காபூல், ஜூன்.29: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹோட்டல் ஒன்றில் போலீசாருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே 4 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த துப்பாக்கிச் சண்டையில் 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 2 போலீசார் மற்றும் பொதுமக்களில் 6 பேர் ஆகியோர் இந்த தாக்குதலில் காயமடைந்தனர்.பயங்கரவாதிகள் முற்றுகையிட்ட ஹோட்டலின் கூரை மீது நேட்டோ ஹெலிகாப்டர்கள் ராக்கெட்டுகளை வீசியதையடுத்து புதன்கிழமை அதிகாலை இந்த தாக்குதல் முடிவுக்கு வந்தது.இந்த ஹோட்டலுக்கு ஆப்கன் அதிகாரிகளும், வெளிநாட்டுப் பார்வையாளர்களும் அடிக்கடி வந்து செல்வர் என்று ஆப்கன் உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் செடிக் செடிக்கி தெரிவித்தார்.தற்கொலைப் படையைச் சேர்ந்த 6 பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். 2 பேர் ஹோட்டல் பாதுகாவலர்களால் கொல்லப்பட்டனர். இதர 4 பேர் அவர்களாகவே வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்திருக்கலாம் அல்லது ஆப்கன் படையினரின் விமானத் தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என்று அவர் கூறினார்.இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
Total Pageviews
Blog Archive
-
▼
2011
(142)
-
▼
June
(50)
-
►
Jun 20
(13)
- சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் 39 இந்தியர்கள்
- ஏமனிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவு...
- எல்லை தாண்டும் எகிப்து புரட்சி!
- எகிப்து முன்னாள் அதிபரின் சொத்துக்கள் அரபு நாடுகளு...
- ரசிகர்களின் பிரார்த்தனைகளே என்னைக் காப்பாற்றியன - ...
- ராஜபக்சவுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை!
- கறுப்புப் பணத்தில் பாதி காங்கிரஸ் கட்சிக்கு சொந்தம...
- சுவிஸ்.வங்கியில் இந்தியக் கறுப்புப் பணமே அதிகம்- அ...
- சுவிஸ் வங்கி ரகசிய கணக்கு விவரம் விக்கிலீக்சிடம் ஒ...
- சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டவர் பணம் சேமிப்பு குறைந...
- அருணாச்சலம் தகராறுக்குட்பட்ட பகுதியே: சீனா
- சீனக் கடற்பரப்பில் சுதந்திரமான கடற் பிரயாணத்துக்கு...
- புகுஷிமா அணு உலை: சிக்கல் நீடிக்கிறது
-
►
Jun 21
(8)
- ரஷ்யாவில் பயங்கர விமான விபத்து-44 பேர் பலி
- அமெரிக்கர்கள் போர் செய்து களைத்து போய்விட்டனர்: ரா...
- லிபியாவில் நேட்டோ தாக்குதலில் அப்பாவிகள் பலி
- தோற்றுப் போன நாடுகளின் பட்டியலில் இலங்கை
- அமெரிக்காவில் இந்தியத் தூதருக்கு எதிராக வீட்டு பணி...
- இன்று காலை ஈராக் ஆளுநர் மாளிகை அருகே குண்டுவெடிப்ப...
- பிரணாப் அலுவலகத்தை உளவுப் பார்க்க ரகசிய கேமராக்கள்?
- தானாகவே இதயத்தைக் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடி...
-
►
Jun 23
(8)
- பிரபாகரனின் குடும்பத்தினர் இலங்கை அரசின் பிடியிலா?...
- 'பிரபாகரனின் குடும்பம்'.. தப்பா சொல்லிட்டேன்! - மன...
- ஜூலையில் ஆப்கானில் இருந்து 10 ஆயிரம் அமெரிக்க வீரர...
- ஜப்பானில் கடும் நிலநடுக்கம்
- 2வது முறையாக ஐ.நா. பொதுச் செயலாளராக பான் கி மூன் த...
- அமெரிக்க உளவு அதிகாரிகள் 67 பேருக்கு விசா வழங்கியத...
- பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் தப்ப முட...
- இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி தடையை நீக்குகிறது...
-
►
Jun 28
(10)
- பாகிஸ்தானில் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்: 20 பயங்...
- ராணுவ ரீதியாக இந்தியா பலமான நாடு: பாக். அமைச்சர்
- ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் 450 ராக்கெட் வீசித் ...
- காசாவுக்கு வரும் சர்வதேச கப்பல்களை தடுத்த நிறுத்த ...
- இங்கிலாந்து ராணுவம் உடனே வெளியேற வேண்டும்: பாகிஸ்த...
- லண்டனில் சுற்றித் திரியும் வேற்றுகிரக வாசிகள்
- உலகின் மிகப் பெரிய பணக்காரர்
- பிரான்சில் இ.கோலி பக்டீரியா பரவியதில் பிரிட்டன் வி...
- பிரிட்டிஷ் துருப்புகள் பிடித்த 1000 தலிபான்கள் விட...
- சேனல் 4 க்கு எதிராக புலம்பெயர் சிங்களவர் அமைப்புகள...
-
►
Jun 20
(13)
-
▼
June
(50)
Wednesday, 29 June 2011
Tuesday, 28 June 2011
சேனல் 4 க்கு எதிராக புலம்பெயர் சிங்களவர் அமைப்புகள் வழக்கு
100 மில்லியன் டாலர்கள் நஷ்டஈடு கோரி சேனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக புலம்பெயர் சிங்களவர் அமைப்புகள் வழக்கு தொடர உள்ளன.
நேரில் பார்த்த சாட்சிகள் யாருமின்றி, சேனல்4 தொலைக்காட்சியானது போர்க்குற்றங்கள் தொடர்பான போலிக் காணொளிகளை வெளியிட்டு, இலங்கைக்கு அவமானத்தை ஏற்படுத்தியதாக கூறி இந்த வழக்குத் தொடரப்படவுள்ளது.
ஆஸ்ட்ரேலியா, கனடா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இயங்கும் புலம்பெயர் சிங்களவர் அமைப்புகள் ஒன்றிணைந்து பிரிட்டன் நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தாக்கல் செய்யவுள்ளன.
அதன் பிரதிவாதிகளாக சேனல்4 தொலைக்காட்சி சேவையின் ஜோன் ஸ்னோ மற்றும் காணொளியின் தயாரிப்பாளர் கெல்லம் மக்ரே ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சேனல்4 தொலைக்காட்சி சேவையானது போலியான காணொளியொன்றை ஒளிபரப்பியதாகவும், அவர்களுடைய நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நேரடி சாட்சிகள் யாரும் இல்லையென்றும்,விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போர்க்குற்றங்களை மறைக்கத் துணை புரிந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
புலம்பெயர் சிங்களவர் அமைப்புகள் தரப்பில் ஐந்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர்.
100 மில்லியன் டாலர்கள் நஷ்டஈடு கோரி சேனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக புலம்பெயர் சிங்களவர் அமைப்புகள் வழக்கு தொடர உள்ளன. நேரில் பார்த்த சாட்சிகள் யாருமின்றி, சேனல்4 தொலைக்காட்சியானது போர்க்குற்றங்கள் தொடர்பான போலிக் காணொளிகளை வெளியிட்டு, இலங்கைக்கு அவமானத்தை ஏற்படுத்தியதாக கூறி இந்த வழக்குத் தொடரப்படவுள்ளது.
ஆஸ்ட்ரேலியா, கனடா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இயங்கும் புலம்பெயர் சிங்களவர் அமைப்புகள் ஒன்றிணைந்து பிரிட்டன் நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தாக்கல் செய்யவுள்ளன.
அதன் பிரதிவாதிகளாக சேனல்4 தொலைக்காட்சி சேவையின் ஜோன் ஸ்னோ மற்றும் காணொளியின் தயாரிப்பாளர் கெல்லம் மக்ரே ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சேனல்4 தொலைக்காட்சி சேவையானது போலியான காணொளியொன்றை ஒளிபரப்பியதாகவும், அவர்களுடைய நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நேரடி சாட்சிகள் யாரும் இல்லையென்றும்,விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போர்க்குற்றங்களை மறைக்கத் துணை புரிந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
புலம்பெயர் சிங்களவர் அமைப்புகள் தரப்பில் ஐந்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர்.
நேரில் பார்த்த சாட்சிகள் யாருமின்றி, சேனல்4 தொலைக்காட்சியானது போர்க்குற்றங்கள் தொடர்பான போலிக் காணொளிகளை வெளியிட்டு, இலங்கைக்கு அவமானத்தை ஏற்படுத்தியதாக கூறி இந்த வழக்குத் தொடரப்படவுள்ளது.
ஆஸ்ட்ரேலியா, கனடா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இயங்கும் புலம்பெயர் சிங்களவர் அமைப்புகள் ஒன்றிணைந்து பிரிட்டன் நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தாக்கல் செய்யவுள்ளன.
அதன் பிரதிவாதிகளாக சேனல்4 தொலைக்காட்சி சேவையின் ஜோன் ஸ்னோ மற்றும் காணொளியின் தயாரிப்பாளர் கெல்லம் மக்ரே ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சேனல்4 தொலைக்காட்சி சேவையானது போலியான காணொளியொன்றை ஒளிபரப்பியதாகவும், அவர்களுடைய நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நேரடி சாட்சிகள் யாரும் இல்லையென்றும்,விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போர்க்குற்றங்களை மறைக்கத் துணை புரிந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
புலம்பெயர் சிங்களவர் அமைப்புகள் தரப்பில் ஐந்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர்.
பிரிட்டிஷ் துருப்புகள் பிடித்த 1000 தலிபான்கள் விடுதலை: ஆப்கானிஸ்தானில் கொடூரம்
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். போராட்டக்காரர்களின் தாக்குதலால் ஆப்கானிஸ்தானில் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது.
அங்கு எப்போதும் பதட்ட நிலையின் பிடியிலேயே மக்கள் உள்ளனர். அவர்களது வாழ்க்கை மிகவும் பரிதாபமாக உள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மிக மோசமாக உள்ளது.
உலக நாடுகளில் மோசமாக பெண்கள் நடத்தப்படும் நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது. ஆப்கானிஸ்தானில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மிகவும் வேதனைத்தரக்கூடிய வகையில் சட்ட நிர்வாகம் உள்ளது.
இந்த நீதித்துறை அவலத்தை பயன்படுத்தி கொலை குற்றம் செய்யும் தலிபான் தீவிரவாதிகள் மிக சந்தோஷமாக விடுதலை ஆகி வருகிறார்கள். கடந்த ஆண்டில் மட்டும் பிரிட்டிஷ் துருப்புகள் பிடித்த ஆயிரக்கணக்கான தலிபான் தீவிரவாதிகளை மோசமான நீதி நிர்வாகம் காரணமாக ஆப்கானிஸ்தான் நீதிமன்றங்கள் விடுவித்துள்ளன.
கொலை குற்ற நடவடிக்கைளில் ஈடுபட்ட தலிபான் தீவிரவாதிகளில் 20ல் ஒருவருக்கு மட்டுமே உரிய தண்டனை அளிக்கப்படுகிறது. இதர நபர்கள் நடைபயிற்சி மேற்கொள்வதை போல நீதிமன்றத்தில் பொழுதை போக்கி விட்டு விடுதலை ஆகி வருகிறார்கள்.
இந்த நடவடிக்கை ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நேட்டோ படைகளுக்கு கவலையை அளிப்பதாக உள்ளது. கடந்த ஆண்டு 1175 தலிபான் தீவிரவாதிகளை பிரிட்டன் துருப்புகள் பிடித்து ஆப்கானிஸ்தான் நிர்வாகத்திடம் ஒப்படைத்தது.
இதில் 82 பேர் மட்டுமே குற்றவாளி என ஆப்கானிஸ்தான் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டு இதர தீவிரவாதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
அங்கு எப்போதும் பதட்ட நிலையின் பிடியிலேயே மக்கள் உள்ளனர். அவர்களது வாழ்க்கை மிகவும் பரிதாபமாக உள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மிக மோசமாக உள்ளது.
உலக நாடுகளில் மோசமாக பெண்கள் நடத்தப்படும் நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது. ஆப்கானிஸ்தானில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மிகவும் வேதனைத்தரக்கூடிய வகையில் சட்ட நிர்வாகம் உள்ளது.
இந்த நீதித்துறை அவலத்தை பயன்படுத்தி கொலை குற்றம் செய்யும் தலிபான் தீவிரவாதிகள் மிக சந்தோஷமாக விடுதலை ஆகி வருகிறார்கள். கடந்த ஆண்டில் மட்டும் பிரிட்டிஷ் துருப்புகள் பிடித்த ஆயிரக்கணக்கான தலிபான் தீவிரவாதிகளை மோசமான நீதி நிர்வாகம் காரணமாக ஆப்கானிஸ்தான் நீதிமன்றங்கள் விடுவித்துள்ளன.
கொலை குற்ற நடவடிக்கைளில் ஈடுபட்ட தலிபான் தீவிரவாதிகளில் 20ல் ஒருவருக்கு மட்டுமே உரிய தண்டனை அளிக்கப்படுகிறது. இதர நபர்கள் நடைபயிற்சி மேற்கொள்வதை போல நீதிமன்றத்தில் பொழுதை போக்கி விட்டு விடுதலை ஆகி வருகிறார்கள்.
இந்த நடவடிக்கை ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நேட்டோ படைகளுக்கு கவலையை அளிப்பதாக உள்ளது. கடந்த ஆண்டு 1175 தலிபான் தீவிரவாதிகளை பிரிட்டன் துருப்புகள் பிடித்து ஆப்கானிஸ்தான் நிர்வாகத்திடம் ஒப்படைத்தது.
இதில் 82 பேர் மட்டுமே குற்றவாளி என ஆப்கானிஸ்தான் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டு இதர தீவிரவாதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
பிரான்சில் இ.கோலி பக்டீரியா பரவியதில் பிரிட்டன் விதை நிறுவனத்திற்கு தொடர்பு
இ.கோலி என்ற பயங்கர பக்டீரியா தற்போது ஐரோப்பிய நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது. இந்த நுண் உயிரி மனித உடலுக்கு அபாயத்தை விளைவிப்பதாகவும் உள்ளது.
இந்த இ.கோலி பக்டீரியா முதலில் ஜேர்மனியில் பரவி அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட வெள்ளரிக்காய் மூலம் இ.கோலி பக்டீரியா பரவியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி ஆகியவற்றை சில நாட்களுக்கு தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்த இ.கோலி பக்டீரியா பிரான்சிலும் பரவியது. இந்த பக்டீரியா பரவியதற்கு பிரிட்டனில் உள்ள ஒரு விதை தான் காரணம் என பிரான்ஸ் அதிகாரிகள் கருதுகிறார்கள். இது குறித்து அவர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.
பிரான்சில் போர்டக்ஸ் பகுதியில் 10 பேர் இ.கோலி பக்டீரியா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரிட்டன் ஸ்விச் பகுதியை சார்ந்த தாம்சன் மற்றும் மார்கன் நிறுவனம் விற்ற விதையில் உருவான காய்கறிகளால் இந்த இ.கோலி பக்டீரியா பரவி இருப்பதாக பிரான்ஸ் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
பிரிட்டனின் உணவு தர முகமையான எப்.எஸ்.ஏ இ.கோலி பாதிப்பு பிரிட்டனில் இல்லை என தெரிவித்துள்ளது. அதே போன்று சம்பந்தப்பட்ட விதை நிறுவனமும் இ.கோலி பரவலுக்கு நாங்கள் காரணம் இல்லை என தெரிவித்து உள்ளது.
ஆண்டுதோறும் தாம்சன் நிறுவனம் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பல ஆயிரம் விதை பாக்கெட்டுகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறினார்.
தங்களது தயாரிப்புகள் தரம் உயர்ந்த நிலையிலேயே உள்ளன என தாம்சன் நிறுவன இயக்குனர் பால் ஹான்ஸ்சார்ட் தெரிவித்தார்.
இந்த இ.கோலி பக்டீரியா முதலில் ஜேர்மனியில் பரவி அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட வெள்ளரிக்காய் மூலம் இ.கோலி பக்டீரியா பரவியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி ஆகியவற்றை சில நாட்களுக்கு தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்த இ.கோலி பக்டீரியா பிரான்சிலும் பரவியது. இந்த பக்டீரியா பரவியதற்கு பிரிட்டனில் உள்ள ஒரு விதை தான் காரணம் என பிரான்ஸ் அதிகாரிகள் கருதுகிறார்கள். இது குறித்து அவர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.
பிரான்சில் போர்டக்ஸ் பகுதியில் 10 பேர் இ.கோலி பக்டீரியா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரிட்டன் ஸ்விச் பகுதியை சார்ந்த தாம்சன் மற்றும் மார்கன் நிறுவனம் விற்ற விதையில் உருவான காய்கறிகளால் இந்த இ.கோலி பக்டீரியா பரவி இருப்பதாக பிரான்ஸ் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
பிரிட்டனின் உணவு தர முகமையான எப்.எஸ்.ஏ இ.கோலி பாதிப்பு பிரிட்டனில் இல்லை என தெரிவித்துள்ளது. அதே போன்று சம்பந்தப்பட்ட விதை நிறுவனமும் இ.கோலி பரவலுக்கு நாங்கள் காரணம் இல்லை என தெரிவித்து உள்ளது.
ஆண்டுதோறும் தாம்சன் நிறுவனம் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பல ஆயிரம் விதை பாக்கெட்டுகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறினார்.
தங்களது தயாரிப்புகள் தரம் உயர்ந்த நிலையிலேயே உள்ளன என தாம்சன் நிறுவன இயக்குனர் பால் ஹான்ஸ்சார்ட் தெரிவித்தார்.
உலகின் மிகப் பெரிய பணக்காரர்
அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் தொழிலதிபர் கினா ரினே ஹார்ட்(57) கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் கடன் சுமையுடன் தந்தையின் சுரங்கத்தை பெற்றார்.
தற்போது இந்த பெண் தொழிலதிபர் உலகின் மிகப்பெரும் பணக்காரராக உருவெடுப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு அவரது சொத்து மதிப்பு இரு மடங்கு அதிகரித்து ஆயிரத்து 30 கோடி டொலராக ஆனது.
அதாவது பிரிட்டன் பவுண்ட் மதிப்பில் அவரது சொத்து 630 கோடி பவுண்ட் ஆக அதிகரித்தது. மூலப்பொருள் விலை அதிகரிப்பால் அவரது சொத்து மதிப்பு கடுமையான உச்ச நிலையை எட்டியது.
இந்த பெண் தொழிலதிபர் மெக்சிகன் தொழிலதிபர் கரோலஸ் சிலிம் சொத்து மதிப்பை காட்டிலும் கூடுதல் சொத்து பெற்றவராக ஆகிறார். கரோலஸ் சொத்து 460 கோடி பவுண்ட் ஆக இருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தலைவர் பில் கேட்ஸ் சொத்து 350 கோடி பவுண்ட் ஆக இருக்கிறது.
அவுஸ்திரேலிய பெண் தொழிலதிபரின் மூன்று கரி மற்றும் இரும்பு சுரங்க உற்பத்தி மூலம் அவரது சொத்து மதிப்பு உலகில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கிறது. அவரது நிறுவனங்கள் அனைத்தும் அவரது முதலீட்டிலேயே உள்ளன.
அந்த நிறுவனங்களில் வெளி முதலீடுகள் இல்லை. இதனால் அவரது நிறுவன வருமானத்தின் 100 சதவீதமும் இந்த தொழிலதிபரின் சொத்து கணக்கிலேயே இடம் பெறுகிறது என நிதி குழுக்கள் மதிப்பிட்டு உள்ளன.
உலகின் மிகப்பெரும் பணக்காரராக ஆகும் கினா ரினே ஹார்ட் இரண்டு முறை திருமணம் செய்தவர் ஆவார். அவரது 2வது அமெரிக்க கணவர் பிராங்க் ரினே ஹார்ட் ஆவார். அவர் கடந்த 1990ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.
தற்போது இந்த பெண் தொழிலதிபர் உலகின் மிகப்பெரும் பணக்காரராக உருவெடுப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு அவரது சொத்து மதிப்பு இரு மடங்கு அதிகரித்து ஆயிரத்து 30 கோடி டொலராக ஆனது.
அதாவது பிரிட்டன் பவுண்ட் மதிப்பில் அவரது சொத்து 630 கோடி பவுண்ட் ஆக அதிகரித்தது. மூலப்பொருள் விலை அதிகரிப்பால் அவரது சொத்து மதிப்பு கடுமையான உச்ச நிலையை எட்டியது.
