Total Pageviews

Blog Archive

Saturday, 7 January 2012

இந்திய மாணவரைக் கொன்றவனுக்கு கடுமையான தண்டனை : டேவிட் கேமரூன்

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் வெள்ளியன்று அனுஜ் பித்வேயின் பெற்றோர்களை சந்தித்து பேசும் போது இந்த கொடுஞ்செயல் செய்தவனுக்கு கடும் தண்டனை அளிக்க‌ப்பட வேண்டும் என கூறினார். இதுகுறித்து மேலும் கேமரூன் பேசுகையில், அனுஜ் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மான்செஸ்டர் காவல்துறையினர் வழங்குவார்கள் என உறுதியளித்தார்.




மேலும், பித்வேயின் பெற்றோர் நேற்று மான்செஸ்டரின் சால்போர்டு பகுதியில் பித்வே கொல்லப்பட்ட இடத்திற்குச் சென்றனர். பின் அவர்கள் அளித்த பேட்டியில், பித்வேயின் கொலைக்கு இப்பகுதி மக்களை குற்றம் சொல்ல முடியாது. கொலை செய்த நபரைத் தான் குற்றம் சாட்ட வேண்டும் என்றனர். பித்வேயின் உடல் இரண்டாவது பிரேத பரிசோதனை முடிந்து இறுதிச் சடங்குகள் செய்யும் ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்திடம் இருந்து உடலைப் பெற்று அவர்கள் இன்று நாடு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பித்வே படித்து வந்த லங்காஷர் பல்கலைக்கழகம் அவரது பெற்றோருக்கு தேவையான நிதியுதவி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.