Total Pageviews

Blog Archive

Friday, 6 January 2012

பின் லேடன் இருப்பிடத்தை ஐ.எஸ்.ஐ. அதிகாரி காட்டிக் கொடுத்தார்?

பாகிஸ்தான் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ.-யைச் சேர்ந்த ஒருவர் பின்லேடன் இருப்பிடத்தை பணத்திற்கு ஆசைப்பட்டுக் காட்டிக் கொடுத்தார் என்று ஹில்ஹவுஸ் என்ற பெண்மணி தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.

அல் கய்டா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பின் லேடன் அமெரிக்கக் கப்பற்படையினரான நேவி சீல் படையினரால் கொல்லப்பட்டு அவரது உடலை கடலில் அமிழ்த்தினர் என்ற செய்திகள் வெளியானது.

ஆனால் இந்தப் படுகொலை பாகிஸ்தான் உளவுப்பிரிவ்னருக்குத் தெரியாமல் நடந்தது என்றே தெரிவிக்கப்பட்டது.

தற்போது ஹில்ஹவுஸ் என்ற அந்தப் பெண்மணி 'த ஸ்பை ஹூ பில்டு மீ' என்ற வலைப்பதிவுத் தளத்தில் பாகிஸ்தான் உளவுப்பிரிவைச் சேர்ந்த ஒருவர் 25 மில்லியன் டாலர்கள் தொகைக்கு ஆசைப்பட்டு பின் லேடன் இருப்பிடத்தைக் காட்டி கொடுத்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனக்க்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டதாக அந்த வலைப்பதிவு பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.