Total Pageviews

Blog Archive

Thursday, 23 June 2011

பிரபாகரனின் குடும்பத்தினர் இலங்கை அரசின் பிடியிலா? நடுங்கிப்போன ராஜபக்ச!

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மனைவி மற்றும் பிள்ளைகள் இலங்கை அரசின் பாதுகாப்பில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்த செய்தி வெளியானதை தொடர்ந்து ராஜபக்ச நடுங்கிப்போனதாக தெரியவந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் அரசியல் துறைத் தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு பதிலாக பிரபாகரன் என்று வாய் தவறி சொல்லிவிட்டதாக ஆளும் கட்சியின் எம்.பி.யான ஏ.எச்.எம்.அஸ்வர் இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

நேற்றைய தினம் இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ராஜபக்சவின் முன்னாள் ஆலோசகரும், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரமான ஏ.எச்.எம்.அஸ்வர், அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுடன், அவரது குடும்பத்தினரையும் அமெரிக்கா கொன்றது போல அல்லாமல், புலிகளின் தலைவரின் குடும்பத்தை ராஜபகச இப்போதும் பேணிப் பாதுகாப்பது அவரின் மனிதாபிமானத் தன்மையை வெளிக்காட்டுவதாகவும், அவர்களை அரசாங்கம் நல்ல முறையில் பேணி வருவதாகவும் கூறினார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச் செய்தியை பல ஊடகங்கள் முதன்மைப்படுத்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் அஸ்வரின் நேற்றைய உரையைக் கேட்ட மகிந்தவும் நடுங்கிப்போனார். இவ்வாறு பிரபாகரனின் மனைவி, பிள்ளைகள் இலங்கை அரசிடம் அகப்பட்டிருந்தால் அவர்களை உலக நாடுகளுக்கு காட்டவேண்டும் என்று பலதரப்பிலிருந்தும் அழுத்தங்கள் வருமே என்று அஞ்சினார்.

தடுத்துவைத்திருப்போரைக் காட்டுங்கள் என்று உலகநாடுகள் கேட்டால், தம்மிடம் இல்லாதவர்களை எங்கே காட்டுவது என்று கலக்கமடைந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நேற்றிரவே எம்.பி அஸ்வருடன் தொடர்புகொண்ட ராஜபக்சவின் செயலாளர் இது குறித்து விளக்கம்கோரியுள்ளார்.

நிலையைப் புரிந்துகொண்ட அவர் உடனடியாக மறுப்புச் செய்தி ஒன்றை வெளியிடுமாறு கூறியுள்ளார்.

இதனை அடுத்து அஸ்வர் இன்று நாடாளுமன்றத்தில் மன்னிபுக் கோரியதோடு,விடுதலைப்புலிகளின் அரசியல் துறைத் தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு பதிலாக பிரபாகரன் என்று வாய் தவறி சொல்லிவிட்டதாக விளக்கமளித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.