Total Pageviews
Blog Archive
Thursday, 24 March 2011
லிபியா சி்க்கலை தீர்க்க லண்டனில் 29-ம் தேதி சர்வதேச மாநாடு
டிரிபோலி:லிபியா விமானப்படை தாக்குதலை முறியடித்துள்ள அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகள், தற்போது அந்நாட்டின் தரைப்படைகளை தாக்க வியூகம் வகுத்துள்ளன.லிபியாவை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வரும் கடாபியை பதவி விலகக்கோரி, எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர். லிபியாவில் சிக்கலுக்கு தீர்வுகாணும்விதமாக சர்வதேச மாநாடு வரும் மார்ச் 29-ம் தேதி லண்டனில் துவங்கவுள்ளது. இதில் அரபு, ஆப்ரிக்க நாடுகள் உள்ளிட்ட பல்வேறுநாடுகள் கலந்து கொள்ளவுள்ளன என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சபையில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹோக் நேற்று தெரிவித்தார். மேலும் விரைவில் லிபியாவை நேட்டோ படைகள் கட்டுப்பாட்டில் வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் கூறினார். அதற்குள் கடாபி தனது நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.