இந்த பெண் தொழிலதிபர் மெக்சிகன் தொழிலதிபர் கரோலஸ் சிலிம் சொத்து மதிப்பை காட்டிலும் கூடுதல் சொத்து பெற்றவராக ஆகிறார். கரோலஸ் சொத்து 460 கோடி பவுண்ட் ஆக இருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தலைவர் பில் கேட்ஸ் சொத்து 350 கோடி பவுண்ட் ஆக இருக்கிறது.
அவுஸ்திரேலிய பெண் தொழிலதிபரின் மூன்று கரி மற்றும் இரும்பு சுரங்க உற்பத்தி மூலம் அவரது சொத்து மதிப்பு உலகில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கிறது. அவரது நிறுவனங்கள் அனைத்தும் அவரது முதலீட்டிலேயே உள்ளன.
அந்த நிறுவனங்களில் வெளி முதலீடுகள் இல்லை. இதனால் அவரது நிறுவன வருமானத்தின் 100 சதவீதமும் இந்த தொழிலதிபரின் சொத்து கணக்கிலேயே இடம் பெறுகிறது என நிதி குழுக்கள் மதிப்பிட்டு உள்ளன.
உலகின் மிகப்பெரும் பணக்காரராக ஆகும் கினா ரினே ஹார்ட் இரண்டு முறை திருமணம் செய்தவர் ஆவார். அவரது 2வது அமெரிக்க கணவர் பிராங்க் ரினே ஹார்ட் ஆவார். அவர் கடந்த 1990ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.
லண்டனில் சுற்றித் திரியும் வேற்றுகிரக வாசிகள்
வேற்றுகிரகத்தில் இருந்து பறந்து வரும் வினோத பொருட்கள் அடிக்கடி ஆச்சரியத்தை அளிப்பதுடன் பெரும் விவாதத்திற்கும் ஆளாகி வருகின்றன.
வேற்றுகிரக வாசிகளுக்கு கமெரா கூச்சம் இல்லை என மக்கள் பரவலாக பேசத் துவங்கி உள்ளனர். ஏனெனில் லண்டன் பி.பி.சி கட்டத்திற்கு மேல் யுஎப்ஓ எனப்படும் அடையாளம் காணப்படாத வினோத பொருள் பறந்தன.
தெளிவான நீல வானத்தில் பறந்த அந்த வினோதப் பொருட்களை பார்த்ததும் வீதியில் நடந்து சென்ற இளைஞர்கள் தங்கள் கையில் இருந்த கைத்தொலைபேசி கமெராக்களில் அதை பதிவு செய்தனர்.
வானில் தோன்றிய அந்த வினோதப் பொருட்கள் சிறு புள்ளிகளாக கடுமையான வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தன. அந்த 3 வினோதப் புள்ளிகளும் முக்கோண வடிவில் விண்ணில் சீறி சென்றன.
இதில் ஒரு புள்ளி மிக நீளமானதாக இருந்தது. அதே நேரத்தில மிகுந்த ஒளிரும் தன்மையுடன் காணப்பட்டது. அந்த நீள நிற புள்ளி வட்ட வடிவில் மற்ற பொருளை விட மெதுவான வேகத்தில் சென்றது.

இந்த வினோத பொருள் மேற்கு லண்டன் வான் பகுதியில் பறந்தது குறித்து ஆச்சரிமான கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றன. இந்த யுஎப்ஓ என்ன என்பதை விவரம் தெரிந்தவர்கள் விளக்க வேண்டும் என இளைஞர்கள் தங்கள் எதிரே வந்தவர்களிடம் கேள்விகளை கேட்ட வண்ணம் இருந்தனர். இந்த யுஎப்ஓ குறித்து இணையதள கருத்து பரிமாற்றத்திலும் கடுமையான விவாதம் காணப்பட்டது.
வேற்றுகிரக வாசிகளுக்கு கமெரா கூச்சம் இல்லை என மக்கள் பரவலாக பேசத் துவங்கி உள்ளனர். ஏனெனில் லண்டன் பி.பி.சி கட்டத்திற்கு மேல் யுஎப்ஓ எனப்படும் அடையாளம் காணப்படாத வினோத பொருள் பறந்தன.
தெளிவான நீல வானத்தில் பறந்த அந்த வினோதப் பொருட்களை பார்த்ததும் வீதியில் நடந்து சென்ற இளைஞர்கள் தங்கள் கையில் இருந்த கைத்தொலைபேசி கமெராக்களில் அதை பதிவு செய்தனர்.
இதில் ஒரு புள்ளி மிக நீளமானதாக இருந்தது. அதே நேரத்தில மிகுந்த ஒளிரும் தன்மையுடன் காணப்பட்டது. அந்த நீள நிற புள்ளி வட்ட வடிவில் மற்ற பொருளை விட மெதுவான வேகத்தில் சென்றது.
இங்கிலாந்து ராணுவம் உடனே வெளியேற வேண்டும்: பாகிஸ்தான் திடீர் உத்தரவு
பாகிஸ்தான் துணை ராணுவப் படையினருக்கு போர் பயிற்சி அளிப்பதற்காக இங்கிலாந்து ராணுவ ஆலோசகர்கள் 18 பேர் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் தங்கியிருந்தனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இவர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். 2013ம் ஆண்டு வரை பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டிருந்தது. பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பின் பாகிஸ்தான் அரசின் நடவடிக்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு எதிர்ப்பை தெரிவித்து வந்த பாகிஸ்தான் அரசு தற்போது இங்கிலாந்து படையினரிடமும் தனது எதிர்ப்பை தெரிவிக்கிறது.
எங்கள் படையினருக்கு நாங்களே பயிற்சி அளித்துக் கொள்கிறோம். அதனால் பாகிஸ்தானை விட்டு இங்கிலாந்து ராணுவ பயிற்சியாளர்கள் வெளியேற வேண்டும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இவர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். 2013ம் ஆண்டு வரை பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டிருந்தது. பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பின் பாகிஸ்தான் அரசின் நடவடிக்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு எதிர்ப்பை தெரிவித்து வந்த பாகிஸ்தான் அரசு தற்போது இங்கிலாந்து படையினரிடமும் தனது எதிர்ப்பை தெரிவிக்கிறது.
எங்கள் படையினருக்கு நாங்களே பயிற்சி அளித்துக் கொள்கிறோம். அதனால் பாகிஸ்தானை விட்டு இங்கிலாந்து ராணுவ பயிற்சியாளர்கள் வெளியேற வேண்டும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
காசாவுக்கு வரும் சர்வதேச கப்பல்களை தடுத்த நிறுத்த இஸ்ரேல் முடிவு
பாலஸ்தீனம் காசா திட்டுப் பகுதியில் மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு அடிப்படை உதவி பொருட்களை வழங்குவதற்காக 10 கப்பல்களில் உணவு பொருட்கள் சென்றுள்ளன.
இந்த சர்வதேச கப்பல்களை நிறுத்துவதற்கு இஸ்ரேல் உத்தரவிட்டு உள்ளது. இருப்பினும் நிவாரண கப்பல்களுடன் கடுமையாக மோத வேண்டாம் என கடற்படைக்கு இஸ்ரேல் உத்தரவிட்டு உள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் அலுவலகம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காசாவை நெருங்கும் கப்பல்களை தடுப்பதில் இஸ்ரேல் அரசு உறுதியாக உள்ளது.
இருப்பினும் கப்பல்படை நிவாரணக் கப்பல்களுடன் கடுமையாக மோதாது என குறிப்பிடப்பட்டு இருந்தது. சர்வதேச நிவாரணக் கப்பல்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையின் போது இஸ்ரேல் கடற்படையினருடன் பத்திரிக்கையாளர்களும் அனுப்பப்படுவார்கள்.
ஏனெனில் அங்கு நடக்கும் நிகழ்வுகளை வெளி உலகிற்கு வெளிப்படையாக தெரிய வேண்டும் என பிரதமர் தெரிவித்து உள்ளார். இதன் படி 30 – 50 பத்திரிக்கையாளர்கள் சர்வதேச கப்பல்கள் நிறுத்தப்படும் இடத்திற்கு செல்கின்றனர்.
இஸ்ரேலிய ராணுவ பெண் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,"சர்வதேச நிவாரணக் கப்பல்களில் தீவிரவாத சக்திகள் இருப்பதாக எங்கள் ராணுவ உளவுத் துறைக்கு தகவல் கிடைத்து உள்ளது. அந்த தீவிரவாத சக்திகள் இஸ்ரேலிய வீரர்களை கொல்லத் துடிக்கின்றனர்" என்றார்.
சர்வதேச கப்பல் ஒன்றில் இஸ்ரேலிய வீரர்களை தாக்குவதற்கு பயங்கர வெடி ரசாயன பொருட்கள் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது என்றார்.
இந்த சர்வதேச கப்பல்களை நிறுத்துவதற்கு இஸ்ரேல் உத்தரவிட்டு உள்ளது. இருப்பினும் நிவாரண கப்பல்களுடன் கடுமையாக மோத வேண்டாம் என கடற்படைக்கு இஸ்ரேல் உத்தரவிட்டு உள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் அலுவலகம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காசாவை நெருங்கும் கப்பல்களை தடுப்பதில் இஸ்ரேல் அரசு உறுதியாக உள்ளது.
இருப்பினும் கப்பல்படை நிவாரணக் கப்பல்களுடன் கடுமையாக மோதாது என குறிப்பிடப்பட்டு இருந்தது. சர்வதேச நிவாரணக் கப்பல்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையின் போது இஸ்ரேல் கடற்படையினருடன் பத்திரிக்கையாளர்களும் அனுப்பப்படுவார்கள்.
ஏனெனில் அங்கு நடக்கும் நிகழ்வுகளை வெளி உலகிற்கு வெளிப்படையாக தெரிய வேண்டும் என பிரதமர் தெரிவித்து உள்ளார். இதன் படி 30 – 50 பத்திரிக்கையாளர்கள் சர்வதேச கப்பல்கள் நிறுத்தப்படும் இடத்திற்கு செல்கின்றனர்.
இஸ்ரேலிய ராணுவ பெண் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,"சர்வதேச நிவாரணக் கப்பல்களில் தீவிரவாத சக்திகள் இருப்பதாக எங்கள் ராணுவ உளவுத் துறைக்கு தகவல் கிடைத்து உள்ளது. அந்த தீவிரவாத சக்திகள் இஸ்ரேலிய வீரர்களை கொல்லத் துடிக்கின்றனர்" என்றார்.
சர்வதேச கப்பல் ஒன்றில் இஸ்ரேலிய வீரர்களை தாக்குவதற்கு பயங்கர வெடி ரசாயன பொருட்கள் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது என்றார்.
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் 450 ராக்கெட் வீசித் தாக்குதல்: கர்சாய் குற்றச்சாட்டு
கடந்த மூன்று வாரத்தில் மட்டும் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் 450 ராக்கெட் தாக்குதலை நடத்தி உள்ளது என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் குற்றம் சாட்டினார்.
அருகாமை பகுதியில் உள்ள பாகிஸ்தானின் பயங்கர தாக்குதலால் 12 சிறுவர்கள் உள்பட 36 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள குனார் மற்றும் நான்கரார் மாகாணங்களில் இருந்து நேட்டோ படைகள் வாபஸ் ஆகி உள்ளன. அந்த இடங்களை நோக்கி பாகிஸ்தான் ராக்கெட் தாக்குதலை நடத்துவதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
ஆப்கானிஸ்தான் எல்லை அதிகாரிகள் கூறுகையில்,"பாகிஸ்தானிய தலிபான்கள் மேற்குறிப்பிட்ட மாகாணங்களில் ஊடுருவி உள்ளனர்" என்றும் தெரிவித்தனர்.
சனிக்கிழமை ஈரான் தலைநகர் டெகரானில் பிராந்திய தீவிரவாத எதிர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் ராக்கெட் தாக்குதல் குறித்து அந்த நாட்டின் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரியிடம் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி கர்சாய் கேள்வி எழுப்பினார்.
ஆப்கானிஸ்தான் மீது நடத்தும் தாக்குதலை உடனடியாக பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்றும் கர்சாய் வலியுறுத்தினார். பாகிஸ்தான் தாக்குதல் குறித்து ஆப்கன் நேட்டோ கமாண்டரிடம் கர்சாய் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
பாகிஸ்தான் தாக்குதலால் ஆப்கன் எல்லை பகுதியில் வசித்த 2 ஆயிரம் குடும்பங்கள் தங்கள் குடியிருப்பை விட்டு தப்பி ஓடி உள்ளனர் என ஆப்கன் அதிகாரிகள் கூறினர்.
அருகாமை பகுதியில் உள்ள பாகிஸ்தானின் பயங்கர தாக்குதலால் 12 சிறுவர்கள் உள்பட 36 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள குனார் மற்றும் நான்கரார் மாகாணங்களில் இருந்து நேட்டோ படைகள் வாபஸ் ஆகி உள்ளன. அந்த இடங்களை நோக்கி பாகிஸ்தான் ராக்கெட் தாக்குதலை நடத்துவதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
ஆப்கானிஸ்தான் எல்லை அதிகாரிகள் கூறுகையில்,"பாகிஸ்தானிய தலிபான்கள் மேற்குறிப்பிட்ட மாகாணங்களில் ஊடுருவி உள்ளனர்" என்றும் தெரிவித்தனர்.
சனிக்கிழமை ஈரான் தலைநகர் டெகரானில் பிராந்திய தீவிரவாத எதிர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் ராக்கெட் தாக்குதல் குறித்து அந்த நாட்டின் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரியிடம் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி கர்சாய் கேள்வி எழுப்பினார்.
ஆப்கானிஸ்தான் மீது நடத்தும் தாக்குதலை உடனடியாக பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்றும் கர்சாய் வலியுறுத்தினார். பாகிஸ்தான் தாக்குதல் குறித்து ஆப்கன் நேட்டோ கமாண்டரிடம் கர்சாய் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
பாகிஸ்தான் தாக்குதலால் ஆப்கன் எல்லை பகுதியில் வசித்த 2 ஆயிரம் குடும்பங்கள் தங்கள் குடியிருப்பை விட்டு தப்பி ஓடி உள்ளனர் என ஆப்கன் அதிகாரிகள் கூறினர்.
ராணுவ ரீதியாக இந்தியா பலமான நாடு: பாக். அமைச்சர்
இஸ்லாமாபாத், ஜூன் 28- ராணுவ ரீதியாக எங்களை விட இந்தியா பலம் வாய்ந்த நாடு என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் செளத்ரி அகமத் முக்தார் கூறியுள்ளார்.பிபிசி உருது பிரிவு சேவைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது:இந்தியாவின் பொருளாதாரம் பாகிஸ்தானை விட 6 முதல் 7 மடங்கு பெரியது. மேலும், வர்த்தக பரிமாற்ற அளவும் எங்களை விட 5 முதல் 6 மடங்கு பெரியதாகும்.ராணுவ ரீதியாக பாகிஸ்தான், இந்தியாவுக்கு சமமான நாடு இல்லை. இந்தியா தற்போது பல அதிநவீன போர் கருவிகளை கொண்டுள்ளது. இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் தொடர்ச்சியாக 20 அல்லது 22 நாட்களுக்கு தான் பாகிஸ்தானால் தாக்கு பிடிக்க முடியும். ஆனால், இந்தியாவால் 45 நாட்களுக்கு தொடர்ச்சியாக போரை நடத்த இயலும். பாகிஸ்தானால் அவ்வளவு நாட்கள் தொடர்ந்து போர் புரிய முடியாது. இவ்வாறு பாக். அமைச்சர் செளத்ரி தெரிவித்தார்.
பாகிஸ்தானில் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்: 20 பயங்கரவாதிகள் பலி
இஸ்லாமாபாத், ஜூன்.28: வடமேற்கு பாகிஸ்தானில் தெற்கு வாஜிரிஸ்தான் பழங்குடியினர் பகுதியில் அமெரிக்க நடத்திய 2 ஏவுகணைத் தாக்குதலில் 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.தெற்கு வாஜிரிஸ்தானின் ஷாவல் பகுதியில் ஒரு வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பல மணி நேரம் கழித்து மன்டோய் பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு ஏவுகணைத் தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் தலைவர் ஹகிமுல்லா மெஹ்சூதுடன் தொடர்புடைய பயங்கரவாத கமாண்டர் ஆதம் கானின் மறைவிடத்தில் 4 ஏவுகணைகள் வீசப்பட்டன. தாக்குதல் நடந்தபோது அங்கு மெஹ்சூத் இருந்தாரா என்பது உடனடியாக தெரியவில்லை.
Sunday, 26 June 2011
சிறீலங்காவிற்கு சீனா மேலும் நிதி உதவி – மேலும் வலுப்படும் சிறீலங்கா சீன உறவு
சிறீலங்கா அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக பாரிய நிதியுதவிகளை வழங்கி இலங்கைத்தீவை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சீன அரசாங்கம், மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தமது நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றிற்கு இந்த நிதி வழங்கப்பட இருப்பதாக, சிறீலங்கா அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.
சீன அபிவிருத்திக் கூட்டுறவு வைப்பகம் (China Development Bank Corporation) ஊடாக இந்த நிதி வழங்கலை சீனா அரசாங்கம் மேற்கொள்ளுகின்றது. வீதி அமைத்தல், பாலம் கட்டுதல், தண்ணீர் வழங்கல் போன்ற பல திட்டங்களுக்கு இந்த நிதி வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்கா அரச அதிபர் ராஜபக்ச முன்வைத்துள்ள இதற்கான திட்டத்தை, சிறீலங்காவின் அமைச்சரவை அங்கீகரித்திருப்பதாக கொழும்பின் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஆனால் மகிந்த சொல்வதை அப்படியே செய்யும் அளவிற்கே அமைச்சர்களுக்கான அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, அமைச்சர்களைப் பொம்மைகள் என வர்ணித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
சிறீலங்கா அரசாங்கத்திற்கு நிதியுதவி செய்யும் நாடுகளில் சீனா முன்னணியில் இருப்பதுடன், உலக வைப்பகம், ஆசிய அபிவிருத்தி வைப்பகம் போன்ற முன்னணி நிதி உதவி வழங்கும் நிறுவனங்களைவிட அதிகளவு நிதியுதவியை சிறீலங்கா அரசாங்கத்திற்குச் செய்து வருகின்றது.
சீன அரசாங்கத்தின் இந்த நிதியுதவி இந்திய அரசாங்கத்திற்கு பாரிய சங்கத்தைக் கொடுப்பதுடன், இலங்கைத்தீவில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க நினைக்கும் இந்திய அரசாங்கத்திற்கு இது கசப்பான செய்தியாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இருந்தாலும் இந்த விடயத்தில் சீனாவுடன் நேரடியாக மோதும் நிலைக்கு இந்தியா செல்லாது எனவும், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலுள்ள பல பில்லியன் வர்த்தக உறவே இதற்குக் காரணம் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தலிபான்களுடன் பேச்சுவார்த்தை - அமெரிக்காவும் உறுதி செய்தது
ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்குக் கொண்டுவர தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருப்பதாக அமெரிக்கா முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. தலிபான்களுடன் பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்ய விரும்பும் அமெரிக்கா, அல்-கொய்தா இயக்கத்தை முழுதும் அழிக்க நினைக்கிறது. புதிதாக அல்-கொய்தாவின் தலைவராகப் பதவி ஏற்றுள்ள அய்மன் அல்-ஜவாஹிரியை கொல்வோம் என்றும் சபதம் செய்துள்ளது அமெரிக்கா.
