| லிபியாவில் தாக்குதல் நடத்தாமல் கனடிய போர் விமானங்கள் திரும்பின | |||
| [ புதன்கிழமை, 23 மார்ச் 2011, 04:06.51 மு.ப GMT ] | |||
| லிபியா மீது கூட்டுப்படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. லிபிய மக்கள் மீது கர்னல் கடாபி ஆட்சியாளர்களே தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.இந்த தாக்குதலை தடுத்து நிறுத்தவும், பொது மக்களை காப்பாற்றவும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் லிபிய வான் எல்லையில் விமானம் பறக்க தடை விதித்துள்ளது. இந்த தடையை செயல்படுத்தும் விதமான லிபியா போர் விமானங்களை வீழ்த்தவும், தரைப்படைகளை ஒடுக்கவும் கூட்டுப்படைகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளன. இந்த தாக்குதலில் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்க படைகள் உள்ளன. இந்தக் கூட்டுப்படையில் கனடிய போர் விமானங்களும் உள்ளன. செவ்வாக்கிழமை காலை இரு கனடிய சி எப் 18 போர் விமானங்கள் இலக்கை தாக்காமல் திரும்பின. குண்டு வீச்சில் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்கிற அச்சம் இருந்ததால் அந்த விமானங்கள் குண்டு வீசாமல் திரும்பின. லிபியா போர் விமானங்களை வீழ்த்த கனடிய போர் விமானங்களுக்கு அளிக்கப்பட்டு இருந்தது என ஒட்டாவாவில் மேஜர் ஜெனரல் பாம் லாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். லிபியாவில் குறிப்பிட்ட இலக்கில் கனடிய போர் விமானம் தாக்குதல் நடத்தாமல் திரும்பியது குறித்து அவர் கூறுகையில்,"பொதுமக்களுக்கு சேதம் ஏற்படக்கூடாது என குண்டு வீச்சை தவிர்த்தோம்" என்றார். கனடிய போர் விமானத்திற்கு எந்த வித அச்சுறுத்தல் இல்லை என்றும் அவர் கூறினார். |
Total Pageviews
Blog Archive
-
▼
2011
(142)
-
▼
March
(23)
-
▼
Mar 26
(8)
- ஜப்பான் கதிர்வீச்சு 1,250 மடங்கு அதிகரித்துள்ளது
- லிபியா: குண்டு வீசிய அமெரிக்க போர் விமானம் நொறுங்க...
- அமெரிக்க விமானம் சுட்டு விழ்த்தப்பட்டது - லிபிய தள...
- லிபியாவில் தாக்குதல் நடத்தாமல் கனடிய போர் விமானங்க...
- கடல் நீரில் கதிர் வீச்சு
- அதிபருக்கு ஆதரவாகவும், எதிராகவும் யேமன் போட்டி ஆர...
- ஒரே ஒரு மணிநேரம் உலகை குளிர்விப்போம் : Earth Hour!
- மரம் நடும் நடவடிக்கைகள்
-
▼
Mar 26
(8)
-
▼
March
(23)
