Total Pageviews

Blog Archive

Saturday, 24 September 2011

மனிதர்களுக்கு ஆபத்து நீங்கியது பசிபிக் கடலில் விழுந்தது செயலிழந்த செயற்கைக்கோள்

வாஷிங்டன்: கடந்த 20 ஆண்டுகளாக பூமியைச் சுற்றிக் கொண்டிருந்த செயற்கைக் கோள் ஒன்று செயலிழந்து பூமியை நோக்கி வந்தது. அது நேற்று காலை பசிபிக் பெருங்கடலில் விழுந்ததாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 1991ம் ஆண்டு Ôஅப்பர் அட்மாஸ்பியர் ரிசர்ச் சேட்டிலைட்Õ (யுஏஆர்எஸ்) என்ற செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது. ரூ.3,525 கோடி செலவில் அனுப்பப்பட்ட அந்த செயற்கைக் கோள் ஓசோன் படலம் மற்றும் பூமியின் வளி மண்டலத்தைப் பற்றி ஆராய்ந்து வந்தது. இது நாசா விஞ்ஞானிகளால் கடந்த 2005ம் ஆண்டு செயலிழக்க வைக்கப்பட்டது. அதன் பிறகு அது பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக சமீபத்தில் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
6,000 கிலோ எடை கொண்ட, பஸ் அளவிலான அந்த செயற்கைக்கோள் நேற்று முன்தினம் பூமியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக நாசா விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். ஒரு நாள் முன்னதாகவோ அல்லது பின்போ வரவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். 
பூமியின் தட்பவெப்ப நிலைக்குள் நுழைந்தவுடன் செயற்கைக்கோள் 26 பெரிய துண்டுகளாக உடையும். பூமியின் 75 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ள கடல் பகுதியில் விழுவதற்கே அதிக வாய்ப்பு உள்ளது. தவறினால் வடக்கு கனடாவுக்கும் தென்அமெரிக்காவின் தென்பகுதிக்கும் இடையில் பூமியின் மீது விழும் அபாயமும் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
பூமியில் விழுந்தால் 3,200ல் ஒரு பங்கு மனிதர்கள் மீது விழுந்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரித்தனர். எனினும், யுஏஆர்எஸ் செயற்கைக்கோள் நேற்று அதிகாலையில் பசிபிக் பெருங்கடலில் விழுந்து விட்டதாகவும் அதனால், மனிதர்களுக்கு அபாயம் இல்லை என்றும் நாசா விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மேலும் நெருக்கடி

பாகிஸ்தான் நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., தாலிபான்களின் ஹக்கானி அமைப்புடனான தொடர்புகளை துண்டிக்கவேண்டும் என்றும் அதன் மீது பாகிஸ்தான் அரசு கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும் என்றும் அமெரிக்கா நெருக்கடி கொடுத்துள்ளது.

"பாகிஸ்தான் அரசு தாலிபான் அமைப்பான ஹக்கானி குழுவுடன் தங்களது தொடர்புகளை துண்டிப்பதும், அதன் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதும் அவசியம் இதன் மூலம் அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள அச்சுறுத்தலை நீக்குவது உறுதி செய்யப்படுவது அவசியம்" என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜேய் கார்னி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

காபூலில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் அமெரிக்க ராணுவத்தினரும், ஆப்கான் தேசத்தவரகளும் உயிரிழந்தனர் இதற்குக் காரணம் ஹக்கானி குழுதான் என்று அமெரிக்க கூறியுள்ளது.

மேலும், ஹக்கானி குழு பாகிஸ்தானில் பாதுகாப்பாக இருந்து கொண்டு தாக்குதல்களில் ஈடுபடுவது எங்களுக்குத் தெரியும். பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அல்கய்டாவை வீழ்த்துவதில் பாகிஸ்தானின் உதவி மிகப்பெரியது, இதனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் கோபத்தை அனுபவித்து வருகிறது. இதற்காக பாகிஸ்தான் மிகப்பெரிய விலை கொடுத்துள்ளது என்று கூறிய கார்னி பாகிஸ்தானுடன் தங்கள் நாடு வைத்துள்ள உறவு சிக்கல் நிறைந்தது என்றார்.

அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை

இஸ்லாமாபாத், செப். 23:÷பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 அமெரிக்க ராணுவத் தலைமை தளபதி மைக் முல்லன், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., பயங்கரவாத அமைப்பான ஹக்கானியுடன் தொடர்பு வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
 இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், இதுபோன்ற விமர்சனங்களை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
 ஆப்கனில் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கும் போரை, பாகிஸ்தான் உதவியின்றி வெற்றிகரமாக மேற்கொள்ள முடியாது என்று பிரதமர் யூசுப் ரஸô கிலானி வெள்ளிக்கிழமை கராச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ÷
 ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கர் கூறுகையில், அமெரிக்கா தொடர்ந்து இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்து வந்தால், பாகிஸ்தானைப் போன்ற மதிப்புமிக்க நண்பனை அது இழக்க நேரிடும் என எச்சரித்தார். அமெரிக்காவின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் செüத்ரி அகமது முக்தாரும் நிராகரித்துள்ளார்.

Friday, 23 September 2011

நாசாவின் செயற்கைக்கோள் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வருகிறது


20 வருடங்களாய் பயன்படுத்தப்பட்ட நாசாவின் செயற்கைக்கோள் ஒன்று தரைக்கட்டுப்பாட்டை இழந்ததால் அந்நிறுவனம் அதனை அழிக்க முடிவு செய்துள்ளது.


UARS செயற்கைக்கோள்
அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 1991 ஆம் ஆண்டு 6.5 தொன் எடையுள்ள "மேல் வளிமண்டல ஆய்வுச் செயற்கைக்கோள்" (UARS - Upper Atmosphere Research Satellite) எனப்படும் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. தற்போது அதன் தரைக்கட்டுப்பாடு துண்டிக்கப்பட்டுள்ளதால் செப்டம்பர் 23 அல்லது 24 இல் அது பூமியில் வந்து விழும் என்று தகவல்கள் தெரிகிறது.

பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் பொழுது கட்டுப்பாட்டை இழந்த செயற்கைக்கோள் பல துண்டுகளாக சிதறி விடும். மத்திய கோட்டுக்கு வடக்கு, தெற்காக 57 பாகை பகுதியில் கொண்ட பூமியின் எப்பகுதியிலும் இது விழக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சிதறிய துண்டுகள் பூமியில் மக்கள் வாழும் பகுதியில் அதி வேகத்தில் வந்து விழும். இதனால் மக்களின் பாதுக்காப்பைக் கருதி நாசா அந்த செயற்கைகோளை விண்ணிலேயே அழித்துவிட எண்ணியுள்ளது.

ஆனால் இதனால் பெரும் ஆபத்து நேராது என்றும் நாசா மையத்தினர் கூறியுள்ளனர். 1950 இல் இது போன்று செயற்கைக்கோள் மறுநுழைவு செய்த போது அவ்வளவாக விழிப்புணர்வு இல்லை என்றும், தற்போது இதனை எதிர் கொள்வது முன்பைவிடு சற்று எளிதென்றும் மக்கள் உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்வோம் என்றும் கூறியுள்ளனர்.

இந்த துகள் தூசிகள் எங்கு வந்து விழுமென்று இன்னும் சரியாக கணிக்க முடியவில்லை. ஆனால் அது சுமார் 500 கிமீ தொலைவிற்கு விரிந்து கீழே கொட்டும் என்று கூறுகின்றனர். அவ்வாறு பூமியில் வந்து விழும் பொருட்களை யாரும் கையில் எடுக்கக்கூடாது என்றும், அவற்றை விற்பனை செய்யக்கூடாது என்றும் நாசா மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

1979 இல் ஸ்கைலாப் என்ற செயற்கைக்கோள் மேற்கு ஆத்திரேலியாவில் வீழ்ந்த போது, வீழ்ந்த இடங்களைத் துப்பரவு செய்ய அமெரிக்க அரசு ஆத்திரேலிய அரசுக்குப் பணம் செலுத்தியிருந்தது. 1958 ஆம் ஆண்டில் சோவியத்தின் ஸ்புட்னிக் 2 செயற்கைக்கோள் கட்டுப்பாடிழந்து நியூயோர்க்கில் இருந்து அமேசான் வரை 10 நிமிடங்கள் வரை சென்றதைப் பலர் கண்டனர்.

Sunday, 18 September 2011

இந்தியாவிடம் உத்தரவாதம் கேட்கிறது அமெரிக்கா


நீதியான விசாரணை யொன்றை இலங்கை அரசு தானே நடத்துமென்ற உத்தரவாதத்தை வழங்க முடியுமா என்று இந்தியாவிடம் இராஜதந்திர ரீதியில் கேட்டிருக்கிறது அமெரிக்கா.
இதற்கான உத்தரவாதத்தை இந்தியா வழங்கினால் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக் குழுவொன்றை உடனடியாக அமைப்பது பற்றிய விடயத்தை மீள்பரிசீலனை செய்ய முடியுமென்று அமெரிக்கா இந்தியாவிடம் சுட்டிக்காட்டியிருப்பதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த இராஜதந்திரியொருவர் தெரிவித்தார்.
ஐ. நா. மனித உரிமைகள் சபைக் கூட்டம் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகிறது. இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு சர்வதேச பொறி முறை ஒன்று அவசியமென்று மேற்குலக நாடுகள் இந்தக் கூட்டத்தொடரில் வலியுறுத்தலாம் என்று கூறப்படும் நிலையில் அமெரிக்கா இந்தியாவிடம் குறித்த உத்தரவாதத்தைக் கோரியுள்ளது.
அமெரிக்காவின் இந்தக் கோரிக்கை குறித்து இந்தியா இதுவரை எதுவித பதிலையும் வழங்கவில்லை.
அதே சமயம், கொழும்பு வந்து புதுடில்லி செல்லும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர் ரொபர்ட் ஓ பிளேக் அங்கு இந்த விடயம் குறித்து பேச்சு நடத்தவுள்ளாரெனக் கூறப்படுகிறது.
இந்தியாவின் இந்தப் பதிலே சர்வதேச அரங்கில் இலங்கைத் தொடர்பான தீர்மானத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமென மேலும் எதிர்பார்க்கப்படுகிறது.

போர்க்குற்றம் தொடர்பில் இலங்கைக்கு காலக்கெடு விதித்துள்ள பிரித்தானியா


இலங்கைக்கு இந்த வருட இறுதிக்குள் இலங்கை போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமது அக்கறையை காண்பிக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கம் காலக்கெடு விதித்துள்ளது.
குறித்த காலக்கெடுவை பிரித்தானிய வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹேக், பிரித்தானிய வெளியுறவு குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த காலக்கெடுவுக்குள் இலங்கை குறித்த விடயங்களில் அக்கறை செலுத்தாவிட்டால், இலங்கை அரசாங்கம் தமது கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற சர்வதேச அழுத்தங்களுக்கு பிரித்தானியாவும் தீவிரமாக ஆதரவளிக்கும் என்று வில்லியம் ஹேக் எச்சரித்துள்ளார்.
இலங்கையின் போர்க்குற்ற விடயத்தில். பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சு, உரிய கரிசனையை காட்டவில்லை. சர்வதேசத்துடன் இணைந்து இலங்கைக்கு அழுத்தத்தை கொடுக்கவில்லை. அதில் தோல்வி கண்டுள்ளது என்று பிரித்தானிய வெளியுறவு குழு தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே வில்லியம் ஹேக் இந்த பதிலை வழங்கியுள்ளார்.
இலங்கையில் இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் பிரித்தானிய வெளியுறவுக்குழுவின் கருத்துக்களுக்கு தாம் உடன்படுவதாக வில்லியம் ஹேக் குறிப்பிட்டுள்ளார்.
சனல் 4 காணொளியும் இதனை தெளிவாக காட்டியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Saturday, 17 September 2011

அணுசக்தியின் நிறம் பச்சையல்ல; இரத்தச்சிவப்பு!

ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரும் பூகம்பம் அணுமின் சக்தி பற்றிய விவாதத்தை மீண்டும் தொடக்கியுள்ளது. அணுசக்தியின் நிறம் நமக்கு காட்டப்பட்டிருப்பதைப் போல பச்சையல்ல; இரத்தச்சிவப்பு.

