சவுதி அரேபியாவிற்கு சென்ற படகு ஒன்று செங்கடலில் கவிழ்ந்து மூழ்கிய நிலையில், அதிலிருந்த 197 பேர் கதி என்ன என்பது குறித்து தெரியவில்லை.
சூடான் நாட்டிலிருந்து 200 பேர்களுடன் படகு ஒன்று சவுதி அரேபியாவிற்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது வழியில் திடீரென அப்படகு செங்கடலில் மூழ்கியது.இது குறித்த தகவலறிந்ததும் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர்.
இதுவரை 3 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளனர்.மற்ற 197 பேர்களது கதி என்னவானது என்பது குறித்து தெரியவரவில்லை என்பதால், அவர்கள் நீரில் மூழ்கி பலியாகி இருக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இருப்பினும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூடான் நாட்டிலிருந்து 200 பேர்களுடன் படகு ஒன்று சவுதி அரேபியாவிற்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது வழியில் திடீரென அப்படகு செங்கடலில் மூழ்கியது.இது குறித்த தகவலறிந்ததும் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர்.
இதுவரை 3 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளனர்.மற்ற 197 பேர்களது கதி என்னவானது என்பது குறித்து தெரியவரவில்லை என்பதால், அவர்கள் நீரில் மூழ்கி பலியாகி இருக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இருப்பினும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.