுமே உள்ள அமெரிக்காவுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான மெகாவாட் மின்சாரம் தேவைப்படும்போது, உலக மக்கள்தொகையில் 17%க்கும் அதிகமாக உள்ள இந்தியாவுக்கு எவ்வளவு மின்சாரம் தேவைப்படும்?
இந்தியாவில் அணு உலைகள் எண்ணிக்கை குறைவு; ஆனால், மக்கள்தொகையும் மின்சாரத் தேவையும் அதிகம். இதன் காரணமாகவே அணுமின் நிலையம் இந்தியாவுக்கு மிகவும் அவசியமாகிறது. எந்தத் துறையிலும் ஆபத்து இல்லாமல் இல்லை.
அணுமின் நிலையம் அமைக்க, கூடங்குளத்தை தேர்ந்தெடுத்ததை அனைவரும் பெருமையாகக் கருத வேண்டும். இந்தியாவின் மிகப்பெரிய அணு மின் நிலையமாக கூடங்குளம் உருவெடுக்கும்; இதை இந்தப் பிரபஞ்சம் காணும்.