அணுமின் நிலையம் நிச்சயமாக வெடிக்கக்கூடிய டைம்பாம். தற்போதுள்ளவை ஹிரோஷிமா நாகசாகியில் வெடித்தவைகளைவிட பல லட்சம் படங்கு அழிவை ஏற்படுத்தக் கூடியவை. இயங்கு நிலையில் இருக்கும் (வெடிக்காமல்) ஒரு அணுமின் நிலையத்தின் ஏற்றுக் கொள்ளக்கூடிய கதிரியக்க அளவு என்பதே மிக அபாயகரமான அளவே.

இதுவரை வெடிக்கப்பட்டுள்ள இரண்டு அணுகுண்டுகளினால் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை விட அமெரிக்காவில் மட்டும் அணுமின் உலைகளினாலும் சோதனைகளினாலும் கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது அதிர்ச்சி தரும் செய்தி.

அனல்மின் / நிலவாயு மின் நிலையங்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை விட அல்லது போபால் யூனியன் கார்பைட் தொழிற்சாலை வெளியிட்டதை விட மிக அதிக சுற்றுச்சூழல் அபாயத்தை அணுமின் நிலையங்கள் ஏற்படுத்துகின்றன. அணுமின் நிலையங்கள் மீது ஒரு பூகம்பம் அல்லது தீவிரவாத தாக்குதல் போதும்; மனித குலத்தின் மிகப்பெரும் பகுதியை, மிருகங்கள் மற்றும் பசுமை உலகத்தை ஒரே வீச்சில் அழித்து முடிக்க.

இதற்கு ஒரே தீர்வு இனியொரு அணுமின் உலைகளை கட்டமைக்காமல் இருப்பதும், இருக்கும் உலைகளை உடனடியாக செயலற்று போகச்செய்வதும்தான். "நாம் இயற்கையுடன் வாழ கற்றுக் கொள்ளவேண்டும்; இயற்க்கையைத் திண்று அல்ல" என்ற காந்தியின் வார்த்தை இங்கு பொருத்தமாக இருக்கும்.
நமக்கு உண்மையிலேயே தேவைப்படும் அளவு வாழ்க்கை சாதனங்கள், சக்தி மற்றும் வசதிகளை மட்டுமே கொண்டு வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

நுகர்வு கலாச்சார மோகத்தினால் உந்தப்பட்டு அணுசக்தி மட்டுமல்ல சுற்றுச்சூழல் மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பயன்பாடு, உடல் திசுக்களை கொல்லும் செல்போன் பயன்பாடு போன்ற அனைத்தும் மனிதகுல நலனுக்கெதிராக நாமே குழி தோண்டிக்கொண்டுள்ளோம் என்பதையே காட்டுகிறது.

Friday, 16 September 2011

அமெரிக்காவில் வறுமை அதிகரிப்பு

வாஷிங்டன், செப்.14: அமெரிக்காவில் ஆறில் ஒருவர் வறுமையில் வாழ்வதாக சமீபத்தில் வெளியாகி உள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, சாதாரண மக்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை இந்தப் புள்ளிவிவரம் உறுதி செய்கிறது.

"அமெரிக்காவில் வருவாய், வறுமை, மற்றும் சுகாதாரக் காப்பீடு 2010' என்ற தலைப்பில் அமெரிக்க சென்சஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2010-ம் ஆண்டு அமெரிக்காவில் 4.62 கோடி பேர் (15.1%) வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தனர். இதுவே, அதற்கு முந்தைய 2009-ம் ஆண்டில் 4.36 கோடி பேர் (14.3%) வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தனர். கடந்த 4 ஆண்டுகளில் வறுமை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதை இந்தப் புள்ளிவிவரம் காட்டுகிறது. மேலும் வறுமையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, கடந்த 52 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2010-ம் ஆண்டில் சுகாதாரக் காப்பீடு இல்லாத அமெரிக்கர்களின் எண்ணிக்கை 4.9 கோடியாக (16.3%) அதிகரித்துள்ளது. 18 வயதுக்கு குறைந்தவர்களில் 1.6 கோடி (22%) பேரும், 18-லிருந்து 65 வயதுக்குள் உள்ளவர்களில் 2.6 கோடி (13.7%) பேரும் வறுமையில் வாடுகிறார்கள் என்று அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
அமெரிக்க அரசின் வறுமை கணக்கிடும் முறை: 4 பேர் உள்ள குடும்பத்தில் வருவாய் அளவு ஆண்டுக்கு ரூ.10 லட்சமாக (22,314 டாலர்) இருந்தால் அந்தக் குடும்பம் வறுமை கோட்டில் வரும். இதுவே தனிநபரின் வருவாய் ஆண்டுக்கு ரூ.5 லட்சமாக இருந்தால் அவர் வறுமையால் பாதிக்கப்பட்டவர் ஆவார்.

