Total Pageviews

Blog Archive

Thursday, 19 April 2012

சீனாவின் பிரம்மாண்ட அணைக்கு தொடரும் ஆபத்து: மேலும் ஒரு லட்சம் பேரை வெளியேற்ற திட்டம்



பெய்ஜிங்: சீனாவில் கட்டப்பட்ட மிகப்பெரிய அணைப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவினால் அப்பகுதியில் இருந்து மேலும் 1 லட்சம் பேரை அடுத்த 5 ஆண்டுகளில் நிரந்தரமாக வெளியேற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

உலகிலேயே பெரிய அணை சீனாவில் உள்ள யாங்சி ஆற்றில் 2006-ம் ஆண்டு கட்டப்பட்டது. அணை கட்டுமான பணி 1994-ம் ஆண்டு தொடங்கி 2006-ல் முடிவடைந்தது. இந்த அணையை கட்டி முடிக்க ரூ.2லட்சம் கோடி செலவிடப்பட்டது. அப்போது அணை பகுதியில் இருந்த 14 பெரிய நகரங்கள், 133 சிறு நகரங்கள், 1350 கிராமங்கள் காலி செய்யப்பட்டு 14 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
தற்போது முன்பைவிட அதிக நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் மேலும் ஒரு லட்சம் பேரை அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் நிரந்தரமாக வெளியேற்றிவிடுவது என்று அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ள 5386 இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.







China Dam








சீனாவும் இந்தியாவும் எதிரிகள் அல்ல : சீன வெளியுறவுத்துறை அக்னி குறித்து



சீனாவும் இந்தியாவும் எதிரிகள் அல்ல இரண்டு நாடுகளும் ஒத்துழைக்கும் பங்காளிகள் என சீனாவின் வெளியுறவுத்துறை பேச்சாளர் லுயூ வெய்மின் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிகையில், டில்லியில், சமீபத்தில் நடந்த “பிரிக்ஸ்’ மாநாட்டின் மூலம், இந்த உறவு மேலும் வலுவடைந்துள்ளது. அமைதியான சூழல் தொடர்ந்து நீடிப்பதற்கு, ஆசிய நாடுகள் அனைத்தும், முக்கிய பங்காற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றார்.
இந்தியா அக்னி 5 ஏவுகணைச் சோதனையை நடத்தியிருப்பது குறித்து சீன நளிதழ் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அணு சக்தி ஆழிவுகளை ஏற்படுத்தவல்ல இவ்வாறான ஏவுகணைகளை சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரித்தானியா, அமரிக்கா ஆகிய நாடுகளில் ஏற்கனவே காணப்பட்கின்றன. உலகத்தின் மிகவும் வறிய நாடுகளில் ஒன்றான் இந்தியா தெற்காசியாவில் ஏவுகணையைக் கொண்டிருக்கும் முதலாவது நாடு







Wednesday, 11 April 2012

இந்தோனேசியாவில் 8.7 ரிக்டர் பூகம்பம் ஏற்பட்டும் சுனாமி தாக்காதது ஏன்?

ஜகார்தா : அடுத்தடுத்த பூகம்பங்கள்... அதை தொடரும் சுனாமி என ஜப்பானை போல ஆபத்தை எதிர்கொண்டு வாழ பழகி விட்டது இந்தோனேசியா. நேற்று மதியம் 2.08 மணிக்கு அங்கு ஏற்பட்ட 8.7 ரிக்டர் பூகம்பத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பிறகு உயிர் சேதம், பொருட் சேதம் இல்லாமல் நிம்மதி பெருமூச்சு விட்டது.
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதி. தலைநகரம் பண்டா ஏச். 2004 டிசம்பர் 26ம் தேதியை மறக்க முடியாமல் தவிக்கும் மக்களுக்கு நேற்று அதே ஆபத்து மீண்டும் பயமுறுத்தியது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.08க்கு பண்டா ஏச் நகரில் இருந்து 454 கி.மீ. தூர கடலின் 33 கி.மீ. ஆழத்தில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது.

ரிக்டரில் அது 8.7 புள்ளியாக பதிவானதாக (முன்னதாக அது 8.9 புள்ளி என தகவல் வெளியானது) அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. பூகம்பத்தால் பண்டா ஏச் நகரின் கட்டிடங்கள் குலுங்கின. உணவு இடைவேளையை முடித்த அலுவலக ஊழியர்கள் கட்டிடம் ஆடுவதை கண்டு அலறி அடித்து வெளியேறினர்.

சாலைகளில் பிளவு ஏற்பட, கட்டிடங்களில் விரிசல் விழுந்தது. வீடுகளில் பொருட்கள் கீழே உருண்டோட, குழந்தைகள், முதியவர்களுடன் மக்கள் வெட்டவெளியை தேடி ஓடினர். ஒரு மணி நேரம் வரை காத்திருந்த மக்கள் தயக்கத்துடன் மீண்டும் வீடு, அலுவலகம் செல்ல, மீண்டும் 4.13க்கு பூமி குலுங்க, வீறிட்டு அலறி வெளியேறினர். இந்த முறை ரிக்டரில் 8.2 புள்ளியாக பூகம்பத்தை தொடர்ந்த அதிர்வு பதிவானது.

அடுத்தடுத்து பீதி ஏற்படுத்திய இரு பூகம்பத்தால் உயிர் சேதம் ஏற்படாதது ஆறுதல். ஆனால், கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டதால் சுனாமி தாக்கும் என பசிபிக் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையம், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் ஆகியவை எச்சரித்தன.

இதனால், கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள், சுற்றுலா பயணிகள், மீனவ குடும்பங்கள் அவசரமாக மேடான பகுதிகளை நோக்கி அப்புறப்படுத்தப்பட்டனர்.
எனினும், பூகம்பத்தின் மையப் பகுதியை 3 மணி நேரம் துல்லியமாக கண்காணித்த பசிபிக் சுனாமி மையம், பெரிய அலை ஏதும் எழாததால் சுனாமி ஆபத்து நீங்கியதாக மாலை 6.15 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதுபற்றி இந்தோனேசிய புவியியல் ஏஜென்சி தலைவர் கிறிஸ்டியவான் கூறுகையில், ‘‘பூகம்ப மையப் பகுதியில் 80 செ.மீ. உயர அலைகளே எழுந்ததால், கடலோரத்தில் சிறிய அளவில் மட்டுமே அலைகள் உயர்ந்தன. 8.7 புள்ளி சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டிருந்தாலும் அது ஸ்டிரைக்,ஸ்லிப் (பெட்டி செய்தி) என்பதால் சுனாமி ஏற்படவில்லை’’ என்றார்.
எனவே, டிசம்பர் 26, 2004 சுனாமியின் காயத்தை மறக்காத இந்தோனேசிய மக்கள், நேற்றைய பூகம்பம் சேதம் ஏற்படுத்தாததை நினைத்து நிம்மதி அடைந்தனர்.

‘ஸ்டிரைக்,ஸ்லிப்’ பூகம்பம்

2004ல் ஏற்பட்டது 9.1 ரிக்டர் பூகம்பம். இதில், 2 லட்சத்து 20,000 பேர் பலியானார்கள். இந்த முறை அது 8.7 புள்ளிகள் என்பதால் சுனாமி ஏற்படுத்தும் அளவு என்ற அச்சம் இருந்தது. ஆனால், பூகம்ப மையம் இருந்த இந்தோனேசியா, அந்தமான் பகுதிகளில் கூட சுனாமி தாக்காததற்கு காரணம் இருக்கிறது. இது சுனாமி ஏற்படுத்தாத பூகம்பம் என்பதே காரணம். இதுபற்றி இங்கிலாந்து புவியியல் விஞ்ஞானி சுசானே சர்ஜென்ட் கூறுகிறார்:


பூகம்பத்தில் 3 வகைகள். பூமிக்கு அடியில் உள்ள நில தட்டுகளில் (டிஸ்க் ப்ளேட்) ஏற்படும் வழக்கமான தவறு (நார்மல் ஃபால்ட்) (முதலாவது படம் பார்க்க). நில தட்டுகளில் ஒரு இடத்தில் விரிசல் ஏற்பட்டு கீழ் நோக்கி செங்குத்தாக நகரும். இதனால், நில தட்டுகளின் மேல் இருக்கும் பாறைகள் கீழிறங்கும். இந்த பூகம்பத்தால் கடலின் அடிப்பகுதி இடம்மாறும். சுனாமி ஏற்படுத்தும்.

அடுத்தது, த்ரஸ்ட். (2வது படம் பார்க்க) இதில் நில அடுக்குகளில் ஏற்படும் அதிக அழுத்ததால் பிளவு ஏற்பட்டு மேல் நோக்கி நகரும். இதனால், கீழிறங்கும் பக்கத்து நில தட்டின் மீது பாறைகள் கீழிறங்கும். இந்த பூகம்பத்தாலும் சுனாமி ஆபத்து அதிகம். ஆனால், நேற்று நடந்த ‘ஸ்டிரைக்,ஸ்லிப்’ வகை பூகம்பத்தில் (3வது படம் பார்க்க) இரண்டு நில அடுக்குகள் பக்கவாட்டில் உரசியபடி நகரும். இதனால், கடலுக்கு கீழ் தரையில் பெரிய மாற்றம் ஏற்படாது. அதனால், சுனாமி ஏற்பட வாய்ப்பு குறைவு என்கிறார் சுசானே சர்ஜென்ட்.


