Total Pageviews

Blog Archive

Wednesday, 6 July 2011

பயங்கரவாத தாக்குதல் : அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன் : அமெரிக்க விமான நிலையங்களில் அல்கொய்தா பயங்கரவாதிகள் மனித வெடிகுண்டுகள் மூலம் பயணிகள் விமானங்களை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக பயங்கரவாதிகள் தங்கள் வயிற்றுப்பகுதி, மார்பு மற்றும் தங்கள் உடலின் பின்புறப்பகுதியில் வெடிகுண்டுகளை கொண்டு வரலாம் எனவும், இதன் மூலம் விமான நிலையங்களில் சோதனையிலிருந்துதப்ப திட்டமிட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.