Total Pageviews

Blog Archive

Thursday, 23 June 2011

அமெரிக்க உளவு அதிகாரிகள் 67 பேருக்கு விசா வழங்கியது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத், ஜூன்.23: அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள் 67 பேருக்கு பாகிஸ்தான் விசா வழங்கியுள்ளது. தன்னிச்சையாக தாக்குதல் நடத்தி பின்லேடனை அமெரிக்கா கொன்றதைத் தொடர்ந்து இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.இந்த நிலையில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக பாகிஸ்தானுக்கு வருவதற்காக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் 67 பேருக்கு வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் விஸா வழங்கியுள்ளதாக டான் பத்திரிகை தெரிவித்துள்ளது.இரு நாடுகளிடையேயான புரிந்துணர்வின் அடிப்படையில் விசா வழங்கும் முடிவை பாகிஸ்தான் எடுத்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய ஏற்பாட்டின்படி இஸ்லாமாபாதின் கோரிக்கையான பாகிஸ்தானில் சிஐஏவின் பணிகளை முழுமையாக தங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை சிஐஏ ஏற்றுக்கொண்டது.ஐஎஸ்ஐ தலைவர் சுஜா பாஷாவுக்கும், சிஐஏ அதிகாரிகளுக்கும் இடையே இந்த மாதத் தொடக்கத்தில் இதுதொடர்பாக உடன்பாடு ஏற்பட்டதாக டான் பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.