* 2004 பூகம்பம் ஏற்பட்ட அதே சுமத்ரா தீவின் பண்டா ஏச் நகரத்தை அடுத்த கடல் பகுதியிலேயே நேற்றும் பூகம்பம் ஏற்பட்டது.
* பூகம்பத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட 28 நாடுகள்: இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, மியான்மர், தாய்லாந்து, மாலத்தீவு, இங்கிலாந்து, மலேசியா, மொரிஷியஸ், இந்திய பெருங்கடலின் பிரான்ஸ் பகுதியான ரீயூனியன், செஷல்ஸ், பாகிஸ்தான், சோமாலியா, ஓமன், மடகாஸ்கர், ஈரான், ஐக்கிய அரபு எமிரேட், ஏமன், காமோரஸ், வங்கதேசம், தான்சானியா, மொசாம்பிக், கென்யா, க்ரோசெட் தீவு, கெர்குலன் தீவு, தென்ஆப்ரிக்கா, சிங்கப்பூர்.






சென்னையில் நிலநடுக்கம் ஏன்? வானிலை அதிகாரி விளக்கம்

இந்தோனேசியா அருகே (11.04.2012) கடலில் 8.7 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இந்த பூமி அதிர்ச்சி உணரப்பட்டது.


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை செயற்கைகோள் இயக்குனர் டபிள்யூ.பி.கோபால் பூகம்பம் பற்றி நிருபர்களிடம் கூறியதாவது: 

சுமத்ரா தீவில் வடக்கு பகுதியில் பகல் 2 மணி 8 நிமிடத்திற்கு ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பகல் 2 மணி 31 நிமிடத்திற்கு இந்திய பெருங்கடலின் வடக்கு பகுதியிலும் நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது.

சுமத்ரா தீவில் அதிகபட்சமாக 8.7 ரிக்டர் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. அந்த நிலநடுக்கத்தை தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள மக்கள் உணர்ந்துள்ளனர்.

சென்னையில் நடந்த பூமி அதிர்ச்சி சுமத்ரா தீவில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியின் எதிரொலிதான். அதைத்தான் சென்னை நகர மக்களும் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் உள்ள மக்களும் உணர்ந்துள்ளனர்.

இவ்வாறு இயக்குனர் கோபால் தெரிவித்தார்.

யூரோ பிரச்னையை தீர்க்க புது தீர்வளித்த 11 வயது சிறுவன்

ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கென்று தனித்தனி நாணயங்களை வைத்திருந்தன.
ஒரே நாணயமாக இருப்பது வசதி பொருளாதாரமும் மேம்படும் என்பதால் யூரோ என்ற பொது நாணயம் கடந்த 1999ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள 17 நாடுகளில் யூரோ நாணயம் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. கிரீஸ் உட்பட பல்வேறு நாடுகள் யூரோ நாணயத்தில் இருந்து விலக வேண்டிய சூழலும் ஏற்பட்டது.
இந்த பிரச்னைக்கு தீர்வு தெரிந்தால் சொல்லுங்கள் என்று இங்கிலாந்தை சேர்ந்த நெக்ஸ்ட் சில்லரை வர்த்தக நிறுவனத்தின் தலைமை அதிகாரியும் பிரபல தொழிலதிபருமான சைமன் உல்ப்சன் கடந்த அக்டோபரில் அறிவித்தார். ரூ.20 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் இருந்து பொருளாதார நிபுணர்கள், நிதித்துறை பேராசிரியர்கள், வணிக, வர்த்தக ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து ஏராளமான ஐடியாக்கள் குவிந்தன.
அதில் மிக மிக இளமையான நிபுணர் ஹாலந்தை சேர்ந்த ஜூர் ஹெர்மன்ஸ். வயது 11. யூரோ நாணயம் சிக்கல் சாதாரண விஷயம் என்ற பீடிகையுடன் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறான்.
நாணயம் மாற்றும் இயந்திரத்தின் உதவியுடன் கிரீஸ் மக்கள் எல்லாரும் தங்களிடம் இருக்கும் யூரோக்களை டிராச்மாவாக(யூரோவுக்கு முன்பு இருந்த கிரீசின் நாணயம்) முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு சேரும் மொத்த யூரோவையும் பெரிய பீட்சாவை பீஸ் போடுவது போல அரசு பீஸ் போட்டு, கடனை அடைக்க வேண்டும். யூரோவை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ள ஜூர், பீட்சா படம் வரைந்து விளக்கம் கொடுத்திருக்கிறான்.
அவனது இந்த யோசனை மற்றும் விளக்கிய விதத்தை பார்த்து வியந்து போன அதிகாரிகள் குழு அவனை பாராட்டி ரூ.6 ஆயிரம் செக் அனுப்பியிருக்கிறது. நல்ல யோசனை எது என்று ஜூலை 5-ம் திகதி அறிவிக்க உள்ளார்கள். கலந்து கொண்டதே பெருமைக்குரிய விஷயம் என்கிறான் ஜூர்.

உலகில் ஆபாச இணையத்தள தேடல் அதிகரிப்பு

உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் இணையத்தள தேடலில் 3ல் ஒன்று ஆபாச இணையத்தள தேடல் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
எக்ஸ்ட்ரீம்டெக் என்ற இணையத்தளம் ஆய்வு நடத்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, இணையத்தள பயன்பாட்டில் சுமார் 30 சதவீத தேடல்கள், ஆபாச இணையத்தளங்களை கொண்டுள்ளன.
உலகின் மிகப் பெரிய ஆபாச இணையத்தளத்தின் 400 கோடி பக்கங்கள் பார்க்கப்பட்டுள்ளன. மாதத்துக்கு 35 கோடி புதிய பார்வையாளர்கள் அதை காண்கின்றனர்.
ஆபாச இணையத்தளங்களில் அதிக பார்வையாளர்கள், பக்கங்கள் கொண்டவை அடிப்படையில் முதலிடம் பெறும், இணையத்தளத்தை ஒவ்வொருவரும் பார்க்க சராசரியாக 15 நிமிடம் செலவிட்டுள்ளனர்.
ஆபாச இணையத்தளத்தின் எவ்வளவு தகவல்கள் இடம் மாறின என்பது குறித்து அதன் சர்வரில் இருந்து பெறப்பட்ட தகவல்படி, விநாடிக்கு 50 ஜிகாபைட் அல்லது மாதத்துக்கு 29 பீட்டாபைட் அளவு ஆபாச படங்கள், தகவல்கள் இடம்மாற்றப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது.

அணு ஆயுத பலத்தை அதிகரிக்கும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தனது அணு ஆயுத பலத்தை அதிகரித்து வருவதாகவும், இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிகளவு அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அமைதி மற்றும் விடுதலைக்கான சர்வதேச பெண்கள் அமைப்பு வெளியிட்டுள்ள "என்றென்றும் அழிவைத் தேடி: உலகைச் சுற்றி அணு ஆயுத நவீனமயமாக்கல்” எனும் அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தான் தனது அணு ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் ரூ. 12,500 கோடி அளவுக்கு அந்நாடு செலவிடுகிறது.
குறிப்பாக புளுட்டோனியம் உற்பத்தியை அதிகரிப்பது, அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லக்கூடிய ஏவுகணைகளைத் தயாரிப்பது, அவற்றை சோதனை செய்வது ஆகியவற்றில் பாகிஸ்தான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மேலும் இலகுரக மற்றும் புளுட்டோனியத்தை அடிப்படையாகக் கொண்ட அணு ஆயுதத் தயாரிப்பில் அந்நாடு கவனம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக புளுட்டோனியம் உற்பத்தித் திறனை பாகிஸ்தான் விரிவுபடுத்தியுள்ளது.
விமானத்திலிருந்து போடப்படும் அணு குண்டுகளுக்குப் பதிலாக அணு ஆயுதத்தை கொண்டுசெல்லும் நடுத்தர ஏவுகணைத் தயாரிப்புக்கு அந்நாடு முக்கியத்துவம் தருகிறது. அணு ஆயுத ஆய்வில் வளர்ந்துவரும் நாடாக பாகிஸ்தான் விளங்குகிறது.
உத்தேசமாக 90 முதல் 110 அணு ஆயுதங்களை பாகிஸ்தான் வைத்திருக்க வாய்ப்புள்ளது. பாகிஸ்தானிடம் சிறிய ரக, நடுத்தர, தொலைவு ரக சாலை வழியே எடுத்துச் செல்லத்தக்க நிலத்திலிருந்து நிலப் பகுதிகளைத் தாக்கும் ஏவுகணைகள் உள்ளன.
கடந்த 5 ஆண்டுகளாக 2வது தலைமுறை ஏவுகணைகளை அந்த நாடு தயாரித்து வருகிறது. இதுவரை 140 கிலோ புளுட்டோனியத்தை பாகிஸ்தான் தயாரித்துள்ளது.
பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டத்துக்கு நிதி வழங்குவது யார் என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது.

