Total Pageviews

Blog Archive

Saturday, 7 January 2012

மீண்டும் ஈரான் போர் பயிற்சி : மேற்கத்திய நாடுகள் பீதி!

டெஹ்ரான்: ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் ஈரான் கடற்படை பயிற்சியில் ஈடுபடப் போவதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் மேற்கத்திய நாடுகள் அச்சமுற்றிருப்பதாக தெரிகிறது.

பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவுக்கு இடையில் உள்ள ஹோர்முஸ் நீரிணையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கி 10 நாட்கள் ஈரான் கடற்படை போர் பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது மூன்று ஏவுகணைகளை வெற்றிகரமாக பரிசோதித்தது. இந்தப் பயிற்சியும், ஏவுகணை சோதனையும் மேற்கத்திய நாடுகளில் பதட்டத்தை ஏற்படுத்தின. 

இந்நிலையில், ஈரான் செய்தி நிறுவனம் ஒன்று நேற்று முன்தினம் வெளியிட்ட செய்தியில், பிப்ரவரி மாதம் மீண்டும் ஈரான் கடற்படை பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் போர் பயிற்சியில் ஈடுபடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், மேற்கத்திய நாடுகள் மீண்டும் பதட்டத்தில் இருப்பதாக தெரிகிறது.