கடந்த மே மாதம் 1 ஆம் தேதி, அல்-கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா-பின்-லேடன் மீது அதிரடித் தாக்குதல் நடத்தி அவரை சுட்டுக்கொன்றது அமெரிக்கா. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேடி வந்த ஒசாமாவை, அமெரிக்கா எவ்வாறு திடீரென்று சுட்டுக்கொன்றது என்று அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களே ஒசாமாவின் இருப்பிடத்தை அமெரிக்காவுக்கு காட்டிக்கொடுத்தனர் என்றும் செய்திகள் உலா வந்தன. அவ்வாறு ஒசாமா இருக்கும் இடத்தை தலிபான்கள் அமெரிக்காவுக்குத் தெரிவித்தால், போர் நிறுத்தம் செய்ய அமெரிக்கா சம்மதம் தெரிவித்து இருந்தது என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஆப்கன் அதிபர் ஹமிது கர்சாய், தன்னுடைய அரசும், அமெரிக்காவும் தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறி இருந்தார். தற்பொழுது, அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலாளர் ராபர்ட் கேட்ஸ், ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்குக் கொண்டுவர, அமெரிக்கா தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இருதரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை முன்னரே தொடங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடன் பனிப்போர் நடந்த காலத்தில், ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட தலிபான்களுக்கு ஆயுத உதவியும், பண உதவியும் செய்து தலிபான்களை இவ்வளவு தூரம் வளர்த்து விட்டது அமெரிக்கா தான். ஆப்கானிஸ்தானில் இருந்து ரஷ்யா வெளியேறிய பின்னர் தலிபான்களுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு எழுந்து, அது சண்டையில் போய் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே மாதம் 1 ஆம் தேதி, அல்-கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா-பின்-லேடன் மீது அதிரடித் தாக்குதல் நடத்தி அவரை சுட்டுக்கொன்றது அமெரிக்கா. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேடி வந்த ஒசாமாவை, அமெரிக்கா எவ்வாறு திடீரென்று சுட்டுக்கொன்றது என்று அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களே ஒசாமாவின் இருப்பிடத்தை அமெரிக்காவுக்கு காட்டிக்கொடுத்தனர் என்றும் செய்திகள் உலா வந்தன. அவ்வாறு ஒசாமா இருக்கும் இடத்தை தலிபான்கள் அமெரிக்காவுக்குத் தெரிவித்தால், போர் நிறுத்தம் செய்ய அமெரிக்கா சம்மதம் தெரிவித்து இருந்தது என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஆப்கன் அதிபர் ஹமிது கர்சாய், தன்னுடைய அரசும், அமெரிக்காவும் தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறி இருந்தார். தற்பொழுது, அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலாளர் ராபர்ட் கேட்ஸ், ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்குக் கொண்டுவர, அமெரிக்கா தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இருதரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை முன்னரே தொடங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடன் பனிப்போர் நடந்த காலத்தில், ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட தலிபான்களுக்கு ஆயுத உதவியும், பண உதவியும் செய்து தலிபான்களை இவ்வளவு தூரம் வளர்த்து விட்டது அமெரிக்கா தான். ஆப்கானிஸ்தானில் இருந்து ரஷ்யா வெளியேறிய பின்னர் தலிபான்களுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு எழுந்து, அது சண்டையில் போய் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
ட்ரிபோலியில் இருந்து வெளியேற லிபிய அதிபர் கடாபி முடிவு
தொடர்ந்து நேட்டோப் படைகள் கடாபியின் மாளிகைகளை குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருவதால், தலைநகர் ட்ரிபோலியில் இருந்து வெளியேற லிபிய அதிபர் கடாபி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், அவருக்கு லிபியாவை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என்று கூறப்படுகிறது.
லிபியாவில் கிளர்சியாளர்களுக்கும், லிபிய அரசுப் படைகளுக்கும் இடையில் தொடர்ந்து பல மாதங்களுக்கு சண்டை நடந்து வருகின்றது. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நேட்டோப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக நேட்டோ விமானப்படைகள் லிபிய அதிபர் கடாபியின் மாளிகைகளை குறிவைத்து தாக்கி வருகின்றன. சில வாரங்களுக்கு முன்னர் நேட்டோப் படைகள் லிபிய அதிபர் கடாபியின் மாளிகை ஒன்றை குறிவைத்து தாக்கியதில், அதிபர் கடாபியின் மகனும், சில பேரக்குழந்தைகளும் கொல்லப்பட்டார்கள்.
தொடர்ந்து தனது மாளிகைகள் நேட்டோப்படைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால், தலைநகர் ட்ரிபோலி தனக்கு பாதுகாப்பு இல்லாத இடம் என்று தற்பொழுது கடாபி கருதுவதாகவும், எனவே தலைநகர் ட்ரிபோலியை விட்டு வெளியேறி வேறு இடத்தில் அவர் தங்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும், அவருக்கு லிபியாவை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என்று கூறப்படுகிறது. கிளர்ச்சியாளர்கள் தரப்பிலும், அதிபர் பதவில் இருந்து விலகினால், கடாபி லிபியாவில் தொடர்ந்து தங்கி இருக்க அனுமதிப்படுவார் என்று கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
லிபியாவில் கிளர்சியாளர்களுக்கும், லிபிய அரசுப் படைகளுக்கும் இடையில் தொடர்ந்து பல மாதங்களுக்கு சண்டை நடந்து வருகின்றது. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நேட்டோப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக நேட்டோ விமானப்படைகள் லிபிய அதிபர் கடாபியின் மாளிகைகளை குறிவைத்து தாக்கி வருகின்றன. சில வாரங்களுக்கு முன்னர் நேட்டோப் படைகள் லிபிய அதிபர் கடாபியின் மாளிகை ஒன்றை குறிவைத்து தாக்கியதில், அதிபர் கடாபியின் மகனும், சில பேரக்குழந்தைகளும் கொல்லப்பட்டார்கள்.
தொடர்ந்து தனது மாளிகைகள் நேட்டோப்படைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால், தலைநகர் ட்ரிபோலி தனக்கு பாதுகாப்பு இல்லாத இடம் என்று தற்பொழுது கடாபி கருதுவதாகவும், எனவே தலைநகர் ட்ரிபோலியை விட்டு வெளியேறி வேறு இடத்தில் அவர் தங்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும், அவருக்கு லிபியாவை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என்று கூறப்படுகிறது. கிளர்ச்சியாளர்கள் தரப்பிலும், அதிபர் பதவில் இருந்து விலகினால், கடாபி லிபியாவில் தொடர்ந்து தங்கி இருக்க அனுமதிப்படுவார் என்று கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Saturday, 25 June 2011
மீனவர்களின் வழிகாட்டியாகும் ஜி.பி.எஸ். கருவி
நாகர்கோவில், ஜூன் 24: ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு துணையாக ஜிபிஎஸ் எனப்படும் உலக இடநிர்ணயிப்புக் கருவி விளங்குகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குப் பயன்படுத்தப்படும் படகுகளில் இத்தகைய கருவிகள் இருந்தாலும் அவற்றை முழுமையாகப் பயன்படுத்துவது குறித்து பெரும்பாலான மீனவர்களுக்குத் தெரியவில்லை. அக்கருவிகளைக் கையாள்வது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் சரியான திசையில் சென்று மீன்பிடித்துவிட்டு கரைக்குத் திரும்புவது என்பது பெரும் சவாலான விஷயமாகும். சூரியன், நிலா, நட்சத்திரம், காற்றின் திசை, கடலின் நீரோட்டம் இவற்றைக் கொண்டு கடலில் திசையைக் கண்டுபிடித்து மீனவர்கள் கரைக்கு வந்து சேர்கிறார்கள்.
இவ்வாறு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் திசைமாறிச் செல்வதும், இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படுவதும் தொடர்கிறது. சர்வதேச கடல் எல்லையைத் தாண்டும் மீனவர்கள் அண்டை நாட்டு கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுகிறார்கள். பல கடல்மைல் தொலைவுக்குப் படகில் சென்று வலைகளை வீசி போதுமான அளவுக்கு மீன்கள் கிடைக்காமல் கரைக்குத் திரும்பும் நிலையும் ஏற்படுகிறது.
இத்தகைய பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மீனவர்களுக்கு வழிகாட்டும் வகையில் வந்துள்ள கருவிதான் உலக இடநிர்ணயிப்புக் கருவி எனப்படும் ஜிபிஎஸ். செயற்கைக்கோள் உதவியுடன் செயல்படும் இக்கருவி பொருத்தப்பட்ட மீன்பிடிப் படகு எந்த இடத்தில் உள்ளது என்பதை அறியலாம்.
இதை உலகின் எந்த இடத்திலிருந்தும் இயக்க முடியும். கரைக்குச் செல்லும் வழி எது?, கடலுக்குள் எந்த இடத்தில் பாறைகள் உள்ளன, கடலில் அபாயகரமான பகுதிகள், மீன்பிடித் தளங்கள், மீன்கள் கிடைக்கும் இடங்கள் குறித்த பல்வேறு விஷயங்களையும் இதன் மூலம் அறிய முடியும். இரவு நேரத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்லும் விசைப்படகுகளும், நாட்டுப்படகுகளும் திக்குத் தெரியாத கடலில் மீன்பிடித்துவிட்டு கரைக்குத் திரும்ப இக்கருவி வழி சொல்கிறது. இந்த கருவியின் விலை, தொழில்நுட்பத்தைப் பொறுத்து ரூ.10 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை இருக்கும்.
சர்வதேச கடல் எல்லை வந்தால் மீனவர்களை எச்சரிக்கை செய்யும் வசதியும் இதில் உள்ளது. இக்கருவியின் பயன்பாடு குறித்து மீனவர்களுக்கு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. மீன்பிடித் தளங்களுக்குச் செல்வது, அங்கிருந்து கரை திரும்புவது உள்ளிட்ட ஒருசில அம்சங்களை மட்டுமே மீனவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
எனவே, இக்கருவியின் பயன்பாட்டை பரவலாக்கும் நோக்குடன் ஜிபிஎஸ் இயக்குவதற்கான பயிற்சியை நாகர்கோவிலில் அமைந்துள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கிராம வளமையமும், ஹைதராபாத் தேசிய மீன்வளர்ச்சி வாரியமும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வழங்கத் தொடங்கியிருக்கின்றன என்று கிராமவள மைய விஞ்ஞானி முகமது பிலால் கூறினார்.
இதுவரை கோவளம், கீழமணக்குடி, கடியப்பட்டினம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தலா 25 மீனவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் பயன்பாடு, அது எவ்வாறு செயல்படுகிறது, இடத்தை நிர்ணயித்துக் கொள்வது, கடலடி ஆபத்து நிறைந்த பகுதிகளை அடையாளமிடுவது, ஓரிடத்திருந்து மற்றொரு மீன்பிடி இடத்துக்குச் சென்று பத்திரமாகத் திரும்புவது குறித்து பயிற்சியில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மீனவர்களை கடலுக்கு படகுகளில் அழைத்துச் சென்றும் செய்முறை விளக்கமும் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மீனவர்களுக்கு இத்தகைய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஜிபிஎஸ் கருவி முழுக்க முழுக்க ஆங்கில மொழியின் அடிப்படையில் செயல்படக்கூடியது. இக் கருவிகளில் தமிழையும் புகுத்தி அவற்றை சாதாரண மீனவர்களும் பயன்படுத்தும்படி செய்ய வேண்டும். அதே நேரத்தில் பாரம்பரிய மீன்பிடிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்கிறார் நெய்தல் மக்கள் இயக்க பொதுச்செயலர் சி. பெர்லின்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குப் பயன்படுத்தப்படும் படகுகளில் இத்தகைய கருவிகள் இருந்தாலும் அவற்றை முழுமையாகப் பயன்படுத்துவது குறித்து பெரும்பாலான மீனவர்களுக்குத் தெரியவில்லை. அக்கருவிகளைக் கையாள்வது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் சரியான திசையில் சென்று மீன்பிடித்துவிட்டு கரைக்குத் திரும்புவது என்பது பெரும் சவாலான விஷயமாகும். சூரியன், நிலா, நட்சத்திரம், காற்றின் திசை, கடலின் நீரோட்டம் இவற்றைக் கொண்டு கடலில் திசையைக் கண்டுபிடித்து மீனவர்கள் கரைக்கு வந்து சேர்கிறார்கள்.
இவ்வாறு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் திசைமாறிச் செல்வதும், இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படுவதும் தொடர்கிறது. சர்வதேச கடல் எல்லையைத் தாண்டும் மீனவர்கள் அண்டை நாட்டு கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுகிறார்கள். பல கடல்மைல் தொலைவுக்குப் படகில் சென்று வலைகளை வீசி போதுமான அளவுக்கு மீன்கள் கிடைக்காமல் கரைக்குத் திரும்பும் நிலையும் ஏற்படுகிறது.
இத்தகைய பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மீனவர்களுக்கு வழிகாட்டும் வகையில் வந்துள்ள கருவிதான் உலக இடநிர்ணயிப்புக் கருவி எனப்படும் ஜிபிஎஸ். செயற்கைக்கோள் உதவியுடன் செயல்படும் இக்கருவி பொருத்தப்பட்ட மீன்பிடிப் படகு எந்த இடத்தில் உள்ளது என்பதை அறியலாம்.
இதை உலகின் எந்த இடத்திலிருந்தும் இயக்க முடியும். கரைக்குச் செல்லும் வழி எது?, கடலுக்குள் எந்த இடத்தில் பாறைகள் உள்ளன, கடலில் அபாயகரமான பகுதிகள், மீன்பிடித் தளங்கள், மீன்கள் கிடைக்கும் இடங்கள் குறித்த பல்வேறு விஷயங்களையும் இதன் மூலம் அறிய முடியும். இரவு நேரத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்லும் விசைப்படகுகளும், நாட்டுப்படகுகளும் திக்குத் தெரியாத கடலில் மீன்பிடித்துவிட்டு கரைக்குத் திரும்ப இக்கருவி வழி சொல்கிறது. இந்த கருவியின் விலை, தொழில்நுட்பத்தைப் பொறுத்து ரூ.10 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை இருக்கும்.
சர்வதேச கடல் எல்லை வந்தால் மீனவர்களை எச்சரிக்கை செய்யும் வசதியும் இதில் உள்ளது. இக்கருவியின் பயன்பாடு குறித்து மீனவர்களுக்கு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. மீன்பிடித் தளங்களுக்குச் செல்வது, அங்கிருந்து கரை திரும்புவது உள்ளிட்ட ஒருசில அம்சங்களை மட்டுமே மீனவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
எனவே, இக்கருவியின் பயன்பாட்டை பரவலாக்கும் நோக்குடன் ஜிபிஎஸ் இயக்குவதற்கான பயிற்சியை நாகர்கோவிலில் அமைந்துள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கிராம வளமையமும், ஹைதராபாத் தேசிய மீன்வளர்ச்சி வாரியமும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வழங்கத் தொடங்கியிருக்கின்றன என்று கிராமவள மைய விஞ்ஞானி முகமது பிலால் கூறினார்.
இதுவரை கோவளம், கீழமணக்குடி, கடியப்பட்டினம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தலா 25 மீனவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் பயன்பாடு, அது எவ்வாறு செயல்படுகிறது, இடத்தை நிர்ணயித்துக் கொள்வது, கடலடி ஆபத்து நிறைந்த பகுதிகளை அடையாளமிடுவது, ஓரிடத்திருந்து மற்றொரு மீன்பிடி இடத்துக்குச் சென்று பத்திரமாகத் திரும்புவது குறித்து பயிற்சியில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மீனவர்களை கடலுக்கு படகுகளில் அழைத்துச் சென்றும் செய்முறை விளக்கமும் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மீனவர்களுக்கு இத்தகைய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஜிபிஎஸ் கருவி முழுக்க முழுக்க ஆங்கில மொழியின் அடிப்படையில் செயல்படக்கூடியது. இக் கருவிகளில் தமிழையும் புகுத்தி அவற்றை சாதாரண மீனவர்களும் பயன்படுத்தும்படி செய்ய வேண்டும். அதே நேரத்தில் பாரம்பரிய மீன்பிடிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்கிறார் நெய்தல் மக்கள் இயக்க பொதுச்செயலர் சி. பெர்லின்.
இனப் படுகொலை: ருவாண்டா முன்னாள் பெண் அமைச்சருக்கு சர்வதேச நீதிமன்றம் ஆயுள் தண்டனை
டார் எஸ் சலாம்: இனப் படுகொலை மூலம் 8 லட்சம் அப்பாவி டுட்சி இன மக்களை கொன்று குவித்த ருவாண்டா முன்னாள் பெண் அமைச்சருக்கு ஐ.நா. சர்வதேச குற்றவியல் நடுவர் நீதிமன்றம் (UN war crimes tribunal) ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
ருவாண்டா நாட்டின் முனனாள் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தவர் பாலின் நிராமாசுகுகோ (65). இவர் கடந்த 1994ம் ஆண்டு பதவியில் இருந்தபோது ருவாண்டாவின் தெற்கு புடார் மாகாணத்தில் டுட்சி இன மைனாரிட்டி மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டம் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 100 நாட்கள் நடந்தது. அப்போது ஆட்சியில் இருந்த அரசு ராணுவத்தினரை ஏவி 8 லட்சம் டுட்சி இன மக்களை இனப் படுகொலை செய்தது. இதில் முக்கிய பங்கு வகித்தார் பாலின்.
இவரது மகன் ஆர்சன் ஷலோமும் இதற்கு உடந்தையாக இருந்தார். எனவே போர் குற்றம் பாலின் மீது ஐ.நா. சபையின் சர்வதேச குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை 10 ஆண்டுகள் நடந்தது. பாலின் இனப் படுகொலை, மனித உயிர்களுக்கு எதிரான கிரிமினல் செயல்கள், கற்பழிப்புகள், அடக்குமுறை, மக்களின் கண்ணியத்தின் மீது அட்டூழியம், வன்முறை உள்பட 11 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. பாலின் மீது கொடூர இனப் கொலை உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவரது மகன் ஆர்சென் ஷலோமுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
உலக வரலாற்றில் பெண் அமைச்சர் ஒருவருக்கு சர்வதேச நீதிமன்றம் இனப் படுகொலைக்காக ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது இதுவே முதல் முறையாகும்.
அடுத்தது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு இந்த தண்டனை கிடைத்தாலும் ஆச்சரியமில்லை!
ருவாண்டா நாட்டின் முனனாள் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தவர் பாலின் நிராமாசுகுகோ (65). இவர் கடந்த 1994ம் ஆண்டு பதவியில் இருந்தபோது ருவாண்டாவின் தெற்கு புடார் மாகாணத்தில் டுட்சி இன மைனாரிட்டி மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டம் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 100 நாட்கள் நடந்தது. அப்போது ஆட்சியில் இருந்த அரசு ராணுவத்தினரை ஏவி 8 லட்சம் டுட்சி இன மக்களை இனப் படுகொலை செய்தது. இதில் முக்கிய பங்கு வகித்தார் பாலின்.
இவரது மகன் ஆர்சன் ஷலோமும் இதற்கு உடந்தையாக இருந்தார். எனவே போர் குற்றம் பாலின் மீது ஐ.நா. சபையின் சர்வதேச குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை 10 ஆண்டுகள் நடந்தது. பாலின் இனப் படுகொலை, மனித உயிர்களுக்கு எதிரான கிரிமினல் செயல்கள், கற்பழிப்புகள், அடக்குமுறை, மக்களின் கண்ணியத்தின் மீது அட்டூழியம், வன்முறை உள்பட 11 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. பாலின் மீது கொடூர இனப் கொலை உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவரது மகன் ஆர்சென் ஷலோமுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
உலக வரலாற்றில் பெண் அமைச்சர் ஒருவருக்கு சர்வதேச நீதிமன்றம் இனப் படுகொலைக்காக ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது இதுவே முதல் முறையாகும்.
அடுத்தது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு இந்த தண்டனை கிடைத்தாலும் ஆச்சரியமில்லை!
என்னை மின்சார நாற்காலியில் இருக்க வைக்க முயற்சி: ராஜபட்ச
கொழும்பு, ஜூன்.24: தம்மை மின்சார நாற்காலியில் உட்கார வைத்து தண்டனை வாங்கிக் கொடுக்க சிலர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக இலங்கை அதிபர் ராஜபட்ச தெரிவித்தார்.
உர மானியம் தொடர்பாக விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கும் நோக்கத்தில் அதிபர் மாளிகையில் நடைபெற்ற நிகச்சியில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு அறிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்புக்களின் மூலம் இலங்கை அரசுக்கு எதிராக குற்றம் சுமத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அரசுக்கு எதிராக தூக்கப்படும் கரங்கள் இறுதியில் பொதுமக்களின் தலைகளின் மேல் விழுகின்றன. இன்று இலங்கை மக்கள் அனுபவித்து வரும் சுதந்திரத்தை பறிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
உர மானியம் தொடர்பாக விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கும் நோக்கத்தில் அதிபர் மாளிகையில் நடைபெற்ற நிகச்சியில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு அறிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்புக்களின் மூலம் இலங்கை அரசுக்கு எதிராக குற்றம் சுமத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அரசுக்கு எதிராக தூக்கப்படும் கரங்கள் இறுதியில் பொதுமக்களின் தலைகளின் மேல் விழுகின்றன. இன்று இலங்கை மக்கள் அனுபவித்து வரும் சுதந்திரத்தை பறிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
Friday, 24 June 2011
பின்லேடனுடன் உளவுத் துறை அதிகாரிகள் தொடர்பு: அமெரிக்கா அதிர்ச்சி
அல்கொய்தா தீவிரவாதத் தலைவர் பின்லேடனுக்கும், பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுக்கும் செல்போன் மூலம் தொடர்பு இருந்தது தற்போது தெரியவந்துள்ளது. இந்த தகவல் அமெரிக்காவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
பின்லேடன் பயன்படுத்திய செல்போனை கைப்பற்றிய அமெரிக்க அதிகாரிகள் அதனை ஆய்வு செய்து வருகிறார்கள். அப்போது பாகிஸ்தான் உளவுத்துறையினருடன் தொடர்புடைய ஹராகட் உல் முஜ்கிதீன் தீவிரவாத அமைப்பின் அழைப்பு விவரங்கள் பதிவாகி இருப்பது தெரியவந்தது.
பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.க்கும் பின்லேடனுக்கும் தொடர்பு இருப்பது சாதாரண விடயமல்ல. இதனை தீவிரமாக கருதுகிறோம். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.
கடந்த மே மாதம் 2ம் திகதி பாகிஸ்தான் அபோதாபாத் நகரில் அல்கொய்தா தலைவர் பின்லேடனை அமெரிக்க சிறப்பு கமண்டோக்கள் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலின் போது அங்கு இருந்து செல்போன் போன்ற இதர முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்கள்.
பின்லேடனுக்கு உதவி செய்த ஹராகட் தீவிரவாத அமைப்பை அமெரிக்கா தடைசெய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து உள்ளது. இந்த தீவிரவாத அமைப்பு ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த தீவிரவாத அமைப்புக்கு பல ஆண்டுகளாக ஐ.எஸ்.ஐ அமைப்புடன் தொடர்பு இருந்து வருகிறது.
பின்லேடன் பயன்படுத்திய செல்போனை கைப்பற்றிய அமெரிக்க அதிகாரிகள் அதனை ஆய்வு செய்து வருகிறார்கள். அப்போது பாகிஸ்தான் உளவுத்துறையினருடன் தொடர்புடைய ஹராகட் உல் முஜ்கிதீன் தீவிரவாத அமைப்பின் அழைப்பு விவரங்கள் பதிவாகி இருப்பது தெரியவந்தது.
பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.க்கும் பின்லேடனுக்கும் தொடர்பு இருப்பது சாதாரண விடயமல்ல. இதனை தீவிரமாக கருதுகிறோம். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.
கடந்த மே மாதம் 2ம் திகதி பாகிஸ்தான் அபோதாபாத் நகரில் அல்கொய்தா தலைவர் பின்லேடனை அமெரிக்க சிறப்பு கமண்டோக்கள் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலின் போது அங்கு இருந்து செல்போன் போன்ற இதர முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்கள்.
பின்லேடனுக்கு உதவி செய்த ஹராகட் தீவிரவாத அமைப்பை அமெரிக்கா தடைசெய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து உள்ளது. இந்த தீவிரவாத அமைப்பு ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த தீவிரவாத அமைப்புக்கு பல ஆண்டுகளாக ஐ.எஸ்.ஐ அமைப்புடன் தொடர்பு இருந்து வருகிறது.
இந்தியாவில் ஹெராயின் விற்பனை அதிகம்: ஐ.நா.தகவல்
ஐ.நா.:தென்கிழக்கு ஆசியாவின் இந்தியாவில் தான் ஹெராயின் விற்பனை அதிகரித்து வருகிறது என ஐ.நா. வருடாந்திர ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.வுக்கான போதை மருந்து கடத்தல் மற்றும் குற்றம் - 2011 -யின் (யு.என்.ஓ.டி.சி.) அமைப்பு வருடாந்திர அறிக்கை வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: தென்கிழக்கு ஆசியாவில் தான் தோராயமாக 1.9 பில்லியன் டாலர் அளவுக்கு ஹெராயின் எனும் போதை மருந்து விற்பனை நடக்கிறது. இதில் இந்தியாவின் அதிகபட்சமாக 1.4 பில்லியன் டாலர் அளவுக்கு விற்பனை நடக்கிறது. மேலும் சீனாவிலும்,பாகிஸ்தானிலும் தான் ஹெராயினை நுகர்வர்கள் அதிகம் உள்ளனர். இதற்கு அடுத்ததாக ஈரானில் உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு வரையில் ஆப்கானிஸ்தானில் அதிகளவு நுகரப்பட்டது. இங்கு உள்நாட்டிலேயே போதை மருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. உலகளவில் கடந்த 2007-ம் ஆண்டுகளில் மியான்மர் நாட்டில் 5 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டது. இது 2010-ம் ஆண்டில் 12 சதவீதமாக அதிகரித்தள்ளது. மேலும் யு.என்.ஓ.டி.சி அமைப்பு நடத்திய ஆய்வில் கடந்த கடந்த 2009-ம் ஆண்டில் உலகளவில்149 முதல் 203 மில்லியன் மக்கள் போதை மருந்தினை உபயோகப்படுத்தியுள்ளனர். இதே போன்று மெராக்கோ, லெபனான், நேபாள் ஆகிய நாடுகளில் ஹாஸிஸ் எனும் போதை மருந்து விற்பனை அதிகரித்து வருகிறது.தவிர கோகைன் போன்றவைகளும் ஆசிய சந்தையில் பெருகிவிட்டன.
கறுப்பு பண ஒழிப்புக்கு இ.மெயிலில் குவியும் ஐடியாக்கள்!!
டெல்லி: கறுப்புப் பணத்தை ஒழிக்க யோசனை தெரிவிக்குமாறு மத்திய அரசு பொதுமக்களிடம் கேட்டவுடன், ஐடியாக்களை மின்னஞ்சல்கள் மூலம் மக்கள் போட்டி போட்டு அனுப்பி வருகின்றனர்.
கறுப்பு பணத்தை கட்டுப்படுத்தவும், அதை மீட்கவும் சிபாரிசு செய்வதற்காக, உயர் அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழுவை மத்திய நிதி அமைச்சகம் அமைத்துள்ளது. இக்குழு கடந்த 9-ந் தேதி முதல்முறையாக கூடியது.
அப்போது, கறுப்பு பணத்தை ஒழிப்பது குறித்து பொதுமக்களிடம் யோசனை கேட்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக இ.மெயில் முகவரியும் தொடங்கப்பட்டது.
அதை ஆரம்பித்த ஒரு வாரத்துக்குள் பொதுமக்கள் போட்டி போட்டு யோசனைகளை வாரி வழங்கி வருகிறார்கள்.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் யோசனை தெரிவித்துள்ளனர். அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடக்கும் நிபுணர் குழுவின் கூட்டத்தில், பொதுமக்களின் யோசனைகள் ஆய்வு செய்யப்பட உள்ளன.
கறுப்பு பணத்தை கட்டுப்படுத்தவும், அதை மீட்கவும் சிபாரிசு செய்வதற்காக, உயர் அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழுவை மத்திய நிதி அமைச்சகம் அமைத்துள்ளது. இக்குழு கடந்த 9-ந் தேதி முதல்முறையாக கூடியது.
அப்போது, கறுப்பு பணத்தை ஒழிப்பது குறித்து பொதுமக்களிடம் யோசனை கேட்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக இ.மெயில் முகவரியும் தொடங்கப்பட்டது.
அதை ஆரம்பித்த ஒரு வாரத்துக்குள் பொதுமக்கள் போட்டி போட்டு யோசனைகளை வாரி வழங்கி வருகிறார்கள்.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் யோசனை தெரிவித்துள்ளனர். அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடக்கும் நிபுணர் குழுவின் கூட்டத்தில், பொதுமக்களின் யோசனைகள் ஆய்வு செய்யப்பட உள்ளன.
அலாஸ்காவில் நிலநடுக்கம்:சுனாமி எச்சரிக்கை
வாஷிங்டன்: அமெரிக்காவின் வட மேற்கு மாகாணமான அலாஸ்காவின் அட்கா தீவு அருகே இன்று பசிபிக் கடலில் மிக பயங்கர பூகம்பங்கள் ஏற்பட்டன. அடுத்ததடுத்து ஏற்பட்ட இந்த இரு பூகம்பங்களும் ரிக்டர் அளவுகோளில் 7.4, 7.2 புள்ளிகளாகப் பதிவானயின. இதையடுத்து அலாஸ்கா கரையோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அட்காவுக்கு கிழக்கே 172 கிலோ மீட்டர் தொலைவில் பசிபிக் பெருங் கடலில் 40 கி.மீ. ஆழத்தில் இந் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.4 புள்ளிகளாகப் பதிவானது. அடுத்த 30 வினாடிகளில் இதே பகுதியை இரண்டாவது நிலநடுக்கம் தாக்கியது. அது ரிக்டர் அளவுகோளில் 7.2 புள்ளிகளாகப் பதிவானது.
இதையடுத்து அலாஸ்கா மற்றும் கனடாவின் மேற்குக் கரையோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. யுனிமாக் பாஸ், அலாஸ்காவில் இருந்து அம்சிட்கா பாஸ் வரையிலான கடற்கரையோரப் பகுதிகளுக்கும், டச்சு நாட்டு துறைமுகமான சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
கடலோரப் பகுகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறும், துறைமுகப் பகுதிகளில் உள்ளவர்கள் வெளியேறுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால், சுனாமி அலைகள் ஏதும் உருவாகவில்லை.
இதையடுத்து அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது
அட்காவுக்கு கிழக்கே 172 கிலோ மீட்டர் தொலைவில் பசிபிக் பெருங் கடலில் 40 கி.மீ. ஆழத்தில் இந் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.4 புள்ளிகளாகப் பதிவானது. அடுத்த 30 வினாடிகளில் இதே பகுதியை இரண்டாவது நிலநடுக்கம் தாக்கியது. அது ரிக்டர் அளவுகோளில் 7.2 புள்ளிகளாகப் பதிவானது.
இதையடுத்து அலாஸ்கா மற்றும் கனடாவின் மேற்குக் கரையோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. யுனிமாக் பாஸ், அலாஸ்காவில் இருந்து அம்சிட்கா பாஸ் வரையிலான கடற்கரையோரப் பகுதிகளுக்கும், டச்சு நாட்டு துறைமுகமான சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
கடலோரப் பகுகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறும், துறைமுகப் பகுதிகளில் உள்ளவர்கள் வெளியேறுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால், சுனாமி அலைகள் ஏதும் உருவாகவில்லை.
இதையடுத்து அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது
Thursday, 23 June 2011
இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி தடையை நீக்குகிறது ஆஸ்திரேலியா
மெல்போர்ன் : "இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய விதித்திருந்த தடையை, நடப்பாண்டின் இறுதியில் ஆஸ்திரேலியா விலக்கிக் கொள்ளும்' என, அந்நாட்டு பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது. ஆனால், சமீப காலமாக, பெரிய அளவில் அணுசக்தியை உற்பத்தி செய்யும் நாடுகள், இந்தியாவுடன், வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதையடுத்து, ஆஸ்திரேலிய இயற்கை வளத்துறை அமைச்சர் மார்டின் பெர்குசன் மற்றும் அதிகாரிகளுடன், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, நட்பாண்டு துவக்கத்தில், பேச்சுவார்த்தை நடத்தினார். இதனடிப்படையில், இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய விதித்திருந்த தடையை நடப்பாண்டு இறுதியில் ஆஸ்திரேலியா விலக்கிக் கொள்ள முடிவு செய்திருப்பதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. வர்த்தக ரீதியாக சீனா பெரிய வளர்ச்சி அடைந்து வருவதால், அமெரிக்கா, இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளின் நட்பு ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டுக்கு தேவை என்பதால், இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது. ஆனால், சமீப காலமாக, பெரிய அளவில் அணுசக்தியை உற்பத்தி செய்யும் நாடுகள், இந்தியாவுடன், வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதையடுத்து, ஆஸ்திரேலிய இயற்கை வளத்துறை அமைச்சர் மார்டின் பெர்குசன் மற்றும் அதிகாரிகளுடன், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, நட்பாண்டு துவக்கத்தில், பேச்சுவார்த்தை நடத்தினார். இதனடிப்படையில், இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய விதித்திருந்த தடையை நடப்பாண்டு இறுதியில் ஆஸ்திரேலியா விலக்கிக் கொள்ள முடிவு செய்திருப்பதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. வர்த்தக ரீதியாக சீனா பெரிய வளர்ச்சி அடைந்து வருவதால், அமெரிக்கா, இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளின் நட்பு ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டுக்கு தேவை என்பதால், இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது.
பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் தப்ப முடியாது : பாகிஸ்தானுக்கு ஒபாமா எச்சரிக்கை
வாஷிங்டன் : ""எங்களை கொல்லும் நோக்கத்துடன் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களை, அமெரிக்கா ஒரு போதும் பொறுத்துக் கொள்ளாது. அமெரிக்காவிடம் இருந்து அவர்கள் திறமையாக தப்பித்துக் கொள்ள முடியாது,'' என்று அதிபர் ஒபாமா மறைமுக எச்சரிக்கை விடுத்தார்.
ஆப்கனிலும், பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலும், அல்-குவைதா மற்றும் தலிபான் பயங்கரவாதிகள் மறைந்திருந்து, உலக நாடுகளை மிரட்டி வருகின்றனர். "பயங்கரவாதிகளின் கூடாரமாக ஆப்கன் இருக்கிறது' என, அமெரிக்க அதிபர் ஒபாமா கூறி வந்தார். ஆப்கனில், சோவியத் யூனியன் படைகளை விரட்டி அடிக்க, அமெரிக்காவால் வளர்க்கப்பட்ட அல் - குவைதா மற்றும் தலிபான் பயங்கரவாதிகள், இறுதியில், அந்நாட்டையே தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பின்னர் தான் அமெரிக்கா விழித்தது. அமெரிக்காவுக்கே சவாலாக இந்த பயங்கரவாதிகள் மாறினர்.
அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்ற பின், கடந்த 2009ம் ஆண்டில், ஆப்கனில் முகாமிட்டுள்ள அமெரிக்கப் படை வீரர்களின் எண்ணிக்கையை மும்மடங்காக அதிகரித்தார். தற்போது, ஆப்கனில் ஒரு லட்சம் அமெரிக்கப் படைவீரர்கள் முகாமிட்டுள்ளனர். இதனிடையே, "தலிபான்களுடன், அமைதிப் பேச்சுவார்த்தையை, ஆப்கன் அதிபர் அமித் கர்சாய் தலைமையிலான அரசு துவக்கும். பின்னர் சிறிது, சிறிதாக அந்நாட்டில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும்' என்று அப்போது ஒபாமா பேசினார்.
இந்நிலையில், ஆப்கனில், அமெரிக்கப் படைவீரர்கள் வாபஸ் தொடர்பான அறிவிப்பை, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டு பேசியதாவது: ஆப்கனில் இருந்து, நடப்பாண்டில் 10 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறப்பட்டு, 2012ம் ஆண்டில் மொத்தம் 33 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறப்படுவார்கள். இவர்கள் வாபசுக்குப் பின், அந்நாட்டில், மீதம் 68 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இருப்பார்கள். 2014ம் ஆண்டில், ஆப்கனின் முழுபாதுகாப்பு பொறுப்பும், அந்நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டு, அனைத்து அமெரிக்கப் படைவீரர்களும் வாபஸ் பெறப்படுவார்கள்.
தலிபான்கள் மீதான போரில், அமெரிக்கா பெரிய அளவில் இழப்பை சந்தித்தது. அதே சமயம், முக்கிய பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவுடன் இணைந்து, இதன் கூட்டு நாடுகளும், ஆப்கனில் ஸ்திரத்தன்மையை உண்டாக்க உதவின. ஏற்கனவே, ஆப்கனின் சில மாகாணங்கள் மற்றும் நகராட்சிகளின் அதிகாரங்களை, அப்பகுதி மக்களிடம் ஒப்படைக்கும் பணியை துவக்கி விட்டோம்.
தலிபான்களுடனான எங்களது அமைதிப் பேச்சு திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. அமைதியான ஆப்கன் நாடாக மாற விரும்புபவர்கள் அல்- குவைதா அமைப்பை துண்டித்து வெளியேற வேண்டும். வன்முறையை கைவிட வேண்டும். ஆப்கன் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை பின்பற்ற வேண்டும். ஆப்கன் நாட்டை பயங்கரவாதிகளின் கூடாரமாக அல் -குவைதா பயங்கரவாதிகள் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் மாற்றுவதை தடுப்பதே அமெரிக்காவின் முதல் நோக்கமாக இருந்தது. தற்போது, அமெரிக்காவின் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தவேண்டிய தருணம் வந்துவிட்டது. எங்களை கொல்லும் நோக்கத்துடன் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களை (பாகிஸ்தானை மறைமுகமாக எச்சரித்தார்) அமெரிக்கா ஒரு போதும் பொறுத்துக் கொள்ளாது. அமெரிக்காவிடம் இருந்து அவர்கள் திறமையாக தப்பித்துக் கொள்ள முடியாது. இவ்வாறு அதிபர் ஒபாமா பேசினார்.
ஆப்கனிலும், பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலும், அல்-குவைதா மற்றும் தலிபான் பயங்கரவாதிகள் மறைந்திருந்து, உலக நாடுகளை மிரட்டி வருகின்றனர். "பயங்கரவாதிகளின் கூடாரமாக ஆப்கன் இருக்கிறது' என, அமெரிக்க அதிபர் ஒபாமா கூறி வந்தார். ஆப்கனில், சோவியத் யூனியன் படைகளை விரட்டி அடிக்க, அமெரிக்காவால் வளர்க்கப்பட்ட அல் - குவைதா மற்றும் தலிபான் பயங்கரவாதிகள், இறுதியில், அந்நாட்டையே தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பின்னர் தான் அமெரிக்கா விழித்தது. அமெரிக்காவுக்கே சவாலாக இந்த பயங்கரவாதிகள் மாறினர்.
அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்ற பின், கடந்த 2009ம் ஆண்டில், ஆப்கனில் முகாமிட்டுள்ள அமெரிக்கப் படை வீரர்களின் எண்ணிக்கையை மும்மடங்காக அதிகரித்தார். தற்போது, ஆப்கனில் ஒரு லட்சம் அமெரிக்கப் படைவீரர்கள் முகாமிட்டுள்ளனர். இதனிடையே, "தலிபான்களுடன், அமைதிப் பேச்சுவார்த்தையை, ஆப்கன் அதிபர் அமித் கர்சாய் தலைமையிலான அரசு துவக்கும். பின்னர் சிறிது, சிறிதாக அந்நாட்டில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும்' என்று அப்போது ஒபாமா பேசினார்.
இந்நிலையில், ஆப்கனில், அமெரிக்கப் படைவீரர்கள் வாபஸ் தொடர்பான அறிவிப்பை, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டு பேசியதாவது: ஆப்கனில் இருந்து, நடப்பாண்டில் 10 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறப்பட்டு, 2012ம் ஆண்டில் மொத்தம் 33 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறப்படுவார்கள். இவர்கள் வாபசுக்குப் பின், அந்நாட்டில், மீதம் 68 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இருப்பார்கள். 2014ம் ஆண்டில், ஆப்கனின் முழுபாதுகாப்பு பொறுப்பும், அந்நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டு, அனைத்து அமெரிக்கப் படைவீரர்களும் வாபஸ் பெறப்படுவார்கள்.
தலிபான்கள் மீதான போரில், அமெரிக்கா பெரிய அளவில் இழப்பை சந்தித்தது. அதே சமயம், முக்கிய பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவுடன் இணைந்து, இதன் கூட்டு நாடுகளும், ஆப்கனில் ஸ்திரத்தன்மையை உண்டாக்க உதவின. ஏற்கனவே, ஆப்கனின் சில மாகாணங்கள் மற்றும் நகராட்சிகளின் அதிகாரங்களை, அப்பகுதி மக்களிடம் ஒப்படைக்கும் பணியை துவக்கி விட்டோம்.
தலிபான்களுடனான எங்களது அமைதிப் பேச்சு திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. அமைதியான ஆப்கன் நாடாக மாற விரும்புபவர்கள் அல்- குவைதா அமைப்பை துண்டித்து வெளியேற வேண்டும். வன்முறையை கைவிட வேண்டும். ஆப்கன் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை பின்பற்ற வேண்டும். ஆப்கன் நாட்டை பயங்கரவாதிகளின் கூடாரமாக அல் -குவைதா பயங்கரவாதிகள் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் மாற்றுவதை தடுப்பதே அமெரிக்காவின் முதல் நோக்கமாக இருந்தது. தற்போது, அமெரிக்காவின் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தவேண்டிய தருணம் வந்துவிட்டது. எங்களை கொல்லும் நோக்கத்துடன் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களை (பாகிஸ்தானை மறைமுகமாக எச்சரித்தார்) அமெரிக்கா ஒரு போதும் பொறுத்துக் கொள்ளாது. அமெரிக்காவிடம் இருந்து அவர்கள் திறமையாக தப்பித்துக் கொள்ள முடியாது. இவ்வாறு அதிபர் ஒபாமா பேசினார்.
அமெரிக்க உளவு அதிகாரிகள் 67 பேருக்கு விசா வழங்கியது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத், ஜூன்.23: அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள் 67 பேருக்கு பாகிஸ்தான் விசா வழங்கியுள்ளது. தன்னிச்சையாக தாக்குதல் நடத்தி பின்லேடனை அமெரிக்கா கொன்றதைத் தொடர்ந்து இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.இந்த நிலையில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக பாகிஸ்தானுக்கு வருவதற்காக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் 67 பேருக்கு வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் விஸா வழங்கியுள்ளதாக டான் பத்திரிகை தெரிவித்துள்ளது.இரு நாடுகளிடையேயான புரிந்துணர்வின் அடிப்படையில் விசா வழங்கும் முடிவை பாகிஸ்தான் எடுத்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய ஏற்பாட்டின்படி இஸ்லாமாபாதின் கோரிக்கையான பாகிஸ்தானில் சிஐஏவின் பணிகளை முழுமையாக தங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை சிஐஏ ஏற்றுக்கொண்டது.ஐஎஸ்ஐ தலைவர் சுஜா பாஷாவுக்கும், சிஐஏ அதிகாரிகளுக்கும் இடையே இந்த மாதத் தொடக்கத்தில் இதுதொடர்பாக உடன்பாடு ஏற்பட்டதாக டான் பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2வது முறையாக ஐ.நா. பொதுச் செயலாளராக பான் கி மூன் தேர்வு
ஐ.நா.: ஐ.நா. சபையின் பொதுச் செயலாளராக 2வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், உலக அளவில் கடும் சர்ச்சைக்குள்ளானவரான பான் கி மூன்.
இதுவரை இப்படி ஒரு சொதப்பலான பொதுச் செயலாளரை ஐ.நா. கண்டதில்லை என்று கூறும் அளவுக்கு பல முக்கிய சர்வதேசப் பிரச்சினைகளில் மெளன குருவாக இருந்து கழுத்தை அறுத்தவர் இந்த பான் கி மூன். குறி்ப்பாக இலங்கை இனப் பிரச்சினை கொளுந்து விட்டு எரிந்தபோது, லட்சோபம் லட்ச தமிழ் மக்கள் கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டபோது கொட்டாவி விட்டபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் பான்.
இந்த பான் தற்போது மீண்டும் ஐ.நா. பொதுச் செயலாளராகியுள்ளார் - 2வது முறையாக. அடுத்த ஐந்து வருடங்களுக்கும் இவர்தான் பொதுச் செயலாளராக செயல்படுவார்.
தென் கொரியாவைச் சேர்ந்தவர் பான் கி மூன். மீண்டும் தான் ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு நிற்கப் போவதாக பான் கி மூன் சமீபத்தில் தான் ஐ.நா. பொதுச் சபைக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து இவரை 192 நாடுகளும் ஒரு மனதாக பொதுச் செயலாளர் பதவிக்கு மீண்டும் தேர்வு செய்தன. இதையடுத்து இவரது 2வது பதவிக்காலம் 2012ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் தொடங்குகிறது.
2வது பதவி்க்காலத்திலாவது இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்கு உதவ உருப்படியான நடவடிக்கைகளை பான் கி மூன் எடுப்பாரா என்று பார்ப்போம்.
இதுவரை இப்படி ஒரு சொதப்பலான பொதுச் செயலாளரை ஐ.நா. கண்டதில்லை என்று கூறும் அளவுக்கு பல முக்கிய சர்வதேசப் பிரச்சினைகளில் மெளன குருவாக இருந்து கழுத்தை அறுத்தவர் இந்த பான் கி மூன். குறி்ப்பாக இலங்கை இனப் பிரச்சினை கொளுந்து விட்டு எரிந்தபோது, லட்சோபம் லட்ச தமிழ் மக்கள் கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டபோது கொட்டாவி விட்டபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் பான்.
இந்த பான் தற்போது மீண்டும் ஐ.நா. பொதுச் செயலாளராகியுள்ளார் - 2வது முறையாக. அடுத்த ஐந்து வருடங்களுக்கும் இவர்தான் பொதுச் செயலாளராக செயல்படுவார்.
தென் கொரியாவைச் சேர்ந்தவர் பான் கி மூன். மீண்டும் தான் ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு நிற்கப் போவதாக பான் கி மூன் சமீபத்தில் தான் ஐ.நா. பொதுச் சபைக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து இவரை 192 நாடுகளும் ஒரு மனதாக பொதுச் செயலாளர் பதவிக்கு மீண்டும் தேர்வு செய்தன. இதையடுத்து இவரது 2வது பதவிக்காலம் 2012ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் தொடங்குகிறது.
2வது பதவி்க்காலத்திலாவது இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்கு உதவ உருப்படியான நடவடிக்கைகளை பான் கி மூன் எடுப்பாரா என்று பார்ப்போம்.
ஜப்பானில் கடும் நிலநடுக்கம்
டோக்கியோ, ஜூன்.23: ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டது. எனினும் ஒரு மணி நேரத்துக்குப் பின் அந்த எச்சரிக்கையை வானிலை ஆய்வுமையம் வாபஸ் பெற்றது.பசிபிக்கில் மியாகோவின் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் 50 கிலோமீட்டர் தொலைவி்ல் 20 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.32 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.முன்னதாக சுனாமி ஏற்படலாம் என்று ஜப்பான் எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும் அணுஉலை நெருக்கடி ஏற்பட்ட ஃபுகுஷிமாவில் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக உடனடியாகத் தகவல் இல்லை. அலைகளில் கொந்தளிப்பும் ஏற்படவில்லை.நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து சில பகுதிகளில் குடியிருப்புகளை காலி செய்யுமாறும் உள்ளூர் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டனர்.ஷின்கான்சென் புல்லட் ரயிலும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. மார்ச் 11 பேரழிவுக்குப் பின்னர் செயல்படாமல் உள்ள மியாகியில் ஓனகாவா அணு உலைக்கு புதிதாக எந்த பாதிப்பும் இல்லை என அரசு ஒலிபரப்பு நிறுவனம் தெரிவித்தது.
ஜூலையில் ஆப்கானில் இருந்து 10 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் வாபஸ்: ஒபாமா அறிவிப்பு
காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப்படையில் இருந்து 10 ஆயிரம் வீரர்கள் வரும் ஜூலை மாதம் வாபஸ் பெறப்படுவார்கள் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தும் அல்கொய்தா மற்றும் தாலிபான் தீவிரவாதிகளை அடக்குவதற்காக அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு முகாமிட்டுள்ளன. ஒபாமா அமெரிக்க அதிபரானபோது ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப்படைகளை படிப்படியாக வாபஸ் பெறுவதாகக் கூறினார். அதன்படி ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான வீரர்க்ள் நாடு திரும்பினர்.
தற்போது வரும் ஜூலை மாதம் மேலும் 10 ஆயிரம் வீரர்களை வாபஸ் பெறப்போவதாக ஒபாமா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
ஆப்கானிஸ்தான் நிலைமை முன்னேற்றி வருவதால் இனி அங்கு அமெரி்ககப்படைகள் அதிக அளிவல் தேவைப்படாது. எனவே, அங்குள்ள படையின் பெரும் பகுதியை வாபஸ் பெறவிருக்கிறோம். இதில் முதல்கட்டமாக வரும் ஜூலை மாதம் 10 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறப்படுகிறார்கள்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் 23 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறப்படுவர். இது தவிர 63 ஆயிரம் வீரர்கள் தொடர்ந்து அங்கேயே இருப்பார்கள். அவர்கள் வரும் 2013-ம் ஆண்டு இறுதிக்குள் முற்றிலுமாக வாபஸ் பெறப்படுவார்கள். அமெரிக்கப்படைகள் வெளியேறிய பிறகு ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை அந்நாட்டு படைகள் கவனித்துக் கொள்ளும்.
பின்லேடன் மறைவிற்கு பிறகு வலுவிழந்து, நெருக்கடியில் இருக்கின்றபோதிலும் அல்கொய்தா ஆபத்தானதாகத் தான் உள்ளது என்றார்.
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கப்படைகளில் இதுவரை ஆயிரத்து 500 பேர் உயிர் இழந்துள்ளனர், 12 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த படைகளுக்கு ஒரு வாரத்திற்கு ஆகும் செலவு 4 ஆயிரம் கோடி ஆகும். இது அமெரிக்காவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டதால் தான் படைகளை முற்றிலுமாக வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தும் அல்கொய்தா மற்றும் தாலிபான் தீவிரவாதிகளை அடக்குவதற்காக அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு முகாமிட்டுள்ளன. ஒபாமா அமெரிக்க அதிபரானபோது ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப்படைகளை படிப்படியாக வாபஸ் பெறுவதாகக் கூறினார். அதன்படி ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான வீரர்க்ள் நாடு திரும்பினர்.
தற்போது வரும் ஜூலை மாதம் மேலும் 10 ஆயிரம் வீரர்களை வாபஸ் பெறப்போவதாக ஒபாமா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
ஆப்கானிஸ்தான் நிலைமை முன்னேற்றி வருவதால் இனி அங்கு அமெரி்ககப்படைகள் அதிக அளிவல் தேவைப்படாது. எனவே, அங்குள்ள படையின் பெரும் பகுதியை வாபஸ் பெறவிருக்கிறோம். இதில் முதல்கட்டமாக வரும் ஜூலை மாதம் 10 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறப்படுகிறார்கள்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் 23 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறப்படுவர். இது தவிர 63 ஆயிரம் வீரர்கள் தொடர்ந்து அங்கேயே இருப்பார்கள். அவர்கள் வரும் 2013-ம் ஆண்டு இறுதிக்குள் முற்றிலுமாக வாபஸ் பெறப்படுவார்கள். அமெரிக்கப்படைகள் வெளியேறிய பிறகு ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை அந்நாட்டு படைகள் கவனித்துக் கொள்ளும்.
பின்லேடன் மறைவிற்கு பிறகு வலுவிழந்து, நெருக்கடியில் இருக்கின்றபோதிலும் அல்கொய்தா ஆபத்தானதாகத் தான் உள்ளது என்றார்.
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கப்படைகளில் இதுவரை ஆயிரத்து 500 பேர் உயிர் இழந்துள்ளனர், 12 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த படைகளுக்கு ஒரு வாரத்திற்கு ஆகும் செலவு 4 ஆயிரம் கோடி ஆகும். இது அமெரிக்காவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டதால் தான் படைகளை முற்றிலுமாக வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது.
'பிரபாகரனின் குடும்பம்'.. தப்பா சொல்லிட்டேன்! - மன்னிப்பு கேட்ட இலங்கை எம்பி
கொழும்பு: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினரை இலங்கை அதிபர் ராஜபக்சே பராமரித்து வருவதாக தாம் கூறியதற்கு ஏ.எச்.எம்.அஷ்வர் எம்பி மன்னிப்பு கோரியுள்ளார்.
பிரபாகரன் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டாலும், அவரது குடும்பத்தினரைக் காப்பாற்றி ராஜபக்சே பராமரித்து வருகிறார் என நாடாளுமன்றத்தில் அஷ்வர் கூறியிருந்தார்.
இதனால் பிரபாகரன் குடும்பத்தினர் உயிருடன் இருப்பதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அஷ்வர், "தாம் தமிழ்ச்செல்வனின் மனைவி, பிள்ளைகள் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக பிரபாகரனின் பெயரை தவறாகக் குறிப்பிட்டு விட்டதாகத்" தெரிவித்துள்ளார்.
ஆனால் நேற்று முன்தினம் அவர் பாராளுமன்றத்தில் பேசியபோது, பிரபாகரன் மனைவி மதிவதனி, மகள் துவாரகா மற்றும் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரைக் குறிப்பிட்டு, உயிருடன் இருப்பதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரபாகரனின் குடும்பத்தினர் இலங்கை அரசின் பிடியிலா? நடுங்கிப்போன ராஜபக்ச!
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மனைவி மற்றும் பிள்ளைகள் இலங்கை அரசின் பாதுகாப்பில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்த செய்தி வெளியானதை தொடர்ந்து ராஜபக்ச நடுங்கிப்போனதாக தெரியவந்துள்ளது.
விடுதலைப் புலிகளின் அரசியல் துறைத் தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு பதிலாக பிரபாகரன் என்று வாய் தவறி சொல்லிவிட்டதாக ஆளும் கட்சியின் எம்.பி.யான ஏ.எச்.எம்.அஸ்வர் இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
நேற்றைய தினம் இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ராஜபக்சவின் முன்னாள் ஆலோசகரும், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரமான ஏ.எச்.எம்.அஸ்வர், அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுடன், அவரது குடும்பத்தினரையும் அமெரிக்கா கொன்றது போல அல்லாமல், புலிகளின் தலைவரின் குடும்பத்தை ராஜபகச இப்போதும் பேணிப் பாதுகாப்பது அவரின் மனிதாபிமானத் தன்மையை வெளிக்காட்டுவதாகவும், அவர்களை அரசாங்கம் நல்ல முறையில் பேணி வருவதாகவும் கூறினார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச் செய்தியை பல ஊடகங்கள் முதன்மைப்படுத்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் அஸ்வரின் நேற்றைய உரையைக் கேட்ட மகிந்தவும் நடுங்கிப்போனார். இவ்வாறு பிரபாகரனின் மனைவி, பிள்ளைகள் இலங்கை அரசிடம் அகப்பட்டிருந்தால் அவர்களை உலக நாடுகளுக்கு காட்டவேண்டும் என்று பலதரப்பிலிருந்தும் அழுத்தங்கள் வருமே என்று அஞ்சினார்.
தடுத்துவைத்திருப்போரைக் காட்டுங்கள் என்று உலகநாடுகள் கேட்டால், தம்மிடம் இல்லாதவர்களை எங்கே காட்டுவது என்று கலக்கமடைந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நேற்றிரவே எம்.பி அஸ்வருடன் தொடர்புகொண்ட ராஜபக்சவின் செயலாளர் இது குறித்து விளக்கம்கோரியுள்ளார்.
நிலையைப் புரிந்துகொண்ட அவர் உடனடியாக மறுப்புச் செய்தி ஒன்றை வெளியிடுமாறு கூறியுள்ளார்.
இதனை அடுத்து அஸ்வர் இன்று நாடாளுமன்றத்தில் மன்னிபுக் கோரியதோடு,விடுதலைப்புலிகளின் அரசியல் துறைத் தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு பதிலாக பிரபாகரன் என்று வாய் தவறி சொல்லிவிட்டதாக விளக்கமளித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளின் அரசியல் துறைத் தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு பதிலாக பிரபாகரன் என்று வாய் தவறி சொல்லிவிட்டதாக ஆளும் கட்சியின் எம்.பி.யான ஏ.எச்.எம்.அஸ்வர் இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
நேற்றைய தினம் இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ராஜபக்சவின் முன்னாள் ஆலோசகரும், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரமான ஏ.எச்.எம்.அஸ்வர், அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுடன், அவரது குடும்பத்தினரையும் அமெரிக்கா கொன்றது போல அல்லாமல், புலிகளின் தலைவரின் குடும்பத்தை ராஜபகச இப்போதும் பேணிப் பாதுகாப்பது அவரின் மனிதாபிமானத் தன்மையை வெளிக்காட்டுவதாகவும், அவர்களை அரசாங்கம் நல்ல முறையில் பேணி வருவதாகவும் கூறினார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச் செய்தியை பல ஊடகங்கள் முதன்மைப்படுத்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் அஸ்வரின் நேற்றைய உரையைக் கேட்ட மகிந்தவும் நடுங்கிப்போனார். இவ்வாறு பிரபாகரனின் மனைவி, பிள்ளைகள் இலங்கை அரசிடம் அகப்பட்டிருந்தால் அவர்களை உலக நாடுகளுக்கு காட்டவேண்டும் என்று பலதரப்பிலிருந்தும் அழுத்தங்கள் வருமே என்று அஞ்சினார்.
தடுத்துவைத்திருப்போரைக் காட்டுங்கள் என்று உலகநாடுகள் கேட்டால், தம்மிடம் இல்லாதவர்களை எங்கே காட்டுவது என்று கலக்கமடைந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நேற்றிரவே எம்.பி அஸ்வருடன் தொடர்புகொண்ட ராஜபக்சவின் செயலாளர் இது குறித்து விளக்கம்கோரியுள்ளார்.
நிலையைப் புரிந்துகொண்ட அவர் உடனடியாக மறுப்புச் செய்தி ஒன்றை வெளியிடுமாறு கூறியுள்ளார்.
இதனை அடுத்து அஸ்வர் இன்று நாடாளுமன்றத்தில் மன்னிபுக் கோரியதோடு,விடுதலைப்புலிகளின் அரசியல் துறைத் தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு பதிலாக பிரபாகரன் என்று வாய் தவறி சொல்லிவிட்டதாக விளக்கமளித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Tuesday, 21 June 2011
தானாகவே இதயத்தைக் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
மாரடைப்பு நோயால் இதயத்தசை இறந்துவிடுகிறது; காலப்போக்கில் இறந்த இவ்விடத்தில் தசைப்பகுதிக்குப் பதிலாக நார் இழையங்கள் வளருகின்றன; இதனால் இதயம் தனது இயல்பான சுருங்கிவிரியும் தொழிலைப் புரிவதில் சிரமம் ஏற்படுகின்றது. இதய இலயமின்மையால் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, திடீர் இதய நிறுத்தம், இறுதியில் இதயச் செயலிழப்பு போன்ற உயிர்த் தீவிளைவுகள் ஏற்படுகின்றன.
மாரடைப்பால் இறந்துபோன இதயத்தசையை மீண்டும் குறிப்பிட்ட இடத்தில் உருவாக்கினால் இதயச் செயலிழப்பு ஏற்படாது, மாரடைப்பின் பின்னரும் குறிப்பிட்ட நபர் ஆரோக்கியமாக வாழலாம், எனினும் இயல்பான நிலையில் இறந்த இதயத்தசை இறந்ததாகவே இருக்க அவ்விடத்தில் நார் இழையங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்குத் தீர்வே இல்லையென்று நினைத்திருந்த காலம் இப்பொழுது மலையேறிவிட்டது. அறிவியலாளர்கள் புதிதாக மருந்தொன்றைக் கண்டுபிடித்து உள்ளனர், இது இறந்த இதயத்தசையை மீண்டும் உருவாக்குகின்றது.
இதயம் ஒரு தசையால் உருவாக்கப்பட்ட உறுப்பு என்பது பெரும்பாலும் அறியப்பட்ட ஒரு விடயம். இதயத்தின் இத்தசைப்பகுதியைச் சுற்றி மென்சவ்வு உள்ளது; இது இதய மேற்சவ்வு (epicardium) எனப்படும். இதயத்தசையை மீண்டும் புதுப்பிக்கத் தேவையான உயிரணுக்கள் இந்த இதய மேற்சவ்வில் உள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு புறத்தூண்டல் ஏற்படுத்தப்படுவதன் மூலம் இவை அங்கிருந்து இதயத்தசைப் பகுதிக்கு அசைந்து பின்னர் இதயத்தசை செப்பனிடப்படுகின்றது. ஏற்கனவே பரிச்சயமான தைமொசின் பீட்டா4 (thymosin β4) எனும் புரதம் இத்தூண்டலை ஏற்படுத்தவல்லது என அறியப்பட்டது; சுண்டெலியில் இப்புரதம் கொடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, விளைவு வெற்றிகரமானதாக அமைந்தது. சுண்டெலி ஒன்றுக்கு இப்புரதம் மருந்துவடிவில் கொடுக்கப்பட்ட பின்னர் செயற்கையான மாரடைப்பு உண்டாக்கப்பட்டது, இதனால் இறந்த தசை இழையங்கள் சிலநாட்களில் மீண்டும் உருவாகின.
இலண்டன் பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் போல் ரைலி இது குறித்து உரையாடுகையில், மாரடைப்பு வருவதற்கு முன்னரேயே இம்மருந்து உபயோகித்தல் வேண்டும் எனத் தெரிவித்தார். இப்புரதம் மருந்துவடிவில் உருவாக்கப்பட்டு இருந்தாலும் மாந்தரின் பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னமும் ஆய்வுகள் தேவை; இன்னும் பத்து வருடத்தில் இம்மருந்தின் முழுமையான பயன்பாட்டைப் பெறலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
பிரணாப் அலுவலகத்தை உளவுப் பார்க்க ரகசிய கேமராக்கள்?
புது தில்லி, ஜூன் 21: மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் ரகசிய மைக்குகள், கேமராக்கள் பொருத்தப்பட்டு உளவு பார்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக 2010 செப்டம்பர் 7-ல் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, பிரணாப் முகர்ஜி எழுதிய கடிதத்தில், இந்த விவகாரம் குறித்து ரகசிய விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். நிதியமைச்சக அலுவலகத்தில், 16 இடங்களில் கேமரா அல்லது மைக்குகளை ஒட்ட முயற்சி நடந்துள்ளதாகத் தெரிகிறது. இதைச் செய்தது யார் என்பது குறித்து ரகசியமாக விசாரிக்க வேண்டும் என்று பிரணாப் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகம் தில்லி நார்த் பிளாக்கில் உள்ளது. அவரது அலுவலகத்திலும், அவரது தனி உதவியாளரின் அறை, அவரது செயலரின் அறை, இரு கருத்தரங்க அறைகள் ஆகியவற்றில் உளவு முயற்சி நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், 16 இடங்களிலும் மைக்ரோபோன்களோ, கேமராக்களோ சிக்கவில்லை. அவற்றைப் பொருத்த பசை தடவப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என தனது கடிதத்தில் பிரணாப் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பரில் நிதித்துறை அமைச்சகத்தின் பல்வேறு பகுதிகளிலும் எலெக்ட்ரானிக் சாதனங்கள் மூலம் உளவுப் பார்க்கும் முயற்சி நடைபெற்றதா என்பது குறித்து தனியார் நிறுவனத்தின் உதவியோடு ஆய்வு நடத்தப்பட்டபோதுதான் உளவு முயற்சி குறித்து தெரியவந்தது. இதையடுத்தே பிரதமருக்கு பிரணாப் கடிதம் எழுதியுள்ளார் எனத் தெரிகிறது. இது குறித்து தில்லியில் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த பிரணாப் முகர்ஜி, இப் பிரச்னை குறித்து, மத்திய உளவுத் துறையான ஐ.பி., முழு அளவில் சோதனை நடத்திவிட்டு, அலுவலகம் எந்த வகையிலும் உளவு பார்க்கப்படவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது என்றார். ஆனால், பசை ஒட்டப்பட்ட இடங்களில் சிறிய துளைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே, அந்த இடங்களில் கேமராக்களோ, ரகசிய மைக்ரோபோன்களோ வைக்கப்பட்டு, பின்னர் அவை நீக்கப்பட்டிருக்கலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியத் துறையினர் கூறினர். பாஜக கருத்து: இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி, நிதியமைச்சர் அலுவலகத்தில் ஒட்டுக் கேட்பு நிகழ்வதாக நிதியமைச்சரே கடிதம் எழுதியிருப்பது மிகவும் முக்கியமான பிரச்னையாகும். இதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்தார். மத்திய அமைச்சரவையில் பிரதமருக்கு அடுத்த இடத்தில் உள்ள மூத்த அமைச்சர் பிரணாப். அவரது அலுவலகத்திற்குள் ஒட்டு கேட்கப்படுவதாகக் கூறப்படுவது மிக முக்கியமான பிரச்னையாகும். பல்வேறு நிதி முறைகேடுகள் குறித்த விவகாரம் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிவரும் நிலையில் இந்த பிரச்னையில் அரசு அலட்சியம் காட்டக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்று காலை ஈராக் ஆளுநர் மாளிகை அருகே குண்டுவெடிப்பு: 22 பேர் பலி
பாக்தாத்: தெற்கு பாக்தாத்தில் ஆளுநர் மாளிகைக்கு அருகே நடந்த குண்டுவெடிப்பி்ல 22 பேர் பலியாகியுள்ளதாக ஈராக் அதிகாரிக்ள் தெரிவித்தனர்.
இது குறித்து ஒரு போலீஸ் அதிகாரி கூறியதாவது,
திவானியா நகரில் கவர்னர் அலுவகம் உள்ளிட்ட கட்டிடடயங்களுக்கு அருகே வெடிகுண்டுகள் நிறைந்த 2 வாகனங்களில் தற்கொலைப் படையினர் வந்தனர். அவர்கள் அந்த வண்டிகளை வெடிக்கச் செய்தனர். இன்று காலை நடந்த இந்த தாக்குதலில் 22 பேர் பலியாகியுள்ளனர் என்றார்.
தெற்கு பாக்தாத்தில் இருந்து 80 மைல் தொலைவில் உள்ளது திவானியா நகரம்.
இது குறித்து ஒரு போலீஸ் அதிகாரி கூறியதாவது,
திவானியா நகரில் கவர்னர் அலுவகம் உள்ளிட்ட கட்டிடடயங்களுக்கு அருகே வெடிகுண்டுகள் நிறைந்த 2 வாகனங்களில் தற்கொலைப் படையினர் வந்தனர். அவர்கள் அந்த வண்டிகளை வெடிக்கச் செய்தனர். இன்று காலை நடந்த இந்த தாக்குதலில் 22 பேர் பலியாகியுள்ளனர் என்றார்.
தெற்கு பாக்தாத்தில் இருந்து 80 மைல் தொலைவில் உள்ளது திவானியா நகரம்.
அமெரிக்காவில் இந்தியத் தூதருக்கு எதிராக வீட்டு பணிப்பெண் வழக்கு
நியூயார்க், ஜூன் 21-
அமெரிக்காவில் இந்தியத் தூதருக்கு எதிராக அவரது வீட்டின் முன்னாள் பணிப்பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பிரபு தயாள் தூதராக பணிபுரிகிறார். அவரது வீட்டில் பர்த்வாய் (45) என்பவர் பணிப்பெண்ணாக முன்பு வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், பிரபு தயாள் மீது அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். மாதம் 300 டாலர் சம்பளத்திற்கு, தன்னை பிரபு தயாள் நீண்ட நேரம் வேலை வாங்கியதாகவும், தனது பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டு அவர் தர மறுப்பதாகவும் வழக்கு தொடர்ந்துள்ளார்.மேலும், வீட்டில் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கு அறையில் தான், தனக்கு தூங்குவதற்கு இடம் ஒதுக்கினர் என்றும், பாலியல் ரீதியான முயற்சிகளையும் பிரபு தயாள் மேற்கொண்டார் என்றும் பர்த்வாய் தனது மனுவில் கூறியுள்ளார்.பர்த்வாய்க்கு உதவி வரும் சட்ட உதவி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.எனினும், பர்த்வாயின் புகாரை இந்தியத் தூதர் பிரபு தயாள் திட்டவட்டமாக மறுத்துள்ளார். "பர்த்வாயின் புகார் முழு முட்டாள்தனமானது" என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இந்தியத் தூதருக்கு எதிராக அவரது வீட்டின் முன்னாள் பணிப்பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பிரபு தயாள் தூதராக பணிபுரிகிறார். அவரது வீட்டில் பர்த்வாய் (45) என்பவர் பணிப்பெண்ணாக முன்பு வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், பிரபு தயாள் மீது அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். மாதம் 300 டாலர் சம்பளத்திற்கு, தன்னை பிரபு தயாள் நீண்ட நேரம் வேலை வாங்கியதாகவும், தனது பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டு அவர் தர மறுப்பதாகவும் வழக்கு தொடர்ந்துள்ளார்.மேலும், வீட்டில் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கு அறையில் தான், தனக்கு தூங்குவதற்கு இடம் ஒதுக்கினர் என்றும், பாலியல் ரீதியான முயற்சிகளையும் பிரபு தயாள் மேற்கொண்டார் என்றும் பர்த்வாய் தனது மனுவில் கூறியுள்ளார்.பர்த்வாய்க்கு உதவி வரும் சட்ட உதவி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.எனினும், பர்த்வாயின் புகாரை இந்தியத் தூதர் பிரபு தயாள் திட்டவட்டமாக மறுத்துள்ளார். "பர்த்வாயின் புகார் முழு முட்டாள்தனமானது" என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
தோற்றுப் போன நாடுகளின் பட்டியலில் இலங்கை
உலகில் தோற்றுப் போன நாடுகளின் பட்டியலில் இலங்கை 29 ஆவது இடத்தில் உள்ளது.
கௌரவமான வெளிநாட்டு கொள்கைகளுக்கான பத்திரிகை ஒன்று இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த தோற்றுப் போன நாடுகளின் பட்டியலில் சூடான் முதலாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், மியன்மார், பங்களாதேஸ், பூடான், இலங்கை போன்ற நாடுகள் இந்த பட்டியலில் முதல் 50 நாடுகளுள் உள்ளன.
மேலும் இந்தியா தமது அண்டைய நாடுகளை பாதுகாக்க தவறிவிட்டதாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
கௌரவமான வெளிநாட்டு கொள்கைகளுக்கான பத்திரிகை ஒன்று இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த தோற்றுப் போன நாடுகளின் பட்டியலில் சூடான் முதலாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், மியன்மார், பங்களாதேஸ், பூடான், இலங்கை போன்ற நாடுகள் இந்த பட்டியலில் முதல் 50 நாடுகளுள் உள்ளன.
மேலும் இந்தியா தமது அண்டைய நாடுகளை பாதுகாக்க தவறிவிட்டதாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
லிபியாவில் நேட்டோ தாக்குதலில் அப்பாவிகள் பலி
திரிபோலி, ஜூன். 21-
திரிபோலியில் நிகழ்ந்த தாக்குதலில், குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் ஒன்பது பேர் பலியானதற்கு பொறுப்பேற்று, நேட்டோ படை வருத்தம் தெரிவித்துள்ளது.
லிபியா தலைநகர் திரிபோலியில் நேற்று முன்தினம், நேட்டோ படையினர் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலியாகினர். இதற்கு பொறுப்பு ஏற்று, நேட்டோ வருத்தம் தெரிவித்து இருப்பதாக லிபியா தூதுக் குழு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் சார்லஸ் பவ்சார்டு தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "சம்பவம் குறித்து நாங்கள் இன்னும் இறுதி முடிவிற்கு வரவில்லை. ஆயுதங்களை தவறாகக் கையாண்டதால் இச்சம்பவம் நடந்திருக்கலாம்" என்றார்.
நேட்டோ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "லிபியாவில் நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலும், மிகவும் கவனத்துடன் கையாளப்படுகிறது. பிரிகா பகுதியில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில், எதிரிகளின் ரோந்து வாகனங்கள் தான், பாதி அளவிற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளன. எதிர்பாராமல் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்காக வருத்தம் தெரிவிக்கிறோம்" என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிபோலியில் நிகழ்ந்த தாக்குதலில், குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் ஒன்பது பேர் பலியானதற்கு பொறுப்பேற்று, நேட்டோ படை வருத்தம் தெரிவித்துள்ளது.
லிபியா தலைநகர் திரிபோலியில் நேற்று முன்தினம், நேட்டோ படையினர் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலியாகினர். இதற்கு பொறுப்பு ஏற்று, நேட்டோ வருத்தம் தெரிவித்து இருப்பதாக லிபியா தூதுக் குழு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் சார்லஸ் பவ்சார்டு தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "சம்பவம் குறித்து நாங்கள் இன்னும் இறுதி முடிவிற்கு வரவில்லை. ஆயுதங்களை தவறாகக் கையாண்டதால் இச்சம்பவம் நடந்திருக்கலாம்" என்றார்.
நேட்டோ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "லிபியாவில் நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலும், மிகவும் கவனத்துடன் கையாளப்படுகிறது. பிரிகா பகுதியில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில், எதிரிகளின் ரோந்து வாகனங்கள் தான், பாதி அளவிற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளன. எதிர்பாராமல் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்காக வருத்தம் தெரிவிக்கிறோம்" என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கர்கள் போர் செய்து களைத்து போய்விட்டனர்: ராபர்ட் கேட்ஸ்
வாசிங்டன், ஜூன். 21
அமெரிக்கர்கள் போர் செய்து களைத்துப்போய் விட்டனர் என்று அமெரிக்க ராணுவ மந்திரி ராபர்ட் கேட்ஸ் தெரிவித்து இருக்கிறார்.
அமெரிக்க ராணுவ மந்திரி ராபர்ட் கேட்ஸ் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
அமெரிக்க மக்கள் போர் செய்து களைத்து போய்விட்டார்கள் என்பதை நான் அறிவேன். 2008-ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுக்கு மிக குறைவான பொறுப்பு தான் இருந்தது. ஆப்கானிஸ்தானில் 2010-ம் ஆண்டு கோடை வரை நம்மிடம் சரியான போர் தந்திரம் இல்லை. சரியான வசதி வாய்ப்பு இல்லை. இந்த போருக்கு தேவையான அளவுக்கு போதுமான வசதி கிடைக்கவில்லை. 2001 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் நாம் ஆப்கானிஸ்தான் போரில் வெற்றி பெற்றோம். பிறகு நம் கவனம் ஈராக் மீது திரும்பியது. இதனால் பல ஆண்டுகளுக்கு ஆப்கானிஸ்தான் அலட்சியப்படுத்தப்பட்டது. நான் 2006-ம் ஆண்டு ராணுவத்தலைமை பொறுப்பை ஏற்றபோது 5 ஆண்டு யுத்தத்தில் 194 அமெரிக்கர்கள் தான் பலியாகி இருந்தனர். நாம் 10 ஆண்டுகளாக யுத்தத்தில் ஈடுபட்டு இருந்தோம். ஆனால் ஆப்கானிஸ்தானில் முழு அளவில் யுத்தத்தில் ஈடுபடவில்லை. இவ்வாறு ராபர்ட் கேட்ஸ் கூறினார்.
அமெரிக்கர்கள் போர் செய்து களைத்துப்போய் விட்டனர் என்று அமெரிக்க ராணுவ மந்திரி ராபர்ட் கேட்ஸ் தெரிவித்து இருக்கிறார்.
அமெரிக்க ராணுவ மந்திரி ராபர்ட் கேட்ஸ் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
அமெரிக்க மக்கள் போர் செய்து களைத்து போய்விட்டார்கள் என்பதை நான் அறிவேன். 2008-ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுக்கு மிக குறைவான பொறுப்பு தான் இருந்தது. ஆப்கானிஸ்தானில் 2010-ம் ஆண்டு கோடை வரை நம்மிடம் சரியான போர் தந்திரம் இல்லை. சரியான வசதி வாய்ப்பு இல்லை. இந்த போருக்கு தேவையான அளவுக்கு போதுமான வசதி கிடைக்கவில்லை. 2001 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் நாம் ஆப்கானிஸ்தான் போரில் வெற்றி பெற்றோம். பிறகு நம் கவனம் ஈராக் மீது திரும்பியது. இதனால் பல ஆண்டுகளுக்கு ஆப்கானிஸ்தான் அலட்சியப்படுத்தப்பட்டது. நான் 2006-ம் ஆண்டு ராணுவத்தலைமை பொறுப்பை ஏற்றபோது 5 ஆண்டு யுத்தத்தில் 194 அமெரிக்கர்கள் தான் பலியாகி இருந்தனர். நாம் 10 ஆண்டுகளாக யுத்தத்தில் ஈடுபட்டு இருந்தோம். ஆனால் ஆப்கானிஸ்தானில் முழு அளவில் யுத்தத்தில் ஈடுபடவில்லை. இவ்வாறு ராபர்ட் கேட்ஸ் கூறினார்.
ரஷ்யாவில் பயங்கர விமான விபத்து-44 பேர் பலி
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்: ரஷ்யாவில் நடந்த பயங்கர விமான விபத்தில் 44 பேர் பலியாயினர்.
பெட்ரோசவோட்ஸ்க் நகரில் கடும் பனி மூட்டத்துக்கு இடையே தரையிறங்க முயன்ற விமானம் ரன்வேக்கு முன்னதாகவே தரையில் மோதி வெடித்துச் சிதறியது. அதில் விமானத்தில் இருந்த 44 பேர் பலியாயினர். 10 வயது சிறுவன், ஒரு பெண் விமான சிப்பந்தி உள்ளிட்ட 8 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
விபத்து நடந்தபோது விமான நிலைய ரன்வேயில் பனி மூட்ட விளக்குகள் (fog lights) விளக்குகள் எரியவில்லை என்று தெரிகிறது. இதனால் தான் ரன்வே என்று நினைத்து அதற்கு 2 கி.மீ. தூரத்துக்கு முன்னதாகவே விமானிகள் விமானத்தை தரையில் இறக்கியதாகவும், இதையடுத்தே விமானம் தரையில் மோதி வெடித்துச் சிதறியதாகவும் கூறப்படுகறது.
விபத்துக்குள்ளான விமானம் சோவியத் தயாரிப்பான பழைய டி.யு.-134 ரக விமானமாகும். இது ரஷ்ஏர் ஏர்லைன்ஸ் நிறுவனத்ததுக்குச் சொந்தமானது. ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலிருந்து பெட்ரோசவோட்ஸ்க் நகருக்கு வந்து கொண்டிருந்தது.
பின்லாந்து எல்லைக்கு அருகே உள்ள இந்த நகரில் கடும் பனிப் பொழிவு நிகழ்ந்து கொண்டுள்ளது. விமானம் ரன்வேக்கு 2 கி.மீ. முன்னதாகவே தரையைத் தொட்டதால் அது உடைந்து சிதறியுள்ளது.
விமான நிலையத்துக்கு வெளியே உள்ள சாலை முழுவதும் விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடக்கின்றன.
பெட்ரோசவோட்ஸ்க் நகரில் கடும் பனி மூட்டத்துக்கு இடையே தரையிறங்க முயன்ற விமானம் ரன்வேக்கு முன்னதாகவே தரையில் மோதி வெடித்துச் சிதறியது. அதில் விமானத்தில் இருந்த 44 பேர் பலியாயினர். 10 வயது சிறுவன், ஒரு பெண் விமான சிப்பந்தி உள்ளிட்ட 8 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
விபத்து நடந்தபோது விமான நிலைய ரன்வேயில் பனி மூட்ட விளக்குகள் (fog lights) விளக்குகள் எரியவில்லை என்று தெரிகிறது. இதனால் தான் ரன்வே என்று நினைத்து அதற்கு 2 கி.மீ. தூரத்துக்கு முன்னதாகவே விமானிகள் விமானத்தை தரையில் இறக்கியதாகவும், இதையடுத்தே விமானம் தரையில் மோதி வெடித்துச் சிதறியதாகவும் கூறப்படுகறது.
விபத்துக்குள்ளான விமானம் சோவியத் தயாரிப்பான பழைய டி.யு.-134 ரக விமானமாகும். இது ரஷ்ஏர் ஏர்லைன்ஸ் நிறுவனத்ததுக்குச் சொந்தமானது. ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலிருந்து பெட்ரோசவோட்ஸ்க் நகருக்கு வந்து கொண்டிருந்தது.
பின்லாந்து எல்லைக்கு அருகே உள்ள இந்த நகரில் கடும் பனிப் பொழிவு நிகழ்ந்து கொண்டுள்ளது. விமானம் ரன்வேக்கு 2 கி.மீ. முன்னதாகவே தரையைத் தொட்டதால் அது உடைந்து சிதறியுள்ளது.
விமான நிலையத்துக்கு வெளியே உள்ள சாலை முழுவதும் விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடக்கின்றன.
Monday, 20 June 2011
புகுஷிமா அணு உலை: சிக்கல் நீடிக்கிறது
டோக்கியோ, ஜூன் 18: ஜப்பானில் சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளான ஃபுகுஷிமா அணு உலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிக்கல் நீடிக்கிறது.ஃபுகுஷிமா அணு உலையில் வெள்ளிக்கிழமை அணுக்கதிர் வீச்சினால் பாதிப்புக்குள்ளான நீரை சுத்தப்படுத்தும் பணி துவங்கியது. இந்த நீரை சுத்தப்படுத்தும் இயந்திரத்திலுள்ள ஒர் அமைப்பு அணுக்கதிர் வீச்சினால் பாதிப்புக்குள்ளான நீரிலுள்ள சீசியம் அணுப்பொருளை உறிஞ்சும் தன்மையுடையது.வேலை செய்ய ஆரம்பித்த 5 மணி நேரத்துக்குள்ளாகவே இந்த அமைப்பு தனது அதிகபட்சத் திறனை அடைந்துவிட்டதால் முழுமையாக நீரை சுத்தப்படுத்த முடியவில்லை என அணு உலையைப் பராமரிக்கும் டோக்கியோ மின் கார்ப்பரேஷனின் அதிகாரி ஜுனிச்சி மட்ஸýமோட்டோ தெரிவித்தார். கதிர்வீச்சுக்குள்ளான நீரை சுத்தப்படுத்தும் பணி மீண்டும் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பது தெரியாது என்றும் அவர் தெரிவித்தார். கடந்த மார்ச் 11-ம் தேதி சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளான ஃபுகுஷிமா அணு உலையை குளிர்விக்க உபயோகப்படுத்தப்பட்ட 1,00,000 டன்னிற்கும் மேற்பட்ட நீர் கதிர்வீச்சு பாதிப்புக்குள்ளானது. இதில் சிறிதளவு நீர் கடலுக்குள் செலுத்தப்பட்டது. மீதமுள்ள நீரை மீண்டும் அணு உலையைக் குளிர்விக்கவோ அல்லது வேறு பயன்பாட்டுக்கு மறுசுழற்சி செய்யவேண்டுமானால் அதிலிருக்கும் கதிர்வீச்சு நீக்கப்படவேண்டும். இல்லையெனில் அந்நீர் அணு உலையின் குளிர்விப்பு அமைப்பை பாதிக்கும்
சீனக் கடற்பரப்பில் சுதந்திரமான கடற் பிரயாணத்துக்கு அமெரிக்கா, வியட்நாம் அழைப்பு
வாஷிங்டன்: சீனாவுக்கும் அயல் நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து காணப்படும் நிலையிலும் தென் சீனக் கடற்பரப்பில் அழுத்தங்களை பிரயோகிப்பதை நிராகரித்துள்ள அமெரிக்காவும் வியட்நாமும் சுதந்திரமான கப்பல் பிரயாணத்துக்கு கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.