Friday, 30 March 2012

சோனியாவின் நெஞ்சைத்தொட்ட பாலச்சந்திரனின் ஒளிப்படம்


ஜெனிவாவில் இலங்கைக்கெதிராக வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாகாந்தியே, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கூறியதாகவும் அவர் அவ்வாறு கூறியதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டுக் கிடந்த ஒளிப்படமே காரணம் என இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.வாக்கெடுப்புக்கு சில நாட்கள் முன்னதாக சனல்-4 வெளியிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் கொல்லப்பட்டது உள்ளிட்ட தமிழர்களின் அவலங்கள் பற்றிய காட்சிகள் சோனியாகாந்திக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக தோன்றுவதாக தம்மை அடையாளம் காட்ட விரும்பாத காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.
தமிழ் ஊடகங்களில் வெளியான இந்தப் படங்கள் ஒரு புயலையே தோற்றுவித்தன.வாக்கெடுப்புக்கு இரண்டு நாட்கள் முன்னதாக, மார்ச் 22ஆம் திகதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனும், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் தனியொரு நாட்டுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க முடியாது என்று கூறியிருந்தனர்

bala-son-of20prrabaharan


.இதனால் அதிருப்தியடைந்த சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சோனியாகாந்தியை அணுகி அவரிடம் முறையிட்டனர். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட படங்களை அவர்கள் சோனியாகாந்தியிடம் காண்பித்து நியாயம் கேட்டனர்.
குறிப்பாக, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் மார்பில் சுடப்பட்டுக் கிடக்கும் காட்சி அவரை உறைய வைத்தது. இதையடுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தான் நடவடிக்கை எடுப்பதாக சோனியாகாந்தி உறுதி வழங்கினார்.
உடனடியாகவே, அவர் பிரதமர் மன்மோகன்சிங்கிடம், ராஜபக்ச அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.ஒரு குழந்தையின் மரணம் இந்திய – இலங்கை உறவையே மாற்றி விட்டது என்று ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ தகவல் வெளியிட்டுள்ளது.

வெட்கத்தில் தலைகுனிந்த சீனா


ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திலிருந்து இலங்கையைக் காப்பதற்காக சீனா கடும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அந்த முயற்சிக்கு படுதோல்விதான் பரிசாகக் கிடைத்தது. உண்மையில் சீனா எதற்காக இந்த முயற்சிகளில் இறங்கியது? அதன் நோக்கம் என்ன?தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்து விட்டதால், இதைப் பயன்படுத்தி, இலங்கையை தனக்கு சாதகமாக முற்றிலும் வளைத்து விடும் நோக்கத்தில்தான் சீனா இவ்வாறு தீவிர முயற்சியில் இறங்கியது.
இந்தியாவின் எதிர் நிலையைப் பயன்படுத்தி, இலங்கையை தனக்கு சாதகமாக முற்றிலும் வளைத்து விட்டால், எதிர்காலத்தில், இந்தியாவுக்கு எதிராக இலங்கையில் வலுவாக காலூன்ற அது உதவும் என்பதே சீனாவின் குயுக்தியான திட்டம் என்கிறார்கள். இதனால்தான் திடீரென வலிய வந்து இலங்கைக்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்டது சீனா.
சீனாவின் கடும் முயற்சிகள் காரணமாகவே இதுவரை வெறும் ஒற்றை இலக்கத்திலிருந்த இலங்கை ஆதரவு 15 ஆக உயர்ந்தது.ஆனால் இதற்காக அமெரிக்கா கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை. 24 நாடுகளுக்கும் அதிகமாகவே ஆதரவு தருவார்கள் என நம்பியது சீனா. ஆனால் 8 நாடுகள் நடுநிலை என்ற முடிவை எடுத்ததால் 24 உடன் நின்றுவிட்டது.
இந்திய அரசின் திடீர் நிலைப்பாடு மாற்றம் காரணமாக இலங்கை கடும் அதிர்ச்சி மற்றும் அதிருப்தியுடன் உள்ளது. இதைப் புரிந்து கொண்டுள்ள சீனா இனி இலங்கைக்கு மேலும் மேலும் உதவிகளைச் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.தீர்மான விஷயத்தில் தோற்றாலும் கூட, இனி இலங்கையில் வலுவாக காலூன்ற சீனாவுக்கு தடையில்லை. இதை வைத்து இந்தியாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டலாம் என்று சீனா கணக்குப் போட்டுள்ளது.
இதைத்தான் அன்றே ஈழத் தலைவர்களும், தமிழகத் தலைவர்கள் பலரும் கூட மத்திய அரசுக்குச் சுட்டிக் காட்டினார்கள். சீனாவை வைத்துக் கொண்டு இலங்கை, இந்தியாவுக்கு நிச்சயம் ஆட்டம் காட்டும் என்று கணித்துக் கூறினார்கள். ஆனால் அதை இந்திய அரசுதான் நம்பவில்லை, ஏற்கவில்லை.
இப்போது ஐநாவில் தோற்ற ‘கடுப்பில்’ உள்ள இலங்கை, தன் நண்பன் சீனா மூலமாக என்னென்ன தொல்லைகளை இந்தியாவுக்கு தரவிருக்கிறார்களோ தெரியவில்லை என்கின்றனர் அரசியல் அவதானிகள்.

முழு முக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி




மேரிலாண்ட் மருத்துவ மையத்தில் முகம் சிதைந்த ஒருவருக்கு, உடல் உறுப்பு தானம் செய்த ஒருவரது முகப் பகுதிகளை எடுத்து பொருத்தி மருத்துவர்கள் செய்துள்ள முழு முக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. உடல் உறுப்பு தானம் செய்தவரின் சாயல் புதிய முகத்தில் இல்லை என்பதுதான் வெற்றிக்கு அடிப்படையே.


மேலும், உலகிலேயே இந்த அறுவை சிகிச்சைதான் அதிக நேரம், அதிக செலவில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை என்ற சாதனையை படைத்துள்ளது.

விர்ஜீனியாவைச் சேர்ந்த ஹில்ஸ் ரிச்சாட் லீ நோரிசுக்கு (வயது 37) 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் முகப்பகுதிகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் பற்கள், மூக்கு, நாக்கின் ஒரு பகுதி, உதடுகள் ஆகியவற்றை அவர் இழந்துவிட்டார். மூக்கு முற்றிலும் சேதமடைந்து நுகரும் உணர்வே இல்லாமலும், பாதி நாக்குடன், முகத்தில் பல்வேறு தையல்களும், கண் பார்வை குறைந்தும் இருந்ததால் ரிச்சர்ட், வெளியில் செல்வதைத் தவிர்த்து வீட்டிற்குள்ளேயே வாழ்ந்து வந்தார்.

இவருக்கு உடல் உறுப்புகளை தானம் செய்த ஒருவரது முகப் பாகங்களை எடுத்து பொருத்தும் அறுவை சிகிச்சை செய்ய மேரிலாண்ட் மருத்துவ மையம் முடிவெடுத்தது.

அதன்படி, வேறொருவருடைய உடலில் இருந்து மேல் மற்றும் கீழ்தாடை, பற்கள், மூக்கு, நாக்கின் எஞ்சிய பகுதி மற்றும் முக திசுக்களை எடுத்து ரிச்சர்ட்டிற்கு பொருத்தும் அறுவை சிகிச்சை 36 மணி நேரம் நடைபெற்றது.

அறுவை சிகிச்சை முடிந்து குணமடைந்து வரும் ரிச்சர்ட், தற்போது பல் துலக்குகிறார், முகச் சவரம் செய்கிறார். 15 ஆண்டுகளுக்கு முன் இழந்த நுகரும் உணர்வையும் அவர் திரும்ப பெற்றுவிட்டார்.

தனக்கு புதிய முகம் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார் ரிச்சர்ட். தானும் மற்றவர்களைப் போல வெளியில் நிம்மதியாக நடமாட முடியும் என்றும், தன்னை யாரும் விநோதமாக பார்க்க மாட்டார்கள் என்றும் மகிழ்ச்சி பொங்க கூறுகிறார்.

Friday, 23 March 2012

இலங்கைக்கு எதிராக ஓட்டு: இலங்கையில் எப்படியான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன


ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம், 24-15 என்ற வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றது பற்றி இலங்கையில் எப்படியான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன? இதோ, இப்படித்தான்:
இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், “15 நாடுகள் எமக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது பெரும் திருப்தி அளிக்கிறது” என்கிறார்.
“அந்த 15 நாடுகள் மீதும் பல்வேறு விதமான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. அவ்வளவு அழுத்தங்களின் மத்தியிலும், 15 நாடுகள் எமக்கு வாக்களித்துள்ளன. வாக்களிப்பில் கலந்துகொள்ளாததன் மூலம் தீர்மானத்திற்கு ஆதரவளிக்க மறுத்த 8 நாடுகளுக்கும் நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் உள்ளன. 15 நாடுகள் எமக்கு வாக்களித்ததன் மூலம், தீர்மானத்தை எதிர்த்துள்ளன. 8 நாடுகள் வாக்களிப்பில் பங்குபற்றாமல், தீர்மானத்தைவிட்டு ஒதுங்கி நின்றுள்ளன. மொத்தத்தில், 23 நாடுகளுக்கு இந்த தீர்மானத்தில் உடன்பாடு கிடையாது.
24 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்துள்ளன. வித்தியாசம் 1 வாக்குதான். இந்தியா எமக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், தீர்மானம் தோற்றுப் போயிருக்கும்” என்றும் கூறியுள்ளார் அவர்.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷே, “வெளிநாட்டு நெருக்குதல்கள் ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல. இதெல்லாம் சாதாரணம். வெளிநாட்டு நெருக்கடிகளை வெற்றிகரமாக முறியடிக்கக் கூடிய நிலைமை எமது நாட்டில் காணப்படுகின்றது. காலத்துக்கு காலம்  இவ்வாறான வெளிநாட்டு நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இப்படியான நெருக்கடிகளை எல்லாம் முறியடிக்க எங்களால் முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷே, “இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள உறவில் எவ்வித மாற்றமும் கிடையாது. இந்தியா எமக்கு எதிரான சில நடவடிக்கைகளை எடுக்கும்போது, அவர்களுக்கு உள்நாட்டில் (இந்தியாவில்) சில அரசியல் அழுத்தங்கள் இருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உள்நாட்டு அழுத்தங்கள் காரணமாக சில முடிவுகளை எடுக்க வேண்டிய தேவை இந்திய அரசுக்கு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷேவும், பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷேவும், இலங்கை ஜனாதிபதியின் சகோதரர்கள்.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் செயலாளர் குமாரஸ்ரீ ஹெட்டிகே, “இந்த நாட்டின் முன்னாள் தலைவர்கள் சிலர், இலங்கைக்கு எதிரான நாடுகளுடன் சேர்ந்து, எமக்கு துரோகம் செய்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
இவர் யாரைப்பற்றி குறிப்பிடுகிறார்? எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே பற்றியா?

