அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கை அரசு கையெழுத்திட்டுள்ள ஹக் உடன்படிக்கைக்கு ஏற்ப, அமெரிக்க மாகாண நீதிமன்றம் ஒன்றில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று பொது வழக்குகளில் ராஜபக்ச பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
தமக்கு 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடாக தரவேண்டும் என்று கோரித் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ்வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி மஹிந்தவுக்கு அழைப்பாணை கிடைத்துள்ளதாக நீதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க சித்ரவதையால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் ஆறு குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து இவ்வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மூன்று வழக்குகள் மாணவரான ரஜிகர் மனோகரன், தொண்டர் அமைப்பின் பணியாளர் பிரீமஸ் ஆனந்தராஜா மற்றும் தவராஜா ஆகியோரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இம்மாணவர்கள் சட்டத்துக்குப் புறம்பாகக் கொலை செய்யப்பட்டவர் என்றும், முப்படைகளின் கட்டளைத் தளபதியான ராஜபக்சவே இதற்குப் பொறுப்பு என்றும் இவ்வழக்கில் கூறப்பட்டுள்ளது.
ஜனவரி 2006 ல் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவர் இந்த ரஜிகர் என்பதும், ஜூன் 2006 ல் திருகோணமலையில் சுட்டுக் கொல்லப்பட்ட அக் ஷன் ஃபெய்ம் நிறுவனப் பணியாளர்கள் 17 பேரில் ஒருவர் இந்த ஆனந்தராஜா என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த அழைப்பாணையால் இலங்கை அரசாங்கம் கவலைப்படவில்லை என்றும், அதற்கு அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள் என்றும் இலங்கை நீதித்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.
இலங்கை அரசு கையெழுத்திட்டுள்ள ஹக் உடன்படிக்கைக்கு ஏற்ப, அமெரிக்க மாகாண நீதிமன்றம் ஒன்றில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று பொது வழக்குகளில் ராஜபக்ச பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
தமக்கு 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடாக தரவேண்டும் என்று கோரித் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ்வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி மஹிந்தவுக்கு அழைப்பாணை கிடைத்துள்ளதாக நீதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க சித்ரவதையால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் ஆறு குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து இவ்வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மூன்று வழக்குகள் மாணவரான ரஜிகர் மனோகரன், தொண்டர் அமைப்பின் பணியாளர் பிரீமஸ் ஆனந்தராஜா மற்றும் தவராஜா ஆகியோரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இம்மாணவர்கள் சட்டத்துக்குப் புறம்பாகக் கொலை செய்யப்பட்டவர் என்றும், முப்படைகளின் கட்டளைத் தளபதியான ராஜபக்சவே இதற்குப் பொறுப்பு என்றும் இவ்வழக்கில் கூறப்பட்டுள்ளது.
ஜனவரி 2006 ல் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவர் இந்த ரஜிகர் என்பதும், ஜூன் 2006 ல் திருகோணமலையில் சுட்டுக் கொல்லப்பட்ட அக் ஷன் ஃபெய்ம் நிறுவனப் பணியாளர்கள் 17 பேரில் ஒருவர் இந்த ஆனந்தராஜா என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த அழைப்பாணையால் இலங்கை அரசாங்கம் கவலைப்படவில்லை என்றும், அதற்கு அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள் என்றும் இலங்கை நீதித்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.