சிறந்த நிர்வாகத்துக்கு குஜராத் உதாரணம்

வாஷிங்டன், செப்.14: சீரிய நிர்வாகத்துக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் குஜராத் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது என்று அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கையொன்று தெரிவிப்பதாக புதன்கிழமை தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுச் சேவை, மன்ற உறுப்பினர்களுக்காக இந்திய அரசியல் சூழல் குறித்து 94 பக்க அறிக்கையொன்றைத் தயாரித்துள்ளது. உறுப்பினர்களின் கவனத்துக்காக மட்டும் தயாரிக்கப்படும் இது போன்ற குறிப்பறிக்கைகள் வெளியில் உள்ள எவருக்கும் தரப்படுவதில்லை. ஆயினும் செப்டம்பர் 1-ம் தேதி வெளியான இந்த அறிக்கை அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு மூலம் பொதுமக்கள் பார்வைக்கு வந்துள்ளது.
இந்த அறிக்கையில் கூறியிருப்பது:
செயலாற்றல் மிக்க நிர்வாகத்துக்கு குஜராத் சிறந்த உதாரணமாக உள்ளது. முதல்வர் நரேந்திர மோடி ஊழலைக் கட்டுப்படுத்துவதிலும் அரசு நிர்வாகத்தில் தாமதத்தை ஒழிப்பதிலும் வெற்றி பெற்றுள்ளார். தனது மாநிலத்தில் நவீன சாலைகள், மின் உற்பத்திக் கட்டமைப்பு ஆகியவற்றில் ஏராளமான முதலீடுகள் வரும் வகையில் நிர்வாகம் செலுத்தி வருகிறார். குஜராத்தின் பொருளாதார வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக 11 சதவீதமாக உள்ளது. இது இந்தியாவின் பொருளாதாரத்தையே செலுத்துகிறது.
ஜெனரல் மோட்டார்ஸ், மிட்ஸýபிஷி போன்ற சர்வதேச நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்துள்ளன.
இந்திய மக்கள்தொகையில் 5 சதவீதமுள்ள குஜராத், நாட்டின் ஏற்றுமதிகளில் 20 சதவீதப் பங்கை அளிக்கிறது.
மோடி மகிழ்ச்சி: சிறந்த நிர்வாகத்துக்கு குஜராத் உதாரணமாக உள்ளது என்று கூறும் அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை வெளியானது குறித்து முதல்வர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
சமூக இணையதளமான டுவிட்டரில் அவர் தனது மகிழ்ச்சியை வெளியிட்டார். "இந்த அறிக்கை 6 கோடி குஜராத்திகளுக்கு கிடைத்துள்ள அங்கீகாரமாகும்; குஜராத் வெல்க' என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் பதவிக்கு மோடி? 2014-ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையைச் சேர்ந்த மோடி பிரதமர் பதவி வேட்பாளராக இருக்கக் கூடிய பலமான வாய்ப்புள்ளது என்று அந்த அறிக்கை கூறுகிறது.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ராகுல் காந்தி இருக்கக் கூடும். ஆனால் கட்சியை அவர் எவ்வாறு வழிநடத்திச் செல்வார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. தேர்தல் வியூகங்கள் வகுப்பது, பொது இடங்களில் அவர் வெளிப்படுத்தும் மனப்போக்கு, தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் அவரது பேச்சுகள் ஆகியவை அவரைப் பாதிக்கும் விஷயங்களாக இருக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இப்போதைய அரசு ஆளாகியுள்ள நிலையில், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை விட பாஜக நல்ல நிலையில் உள்ளது என்கிறது அவ்வறிக்கை.
இரண்டாவது பிகார்: குஜராத்துக்கு அடுத்தபடியாக பிகார் மாநிலத்தில் நல்ல நிர்வாகம் நடப்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. முதல்வர் நிதீஷ் குமார் சட்டம், ஒழுங்கை மீண்டும் நிலைநாட்டி நல்ல நிர்வாகத்தை அளித்து வருகிறார். பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துப் பெரும் வெற்றிபெற்ற பின்பு, உள்கட்டமைப்பு, கல்வி ஆகிய துறைகளில் கவனம் செலுத்தி சாதாரண மக்களுக்கு நேரடிப் பயன்பாடுள்ள மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். ஜாதி அரசியலை முற்றிலும் புறக்கணித்துவிட்டார்.
பயங்கரவாதம்: பயங்கரவாதத்தைப் பொருத்தவரை, அரசு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாவிட்டாலும், முழுக்கவும் உள்நாட்டிலேயே உருவான இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தல் இந்தியாவுக்கு இருக்கிறது. பாகிஸ்தான் மீது பழி சுமத்தி வந்தாலும், தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்திலிருந்து தோன்றியது எனக்கூடிய இந்திய முஜாஹிதீன் பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமாக உள்ளது.
ஹசாரே போராட்டம் குறித்து: ஹசாரே போராட்டத்தை இந்திய அரசு கையாண்ட விதம் ஜனநாயகமற்றதாகும். அரசின் கையாலாகாத்தனத்தையே இது காட்டியது. ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கத் தயங்கியவர்கள் கூட அரசு நடவடிக்கைக்குப் பின்னர் அவரது இயக்கத்துக்குப் பின்துணை கொடுக்க முன்வந்தனர் என்று அவ்வறிக்கை கூறியுள்ளது.

தெற்கு சீனக் கடலில் எண்ணெய் எடுக்கக் கூடாது: இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை

பெய்ஜிங், செப். 15: தெற்கு சீனக் கடலில் எண்ணெய் எடுக்கும் திட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்கு சீனக் கடல்பகுதியும் அதில் உள்ள தீவுக் கூட்டங்களும் சீனாவுக்கு மட்டுமே சொந்தமானவை. இதில் சர்ச்சைக்கே இடமில்லை எனவும் அந்த நாடு கூறியுள்ளது.
வியத்நாமுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி தெற்கு சீனக் கடலில் இரு இடங்களில் எண்ணெய் எடுப்பதற்கு இந்திய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஜியாங் யூவிடம் செய்தியாளர்கள் வியாழக்கிழமை பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அவற்றுக்கு அவர் அளித்த பதில்:
தெற்கு சீனக் கடலில் இந்திய நிறுவனங்கள் எண்ணெய் எடுப்பதற்குத் திட்டமிட்டிருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் அந்தக் கடலும், அதில் உள்ள தீவுகளும் சீனாவுக்கே சொந்தமானவை. அங்கு எண்ணெய் எடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதை அனைத்து நாடுகளும் தவிர்க்க வேண்டும் என்றார்.
இந்தியாவை அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், எண்ணெய் எடுப்பது தொடர்பான அவரது எச்சரிக்கை மறைமுகமாக இந்தியாவுக்கு விடுக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது.
இந்தியா பதிலடி: தெற்கு சீனக் கடலில் எண்ணெய் எடுப்பது தொடர்பாக சீனா தெரிவித்த கருத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. சர்வதேசச் சட்டங்களுக்கு உள்பட்டு வியத்நாமுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படியே இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக இந்திய வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
வியத்நாம் தலைநகர் ஹனோயில் வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் இந்திய, வியத்நாம் வெளியுறவு அமைச்சர்கள் தலைமையிலான கூட்டத்தில் இந்தப் பிரச்னை முக்கிய இடம்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டனில் இருந்து ஜப்பானுக்கு அணுக் கழிவு: பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

அமோரி (ஜப்பான்), செப். 15: பிரிட்டனில் இருந்து ஜப்பானுக்கு அணுக்கழிவு பொருள்கள் பெருமளவில் கொண்டு வரப்பட்டுள்ளன.

கடுமையான கதிரியக்க அபாயத்தைக் கொண்டுள்ள இந்த அணுக்கழிவு பொருளை கொண்டு வந்ததற்கு எதிர்ப்புப் தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் அணுக்கசிவு ஏற்பட்டது. அதன் பிறகு இப்போது முதல்முறையாக அணுக்கழிவுப் பொருள்கள் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் பெரும் அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பிரிட்டனில் இருந்து 76 பிரமாண்டமான சிலிண்டர்களில் அணுக்கழிவு பொருள்கள் கப்பல் மூலம் ஜப்பானின் ரோகாஷோ துறைமுகத்துக்கு வந்துள்ளன. 3 ஜப்பானிய மின் நிறுவனங்களுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி கழிவுகளை தங்கள் நாட்டில் இருந்து அப்புறப்படுத்துவதற்காக பிரிட்டன் இதனை அனுப்பியுள்ளது.
இந்த அணுக் கழிவுகளை இறுதியாக எங்கு வைப்பது என்பதை ஜப்பான் இன்னும் முடிவு செய்யவில்லை. இந்நிலையில் அணுக்கழிவுகள் துறைமுகத்துக்கு வந்துள்ளதை அறிந்த உள்ளூர் மக்கள் துறைமுகத்தின் வெளியே கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கதிரியக்க அபாயம் உள்ள இந்த கழிவுகளை ஜப்பானில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டுமென அவர்கள் கோஷமிட்டனர். அடுத்த சில நாள்களில் போராட்டம் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 10 ஆண்டுகளில் அணுக்கழிவுகள் அடங்கிய 900 சிலிண்டர்களை ஜப்பானுக்கு அனுப்ப பிரிட்டன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இப்போது இரண்டாவது முறையாக அணுக் கழிவு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் முதல்முறையாக கொண்டு வரப்பட்டது. அப்போது பெரிய அளவில் எதிர்ப்பு ஏதும் ஏற்படவில்லை.

இரு சூரியன்களை சுற்றும் கிரகம் கண்டுபிடிப்பு

வாஷிங்டன், செப்.16: இரு சூரியன்களைச் சுற்றிவரும் கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்ததாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள கார்ல் úஸகன் வானியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா விண்ணில் செலுத்திய கெப்லர் விண்கலம் அனுப்பிய தகவல்களிலிருந்து இரு சூரியன்கள் உள்ள கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
இந்த கிரகம் பூமியிலிருந்து 200 ஒளி வருடங்களுக்கு அப்பால் உள்ளது. ஒளி வருடம் என்பது ஒளியானது ஒரு வருடத்தில் கடக்கும் தூரமாகும். அதாவது ஏறத்தாழ ஒன்பதரை லட்சம் கோடி கிலோமீட்டராகும்.
இரண்டு சூரியன்களைச் சுற்றி வர இந்த கிரகம் எடுத்துக் கொள்ளும் காலம் 229 நாள்களாகும். இரண்டு சூரியன்கள் இருந்தாலும் இவை ஒரே திசையில் இருப்பதால் பூமியைப் போலவே இங்கு பகல் இரவு இருந்து வருகிறது.
ஆனால் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இரண்டு சூரியன்களும் ஒன்றையொன்று சுற்றி வருகின்றன. இதனால் 20 நாள்களுக்கு ஒரு முறை கிரகணம் ஏற்படுகிறது. இவை இரண்டும் நம்முடைய சூரியனை விடச் சிறியவை. ஒன்று நம் சூரியனைவிட முக்கால் பங்குக்கும் குறைவான அளவுள்ளது. மற்றொன்று கால் பங்குக்கும் குறைவான அளவுள்ளது.
இந்தப் பிரபஞ்சத்தில் பல வகை சூரியன்களும், அதாவது நட்சத்திரங்களும், கிரகங்களும் உள்ளன என்பதையே இது காட்டுகிறது என்று ஒரு விஞ்ஞானி குறிப்பிட்டார்.

உலக அழிவு உண்மைதான்! ஆனால் அது எப்போது?