இலங்கைக்கு எதிராக வாக்களித்த இந்தியா


ஜெனீவாவில் சற்று நேரத்துக்குமுன் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக 24 நாடுகளும், ஆதரவாக 15 நாடுகளும் வாக்களித்தன. எந்தப் பக்கம் வாக்களிக்கும் என அதிக சஸ்பென்ஸை ஏற்படுத்தியிருந்த இந்தியா, இலங்கைக்கு எதிராக வாக்களித்தது.
இலங்கைக்கு இரு அயல்நாடுகள் உள்ளன. ஒன்று இந்தியா, மற்றையது மாலதீவு. இவற்றில், இந்தியா, எதிர்த்து வாக்களித்திருக்க, மற்றைய அயல் நாடான மாலதீவு, இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தது.
மற்றொரு விஷயம், இலங்கைக்கு எதிராக வாக்களித்த ஒரேயொரு ஆசிய நாடு இந்தியாதான். வாக்களிப்பில் கலந்துகொண்ட மற்றைய அனைத்து ஆசிய நாடுகளும், இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களித்தன. பங்களாதேஷ், சீனா, இந்தோனேஷியா, மாலைதீவு, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய ஆசிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உறுப்பினர்களாக 47 நாடுகள் உள்ளன. தீர்மானம் வெற்றிபெற 24 வாக்குகள் தேவை. இந்தியா உள்ளிட்ட 24 நாடுகள் வாக்களித்ததால், இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
8 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் இரு தரப்பையும் ஆதரிக்காமல், நடுநிலைமை வகித்தன.
சில நாடுகள் வாக்களிப்பதற்குமுன், தாம் எதற்காக ஆதரவாகவோ, எதிராகவோ வாக்களிக்கின்றன என தமது கருத்தை தெரிவித்துவிட்டு வாக்களித்தன. இதோ, சில நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக (இலங்கைக்கு ஆதரவாக) வாக்களித்த காரணங்களைப் பாருங்கள்:
இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த பங்களாதேஷ் நாட்டுப் பிரதிநிதி, “குறிப்பிட்ட சில நாடுகளுக்கு எதிராக மட்டுமே இப்படியான தீர்மானங்களை கொண்டு வருவதை நாம் விரும்பவில்லை. அதனால், தீர்மானத்துக்கு எதிராக (இலங்கைக்கு ஆதரவாக) வாக்களிக்கிறோம்” என்றார்.
சீனாவின் பிரதிநிதி, “இலங்கையில் உள்நாட்டு விவகாரம் இது. அதில் தலையிடுவது, மற்றொரு நாட்டின் இறைமையில் தலையிடுவது என்பதால், தீர்மானத்துக்கு எதிராக (இலங்கைக்கு ஆதரவாக) வாக்களிக்கிறோம்” என்றார். ரஷ்யப் பிரதிநிதி தெரிவித்த கருத்தும் இதோதான்!
மாலதீவு பிரதிநிதி, “குற்றச்சாட்டு சரியானதுதான். ஆனால், அதை ஆராய்ந்து திருத்திக் கொள்வதற்கு இலங்கைக்கு கொடுத்த கால அவகாசம் போதாது என்பதால், தீர்மானத்துக்கு எதிராக (இலங்கைக்கு ஆதரவாக) வாக்களிக்கிறோம்” என்றார். கிர்கிஸ்தான் பிரதிநிதி கூறிய காரணமும் இதேதான்.
பிலிப்பீன்ஸ் நாட்டின் பிரதிநிதி, “நீண்டகால யுத்தம் முடிந்து இப்போதுதான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள ஒரு நாட்டின் (இலங்கை) மீது அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கை இது என்பதால், தீர்மானத்துக்கு எதிராக (இலங்கைக்கு ஆதரவாக) வாக்களிக்கிறோம்” என்றார்.
கியூபா நாட்டு பிரதிநிதி, மிகக் கடுமையான வார்த்தைகளை உபயோகித்து தமது நாட்டின் நிலைப்பாட்டை தெரிவித்தார். “இலங்கைக்கு எதிரான நடவடிக்கை, இரட்டை நிலைப்பாட்டை (double standards) உடையது. சில நாடுகள் எந்த போர்க் குற்றமும் செய்யலாம். அதற்கு விசாரணை கிடையாது. இலங்கை போன்ற சில நாடுகள் மீதுதான் விசாரணை வைக்கிறீர்கள்.
அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து, இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையை கோருகின்றன. இவர்கள் ஏன் லிபியாவில் நேட்டோ படைகளும், ஈராக்கில் அமெரிக்கப் படைகளும் செய்த போர்க் குற்றங்களையும் விசாரிக்க கோரவில்லை? நாங்கள் (கியூபா) இலங்கையின் நண்பர். இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கிறோம்” என்று தெரிவித்தார் கியூபா பிரதிநிதி.

இலங்கைக்கு எதிராக (பிரேணைக்கு ஆதரவாக) வாக்களித்த நாடுகள்:

அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரியா, இத்தாலி, நார்வே, ஸ்பெயின், பெல்ஜியம், சுவிட்ஸர்லாந்து, கிரீஸ், ஹங்கேரி, போலந்து, மால்டோவா, ருமெனியா, சிலி, காஸ்டா ரிக்கா, கௌதமாலா, மெக்சிகோ, பெரு, உருகுவே, பெனின், கெமரூன், லிபியா, மொரிசியஸ், நைஜீரியா.

இலங்கைக்கு ஆதரவாக (பிரேணைக்கு எதிராக) வாக்களித்த நாடுகள்:

பங்களாதேஷ், சீனா, இந்தோனேஷியா, குவைத், மாலைதீவு, பிலிப்பைன்ஸ், கத்தார், சவூதி அரேபியா, தாய்லாந்து, கியூபா, ஈக்குவடோர், ரஷ்யா, காங்கோ, மொரிட்டானியா, உகன்டா.

வாக்களிப்பில் நடுநிலை வகித்த நாடுகள்:

ஜோர்தான், அங்கோலா, பொட்ஸ்வானா, புர்கினா பெஸோ, டிஜிபோட்டி, செனகல், கிர்கிஸ்தான்.

Saturday, 7 January 2012

இந்திய ராணுவ அதிகாரிக்கு சீனா விசா மறுப்பு

புதுதில்லி, ஜன.6: இந்திய-சீன பாதுகாப்பு பரிவர்த்தனை திட்டத்தின்படி சீனாவுக்கு செல்லவிருந்த இந்திய ராணுவ அதிகாரிக்கு விசா அளிக்க அந்நாடு மறுத்துவிட்டது. இதையடுத்து இந்திய ராணுவ அதிகாரிகள் சீனாவுக்கு மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இந்திய ராணுவ அதிகாரிகள் 30 பேர் கொண்ட குழு, பாதுகாப்பு பரிவர்த்தனை தொடர்பாக ஜனவரி 10-ம் தேதி முதல் 4 நாள்களுக்கு சீனாவில் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. குழுவில் அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பாங்கிங் என்ற ராணுவ அதிகாரியும் இடம்பெற்றிருந்தார். அவருக்கு சீனா வருவதற்கான விசா தருவதற்கு அந்நாடு அனுமதி மறுத்துவிட்டது.
 அருணாசலப்பிரதேசம் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று நீண்ட நாள்களாக சீனா உரிமை கொண்டாடி வருவதே இதற்குக் காரணமாகும். சீனாவின் முடிவையடுத்து, இந்திய ராணுவ அதிகாரிகளின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2010-ம் வருடத்திலும் இதே போன்று ஜம்மு-காஷ்மீரில் வடக்கு மண்டலத் தளபதியாக பணிபுரிந்த லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ஜஸ்வாலுக்கு விசா தர சீனா அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய மாணவரைக் கொன்றவனுக்கு கடுமையான தண்டனை : டேவிட் கேமரூன்

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் வெள்ளியன்று அனுஜ் பித்வேயின் பெற்றோர்களை சந்தித்து பேசும் போது இந்த கொடுஞ்செயல் செய்தவனுக்கு கடும் தண்டனை அளிக்க‌ப்பட வேண்டும் என கூறினார். இதுகுறித்து மேலும் கேமரூன் பேசுகையில், அனுஜ் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மான்செஸ்டர் காவல்துறையினர் வழங்குவார்கள் என உறுதியளித்தார்.




