Total Pageviews

Blog Archive

Friday, 6 January 2012

எகிப்தில் முன்னாள் அதிபருக்கு தூக்கு?

கெய்ரோ : எகிப்தில் சர்வாதிகார ஆட்சி செய்த முபாரக்கிற்கு எதிராக கடந்த ஆண்டில் மக்கள் புரட்சி ஏற்பட்டது. புரட்சியின் போது போராட்டம் செய்தவர்கள் மீது ராணுவத்தை ஏவி விட்டதால் அப்பாவிகள் பலர் பலியாகினர். தொடர்ந்து போராட்டம் வலுப்பெறவே ஆட்சியை விட்டு விலகிய அவர் தலைமறைவானார். பின்னர் கைது செய்யப்பட்ட அவர் தற்போது சிறையில் உள்ளார். 

முபாரக் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு தற்போது நடந்து வருகிறது. போராட்டத்தின் போது முபாராக் நினைத்திருந்தால் மக்கள் இறப்பை தடுத்திருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. எனவே, இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் பலரின் இறப்புக்கு காரணமான முபாரக்கிற்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக தலைமை வழக்கறிஞர் சியுலிமன் தெரிவித்தார்.