இணையதளங்கள் மூலமாகவும், மின் அஞ்சல் வழியாகவும் இன்ன பிற ஊடகங்கள் வாயிலாகவும் அண்மைக் காலமாக செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. திரைப்படங்கள் கூட வெளிவந்துள்ளன.
அமெரிக்க துணைக் கண்டத்தில் வாழ்ந்து வந்த 'மாயன்' என்கிற சமூகத்தாரின் பஞ்சாங்கம் 2012ம் ஆண்டுடன் முடிவடைகிறது என்பதும், 2012ல் உலகம் அழிந்து விடும் என்பதை அவர்கள் அறிந்து இருந்ததனால்தான் அதற்கு மேல் அந்த பஞ்சாங்கம் தொடரவில்லை என்பதுமே இக்கூற்றினை பரப்புவோரின் வாதத்திற்கு ஆதாரமாகும்.
இன்னொரு சூரியன்
ஆகாயக் கோள்கள், நட்சத்திரங்கள் என்பன போன்றவற்றின் நிலைகளில் நேர்ந்திடும் மாற்றங்களையும் கூட இந்த வாதத்திற்கு சான்றாக அவர்கள் எடுத்தாளுகின்றனர். அவற்றுள் புதிதாக வந்த ஒரு கூற்றுதான் இன்னொரு சூரியன் தோன்றப் போகிறது என்பதும்!
வானியலை பற்றியும், நட்சத்திரங்களின் தோற்றம் - பரிணாமம் போன்றவை பற்றியும் எதுவுமே தெரியாது இருந்த காலத்தில் சூரியனையோ, சந்திரனையோ போல ஒளிர்கின்ற புதிய பொருள் ஒன்று வானத்தில் திடீரென தோன்றினால் எந்த ஒரு மனிதனும் நிச்சயமாக பயந்திடத்தானே செய்திருப்பான்?
இன்னுங்கூட மிகுதியானவர்களுக்கு வானியல் பற்றி போதிய அறிவோ, விழிப்புணர்வோ இல்லாத நிலையில் - அடுத்த வருடம் நாம் இரு சூரியன்களை காண்போம் என்று ஓர் அறிவிப்பை ஏதாவது ஒரு விஞ்ஞானி வெளியிட்டால் வரவிருக்கும் ஓர் பேராபத்தின் முன்னறிவிப்பாகவே இருக்கக் கூடும் அது என்று பலரும் எண்ணத்தானே செய்வர்! அதற்காக அந்த பாமரர்களை குற்றஞ்சாட்ட முடியுமா?
இணைய தளங்களில்...
கடந்த ஜனவரி மாத இறுதியில்தான் அப்படி ஒரு செய்தி இணையதள வெளியீடுகள் சிலவற்றில் பிரசுரமாகி இருக்கின்றன. (நம் நாட்டு இணையதளங்களில் இச்செய்தி இடம்பெறவில்லை என்பது சற்று ஆறுதலான விசயம்) இதனைத் தொடர்ந்து உடனடியாக வேறு சில விஞ்ஞானிகள் அதனை மறுத்துக் கூறியபோதும் அந்த மாற்றுக் கருத்துக்கு - முந்தைய செய்திக்கு கிடைத்த முக்கியத்துவம் கிடைத்திடவில்லை. எனவே அந்த தகவலின் அடிப்படை என்ன? உலகம் அழியத்தான் போகிறதா? என்பன பற்றி நாம் இங்கே சற்று ஆராய்வோம்.
நீர் சுள்ளான்
ஹைட்ரஜன் என்கிற நீரிய வாயு ஹீலியமாக மாறிடும் செயல்பாட்டின் மூலம்தான் நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன. நட்சத்திர காம்பில்தான் இந்த செயலாக்கம் நடைபெறுகிறது. இவ்வாறு நடைபெறும்போது ஹைட்ரஜனின் அளவு குறையக் கூடிய தருணத்தில் அதனால் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாமல் ஆகிவிடுகிறது. உட்புறத்தில் இருந்து கொண்டிருக்கும் வெப்பம் தணிந்து விட்டால் நட்சத்திரம் தனது ஈர்ப்பு சக்தியால் தானாகவே சுருங்கிப் போய் விடும். இவ்வாறு சுருங்கி விடும் நடைமுறையே மீண்டும் வெப்பத்தை உருவாக்கி விடும். அந்த வெப்பத்தால் ஒளிர்கின்ற நட்சத்திரம்தான் "நீர் சுள்ளான்" என்ற பெயரில் அறியப்படுகிறது. கடைசியில் வெப்பத்தை தொடர்ந்து தாங்கிட இயலாத நிலை நேரும் போது - ஒளியை உற்பத்தி செய்திட இயலாமல் ஆகி, நம் பார்வையை விட்டு அது மறைந்து விடுகிறது.
நாம் இன்று காண்கிற நமது சூரியனுக்கும் எதிர்காலத்தில் இப்படி ஒரு முடிவே நேர்ந்திடக் கூடும். இந்த அறிவியல் விளக்கம் பாமரர்களும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வகையில் தான் கூறப்பட்டுள்ளது. இந்த சூரியனும், நட்சத்திரங்களும் கடைசி காலத்தில் செக்க சிவந்த பிரம்மாண்டங்களாக ஆகி அதன் பின்னர்தான் அவை 'நீர் சுள்ளான்'களாக ஆகிவிடும்.
சூப்பர் நோவா
ஆனால் சூரியனைவிட ஒன்றரை மடங்கிற்கு மேல் பெரிய அளவிலான கோள் வடிவ நட்சத்திரங்களின் விதி வேறுபட்டதாகும். அவற்றின் முடிவு அதி பயங்கர வெடிப்பின் மூலம் நியூட்ரான் நட்சத்திரமாகவோ, இருட்டுப் பள்ளமாகவோ அவை ஆகிவிடும். அத்தகையதோர் வெடிப்பின் வாயிலாக வெளிப்படும் எரிசக்தி, சூரியனுக்கு இணையானதோர் நட்சத்திரம் அதன் ஆயுட்காலம் முழுமைக்கும் வீசுகின்ற அளவிற்கு இருக்கும். ஒரு நட்சத்திர சமூகத்தை விட அதிகமான ஒளியுடன் அப்போது அது காட்சி தரும். ஒரு நட்சத்திர சமூகத்தில் ஏறத்தாழ பத்தாயிரம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியானால் இத்தகையதோர் மகா வெடிப்பின் தீவிரம் எத்தகையதாக இருக்கும் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள். இத்தகைய வெடிப்புகள் 'சூப்பர் நோவா' என்ற பெயரில் அறியப்படுகின்றன.
திருவாதிரை நட்சத்திரம்
திருவாதிரை என்கிற செக்கச் சிவந்ததோர் வண்ணம் பெரிய நட்சத்திரமாகும். அதன் கோள் வடிவம் சூரியனை விட 20 மடங்கு பெரியதாகவும், அதன் விட்டம் பல நூறு மடங்கு பெரியதாகவும் இருக்கும். சூரியன் இருக்கும் இடத்தில் அது இருக்குமானால் செவ்வாய், புதன், சுக்கிரன் மற்றும் பூமி ஆகிய கோள்களும் விரவிக் கிடக்கின்ற இதர பல கிரகங்கள் யாவும் அதனுள் ஆழ்ந்து - அமிழ்ந்து போயிருக்கும்! அந்த அளவுக்கு பிரம்மாண்டமானதாகும் திருவாதிரை என்கிற நட்சத்திரம்!
இந்த நட்சத்திரம் அடுத்த ஆண்டு ஓர் சூப்பர் நோவாவாக ஆகி வெடித்து சிதறும் என்றும், அப்போது அதன் ஒளி சூரியனின் ஒளிக்கு ஒப்பானதாக இருக்கும் என்றும் - ஆஸ்திரேலியாவில் உள்ள தெற்கு குயின்ஸ் பல்கலைக் கழகத்தின் மூத்த விரிவுரையாளர் பிராண்ட் கார்ட்டர் அறிவித்தார்.