மேலும், பித்வேயின் பெற்றோர் நேற்று மான்செஸ்டரின் சால்போர்டு பகுதியில் பித்வே கொல்லப்பட்ட இடத்திற்குச் சென்றனர். பின் அவர்கள் அளித்த பேட்டியில், பித்வேயின் கொலைக்கு இப்பகுதி மக்களை குற்றம் சொல்ல முடியாது. கொலை செய்த நபரைத் தான் குற்றம் சாட்ட வேண்டும் என்றனர். பித்வேயின் உடல் இரண்டாவது பிரேத பரிசோதனை முடிந்து இறுதிச் சடங்குகள் செய்யும் ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்திடம் இருந்து உடலைப் பெற்று அவர்கள் இன்று நாடு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பித்வே படித்து வந்த லங்காஷர் பல்கலைக்கழகம் அவரது பெற்றோருக்கு தேவையான நிதியுதவி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்தில் ராட்சத பலூன் வெடித்து விபத்து : 11 பேர் பலி!

வெலிங்டன்: நியூசிலந்தில் ராட்சத பலூன் வெடித்த விபத்தில் அதில் பயணம் செய்த 11 பேரும் உயிரிழந்தனர். நியூசிலாந்து தலைநகர் வெலிங்டன் அருகே உள்ள கார்டர்டான் நகரம் அருகே இன்று காலை ஏழரை மணி அளவில் இந்த விபத்து நடந்தது. பலூன், பயணத்தை துவக்கிய அடுத்த 10வது நிமிடத்தில் அதிலிருந்து 10 மீட்டர் உயரத்திற்கு தீ ஜூவாலைகள் எழுந்தது. 




உயிரிழந்தவர்கள் க்ரேட்டர்  வெலிங்டன் பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. ராட்சத பலூனில் பறப்பதற்கு ஏற்ற தெளிவான வானிலை இருந்தபோதும், பலூனில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பலூன் தீப் பிடித்து கீழே விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

நைஜீரியாவில் துப்பாக்கிச் சூடு : 20 பேர் பலி!

அபுஜா: கிறிஸ்துவ மக்கள் கூட்டத்தில் மர்ம நபர் திடீரென்று நடத்திய துப்பாக்கிச் சூட்டினால் 20 பேர் பலியானார்கள். இந்நிகழ்ச்சி அப்பகுதியில் பொரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின்  வடகிழக்கு பகுதியில் டவுன் ஹாலில் கிறிஸ்துவ மக்களின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது அங்கு வந்த மர்ம மனிதன் ஒருவன் 'காட் இஸ் கிரேட்' என்று கூறிய படியே, கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினான். இதில் சம்பவ இடத்திலேயே 20 பேர் பலியாயினர், 50க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர், கிறிஸ்துவ மக்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்று  தெரிவித்ததாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் ஈரான் போர் பயிற்சி : மேற்கத்திய நாடுகள் பீதி!

டெஹ்ரான்: ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் ஈரான் கடற்படை பயிற்சியில் ஈடுபடப் போவதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் மேற்கத்திய நாடுகள் அச்சமுற்றிருப்பதாக தெரிகிறது.

பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவுக்கு இடையில் உள்ள ஹோர்முஸ் நீரிணையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கி 10 நாட்கள் ஈரான் கடற்படை போர் பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது மூன்று ஏவுகணைகளை வெற்றிகரமாக பரிசோதித்தது. இந்தப் பயிற்சியும், ஏவுகணை சோதனையும் மேற்கத்திய நாடுகளில் பதட்டத்தை ஏற்படுத்தின. 

இந்நிலையில், ஈரான் செய்தி நிறுவனம் ஒன்று நேற்று முன்தினம் வெளியிட்ட செய்தியில், பிப்ரவரி மாதம் மீண்டும் ஈரான் கடற்படை பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் போர் பயிற்சியில் ஈடுபடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், மேற்கத்திய நாடுகள் மீண்டும் பதட்டத்தில் இருப்பதாக தெரிகிறது.

ஈரான் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது : மேற்கு ஈரான் மீது போர் அச்சுறுத்தல்


ஈரான் கடற்படைஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் போர்ப் பயிற்சியில் ஈடுபடப்போவதாக, அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற்கு சார்ந்த நேட்டோ அணி லிபியாவை ஆக்கிரமித்து அந்த நாட்டின் வழங்களை சூறையாட தனது சர்வாதிகார பொம்மை அரசை நியமித்த பின்னர் ஈரான் நாட்டின் மீது போர் அச்சுறுத்தல்களை விடுத்து வருகிறது.
இந்த சூழலில் இடம்பெறும் இப் பயிற்சி நடவடிக்கை குறிப்பிடத்தக்கது.
பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவுக்கு இடையில் உள்ள ஹோர்முஸ் நீரி ணையில், கடந்த மாத இறுதி தொடக்கம் ,10 நாட்கள் ஈரான் கடற்படை போர்ப் பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது, மூன்று ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
இந்தப் பயிற்சியும், ஏவுகணைச் சோதனையும், மேற்குலகில் பதற்றத்தைக் கிளப்பின. இந்நிலையில், ஈரான் செய்தி நிறுவனம் ஒன்று, நேற்று முன்தினம் வெளியிட்ட செய்தியில், பெப்ரவரி மாதம், மீண்டும் ஈரான் கடற்படை, பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையில், போர்ப் பயிற்சியில் ஈடுபடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் அமரிக்காவும் ஐரோப்பிய நாடுகளுமே அமைதியின்மையையும் போரையும் ஏற்படுத்துவதாக அப்பிராந்திய மக்கள் கருதுவதாக அமரிக்கநிறுவன மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்த்துள்ளது.

Friday, 6 January 2012

புதிய தகவல் - அமெரிக்காவின் டிரோன் உளவு விமானத்தை ஈரான் கைப்பற்றியது எப்படி?.


   

மெரிக்காவின் அதி நவீன ஆளில்லா உளவுபார்க்கும் விமானம் ஒன்றை கடந்த வாரம் தாம் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்தது. ராடர் திரையில் விழாமல் தன்னை உருமறைத்துக் கொண்டு பறக்கத்தக்க இந்த விமானம் தான் இருக்கும் இடத்தை வேறு இடத்தில் இருப்பது போன்ற பொய்யான தோற்றப்பாட்டையும் மேற்கொள்ள வல்லது. 
அதுமட்டுமல்லாது அதி நவீன கண்காணிப்புப் கருவிகளைக் கொண்டுள்ள இவ்விமானம் தரையில் இருந்துவரும் ஆபத்துக்களையும் அறிந்து அதற்கு ஏற்றால் போல தனது பறக்கும் திறனை மாற்றவல்லது. இதனை எவ்வாறு சுட்டு வீழ்த்த முடியும் என்பதே பெரும் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் அதனை ஈரானிய இராணுவத்தினர் பத்திரமாகத் தரையிறக்கியுள்ளனர் என்ற செய்தி தற்போது கசிந்துள்ளது.

இவ்விடையம் ஏற்கனவே அமெரிக்காவுக்குத் தெரிந்திருக்கவேண்டும் ஆனால் அவர்கள் வாயே திறக்கவில்லை. காரணம் ஈரான் தான் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்க அப்படியே இருக்கட்டும் என அமெரிக்க விட்டுவிட்டது. விமானம் சுடப்பட்டால் அது தரையில் வந்து விழும்போது சிறிய அளவிலாவது சேதம் ஏற்படும். ஆனால் சுட்டு வீழ்த்தியதாகச் சொல்லப்படும் விமானத்தை ஈரான் காட்டும்போது அதனைப் பார்த்து உலகமே ஒரு கணம் ஆடிப்போய்விட்டது. காரணம் அதில் எந்தச் சேதமும் இல்லை. (மிகமிகக் குறைந்த ஒரு சேதத்தைத் தவிர) அப்படி என்றால் விமானத்தை எவ்வாறு ஈரான் இராணுவத்தினர் கைப்பற்றினார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது.

ஆனால் அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. மேற்கொண்டு படியுங்கள் இந்த விடயத்தை சம்பவ தினமன்று குறிப்பிட்ட விமானம்(RQ - 170) அப்கானிஸ்தான் வான் பரப்பில் பறப்பது போன்ற தோற்றப்பட்டை கொடுத்துக்கொண்டு பறப்பில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்கா சொல்கிறது அவ்விமானம் சிலவேளை ஈரானின் எல்லைப் பகுதிக்குள் தற்செயலாகச் சென்றிருக்கலாம் என்று. ஆனால் அந்த விமானம் ஈரான் நாட்டிற்குள் சுமார் 200 கிலோ மீட்டர் வரை ஊடுருவிச் சென்று வேவுபார்த்துள்ளது என்பதே உண்மையாகும். குறிப்பிட்ட விமனம் உள்வாங்கும் GPS சமிஞ்சைகளை ஈரான் அவதானித்து அதனை வைத்து அந்த ஆளில்லா விமானத்தை ஏமாற்றியுள்ளது.
புரியவில்லையா? அதாவது இந்த அதி நவீன ஆளில்லா விமானம் செயற்கைக்கோளில் இருந்து வெளியாகும் சில சமிஞ்சைகளை வைத்தே தனது (பாதை) பயணத்தை உறுதிசெய்கிறது. அச் சமிஞ்சைகள் சிலவேளை கிடைக்கவில்லை என்றால் அது தானாகவே ஆட்டோ பைலட்(தானாகப் பறக்கும் திறனுக்கு) மாறும். ஈரான் முதலில் ஒருவகையன ஒலிக்கற்றைகளைப் பாவித்து செயற்கைக்கோளின் சமிஞ்சைகளைத் தடைசெய்துள்ளது. அவ்விமானம் உடனே ஆட்டோ பைலட் சிஸ்டத்துக்கு தன்னை மாற்றி பறப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளது.

