அல் கய்டா தலைவர் ஒசாமா பின் லேடனை கொல்ல பாகிஸ்தானுக்குள் புகுந்த அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோல மற்றுமொருமுறை அமெரிக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்று அந்நாட்டிடம் சீனா கண்டிப்புடன் கூறியுள்ளதென சீனா நாட்டின் செய்தி கூறுகிறது.
கடந்த வாரம் வாஷிங்டனில் யு.எஸ்.-சீனா இராணுவ, பொருளாதார பேச்சுவார்த்தையின் போது சீனா இவ்வாறு தெரிவித்தாக அந்நாட்டில் இருந்து வெளிவரும் நியூஸ் டெய்லி எனும் நாளிதழ் தெரிவிக்கிறது.
பாகிஸ்தானின் இறையாண்மையை யு.எஸ்.மதிக்க வேண்டும் என்றும், அதை மீறி பாகிஸ்தான் மீது நடத்தப்படும் எந்தத் தாக்குதலையும் தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகவே கருதுவோம் என்று நேரடியாக, ஐயத்திற்கிடமின்றி யு.எஸ். அதிகாரிகளிடம் சீனா அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாகவும் அச்செய்தி கூறுகிறது.
சீனத் தலைநகர் பீஜிங்கில் நடந்த சந்திப்பில் பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ராசா கிலானியிடம், சீன பிரதமர் வென் ஜியாபாவோ இத்தகவலை கூறியதாகவும் அச்செய்தி கூறுகிறது.
பாகிஸ்தான், சீன பிரதமர்கள் 45 நிமிடம் பேசியதாக அச்செய்தி கூறுகிறது.
கடந்த வாரம் வாஷிங்டனில் யு.எஸ்.-சீனா இராணுவ, பொருளாதார பேச்சுவார்த்தையின் போது சீனா இவ்வாறு தெரிவித்தாக அந்நாட்டில் இருந்து வெளிவரும் நியூஸ் டெய்லி எனும் நாளிதழ் தெரிவிக்கிறது.
பாகிஸ்தானின் இறையாண்மையை யு.எஸ்.மதிக்க வேண்டும் என்றும், அதை மீறி பாகிஸ்தான் மீது நடத்தப்படும் எந்தத் தாக்குதலையும் தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகவே கருதுவோம் என்று நேரடியாக, ஐயத்திற்கிடமின்றி யு.எஸ். அதிகாரிகளிடம் சீனா அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாகவும் அச்செய்தி கூறுகிறது.
சீனத் தலைநகர் பீஜிங்கில் நடந்த சந்திப்பில் பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ராசா கிலானியிடம், சீன பிரதமர் வென் ஜியாபாவோ இத்தகவலை கூறியதாகவும் அச்செய்தி கூறுகிறது.
பாகிஸ்தான், சீன பிரதமர்கள் 45 நிமிடம் பேசியதாக அச்செய்தி கூறுகிறது.