இது சரியல்ல என்றும், திருவாதிரை நட்சத்திரம் எப்போது சூப்பர் நோவாவாக ஆகும் என்பதை கனித்து முன்னறிவிப்பு செய்ய எவராலும் முடியாது என்றும் வேறு பல அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 640 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் திருவாதிரை சூப்பர் நோவாவாக ஆனாலும் கூட அது ஏறத்தாழ சந்திர ஒளியின் அளவுதான் பூமியில் தென்படும் என்றும் சுட்டிக்காட்டினர் அந்த அறிவியலாளர்கள். ஆயினும், இம்மாற்று கருத்துக்களுக்கு எந்த ஒரு இணையதளமும் உரிய முக்கியத்துவத்தை வழங்கிடவில்லை.
நாம் இன்று கற்றறிந்துள்ளவற்றின் அடிப்படையில் திருவாதிரையை போன்றதோர் நட்சத்திரம் நிச்சயமாக சூப்பர் நோவாவாக ஆகி விடும் என்பது உண்மையே! ஆனால் அது எப்போது நிகழும் என்பதை கணித்துச் சொல்லும் அளவிற்கு அறிவியல் வளர்ச்சியை நாம் இன்னும் எட்டவில்லை. என்றாவது ஒருநாள் அதற்கான அறிவாற்றலை மனிதன் அடையக் கூடும். அதன் கால அளவைக்கூட இன்று நம்மால் கணக்கிட்டு கூறமுடியாது.
பூமி சாம்பலாகி விடும்
நாளை நடப்பவைகளில் சிலவற்றை நிச்சயமாக நாம் அறிவோம். எடுத்துக்காட்டாக மரணத்தைக் கூறலாம். மரணம் சர்வ நிச்சயமான ஒன்று! ஆனால் அது எப்போது? எங்கே? எப்படி நேரும் என்பதை எவறாலும் கூறிவிட இயலாது அல்லவா. அதுபோலத் தான் திருவாதிரை வெடித்துச் சிதறும் என்பது திண்ணம். ஆனால் அது நிகழும் நாள் எந்நாள் என்பது எவருக்கும் தெரியாது.
சூரியன் அதன் முடிவை நெருங்கும்போது செக்கச் சிவந்ததோர் பிரம்மாண்டமாக ஆகிவிடும். அப்போது அது செவ்வாயின் சுற்றுவட்டப் பாதைவரை விரிவடைந்து பெரிதாகி விடும். அதனிடையே பூமி எரிந்து சாம்பலாகி விடும். அத்துடன் ஆவியாகி சூரியனுடன் இணைந்து விடும். அதுவரை பூமியில் எஞ்சியிருக்கும் உயிரினங்கள் யாவும் அத்துடன் ஒட்டுமொத்தமாக அழிந்து விடும். மனித இனம் அதுவரை பூமியில் நீடித்து இருக்குமா என்பதை யாராலும் கூற முடியாது.
கட்டுப்பாடற்ற புவி வெப்பத்தின் மூலமாகவோ, சாம்ராஜ்ஜியங்களை கட்டமைப்பதற்கான பேராசையின் விளைவாக ஏற்படக் கூடிய போர்களின் மூலமாகவோ ஒட்டுமொத்த உயிரின வாழ்வு மண்டலத்தையும் மனிதர்களே அழித்து விடாமல் இருந்தால் ஒருவேளை இப்புவியில் மனித இனமும் எஞ்சியிருக்கக் கூடும். ஆயினும், நாம் அறிந்துள்ளதோ, அறியாததோ ஆன காரியங்களின் மூலம் இந்த பூவுலகின் ஆயுள் ஒருநாள் முற்றுப் பெறத்தான் போகிறது.
அழிவு நிச்சயம்
உதாரணமாக விண்வெளியில் தவழ்ந்து கொண்டிருப்பவற்றுள் ஏதேனும் ஒரு பெரும் பொருள் நிலை குலைந்து வேகமாக வந்து பூமியில் மோதினால் இங்கு வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக மடிந்து விட அதுவே போதுமானதாகும். அவ்வாறு நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் மிக மிக குறைவு தான் என்று விஞ்ஞானிகள் கூறினாலும் - அப்படி எதுவும் நிகழாது என்று திட்டவட்டமாக கூறிட எவராலும் இயலாது.
சூரியனிலிருந்து வீசுகின்ற ஒளியின் அளவு ஏதேனும் காரணத்தால் சற்றே கூடினாலும் இந்த பூமியில் உயிர் வாழ முடியாத நிலை நேர்ந்திடும். இதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவே என்று அறிவியலாளர்கள் கூறுவர். என்றாலும், நாம் இன்று காண்கிற இந்த பிரபஞ்சம் என்றாவது ஒரு நாள் அழிந்து விடும் என்பதும் சர்வ நிச்சயமாகும்.
ஆயினும் உடனடியாக இந்த உலகம் அழிந்து விடப்போவதில்லை என்பதும் அதுபோலவே நிச்சயமானதேயாகும். அப்படி நிகழ்வதற்கேற்ற எந்த ஒரு சாத்தியக் கூறினையும் தற்போது நம்மால் காண முடியவில்லை. இதே உலகம் அழியப் போகிறது என்று கூறுவோர் அதற்கு ஆதாரமாக சுட்டிக்காட்டும் காரணிகளை ஆழ்ந்து ஆராய்ந்தால் அவை அடிப்படையற்றவை என்பது புலனாகும். இத்தகைய வதந்திகள் இதற்கு முன்னரும் பலமுறை பரவியுள்ளன.
அறியாமை
உலகம் அழியப் போகிறது என்று ஏறத்தாழ கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பலர் கூறினர். அதாவது 2000ம் ஆண்டில் ஏசு கிறிஸ்து திரும்பவும் உலகில் வருவார் என்றும், அத்துடன் உலகம் அழிந்து போய் விடும் என்றும் ஒரு சாரார் கூறினர்.
2000ம் ஆண்டுடன் பெரும் பிரளயங்களோ, வேறு வகையான மாபெரும் இயற்கை சீற்றங்களோ நேர்ந்திடும். அதன் மூலம் உலகம் அழிந்திடும் என்று அடுத்து ஒரு சாரார் அறிவித்தனர்.
இப்படியெல்லாம் பரவிய பற்பல வதந்திகளால் தாக்குண்டு, உலகம் அழிவதற்கு முன்பாகவே தற்கொலை செய்து தங்களை மாய்த்துக் கொண்டவர்கள் பற்றிய செய்திகள் பலவும் அப்போதே வெளிவந்தன. இவர்களில் பலரும் ஒரு வேளை உள்ளபடியே நம்பிக் கொண்டிருந்தவற்றைத்தான் அறிவித்திருக்கக் கூடும். ஆனால் அப்படி எதுவும் நேர்ந்திடவில்லை!
அறிவுடைமை
ஆண்டுகள் உள்ளிட்ட காலக்கணக்கீடுகளை ஏற்படுத்தியிருப்பது மனிதர்களது சவுகரியத்திற்காகத் தானேயன்றி பிரபஞ்சத்தின் செயல்பாடுகளில் இதற்கெல்லாம் எந்த பங்கும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ளும் போதுதான் இத்தகைய அறியாமைகள் மற்றும் மூட நம்பிக்கைகளின் பாற்பட்ட அறிக்கைகளின் அர்த்தமின்மையை உணர்ந்திட இயலும்.
உலகம் அழியும்போது அதை தடுக்க எந்தச் சக்தியாலும் முடியாது. ஆனால் அது எப்போது நிகழும் என்பதை திட்டவட்டமாக எவராலும் கூறவும் முடியாது. ஆகவே உலக அழிவை பற்றி தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களை பொருட்படுத்தாமல் அது பற்றிய அனாவசியமான அச்சங்களை விட்டு விலகி ஆக்கப்பூர்வமான வகையில் வாழ்க்கையை வாழ்வதுதான் அறிவுடைமையாகும்.