இவ்வாறு பறப்பில் இருந்த விமானத்தின் கருவிகளோடு உடனடித் தொடர்பை ஏற்படுத்திய ஈரான் இராணுவத்தினர் விமானத்தில் ஏற்கனவே பதியப்பட்டிருந்த வரைபடங்களை மாற்றியுள்ளனர். உலகவரை படங்கள் சிலவற்றை மாற்றி அதனை அந்த விமானத்தின் மெமரியில் பதித்துள்ளனர். புதிதாகப் பதிக்கப்பட்ட மெமரியில் அந்த விமானம் இறங்கவேண்டிய இராணுவத் தளம் ஈரானின் ஒரு விமான நிலையம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தைப் பொறுத்தவரை ஈரான் நாடு தான்.. தான் தரையிறங்கவேண்டிய கடைசி விமானநிலையம் என அது நினைத்துள்ளது. (அதாவது பாக்கிஸ்தான் இல்லையேல் அக்பானிஸ்தான் என்று அது நினைத்து ஈரானில் தரையிறங்கத் தயரானது). இந்த விமானத்தை அதுவரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சி.ஐ.ஏ உளவு நிறுவனம் அதன் கட்டுப்பாட்டை சில நிமிடங்கள் இழந்தது.

அதனைச் சாதகமாகப் பயன்படுத்திய ஈரான் அந்த ஆளில்லா விமானம் இறங்கவேண்டிய குறியீடுகளை தாம் ஏற்கனவே ஏற்படுத்தியிருந்த தொடர்புகள் மூலம் உட்செலுத்தியுள்ளது. பறக்கும் அவ்விமானத்தின் உயரத்தை அவசரமாக கணக்கிட்ட அவர்கள் எத்தனை ஆயிரம் அடி உயரத்தில் இருந்து அது தரையிறங்கவேண்டும் என அறிவித்தல் சமிஞ்சைகளை விடுக்க அவ்விமானம் தனது சொந்த விமானநிலையத்துக்கு தாம் வந்துவிட்டதாகக் கருதி தரையிறங்கியுள்ளது. இருப்பினும் எல்லாவற்றையும் படு கச்சிதமாகச் செய்த ஈரானின் இராணுவ வல்லுனர்கள் சிறிய பிழை ஒன்றைமட்டும் விட்டுவிட்டனர். விமானத்திற்க்கும் ஓடு தளத்திற்கும் இடையே உள்ள தூரத்தை துல்லியமாக அவர்கள் கணக்கிடவில்லை. அதனால் அமெரிக்க விமானம் தரையிறங்கும்போது மெதுவாக இறங்கவில்லை. சற்றுக் கடினமான முறையில் தரையிறங்கி மிகச்சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளது அவ்வளவுதான்.
ஆனால் இது ஈரானின் பாரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. உலகில் உள்ள பல நாடுகளுக்கு மேல் இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டு நோட்டம் இட்டுள்ளது. இவ்விமானம் ரஷ்ய வான்பரப்பில் கூட பறந்து அங்கும் மண்ணைத்தூவி திரும்பியுள்ள நிலையில் இதனை ஈரான் எவ்வாறு துல்லியமாகக் கண்டு பிடித்து சுட்டு வீழ்த்தாமல் தரையிறக்கியுள்ளது என்பது பெரும் சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. இதனை விடப் பெரியவிடையம் என்னவென்றால் இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டு ஈரான் நாட்டிற்குள் வந்த சில நிமிடங்களில் எல்லாம் ஈரான் இராணுவ வல்லுனர்கள் கடுகதி வேகத்தில் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பது தான் தெரியவில்லையாம். இவ்விமானம் குறித்து ஏற்கனவே ஈரான் பல தகவல்களைத் தெரிந்துவைத்திருக்கிறதா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது.

அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனம் தற்போது ஆழ்ந்த யோசனையில் உள்ளது. இதற்கான பதிலடியை ஈரானுக்கு எவ்வாறு கொடுப்பது என்பது அமெரிக்காவின் அடுத்த சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க கைப்பற்றப்பட்ட விமானத்தில் இருந்து அமெரிக்காவில் உள்ள தேசிய பாதுகாப்பு கம்பியூட்டர்களை அல்லது உளவு நிறுவனத்தின் கம்பியூட்டர்களைத் தொடர்புகொள்ள முடியும் என்பதனால் அனைத்துச் சேனல்களையும் அமெரிக்க பென்டகன் பாதுகாப்பு மையம் தற்போது முடக்கியுள்ளது.

காரைக்கால் கடலில் அரியவகை புள்ளி நண்டு அதிக அளவில் சிக்கியது

காரைக்காலில் : தானே புயலுக்கு பின் கடலுக்கு சென்ற காரைக்கால் மாவட்ட மீனவர்கள் வலையில் அரிய வகை புள்ளி நண்டு அதிக அளவில் கிடைக்கிறது. இதனால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இவ்வகை நண்டுகள் கிலோ ஸீ200க்கு சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர். தானே புயலுக்கு பின் கடலுக்கு சென்ற, காரைக் கால் மாவட்ட மீனவர்கள், கடந்த 2 நாட்களாக கரை திரும்பி வருகின்றனர். இவர்களில் நேற்று காலை திரும்பிய பெரும்பாலான மீனவர்கள் வலையில் அரிய வகை புள்ளி நண்டுகள் அதிக அளவில் கிடைத்திருந்தது. 

சாதாரண நண்டுகள் கிலோ ஸீ100க்கு விற்பனையாகிறது. இந்நிலையில், புள்ளி நண்டுகள் கிலோ ரூ.180 முதல் 220 வரை விற்பனையானது. புள்ளி நண்டு குறித்து மீனவர்கள் கூறுகையில், ஆழ்கடலுக்கு செல்லும் மீனவர்கள் வலையில் இதுபோன்ற புள்ளி நண்டுகள் கிடைக்கும். தற்போது புயலினால் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அதிக அளவில் கிடைத்துள்ளது. இந்த நண்டுகள் சாதரண நண்டுகளை விட அதிக சுவையானது. எனவே இதை மொத்த வியாபாரிகள் வாங்கி சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்வார்கள் என்றனர்.

புதிய முறைப்படி 30 நாட்களுக்குள் பாஸ்போர்ட் பெற வேண்டுமா...

அலைந்து திரிந்து, 6 மாதங்களுக்கு பின்பு பாஸ்போர்ட் வாங்கிய காலமெல்லாம் மலையேறி விட்டது. தற்போது எந்த அலைச்சலுமின்றி, உட்கார்ந்த இடத்திலிருந்தே 30 நாட்களுக்குள் பாஸ்போர்ட் நம் கையில் வந்து சேர்ந்தால் மகிழ்ச்சி தானே! 

முன்பெல்லாம் ஒரு பாஸ்போர்ட்டை விண்ணப்பித்து விட்டு, பல மாதங்கள் காத்திருக்க வேண்டியதாய் இருக்கும். ஆனால் புதியதாக நிறுவப்பட்ட 'பாஸ்போர்ட் சேவக்கேந்திரா' என்ற நிறுவனத்தின் மூலம், ஆன்லைனில் விண்ணப்பித்து 30 நாட்களுக்குள்ளேயே பெற்று விடலாம். 

இதுகுறித்து, ரீஜினல் பாஸ்போர்ட் அதிகாரி கே. ஸ்ரீகர் ரெட்டி கூறுகையில், 'வழக்கமாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் பொழுது, வண்ணப்பதாரரின் ஆவணங்கள் அனைத்தும், காவல்துறை அதிகாரிகளின் சரிபார்த்தலுக்காக அஞ்சல் முறையில் அனுப்பப் படும். அதனால், அதிக நாட்கள் ஆகும். ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய முறையின்படி, அனைத்தும் ஆன்லைன் முறை என்பதால் பாஸ்போர்ட்டினை கையில் பெற அதிகப்பட்சமாகவே 30 நாட்கள் தான் ஆகும்' என்று கூறினார்.  

மேலும் இதுகுறித்த எந்த கேள்வியையும், www.passportindia.gov.in என்ற இணயதளம் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

மெக்சிகோவிற்கு படை எடுத்துள்ள பட்டாம் பூச்சிகள் !

கனடா மற்றும் வடஅமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இலட்சக்கணக்கான பட்டாம் பூச்சிகள் மெக்சிகோவிற்க்கு படையெடுத்து உள்ளன. அமெரிக்காவின் மத்திய மெக்சிகோவில் உள்ள வனப்பகுதியில் சுமார் 13 ஹெக்டர் நிலப்பரப்பு பட்டாம் பூச்சிகளால் சூழ்ந்து காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பட்டாம் பூச்சிகள் 2000 மைல் துரம் வரை இந்த வனப் பகுதிக்கு பறந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

பருவ நிலை சூழல் காரணமாக பட்டாம் பூச்சிகள் வசிப்பதற்கு தேவையான இதமான சூழல் அங்கு நிலவுவதால் பட்டாம் பூச்சிகளின் கூட்டம் அதிகரித்து உள்ளது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கடந்த ஆண்டை விட தற்போது பட்டாம் பூச்சிகளின் வருகை மிகவும் குறைவு எனவும்  ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 

பட்டாம் பூச்சிகளின் இனம் அழிவதற்கு காரணம் சுற்றுப்புறச்சூழல் மாசுப்பாடு தான் எனவும் எனவே சுற்றுப்புற சூழலின் அவசியத்தை அனைவரும் உணர வேண்டும் எனவும் சுற்றுச்சூழல் விஞ்சானிகள் தெரிவித்து உள்ளனர்.

