Total Pageviews

Blog Archive

Saturday, 26 March 2011

மரம் நடும் நடவடிக்கைகள்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தலைமையின் கீழுள்ள வாரியங்கள், அமைச்சகங்கள் உள்ளிட்ட துறைகளின் 197 அமைச்சர் நிலை அலுவலர்கள் 26ம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் மரம் நடும் நடவடிக்கைகளில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நடப்பு குடியரசின் அமைச்சர்கள் தன்னார்வ மரம் நடும் நடவடிக்கை பெய்ஜிங் மாநகரின் தொஞ்சோ மாவட்டத்திலுள்ள பிங்ஹோ பூங்காவில் நடைபெற்றது. அலுவலர்கள் மரக் கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றியுள்ளனர். பல்வகை மரங்கள் நடப்பட்டுள்ளன. மாசற்ற பெய்ஜிங்கிக்கு மீண்டும் உத்தரவாதம் கிடைத்துள்ளது.

இவ்வாண்டு மக்கள் அனைவரும் மரம் நடும் தன்னார்வ நடவடிக்கையில் கலந்து கொண்ட 30வது ஆண்டாகும். இவ்வாண்டு ஐ.நா நிர்ணயித்த சர்வதேச வனவள ஆண்டும் ஆகும். கடந்த 30 ஆண்டுகளில் சீனாவில் 1270 கோடி மக்கள் தன்னார்வ மரம் நடும் நடவடிக்கைகளில் கலந்து கொண்டுள்ளனர். மொத்தம் 5890 கோடி மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன.