Total Pageviews

Blog Archive

Thursday, 23 June 2011

ஜப்பானில் கடும் நிலநடுக்கம்

டோக்கியோ, ஜூன்.23: ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  6.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டது. எனினும் ஒரு மணி நேரத்துக்குப் பின் அந்த எச்சரிக்கையை வானிலை ஆய்வுமையம் வாபஸ் பெற்றது.பசிபிக்கில் மியாகோவின் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் 50 கிலோமீட்டர் தொலைவி்ல் 20 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.32 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.முன்னதாக சுனாமி ஏற்படலாம் என்று ஜப்பான் எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும் அணுஉலை நெருக்கடி ஏற்பட்ட ஃபுகுஷிமாவில் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக உடனடியாகத் தகவல் இல்லை. அலைகளில் கொந்தளிப்பும் ஏற்படவில்லை.நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து சில பகுதிகளில் குடியிருப்புகளை காலி செய்யுமாறும் உள்ளூர் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டனர்.ஷின்கான்சென் புல்லட் ரயிலும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. மார்ச் 11 பேரழிவுக்குப் பின்னர் செயல்படாமல் உள்ள மியாகியில் ஓனகாவா அணு உலைக்கு புதிதாக எந்த பாதிப்பும் இல்லை என அரசு ஒலிபரப்பு நிறுவனம் தெரிவித்தது.