இரத்த அழுத்தத்தை சீரகமே சரி பண்ணிடுமாம்!!

திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும். சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.  அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும். சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும். சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும். சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.   திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும். அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும். சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

இலங்கையில் அதிகம் கொல்லப்படும் திமிங்கிலங்கள்!

ஸ்ரீ லங்கா: இலங்கை கடற்பரப்பில் திமிங்கிலங்கள் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பில் உள்ள திமிங்கிலங்களை கணக்கெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக, தேசிய கடலாய்வு திணைக்கத்தின் தலைவர் ஹிரான் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.கப்பல்களாலேயே அதிக திமிங்கிலங்கள் கொல்லப்படுவதாக அவர் தெரிவித்தார்.

எச்ஐவிக்கு முதல் எதிரி மனிதனின் உடம்பு தான்!

லண்டன் : மனிதர்கள் உள்பட எல்லா உயிரினங்களுக்கும் முக்கியமானது நோய் எதிர்ப்பு சக்தி. உடலை நோய் தாக்காமல் இருக்கவும் தாக்கிய நோயில் இருந்து விடுபடவும் இந்த சக்தியே பிரதானம். மனிதரின் உடலில் பரவும் எச்.ஐ.வி. (ஹியூமன் இம்யுனோ டெபீஷியன்சி வைரஸ்) கிருமி, ஆணிவேரையே அசைப்பதுபோல நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்க ஆரம்பிக்கிறது. உடலில் எதிர்ப்பு ஆற்றல் படிப்படியாக குறைகிறது. இதுவே எச்.ஐ.வி. பாதிப்பு அல்லது எய்ட்ஸ் எனப்படுகிறது. 

ரத்தம் செலுத்துதல், ஸ்டெரிலைஸ் செய்யாத ஊசி பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் பரவும் என்றாலும் பாதுகாப்பற்ற உடலுறவுதான் முக்கிய காரணம். உலகம் முழுவதும் 3.34 கோடிக்கும் அதிகமானவர்கள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் புதிது புதிதாக 27 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். நோய் தீவிரமாகி ஆண்டுக்கு 20 லட்சம் பேர் இறக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். உலக அளவில் அதிக உயிர் பலி வாங்கும் தொற்று நோயாக எய்ட்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 

எய்ட்ஸ் பரவுவதை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பிரசாரம் நடக்கிறது. ஆண்டுதோறும் டிசம்பர் 1ம் தேதி (இன்று) உலக எய்ட்ஸ் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. எய்ட்ஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளும் தீவிரமாக நடக்கின்றன. எச்.ஐ.வி. பாதிப்பு பற்றி இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலை, இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய மருத்துவ ஆய்வு நிறுவனம் இணைந்து சமீபத்தில் ஆய்வு நடத்தின. உடலில் எச்ஐவி கிருமிகள் பரவுவதை நம் உடம்பில் இருக்கும் புரோட்டீன் பொருள் ஒன்றே தடுத்து நிறுத்துவது ஆய்வில் தெரியவந்தது. இதுபற்றி தலைமை ஆராய்ச்சியாளர் மிகேல் வெப் கூறியதாவது:

எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமானால், எச்ஐவியின் குணம் பற்றி முழுதாக தெரிந்துகொள்வது அவசியம். லூக்கோசைட்ஸ் எனப்படும் ரத்த வெள்ளை அணுக்கள்தான் எதிர்ப்பு சக்தி செல்கள். இவற்றில் எச்ஐவி கிருமிகள் பல்கிப் பெருகுவதால் நோய் தீவிரம் அடைகிறது. நம் உடலிலேயே இருக்கும் எஸ்ஏஎம்எச்டி1 எனப்படும் புரோட்டீன், எச்ஐவி கிருமிகளின் எண்ணிக்கை பெருகாமல் தடுப்பதாக அமெரிக்க, பிரான்ஸ் விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்தனர். 

எச்ஐவிக்கு சங்கிலி இணைப்பு போன்ற இணைப்பை தந்து அதை பலப்படுத்தும் டீஆக்சி நியூக்ளியோடைட் பொருளை எஸ்ஏஎம்எச்டி1 புரோட்டீன் தகர்த்து செயலிழக்க செய்வதை தற்போது கண்டுபிடித்துள்ளோம். இதை மருந்தாக பயன்படுத்தினால், எச்ஐவி பரவாமல் தடுத்துவிடலாம். அதுபற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இது முக்கியமான மைல் கல்லாக கருதப்படுகிறது. இவ்வாறு மிகேல் கூறினார்.

ஈராக்கில் ஷியா பிரிவினரை குறிவைத்து தாக்குதல்:


ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே நேற்று (ஜன.5) ஷியா பிரிவினரை குறி வைத்து கார் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ஈராக்கில் முகாமிட்டிருந்த அமெரிக்க ராணுவம் கடந்த டிசம்பர் மாதம் வாபஸ் பெறப்பட்டு அங்கிருந்து வெளியேறியது. அதை தொடர்ந்து ஈராக்கில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் நடைபெற தொடங்கி விட்டன. தலைநகர் பாக்தாத் அருகே நேற்று ஷியா பிரிவினரை குறி வைத்து கார் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
பாக்தாத் அருகேயுள்ள காதிமியா என்ற இடத்தில் ஷியா பிரிவினர் அதிக அளவில் வசிக்கின்றனர்.  அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் நேற்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதில் 27 பேர் உயிர் இழந்தனர். 100 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் பாக்தாத் அருகேயுள்ள அர்பாசீன் என்ற இடத்தில் வெடிகுண்டுகள் நிரப்பிய காரில் வந்த தீவிரவாதி குண்டுகளை வெடிக்க செய்து தற்கொலை தாக்குதல் நடத்தினான்.
அதில், 45 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் கர்பாலா நகரில் உள்ள தங்கள் வழிபாட்டு தலத்துக்கு ஊர்வலமாக சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால், சன்னி பிரிவை சேர்ந்த அல்கொய்தா தீவிரவாதிகள் நடத்தி இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
கார் குண்டு தாக்குதல்கள் குறித்து ஈராக் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் குவாசிம் அல் மவுசவி கூறும்போது, மக்களிடையே பீதியையும், அச்ச உணர்வையும் ஏற்படுத்தவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதற்கிடையே, தாக்குதல்கள் நடந்த இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானத்தில் பிறந்த சீனக் குழந்தை!

ஷாங்காய்: விமானத்தில் பயணம் செய்த சீன பெண்ணுக்கு, விமானத்திலேயே அழகிய குழந்தை பிறந்தது. சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் இருந்து சென்ற விமானத்தில் பெங்யூ என்ற 24  வயது பெண் பயணம் செய்தார். அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அவருக்கு பிரசவ வலி ஏறபட்டது. சீன விமானங்களில் பணிப்பெண்களுக்கு  பிரசவம் பார்க்கும் பயிற்சியும் அளிக்கப்படுவது உண்டு.

எனவே, விமான பணிப்பெண்களே அவருக்கு பிரசவம் பார்த்தனர். அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை 3 கிலோவுடன் ஆரோக்கியமாக இருந்தது. விமானம் தரை இறங்கியதும் தாய்- குழந்தை  இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

24 மணி நேரம் இடைவிடாமல் ஒளிபரப்பு விளம்பர குறுக்கீடு இல்லாமல் 4 ஆக்ஷன் மூவி சேனல்கள்

சென்னை : தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் 24 மணி நேர ஆக்ஷன் மூவி சேனல்களை சன் டி.வி. நெட்வொர்க் நிறுவனம் தொடங்கியுள்ளது. 
பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டி.வி. நெட்வொர்க் நிறுவனம், புதிதாக 4 ஆக்ஷன் மூவி சேனல்களை நேற்று முன் தினம் தொடங்கியுள்ளது. ‘சன் ஆக்ஷன்’ என்ற பெயரில் தமிழிலும், ‘ஜெமினி ஆக்ஷன்’ என்ற பெயரில் தெலுங்கிலும், ‘சூரியன் டி.வி’ என்ற பெயரில் கன்னடத்திலும், ‘சூர்யா ஆக்ஷன்’ என்ற பெயரில் மலையாளத்திலும் துவங்கப்பட்டுள்ள இந்த சேனல்கள் 24 மணி நேர சேனல்கள். விளம்பர இடையூறு இல்லாத இந்த மூவி சேனல்கள், கட்டண சேனல்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், முதல் முறையாக விளம்பரம் இல்லாமல் ஒளிபரப்பு செய்யப்படும் 24 மணி நேர ஆக்ஷன் மூவி சேனல்கள் என்ற பெருமையை இந்த புதிய சேனல்கள் பெறுகின்றன. இந்த புதிய சேனல் களையும் சேர்த்து, சன் டி.வி. நெட்வொர்க் நிறுவனத்தில் உள்ள சேனல்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் 10 தமிழ் சேனல்கள், 8 தெலுங்கு சேனல்கள், 7 கன்னட சேனல்கள், 4 மலையாள சேனல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடத்தி வைத்திருந்த பாகிஸ்தான் வீரர்கள் 15 பேர் சுட்டுக் கொலை

இஸ்லாமாபாத் : தாங்கள் கடத்தி வைத்திருந்த பாகிஸ்தான் படை அதிகாரிகள் 15 பேரை கொன்று விட்டதாக தலிபான் தீவிரவாதிகள் நேற்று அறிவித்தனர். பாகிஸ்தானில் மறைந்திருந்த தீவிரவாதி ஒசாமா பின்லேடனை அமெரிக்க படைகள் கண்டுபிடித்து கொன்றதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்துக்கு நெருக்கடி அதிகரித்தது. தீவிரவாதிகளை ஒழிக்க வேண்டுமென அமெரிக்கா நிர்ப்பந்தம் செய்யத் தொடங்கியது. இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளுடன் அந்நாட்டு உளவு நிறுவனம்(ஐ.எஸ்.ஐ) அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. 