அமெரிக்காவில் இலங்கையின் கொலைக்களம் திரையிடப்பட்டது




வாசிங்டன், 
சிறிலங்கா அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வரும் 'இலங்கையின் கொலைக்களம்' சேனல்-4 ஆவணப்படம் அமெரிக்காவின் Massachusetts மாநில சபையில் (State House) திரையிடப்பட்டது. அனைத்துலக மன்னிப்புச்சபை ஏற்பாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகளான சுபா சுந்தரலிங்கம் மற்றும் ஜெராட் பிரான்சிஸ் ஆகியோரது பங்களிப்புடன் திரையிடல் இடம்பெற்றுள்ளது.
Massachusetts மாநில ஆட்சிபீட உறுப்பினர்கள், உயர்கல்விச் சமூகத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட பல்துறையினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆவணப்பட திரையிடல் தொடர்பிலான முன்னறிவுப்புகள் ஏற்கனவே மாநில ஊடகங்களில் வெளியிடப்பட்ட நிலையில் இதன்வழி பொதுமக்களும் இத்திரையிடலை காணவந்திருந்தனர்.
Massachusetts ஆட்சிபீட உறுப்பினரான ஜேசன் லூவிஸ் அவர்கள் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். திரையிடலைத் தொடர்ந்து கருத்துரைத்த Massachusetts  மாநில ஆட்சிப்பீட ஜேசன் லூவிஸ் அவர்கள் சிறிலங்கா அரசினால் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணையைக் கோரியும் ஐ.நா. நிபுணர் குழுவின் பரிந்துரையை வலியுறுத்தியும் Massachusetts இல் தீர்மானமொன்றை விரைவில் நிறைவேற்றவுள்ளதாக தெரிவித்தார்.
ஆவணப்படம் பெரும் தாக்கத்தைப் பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த நிலையில் தொடர்ந்து சபையோர் கேள்விகளுக்கு ஜெராட் பிரான்சிஸ் தமிழர்களுடைய அரசியல் போராட்டத்தின் நியாப்பாடுகளை முன்னிறுத்தி பதிலுரைத்தார்.


Thursday, 15 September 2011

சனி கிரக நிலவில் ஏராளமாய் ஆக்ஸிஜன், தண்ணீர்! - நாசா

வாஷிங்டன்: சனி கிரகத்தின் முக்கிய நிலவான ரியாவில் உயிர்வாழத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் தண்ணீர் ஏராளமாய் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா சனி கிரகத்துக்கு காசினி விண்வெளி ஓடத்தை கடந்த 2004-ம் ஆண்டு அனுப்பியது.

அந்த ஓடம் சனி கிரகத்தைச் சுற்றி பறந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சனி கிரகத்தின் அருகேயுள்ள ரியா விண்வெளிப் பாதையில் ஆக்ஸிஜன் இருப்பது தெரிய வந்துள்ளது. இப்பாதையில் காந்த சக்தி உள்ளது. அது தான் ஆக்சிஜனை தாங்கிப் பிடித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ரியாவில் உறைந்த நிலையில் ஆக்ஸிஜன் உள்ளது என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இவை ஐஸ் கட்டிகளில் மூலக்கூறுகளாக உள்ளன என்றும், இதனால் சனி கிரகத்தை சுற்றியுள்ள பகுதிகள் எப்போதும் உறைந்த நிலையிலேயே காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல கார்பன்டை ஆக்சைடும் இந்த நிலவில் கணிசமாக உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

பூமி தவிர பிற கிரகங்களில் ஆக்ஸிஜன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே வியாழனின் துணைக் கிரகங்களான யூரோபா, கனிமீட் ஆகியவற்றிலும் ஏராளமாய் ஆக்ஸிஜன் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இவற்றைவிட, அதிகமாக, உறைந்த நிலையில் ரியாவில் ஆக்ஸிஜன் உள்ளதுதான் விசேஷம்.

இன்னொன்று ரியா ஒரு இயற்கையான கிரகமாக உள்ளது. இங்கு ஈர்ப்பு சக்தி இயல்பாக உள்ளதாகவும், உறைந்த நிலையில் ஏராளமாய் தண்ணீர் இருப்பதும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Friday, 2 September 2011

என்னுடிய முப்பரிமான ப்ரோஜெக்ட்ஸ்

என்னுடிய  முப்பரிமான  ப்ரோஜெக்ட்ஸ்  பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்