வாஷிங்டனில் இடம்பெற்ற பேச்சுகளைத் தொடர்ந்து கருத்துக் கூறிய முன்னாள் எதிரி நாடுகளான அமெரிக்காவும் வியட்நாமும் சமாதானம், ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் தென்சீனக் கடலில் சுதந்திரமான கப்பற் பிரயாணத்தை தக்கவைத்துக்கொள்வது சர்வதேசத்தின் பொது நலன்களென கூறியுள்ளன.
தென்சீனாக் கடற்பரப்பிலுள்ள சகல பிராந்திய எல்லைப் பிரச்சினைகளும் எந்தவித அழுத்தங்களும் பலவந்தமும் இன்றி கூட்டமாகவும் இராஜதந்திர செயன்முறை ஊடாகவும் தீர்த்துக்கொள்ளப்படவேண்டுமெனவும் அமெரிக்காவும் வியட்நாமும் வெளியிட்டுள்ள கூட்டு உடன்படிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. வியட்நாம் எண்ணெய் அகழ்வுக் கப்பல் ஒன்றினதும் ஆராய்வுக் கப்பல் ஒன்றினதும் கேபிள்களை சீனக் கப்பல்கள் துண்டாடியதாக கூறப்பட்டதை அடுத்து வியட்நாம் இராணுவ ஒத்திகைகளை நடத்தியதுடன் அண்மைக்காலமாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.
அதேவேளை சீனாவும் தென்சீனக் கடலில் மூன்று நாள் இராணுவ ஒத்திகையை நடத்தியுள்ளது. கடற்பாதுகாப்புப் படைகளை பலப்படுத்தும் நோக்கிலேயே சீன அரசு இப்பயிற்சிகளை மேற்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறியுள்ளன. சீனப் பிராந்தியத்தில் நிகழும் அண்மைக் காலச் சம்பவங்கள் சமாதானத்துக்கும் ஸ்திரத்தன்மைக்கும் வலுச் சேர்க்கப்போவதில்லையென அமெரிக்கத் தரப்பு கூறியிருப்பதாகவும் கூட்டறிக்கை கூறுகின்றது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
வாஷிங்டனில் இடம்பெற்ற பேச்சுகளைத் தொடர்ந்து கருத்துக் கூறிய முன்னாள் எதிரி நாடுகளான அமெரிக்காவும் வியட்நாமும் சமாதானம், ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் தென்சீனக் கடலில் சுதந்திரமான கப்பற் பிரயாணத்தை தக்கவைத்துக்கொள்வது சர்வதேசத்தின் பொது நலன்களென கூறியுள்ளன.
தென்சீனாக் கடற்பரப்பிலுள்ள சகல பிராந்திய எல்லைப் பிரச்சினைகளும் எந்தவித அழுத்தங்களும் பலவந்தமும் இன்றி கூட்டமாகவும் இராஜதந்திர செயன்முறை ஊடாகவும் தீர்த்துக்கொள்ளப்படவேண்டுமெனவும் அமெரிக்காவும் வியட்நாமும் வெளியிட்டுள்ள கூட்டு உடன்படிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. வியட்நாம் எண்ணெய் அகழ்வுக் கப்பல் ஒன்றினதும் ஆராய்வுக் கப்பல் ஒன்றினதும் கேபிள்களை சீனக் கப்பல்கள் துண்டாடியதாக கூறப்பட்டதை அடுத்து வியட்நாம் இராணுவ ஒத்திகைகளை நடத்தியதுடன் அண்மைக்காலமாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.
அதேவேளை சீனாவும் தென்சீனக் கடலில் மூன்று நாள் இராணுவ ஒத்திகையை நடத்தியுள்ளது. கடற்பாதுகாப்புப் படைகளை பலப்படுத்தும் நோக்கிலேயே சீன அரசு இப்பயிற்சிகளை மேற்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறியுள்ளன. சீனப் பிராந்தியத்தில் நிகழும் அண்மைக் காலச் சம்பவங்கள் சமாதானத்துக்கும் ஸ்திரத்தன்மைக்கும் வலுச் சேர்க்கப்போவதில்லையென அமெரிக்கத் தரப்பு கூறியிருப்பதாகவும் கூட்டறிக்கை கூறுகின்றது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
அருணாச்சலம் தகராறுக்குட்பட்ட பகுதியே: சீனா
இந்திய - சீன எல்லைப் பகுதியிலுள்ள அருணாச்சல பிரதேச மாநிலம், இரு நாடுகளும் உரிமை கோரும் தகராறுக்குட்பட்ட பகுதியே என்று சீனா கூறியுள்ளது.
அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள், சீனத்தின் ஃபிஜியான் மாகாணத்தில் நடைபெறவுள்ள கிராண்ட் பிரீ எடைத் தூக்கும் போட்டியில் கலந்துகொள்ள விசா கேட்டபோது, அவர்களுடைய இந்திய கடவுச் சீட்டில் விசா முத்திரை பதிக்காமல், தனிக் காகிதத்தில் விசா முத்திரையிட்டு, அவர்கள் போட்டியில் கலந்துகொள்ள அனுமதி அளித்தது சீனா.
இதற்கு வன்மையான கண்டனத்தை இந்தியா தெரிவித்தது. இந்த நிலையில் இப்பிரச்சனை குறித்து சீனத் தலைநகரிலுள்ள பிடிஐ செய்தியாளரிடம் விளக்கமளித்துள்ள சீன அயலுறவு அமைச்சக பேச்சாளர், “இந்திய - சீன எல்லைப் பிரச்சனையில் சீனத்தின் நிலை தொடர்ந்து தெளிவாகவே உள்ளது. கிழக்குப் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான தகராறுக்குட்பட்ட பகுதிதான் என்பது எல்லை பிரச்சனை பேச்சுவார்த்தையில் தெரிவித்துள்ளோம். அதனை இந்தியா நன்கு அறியும். எங்களது அந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை” என்று கூறியுள்ளார்.
இந்தியாவும் சீனாவும் எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண இதுவரை 14 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இதில் கிழக்குப் பகுதியான அருணாச்சல பிரதேசத்தை தனது ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தின் தெற்குப்பகுதி என்றே சீனா கூறி வருகிறது.
ஆனால், தங்களது நாடான திபெத்தை ஆக்கிரமித்துள்ள சீனாவிற்கு அருணாச்சல பிரதேசத்தின் மீது சொந்தம் கொண்டாட எந்தத் தகுதியும் இல்லை என்று தலாய் லாமாவும், திபெத் விடுதலைக்காக போராடிவரும் இதர திபெத்திய அமைப்புகளும் கூறி வருகின்றன.
அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள், சீனத்தின் ஃபிஜியான் மாகாணத்தில் நடைபெறவுள்ள கிராண்ட் பிரீ எடைத் தூக்கும் போட்டியில் கலந்துகொள்ள விசா கேட்டபோது, அவர்களுடைய இந்திய கடவுச் சீட்டில் விசா முத்திரை பதிக்காமல், தனிக் காகிதத்தில் விசா முத்திரையிட்டு, அவர்கள் போட்டியில் கலந்துகொள்ள அனுமதி அளித்தது சீனா.
இதற்கு வன்மையான கண்டனத்தை இந்தியா தெரிவித்தது. இந்த நிலையில் இப்பிரச்சனை குறித்து சீனத் தலைநகரிலுள்ள பிடிஐ செய்தியாளரிடம் விளக்கமளித்துள்ள சீன அயலுறவு அமைச்சக பேச்சாளர், “இந்திய - சீன எல்லைப் பிரச்சனையில் சீனத்தின் நிலை தொடர்ந்து தெளிவாகவே உள்ளது. கிழக்குப் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான தகராறுக்குட்பட்ட பகுதிதான் என்பது எல்லை பிரச்சனை பேச்சுவார்த்தையில் தெரிவித்துள்ளோம். அதனை இந்தியா நன்கு அறியும். எங்களது அந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை” என்று கூறியுள்ளார்.
இந்தியாவும் சீனாவும் எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண இதுவரை 14 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இதில் கிழக்குப் பகுதியான அருணாச்சல பிரதேசத்தை தனது ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தின் தெற்குப்பகுதி என்றே சீனா கூறி வருகிறது.
ஆனால், தங்களது நாடான திபெத்தை ஆக்கிரமித்துள்ள சீனாவிற்கு அருணாச்சல பிரதேசத்தின் மீது சொந்தம் கொண்டாட எந்தத் தகுதியும் இல்லை என்று தலாய் லாமாவும், திபெத் விடுதலைக்காக போராடிவரும் இதர திபெத்திய அமைப்புகளும் கூறி வருகின்றன.
சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டவர் பணம் சேமிப்பு குறைந்தது
ஜூன் 19: சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டவர்கள் சேமித்து வைத்துள்ள பணம் கடந்த ஆண்டில் குறைந்துள்ளது என்று சுவிஸ் தேசிய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிச் சட்டங்களின் ரகசியத் தன்மையினால் உலகெங்கும் உள்ள பணக்காரர்கள் அந்நாட்டு வங்கிகளில் பணத்தை சேமித்து வைக்கின்றனர். இதில் பெரும்பாலும் அவரவர் நாட்டில் வரி ஏய்ப்பு செய்து திரட்டிய கறுப்பு பணம் என்பது குறிப்பிடத் தக்கது.பல நாடுகள் இந்தக் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவதற்காக சுவிஸ் வங்கிகளிடம் வற்புறுத்தி வந்தாலும் ரகசியத் தன்மைவாய்ந்த சட்டங்களைத் திருத்த வங்கிகளும் அந்நாட்டு அரசும் ஆர்வம் காட்டாமல் மறுத்து வந்தன.இந்நிலையில் கடந்த ஒரு வருட காலமாக அமெரிக்கா, ஜெர்மனி உள்பட பல மேற்கத்திய நாடுகள் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு இந்தப் பிரச்னை குறித்து நெருக்குதல் கொடுத்து வருகின்றன.இந்தியாவிலும் இந்தப் பிரச்னை பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியிருக்கிறது. எதிர்க்கட்சிகளும் உச்ச நீதிமன்றமும் இப்பிரச்னை குறித்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்நிலையில், கடந்த நிதியாண்டுக்கான சுவிஸ் வங்கிக் கணக்குகள் இப்போது வெளியாகியிருக்கின்றன. இதில், வெளிநாட்டவர் சேமித்து வைத்துள்ள பணத்தின் அளவு குறைந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.சுமார் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு இந்த தொகை குறைந்துள்ளது என்று தெரிகிறது. 2009-ம் ஆண்டில் ரூ. 1 கோடி 30 லட்சம் கோடி அளவுக்கு வெளிநாட்டவர் சேமிப்பு இருந்தது. ஆனால் 2010-ம் ஆண்டுக்கான கணக்கின்படி, வெளிநாட்டவர் சேமிப்பு ரூ.1 கோடி 25 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டவர் கறுப்புப் பணம் பதுக்குவதைத் தடுக்கும் விதமாக சட்டத் திருத்தம் கொண்டு வர சர்வதேச அளவில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அவ்வங்கிகளில் பணத்தை சேமிப்பது குறைந்து வருகிறது என்ற கருத்து நிலவுகிறது.அதே வேளையில், உலகப் பொருளாதாரம் சரிவுற்ற நிலையில் டாலர், யூரோ முதலான கரன்சிகளின் மதிப்பு குறைந்ததால் வங்கிகளில் சேமிக்கப்படும் பணத்தின் மதிப்பு குறைவாகத் தெரிகிறது என்று சுவிஸ் வங்கி அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தார்.இங்கு சேமிப்புத் தொகை குறைந்துள்ளதற்குக் காரணம், பணத்தை வங்கியிலிருந்தது எடுப்பது மட்டுமல்ல. பங்கு முதலீடுகள் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களும் வங்கியின் மொத்தத் தொகையில் குறைவு வந்ததாகக் காட்டும் என்று அவர் தெரிவித்தார்.
சுவிஸ் வங்கி ரகசிய கணக்கு விவரம் விக்கிலீக்சிடம் ஒப்படைப்பு
உலகெங்கிலும் உள்ள பெரும் செல்வந்தர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், தனி நபர்கள் ஆகியோர் சுவிஸ் வங்கியில் வைத்துள்ள ரகசிய கணக்கு விவரங்களைத் தான் பெற்றுள்ளதாக விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச் இன்று லண்டனில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பலநாடுகளின் அரசு சார் ரகசிய உத்தரவு கேபிள்களை உலகிற்கு வெளிப்படுத்திய விக்கி லீக்ஸ் நிறுவனர் அசாஞ்சிடம் சுவிஸ் வங்கியில் ரகசியக் கணக்கு வைத்துள்ள 2000 பேர்களின் விவரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.
ருடால்ஃப் எல்மர் என்ற முன்னாள் சுவிஸ் வங்கி அதிகாரி 2000 ரகசிய வங்கிக் கணக்குகள் அடங்கிய வட்டுகளை அசாஞ்சிடம் கையளித்தார்.
இந்த 2000 கணக்குகளில் இந்தியத் தொழிலதிபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகள் கணக்குகள் இருக்குமா என்பதில்தான் இப்போது ஆர்வம் பிறந்துள்ளது.
1990ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை சுவிஸ் வங்கியில் கணக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பலநாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள், செல்வந்தர்கள், நிதிநிறுவனங்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் விவரங்கள் இந்த வட்டுகளில் இடம்பெற்றிருப்பதாக சுவிட்சர்லாந்து பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
"நான் சுவிஸ் வங்கி கணக்கிற்கு எதிரானவன், அங்கு எவ்வாறு அனைத்தும் நிகழ்கிறது என்பதை நான் அறிவேன். ஒரு பெரிய வலைப்பின்னலே இந்த சட்டவிரோத கணக்குகளை உருவாக்குவதில் செயல்பட்டு வருகிறது.
நான் அங்கு வேலை செய்துள்ளேன், அங்கு தினசரி வர்த்தக நடவடிக்கைகள் என்னவென்பது எனக்கு முழுதும் தெரியும்." என்று எல்மர் லண்டனில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த 2000 ரகசிய கணக்குகளில் 40 அரசியல்வாதிகளின் கணக்குகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பலநாடுகளின் அரசு சார் ரகசிய உத்தரவு கேபிள்களை உலகிற்கு வெளிப்படுத்திய விக்கி லீக்ஸ் நிறுவனர் அசாஞ்சிடம் சுவிஸ் வங்கியில் ரகசியக் கணக்கு வைத்துள்ள 2000 பேர்களின் விவரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.
ருடால்ஃப் எல்மர் என்ற முன்னாள் சுவிஸ் வங்கி அதிகாரி 2000 ரகசிய வங்கிக் கணக்குகள் அடங்கிய வட்டுகளை அசாஞ்சிடம் கையளித்தார்.
இந்த 2000 கணக்குகளில் இந்தியத் தொழிலதிபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகள் கணக்குகள் இருக்குமா என்பதில்தான் இப்போது ஆர்வம் பிறந்துள்ளது.
1990ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை சுவிஸ் வங்கியில் கணக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பலநாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள், செல்வந்தர்கள், நிதிநிறுவனங்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் விவரங்கள் இந்த வட்டுகளில் இடம்பெற்றிருப்பதாக சுவிட்சர்லாந்து பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
"நான் சுவிஸ் வங்கி கணக்கிற்கு எதிரானவன், அங்கு எவ்வாறு அனைத்தும் நிகழ்கிறது என்பதை நான் அறிவேன். ஒரு பெரிய வலைப்பின்னலே இந்த சட்டவிரோத கணக்குகளை உருவாக்குவதில் செயல்பட்டு வருகிறது.
நான் அங்கு வேலை செய்துள்ளேன், அங்கு தினசரி வர்த்தக நடவடிக்கைகள் என்னவென்பது எனக்கு முழுதும் தெரியும்." என்று எல்மர் லண்டனில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த 2000 ரகசிய கணக்குகளில் 40 அரசியல்வாதிகளின் கணக்குகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிஸ்.வங்கியில் இந்தியக் கறுப்புப் பணமே அதிகம்- அசாஞ்ஜே
அயல்நாட்டு வங்கிகளில் சேர்ந்து கொண்டே போகும் இந்திய கறுப்புப் பணம் குறித்து இந்திய அரசு அசிரத்தை காட்டி வரும் நிலையில், விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ஜே, சுவிஸ். வங்கியில் இந்தியர்களின் பணமே அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறது என்று கூறியுள்ளார்.
"வேறு எந்த நாட்டுக்காரர்களின் பணத்தை விடவும் சுவிஸ்.வங்கியில் இந்தியக் கறுப்புப் பணமே அதிகம் உள்ளது." என்று அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
"ஆம், பட்டியலில் இந்தியர்கள் பெயர்கள் உள்ளன. இந்திய அரசு அயல்நாட்டு வங்கிகளில் பெருகி வரும் இந்திய கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வதில் விரைவில் ஆக்ரோஷம் காட்டுவது அவசியம், இத்தகையக் கறுப்புப் பணத்தினால் ரூபாயின் மதிப்பு சீரழிந்து வருகிறது." என்றார் அசாஞ்ஜே.
அதே போல், 'தங்கள் இணையதளம் வெளியிட்டு வரும் செய்திகளுக்கு இந்திய அரசு காட்டி வரும் மெத்தனப் போக்கு ஏமாற்றம் அளிக்கிறது'. "உலகிலேயே நாங்கள் வெளியிட்டுஅள்ள தகவல்களுக்கு வினையாற்றுவதில் இந்திய அரசுதான் மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறது. இந்திய அரசு இந்திய மக்களுக்கு தவறான கருத்துக்களைக் கூறிவருகிறது. என்னிடம் பிரதமர் மன்மோகன் சிங் ஊழலற்றவர் என்று கூறினார்கள். ஆனால் அயல்நாட்டு வங்கிகளில் உள்ள பணத்தை மீட்க அவரது நடவடிக்கை ஏமாற்றமளிப்பதாக உள்ளது." என்றார் அசாஞ்ஜே.
மேலும் அயல்நாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணத்திற்கு சுவிஸ்.வங்கியுடன் புரிந்துணர்வு கொண்டு இரட்டை வரி விதிப்பு முறை செய்யலாம் என்ற திட்டத்தை அசாஞ்ஜே நேரடியாக நிராகரித்தார். இதனால் இந்தியாவுக்கு அந்தப் பணங்களை திருப்பி கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படும் என்றார் அவர்.
"இரட்டை வரிவிதிப்பு முறையால் பயனில்லை. சொத்துக்கள் மறைந்திருக்கும் நிலையில் வரி விதிப்பு முறை மட்டும் சரியாகாது. இதனால் இந்தியப் பொருளாதாரம் நசிவடைந்து வருகிறது." என்று கூறினார் அசாஞ்ஜே.
தங்களிடம் சில முக்கியஸ்தர்கள் சுவிஸ்.வங்கியின் பணப்பட்டியலைக் கொடுக்குமாறு பல்வேறு விதங்களில் பேரம் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் சுவிஸ்.வங்கியின் வர்த்தகம் பாதிக்கும் என்பதால் அந்தப் பெயர்களை வெளியிடவேண்டாம் என்று மிரட்டல்கள் வருவதாகவும் அசாஞ்ஜே தெரிவித்தார்.
"வேறு எந்த நாட்டுக்காரர்களின் பணத்தை விடவும் சுவிஸ்.வங்கியில் இந்தியக் கறுப்புப் பணமே அதிகம் உள்ளது." என்று அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
"ஆம், பட்டியலில் இந்தியர்கள் பெயர்கள் உள்ளன. இந்திய அரசு அயல்நாட்டு வங்கிகளில் பெருகி வரும் இந்திய கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வதில் விரைவில் ஆக்ரோஷம் காட்டுவது அவசியம், இத்தகையக் கறுப்புப் பணத்தினால் ரூபாயின் மதிப்பு சீரழிந்து வருகிறது." என்றார் அசாஞ்ஜே.
அதே போல், 'தங்கள் இணையதளம் வெளியிட்டு வரும் செய்திகளுக்கு இந்திய அரசு காட்டி வரும் மெத்தனப் போக்கு ஏமாற்றம் அளிக்கிறது'. "உலகிலேயே நாங்கள் வெளியிட்டுஅள்ள தகவல்களுக்கு வினையாற்றுவதில் இந்திய அரசுதான் மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறது. இந்திய அரசு இந்திய மக்களுக்கு தவறான கருத்துக்களைக் கூறிவருகிறது. என்னிடம் பிரதமர் மன்மோகன் சிங் ஊழலற்றவர் என்று கூறினார்கள். ஆனால் அயல்நாட்டு வங்கிகளில் உள்ள பணத்தை மீட்க அவரது நடவடிக்கை ஏமாற்றமளிப்பதாக உள்ளது." என்றார் அசாஞ்ஜே.