இதை தலிபான் தீவிரவாதிகளில் சிலர் மறுத்தனர். மேலும், அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே, கடந்த மாதம் 22ம் தேதியன்று ஆப்கனிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் படை அதிகாரிகள் 15 பேரை தலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்று மறைவிடத்தில் வைத்திருந்தனர். அவர்களை கொன்று விட்டதாக நேற்று தீவிரவாதிகள் அறிவித்தனர். 

தீவிரவாதிகளின் செய்தி தொடர்பாளர் அசானுல்லா அசான் அமெரிக்க செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறுகையில், ‘நாங்கள் கடத்திய 15 அதிகாரிகளையும் சுட்டுக் கொன்று, உடல்களை வடக்கு வாஜிரிஸ்தானில் போட்டிருக்கிறோம்’ என்றார்.  இது பற்றி, விசாரித்து வருவதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட வீரர்களின் குண்டு துளைத்த உடல்கள்  நிர்வாண நிலையில் வடக்கு வஜிரிஸ்தான் ஸ்பின் தல் பகுதி வயல்வெளியில் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டன.

எகிப்தில் முன்னாள் அதிபருக்கு தூக்கு?

கெய்ரோ : எகிப்தில் சர்வாதிகார ஆட்சி செய்த முபாரக்கிற்கு எதிராக கடந்த ஆண்டில் மக்கள் புரட்சி ஏற்பட்டது. புரட்சியின் போது போராட்டம் செய்தவர்கள் மீது ராணுவத்தை ஏவி விட்டதால் அப்பாவிகள் பலர் பலியாகினர். தொடர்ந்து போராட்டம் வலுப்பெறவே ஆட்சியை விட்டு விலகிய அவர் தலைமறைவானார். பின்னர் கைது செய்யப்பட்ட அவர் தற்போது சிறையில் உள்ளார். 

முபாரக் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு தற்போது நடந்து வருகிறது. போராட்டத்தின் போது முபாராக் நினைத்திருந்தால் மக்கள் இறப்பை தடுத்திருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. எனவே, இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் பலரின் இறப்புக்கு காரணமான முபாரக்கிற்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக தலைமை வழக்கறிஞர் சியுலிமன் தெரிவித்தார்.

ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 70 பேர் பலி

பாக்தாத் : ஈராக்கில் இருந்து அமெரிக்க படை முற்றிலும் வெளியேறிய பிறகு நடந்த தாக்குதல்களில் மிக பயங்கர தாக்குதல் நேற்று நடந்தது. ஒரே நேரத்தில் பல இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 70 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  ஈராக் அதிபர் சதாம் உசேன், அணுஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தார், ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்தார் என்ற குற்றச்சாட்டுகளை கூறி கடந்த 2003ம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் ஈராக்கில் ஊடுருவின. 

அதன்பின், சதாம் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின் அவர் தூக்கிலிடப்பட்டார். எனினும், அமெரிக்க படைகள் அங்கேயே தங்கி, தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டது. இந்நிலையில், அமெரிக்கா தனது படையை கடந்த மாதத்துடன் முற்றிலும் வாபஸ் பெற்றது. அது முதல் ஈராக்கில் அரசுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்தன. இரு பிரிவினரிடையே அதிகார போட்டி நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் பாகுபா நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகினர். இந்த நிலையில், நாசிரியா நகரில் மத யாத்ரீகர்கள் மீது குறி வைத்து தீவிரவாதிகள் நேற்று பயங்கர தாக்குதல் நடத்தினர். அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 44 பேர் உடல் சிதறி பலியாகினர்.

 அடுத்த சில மணி நேரத்தில் தலைநகர் பாக்தாத் உட்பட சில இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் சிக்கி 26 பேர் இறந்தனர். மாநில அரசு இணைய தளத்தில், ‘கர்பாலா புனித நகரை நோக்கி யாத்ரீகர்கள் நடந்து சென்றபோது சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததாக தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க படை வெளியேறிய பிறகு உள்நாட்டு குழப்பம், அரசியல் நிலையற்றதன்மை, தொடர் தீவிரவாத தாக்குதல் என ஈராக் முழுவதும் பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானை தாக்குவது சீனத்தை தாக்குவதற்கு ஒப்பானது: யு.எஸ்.இடம் சீனா கண்டிப்பு

அல் கய்டா தலைவர் ஒசாமா பின் லேடனை கொல்ல பாகிஸ்தானுக்குள் புகுந்த அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோல மற்றுமொருமுறை அமெரிக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்று அந்நாட்டிடம் சீனா கண்டிப்புடன் கூறியுள்ளதென சீனா நாட்டின் செய்தி கூறுகிறது.

கடந்த வாரம் வாஷிங்டனில் யு.எஸ்.-சீனா இராணுவ, பொருளாதார பேச்சுவார்த்தையின் போது சீனா இவ்வாறு தெரிவித்தாக அந்நாட்டில் இருந்து வெளிவரும் நியூஸ் டெய்லி எனும் நாளிதழ் தெரிவிக்கிறது.

பாகிஸ்தானின் இறையாண்மையை யு.எஸ்.மதிக்க வேண்டும் என்றும், அதை மீறி பாகிஸ்தான் மீது நடத்தப்படும் எந்தத் தாக்குதலையும் தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகவே கருதுவோம் என்று நேரடியாக, ஐயத்திற்கிடமின்றி யு.எஸ். அதிகாரிகளிடம் சீனா அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாகவும் அச்செய்தி கூறுகிறது.

சீனத் தலைநகர் பீஜிங்கில் நடந்த சந்திப்பில் பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ராசா கிலானியிடம், சீன பிரதமர் வென் ஜியாபாவோ இத்தகவலை கூறியதாகவும் அச்செய்தி கூறுகிறது.

பாகிஸ்தான், சீன பிரதமர்கள் 45 நிமிடம் பேசியதாக அச்செய்தி கூறுகிறது.

பின் லேடன் இருப்பிடத்தை ஐ.எஸ்.ஐ. அதிகாரி காட்டிக் கொடுத்தார்?

பாகிஸ்தான் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ.-யைச் சேர்ந்த ஒருவர் பின்லேடன் இருப்பிடத்தை பணத்திற்கு ஆசைப்பட்டுக் காட்டிக் கொடுத்தார் என்று ஹில்ஹவுஸ் என்ற பெண்மணி தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.

அல் கய்டா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பின் லேடன் அமெரிக்கக் கப்பற்படையினரான நேவி சீல் படையினரால் கொல்லப்பட்டு அவரது உடலை கடலில் அமிழ்த்தினர் என்ற செய்திகள் வெளியானது.

ஆனால் இந்தப் படுகொலை பாகிஸ்தான் உளவுப்பிரிவ்னருக்குத் தெரியாமல் நடந்தது என்றே தெரிவிக்கப்பட்டது.

தற்போது ஹில்ஹவுஸ் என்ற அந்தப் பெண்மணி 'த ஸ்பை ஹூ பில்டு மீ' என்ற வலைப்பதிவுத் தளத்தில் பாகிஸ்தான் உளவுப்பிரிவைச் சேர்ந்த ஒருவர் 25 மில்லியன் டாலர்கள் தொகைக்கு ஆசைப்பட்டு பின் லேடன் இருப்பிடத்தைக் காட்டி கொடுத்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனக்க்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டதாக அந்த வலைப்பதிவு பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

'பாகிஸ்தானில் இராணுவ புரட்சி ஏற்படாது'

பாகிஸ்தானில் இராணுவ புரட்சி ஏற்படாது என்று அந்நாட்டு இராணுவ தலைமை தளபதி பர்வேஸ் கயானி தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானில் தற்போதைய பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு, இராணுவம் ஆட்சியை கைப்பற்ற சதி திட்டம் தீட்டியதாகவும், இதற்கு பதிலடியாக அவ்வாறு இராணுவம் ஆட்சியை கைப்பற்றினால் அமெரிக்க இராணுவத்தை அனுப்பி அதனை முறியடிக்க வேண்டும் என்று அதிபர் சர்தாரி, அமெரிக்க அரசுக்கு கடிதம் எழுதியதாகவும் செய்தி வெளியானது. 

இது குறித்த தகவல் வெளியானதிலிருந்தே பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கும், இராணுவத்திற்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. 

இந்நிலையில்,பாகிஸ்தானில் இராணுவ புரட்சியோ அல்லது முன்கூட்டியோ தேர்தல் வராது என கயானி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

கிலானி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆட்சியை கவிழ்க்க இராணுவ தலைமை தளபதி பர்வேஷ் கயானியும், இதர உயர் இராணுவ அதிகாரிகளும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. 

தற்போது பதவி வகிக்கும் அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2013) வரை உள்ளது. எனவே இந்த ஆட்சி தனது பதவி காலத்தை முழுமையாக முடிக்க இராணுவ அதிகாரிகள் விரும்புவதாகவும் அத்தகவல் மேலும் தெரிவிக்கிறது.