Total Pageviews

Blog Archive

Friday, 6 January 2012

காரைக்கால் கடலில் அரியவகை புள்ளி நண்டு அதிக அளவில் சிக்கியது

காரைக்காலில் : தானே புயலுக்கு பின் கடலுக்கு சென்ற காரைக்கால் மாவட்ட மீனவர்கள் வலையில் அரிய வகை புள்ளி நண்டு அதிக அளவில் கிடைக்கிறது. இதனால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இவ்வகை நண்டுகள் கிலோ ஸீ200க்கு சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர். தானே புயலுக்கு பின் கடலுக்கு சென்ற, காரைக் கால் மாவட்ட மீனவர்கள், கடந்த 2 நாட்களாக கரை திரும்பி வருகின்றனர். இவர்களில் நேற்று காலை திரும்பிய பெரும்பாலான மீனவர்கள் வலையில் அரிய வகை புள்ளி நண்டுகள் அதிக அளவில் கிடைத்திருந்தது. 

சாதாரண நண்டுகள் கிலோ ஸீ100க்கு விற்பனையாகிறது. இந்நிலையில், புள்ளி நண்டுகள் கிலோ ரூ.180 முதல் 220 வரை விற்பனையானது. புள்ளி நண்டு குறித்து மீனவர்கள் கூறுகையில், ஆழ்கடலுக்கு செல்லும் மீனவர்கள் வலையில் இதுபோன்ற புள்ளி நண்டுகள் கிடைக்கும். தற்போது புயலினால் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அதிக அளவில் கிடைத்துள்ளது. இந்த நண்டுகள் சாதரண நண்டுகளை விட அதிக சுவையானது. எனவே இதை மொத்த வியாபாரிகள் வாங்கி சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்வார்கள் என்றனர்.