மேலும் அயல்நாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணத்திற்கு சுவிஸ்.வங்கியுடன் புரிந்துணர்வு கொண்டு இரட்டை வரி விதிப்பு முறை செய்யலாம் என்ற திட்டத்தை அசாஞ்ஜே நேரடியாக நிராகரித்தார். இதனால் இந்தியாவுக்கு அந்தப் பணங்களை திருப்பி கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படும் என்றார் அவர்.
"இரட்டை வரிவிதிப்பு முறையால் பயனில்லை. சொத்துக்கள் மறைந்திருக்கும் நிலையில் வரி விதிப்பு முறை மட்டும் சரியாகாது. இதனால் இந்தியப் பொருளாதாரம் நசிவடைந்து வருகிறது." என்று கூறினார் அசாஞ்ஜே.
தங்களிடம் சில முக்கியஸ்தர்கள் சுவிஸ்.வங்கியின் பணப்பட்டியலைக் கொடுக்குமாறு பல்வேறு விதங்களில் பேரம் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் சுவிஸ்.வங்கியின் வர்த்தகம் பாதிக்கும் என்பதால் அந்தப் பெயர்களை வெளியிடவேண்டாம் என்று மிரட்டல்கள் வருவதாகவும் அசாஞ்ஜே தெரிவித்தார்.
கறுப்புப் பணத்தில் பாதி காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமானது: மேனகா காந்தி
வெளிநாடுகளில் உள்ள இந்தியாவின் கறுப்புப் பணத்தில் பாதி காங்கிரஸ் கட்சியினருக்கு சொந்தமானது என்று பா.ஜனதா எம்.பி. மேனகா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பரெய்லியில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியாவின் கறுப்புப் பணத்தில் பாதி காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கும், அமைச்சர்களுக்கும் மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்களுக்கும் சொந்தமானது.
காங்கிரஸ் கட்சி சிபிஐ-யை அதன் லாக்கரில் வைத்துள்ளது. தேவைப்படும்போது அதை பயன்படுத்துகிறது.
பாபா ராம்தேவ் மற்றும் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவிடம் காங்கிரஸ் கட்சி நடந்துகொள்ளும் முறை கெளரவமானதாகத் தெரியவில்லை.
காங்கிரஸ் தலைவர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளதால்தான் கறுப்புப் பணத்துக்கு எதிராக குரல் எழும்போதெல்லாம் அதை நசுக்க அக்கட்சி முற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பரெய்லியில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியாவின் கறுப்புப் பணத்தில் பாதி காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கும், அமைச்சர்களுக்கும் மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்களுக்கும் சொந்தமானது.
காங்கிரஸ் கட்சி சிபிஐ-யை அதன் லாக்கரில் வைத்துள்ளது. தேவைப்படும்போது அதை பயன்படுத்துகிறது.
பாபா ராம்தேவ் மற்றும் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவிடம் காங்கிரஸ் கட்சி நடந்துகொள்ளும் முறை கெளரவமானதாகத் தெரியவில்லை.
காங்கிரஸ் தலைவர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளதால்தான் கறுப்புப் பணத்துக்கு எதிராக குரல் எழும்போதெல்லாம் அதை நசுக்க அக்கட்சி முற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ராஜபக்சவுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை!
அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கை அரசு கையெழுத்திட்டுள்ள ஹக் உடன்படிக்கைக்கு ஏற்ப, அமெரிக்க மாகாண நீதிமன்றம் ஒன்றில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று பொது வழக்குகளில் ராஜபக்ச பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
தமக்கு 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடாக தரவேண்டும் என்று கோரித் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ்வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி மஹிந்தவுக்கு அழைப்பாணை கிடைத்துள்ளதாக நீதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க சித்ரவதையால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் ஆறு குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து இவ்வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மூன்று வழக்குகள் மாணவரான ரஜிகர் மனோகரன், தொண்டர் அமைப்பின் பணியாளர் பிரீமஸ் ஆனந்தராஜா மற்றும் தவராஜா ஆகியோரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இம்மாணவர்கள் சட்டத்துக்குப் புறம்பாகக் கொலை செய்யப்பட்டவர் என்றும், முப்படைகளின் கட்டளைத் தளபதியான ராஜபக்சவே இதற்குப் பொறுப்பு என்றும் இவ்வழக்கில் கூறப்பட்டுள்ளது.
ஜனவரி 2006 ல் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவர் இந்த ரஜிகர் என்பதும், ஜூன் 2006 ல் திருகோணமலையில் சுட்டுக் கொல்லப்பட்ட அக் ஷன் ஃபெய்ம் நிறுவனப் பணியாளர்கள் 17 பேரில் ஒருவர் இந்த ஆனந்தராஜா என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த அழைப்பாணையால் இலங்கை அரசாங்கம் கவலைப்படவில்லை என்றும், அதற்கு அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள் என்றும் இலங்கை நீதித்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.
இலங்கை அரசு கையெழுத்திட்டுள்ள ஹக் உடன்படிக்கைக்கு ஏற்ப, அமெரிக்க மாகாண நீதிமன்றம் ஒன்றில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று பொது வழக்குகளில் ராஜபக்ச பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
தமக்கு 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடாக தரவேண்டும் என்று கோரித் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ்வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி மஹிந்தவுக்கு அழைப்பாணை கிடைத்துள்ளதாக நீதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க சித்ரவதையால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் ஆறு குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து இவ்வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மூன்று வழக்குகள் மாணவரான ரஜிகர் மனோகரன், தொண்டர் அமைப்பின் பணியாளர் பிரீமஸ் ஆனந்தராஜா மற்றும் தவராஜா ஆகியோரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இம்மாணவர்கள் சட்டத்துக்குப் புறம்பாகக் கொலை செய்யப்பட்டவர் என்றும், முப்படைகளின் கட்டளைத் தளபதியான ராஜபக்சவே இதற்குப் பொறுப்பு என்றும் இவ்வழக்கில் கூறப்பட்டுள்ளது.
ஜனவரி 2006 ல் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவர் இந்த ரஜிகர் என்பதும், ஜூன் 2006 ல் திருகோணமலையில் சுட்டுக் கொல்லப்பட்ட அக் ஷன் ஃபெய்ம் நிறுவனப் பணியாளர்கள் 17 பேரில் ஒருவர் இந்த ஆனந்தராஜா என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த அழைப்பாணையால் இலங்கை அரசாங்கம் கவலைப்படவில்லை என்றும், அதற்கு அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள் என்றும் இலங்கை நீதித்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.
ரசிகர்களின் பிரார்த்தனைகளே என்னைக் காப்பாற்றியன - ரஜினி நன்றி
சென்னை : நான் நலம் அடைய ரசிகர்கள் மேற்கொண்ட பிரார்த்தனை, பூஜைகள்,ஹோமங்கள், விரதங்கள்தான் என்னை காப்பாற்றியது. என்பதுதான் நூற்றுக்கு நூறு வீதம் உண்மை என்று நடிகர் ரஜினி கூறியுள்ளார். சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சை பெற்று வெளியேறி அந்த நாட்டிலேயே ஓய்வெடுத்துக் கொண்டுள்ள ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
மருத்துவமனையிலிருந்து வெளியேறியவுடன் அன்பார்ந்த ரசிகர்களுக்கு பேனா,பேப்பர் எடுத்து எழுதும் போதுவார்த்தைகள் வரவில்லை எனக்கு தமிழக அரசு எந்த நேரத்திலும் உதவியையும் செய்ய எனக்கு உறுதிமொழி கொடுத்த தமிழக முதல்வர் அவர்களுக்கும் என்றுமே என் மீது பாசத்தை வைத்திருக்கும் மதிப்பிற்குரிய என்னுடைய அருமை நண்பர் கலைஞருடன் பேசிய பிறகு உங்களுடன் பேசுகிறேன்
முதலில், உங்களிடம் பேசாமல் இருந்ததற்கு மன்னிக்கவும் இந்த விஞ்ஞான உலகத்தில் கூட எந்த விளையாட்டை விடையாடினாலும் காசை மேலே தூக்கிப்போட்டு ஆட்டத்தை யார் முதலில் விளையாடுவது என்று முடிவு செய்கிறார்கள் காசை மேலே தூக்கிப்போடுவதுதான் மனிதனுடைய வேலை
பூவாக விழுவதா தலையாக விழுவதா என்பது ஆண்டவனுடைய செயல் என்னுடைய இந்த விளையாட்டில் ஒரு பக்கம் பணம் விஞ்ஞானம் மருத்துவம், உலகத்திலேயே மிகச்சிறந்த மருத்துவர்கள் இருக்க இன்னொரு பக்கம் நான் நலம் அடைய கடவுள் பிரார்த்தனை,பூஜைகள், ஹோமங்கள், விரதங்கள்தான் என்னை காப்பாற்றியது என்பதுதான் நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நான் நம்புகிறேன்.
ரஜினிக்கு எவ்வளவு மக்கள் அன்பு இருக்கிறது என்று உலகத்திற்கு காட்டி விட்டீர்கள் நான் இப்பொழுது குணம் அடைந்து கொண்டு இருக்கிறேன் என்றால் நீங்கள் எல்லோரும் என் மீது வைத்திருக்கின்ற அன்பு தான் காரணம். என்னை ஒரு அண்ணனாக தம்பியாக, நண்பனாக, உங்கள் வீட்டு ஒரு பிள்ளையாக நினைத்துஎனக்கு செய்த பூஜைகள் தான் காரணம்
ஜென்ம ஜென்மத்திற்கும் உங்களுடைய அன்பை என்றும் மறக்க மாட்டேன் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை இனிமேல் உங்களை மகிழ வைப்பது தான் என்னுடைய லட்சியம் கூடிய விரைவில் ராணாவில் உங்களை மகிழ வைப்பது தான் தோன்றுகிறேன் நான் உங்களுடைய எல்லா நன்மைக்காக ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்.
மருத்துவமனையிலிருந்து வெளியேறியவுடன் அன்பார்ந்த ரசிகர்களுக்கு பேனா,பேப்பர் எடுத்து எழுதும் போதுவார்த்தைகள் வரவில்லை எனக்கு தமிழக அரசு எந்த நேரத்திலும் உதவியையும் செய்ய எனக்கு உறுதிமொழி கொடுத்த தமிழக முதல்வர் அவர்களுக்கும் என்றுமே என் மீது பாசத்தை வைத்திருக்கும் மதிப்பிற்குரிய என்னுடைய அருமை நண்பர் கலைஞருடன் பேசிய பிறகு உங்களுடன் பேசுகிறேன்
முதலில், உங்களிடம் பேசாமல் இருந்ததற்கு மன்னிக்கவும் இந்த விஞ்ஞான உலகத்தில் கூட எந்த விளையாட்டை விடையாடினாலும் காசை மேலே தூக்கிப்போட்டு ஆட்டத்தை யார் முதலில் விளையாடுவது என்று முடிவு செய்கிறார்கள் காசை மேலே தூக்கிப்போடுவதுதான் மனிதனுடைய வேலை
பூவாக விழுவதா தலையாக விழுவதா என்பது ஆண்டவனுடைய செயல் என்னுடைய இந்த விளையாட்டில் ஒரு பக்கம் பணம் விஞ்ஞானம் மருத்துவம், உலகத்திலேயே மிகச்சிறந்த மருத்துவர்கள் இருக்க இன்னொரு பக்கம் நான் நலம் அடைய கடவுள் பிரார்த்தனை,பூஜைகள், ஹோமங்கள், விரதங்கள்தான் என்னை காப்பாற்றியது என்பதுதான் நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நான் நம்புகிறேன்.
ரஜினிக்கு எவ்வளவு மக்கள் அன்பு இருக்கிறது என்று உலகத்திற்கு காட்டி விட்டீர்கள் நான் இப்பொழுது குணம் அடைந்து கொண்டு இருக்கிறேன் என்றால் நீங்கள் எல்லோரும் என் மீது வைத்திருக்கின்ற அன்பு தான் காரணம். என்னை ஒரு அண்ணனாக தம்பியாக, நண்பனாக, உங்கள் வீட்டு ஒரு பிள்ளையாக நினைத்துஎனக்கு செய்த பூஜைகள் தான் காரணம்
ஜென்ம ஜென்மத்திற்கும் உங்களுடைய அன்பை என்றும் மறக்க மாட்டேன் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை இனிமேல் உங்களை மகிழ வைப்பது தான் என்னுடைய லட்சியம் கூடிய விரைவில் ராணாவில் உங்களை மகிழ வைப்பது தான் தோன்றுகிறேன் நான் உங்களுடைய எல்லா நன்மைக்காக ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்.
எகிப்து முன்னாள் அதிபரின் சொத்துக்கள் அரபு நாடுகளுக்கு மாற்றம்
எகிப்து அதிபர் பதவியிலிருந்து விலகிய ஹோஸ்னி முபாரக் தனது சொத்துக்களை ஐரோப்பிய வங்கியில் இருந்து அரபு நாடுகளுக்கு மாற்றிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முபாரக்கின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை முடக்க சுவிஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததையடுத்தே அவர் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சொத்துக்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து முபாரக்கின் குடும்ப உறுப்பினர்களிடையே நடைபெற்ற சில அவசர உரையாடல்கள் மூலம் இது தெரியவந்ததாக புலனாய்வு துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேடு உள்ளிட்ட நட்பு அரபு நாடுகளுக்கு முபாரக் சொத்துக்களை மாற்றியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முபாரக்கின் சொத்து மதிப்பு 70 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக இருக்கலாம் அல்லது 2 பில்லியன் டாலர் முதல் 3 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முபாரக்கின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை முடக்க சுவிஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததையடுத்தே அவர் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சொத்துக்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து முபாரக்கின் குடும்ப உறுப்பினர்களிடையே நடைபெற்ற சில அவசர உரையாடல்கள் மூலம் இது தெரியவந்ததாக புலனாய்வு துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேடு உள்ளிட்ட நட்பு அரபு நாடுகளுக்கு முபாரக் சொத்துக்களை மாற்றியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முபாரக்கின் சொத்து மதிப்பு 70 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக இருக்கலாம் அல்லது 2 பில்லியன் டாலர் முதல் 3 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
எல்லை தாண்டும் எகிப்து புரட்சி!
ஹோஸ்னி முபாரக்கின் சர்வாதிகார மற்றும் ஊழல் ஆட்சிக்கு எதிராக எகிப்து நாட்டு மக்கள் நடத்திய கிளர்ச்சிக்கு கைமேல் கிடைத்த பலனை பார்த்து ஈரான், பஹ்ரைன் மற்றும் ஏமன் ஆகிய அண்டை நாட்டு மக்களின் மனதிலும் புரட்சி விதை தூவப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவலால் அந்த நாட்டு தலைவர்கள் அரண்டுபோய் கிடப்பதாக மேற்குலக நாடுகளின் தூதரகங்கள் தகவல்களை பரிமாறிக் கொண்டிருக்கின்றன.
30 ஆண்டு காலம், எகிப்து அதிபர் பதவியில் அட்டையாய் ஒட்டிக்கொண்டு முபாரக் நடத்திய அராஜக, ஊழல் மற்றும் சர்வாதிகார ஆட்சியை பார்த்து வெறுத்து போய்தான், இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் கொதித்து எழுந்தனர் எகிப்து மக்கள்.
முபராக் அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற முழக்கத்துடன், எவ்வித அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் தொடர்ந்து 18 நாட்களாக அவர்கள் நடத்திய போராட்டத்தின் தீவிரத்தை பார்த்துதான், இனியும் தமது பாச்சா பலிக்காது என்று மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு கடந்த வார இறுதியில்,பதவியிலிருந்து விலகி தமது குடும்பத்தினருடன் ஓட்டம் பிடித்தார் முபாரக்.
அவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டதாக முதலில் கூறப்பட்டாலும்,மக்களின் போராட்டம் தந்த அதிர்ச்சி மற்றும் மன அழுத்தத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் எகிப்தின் ஷாம் எல்-ஷேக் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு சில ஊடகங்கள் முபாரக்கிற்கு புற்றுநோய் என்றும்,வேறு சில ஊடகங்கள் பக்கவாதம் என்றும் செய்தி வெளியிட்டுள்ளன.ஆனால் முபாரக் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது மட்டும் உண்மை.
30 ஆண்டு காலம், எகிப்து அதிபர் பதவியில் அட்டையாய் ஒட்டிக்கொண்டு முபாரக் நடத்திய அராஜக, ஊழல் மற்றும் சர்வாதிகார ஆட்சியை பார்த்து வெறுத்து போய்தான், இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் கொதித்து எழுந்தனர் எகிப்து மக்கள்.
முபராக் அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற முழக்கத்துடன், எவ்வித அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் தொடர்ந்து 18 நாட்களாக அவர்கள் நடத்திய போராட்டத்தின் தீவிரத்தை பார்த்துதான், இனியும் தமது பாச்சா பலிக்காது என்று மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு கடந்த வார இறுதியில்,பதவியிலிருந்து விலகி தமது குடும்பத்தினருடன் ஓட்டம் பிடித்தார் முபாரக்.
அவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டதாக முதலில் கூறப்பட்டாலும்,மக்களின் போராட்டம் தந்த அதிர்ச்சி மற்றும் மன அழுத்தத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் எகிப்தின் ஷாம் எல்-ஷேக் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு சில ஊடகங்கள் முபாரக்கிற்கு புற்றுநோய் என்றும்,வேறு சில ஊடகங்கள் பக்கவாதம் என்றும் செய்தி வெளியிட்டுள்ளன.ஆனால் முபாரக் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது மட்டும் உண்மை.
ஏமனிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்
வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் ஏமனிலிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஏமனில் அரசுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் காரணமாக இதுவரை 150 க்கும் அதிகமான பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் அங்கு பணி நிமித்தமாகவும்ம், இன்ன பிற காரணங்களுக்காவும் தங்கியுள்ள இந்தியர்களை, பாதுகாப்பு கருதி உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இந்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக உதவி தேவைப்படுவோர் ஏமனில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகுமாறும், தேவையான உதவிகளை செய்யுமாறு அங்குள்ள இந்திய தூதரக அதிகாரி அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமனில் அரசுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் காரணமாக இதுவரை 150 க்கும் அதிகமான பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் அங்கு பணி நிமித்தமாகவும்ம், இன்ன பிற காரணங்களுக்காவும் தங்கியுள்ள இந்தியர்களை, பாதுகாப்பு கருதி உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இந்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக உதவி தேவைப்படுவோர் ஏமனில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகுமாறும், தேவையான உதவிகளை செய்யுமாறு அங்குள்ள இந்திய தூதரக அதிகாரி அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் 39 இந்தியர்கள்
சோமாலிய கடற்கொள்ளையர்கள் பிடியில் இந்தியர்கள் 39 பேர் இருப்பதாக மத்திய அரசு வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர்களின் பிடியில் இன்னமும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 550-க்கும் மேற்பட்ட சிப்பந்திகள் உள்ளனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 39 பேர் இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, சமீபத்தில் சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட எகிப்து நாட்டைச் சேர்ந்த எம்.வி.சூயஸ் சரக்கு கப்பல் அரபிக்கடலில் வந்து கொண்டிருந்தபோது, பலத்த காற்று காரணமாக கவிழக்கூடிய அபாயத்தில் இருந்தது.
அந்த கப்பலில் இருந்த 6 இந்தியர்கள் உள்பட 22 சிப்பந்திகளையும் பாகிஸ்தான் கடற்படை போர் கப்பல் பி.என்.எஸ் பாபர் மீட்டது.
அவர்களின் பிடியில் இன்னமும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 550-க்கும் மேற்பட்ட சிப்பந்திகள் உள்ளனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 39 பேர் இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, சமீபத்தில் சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட எகிப்து நாட்டைச் சேர்ந்த எம்.வி.சூயஸ் சரக்கு கப்பல் அரபிக்கடலில் வந்து கொண்டிருந்தபோது, பலத்த காற்று காரணமாக கவிழக்கூடிய அபாயத்தில் இருந்தது.
அந்த கப்பலில் இருந்த 6 இந்தியர்கள் உள்பட 22 சிப்பந்திகளையும் பாகிஸ்தான் கடற்படை போர் கப்பல் பி.என்.எஸ் பாபர் மீட்டது.
Subscribe to:
Comments (Atom)































