Total Pageviews

Blog Archive

Saturday, 7 January 2012

ஈரான் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது : மேற்கு ஈரான் மீது போர் அச்சுறுத்தல்


ஈரான் கடற்படைஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் போர்ப் பயிற்சியில் ஈடுபடப்போவதாக, அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற்கு சார்ந்த நேட்டோ அணி லிபியாவை ஆக்கிரமித்து அந்த நாட்டின் வழங்களை சூறையாட தனது சர்வாதிகார பொம்மை அரசை நியமித்த பின்னர் ஈரான் நாட்டின் மீது போர் அச்சுறுத்தல்களை விடுத்து வருகிறது.
இந்த சூழலில் இடம்பெறும் இப் பயிற்சி நடவடிக்கை குறிப்பிடத்தக்கது.
பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவுக்கு இடையில் உள்ள ஹோர்முஸ் நீரி ணையில், கடந்த மாத இறுதி தொடக்கம் ,10 நாட்கள் ஈரான் கடற்படை போர்ப் பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது, மூன்று ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
இந்தப் பயிற்சியும், ஏவுகணைச் சோதனையும், மேற்குலகில் பதற்றத்தைக் கிளப்பின. இந்நிலையில், ஈரான் செய்தி நிறுவனம் ஒன்று, நேற்று முன்தினம் வெளியிட்ட செய்தியில், பெப்ரவரி மாதம், மீண்டும் ஈரான் கடற்படை, பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையில், போர்ப் பயிற்சியில் ஈடுபடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் அமரிக்காவும் ஐரோப்பிய நாடுகளுமே அமைதியின்மையையும் போரையும் ஏற்படுத்துவதாக அப்பிராந்திய மக்கள் கருதுவதாக அமரிக்கநிறுவன மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்த்துள்ளது.